காவிரி மேலாண்மை ஆணை யத்தின் 22 ஆவது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் ஆகஸ்ட் 11 அன்று தில்லியில் நடைபெற்றது. ஆகஸ்ட் 9 வரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நீரை திறக்க தமிழக நீர்வளத் துறை செய லாளர் சந்தீப் சக்சேனா தலைமையிலான அதி காரிகள் வலியுறுத்தினர். கர்நாடக அரசு உரிய நீரை தர மறுத்ததால் வெளிநடப்புசெய்தனர். வெளிநடப்பிற்குப் பின் காவிரி மேலாண்மை ஆணையம், 38 டி எம்சிநீர் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என உத்தர விட்டுள்ளது. ஆங்காங்கே பெய்யும் மழை யும் கொஞ்சம் ஆறுதல் அளித்து வருகிறது. காவிரிப் படுகை மாவட்டங்களுக்கு ஜூன் 12 மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் குறுவை தொகுப்பு திட்டம் ரூ.75. 95 கோடி நிதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 5 லட்சம் ஏக்கர் இலக்கு தீர்மானிக்கப் பட்டு சாகுபடி பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. நேரடியாக விதைத்த நெல்மணி கள் கருகும் நிலை. நடவு செய்த வயலுக்கு நீர் எடுத்து ஊற்றி காப்பாற்ற முயலும் நிலை - ஆங்காங்கே குறிப்பாக கடைமடைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. நேரடி விதைப்பு நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதம் ஆன நிலையிலும் இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீர் அதிகம் தேவைப்படுகிறது. பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டாலும் நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரித்துள்ளது. நெல்லின் சராசரி நீர் தேவை 1100மில்லி மீட்டர் முதல் 1200 மில்லி மீட்டர் வரை ஆகும். பயிரிடப்பட்ட பெரும்பாலான பயிர்கள் இரண்டு முதல் மூன்று சென்டிமீட்டர் நீர் தேக்கி நிறுத்தும் நிலையில் உள்ளன. 50 சதவீத நீர் தேவைப்படுகிறது
வழிகாட்டுதல்களை மதிக்காத கர்நாடகா தினந்தோறும் நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. எப்போது கர்நாடக அரசு, தென்மேற்கு பருவமழை பாதிப்பு ஏற்பட்டு மழைப்பொழிவு குறையும்போது பற்றாக்குறை காலங்களில் பகிர்ந்து கொள்ளும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் களை மதிப்பதில்லை; நடைமுறைப்படுத்து வதில்லை. மாறாக, கூடுதல் மழைப் பொழி வால் திறந்து விடப்படும் உபரிநீரையே, தமிழ்நாட்டின் உரிய பங்காக அளித்ததாக கூறிக் கொள்கிறது. உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் 177.25 டிஎம்சி நீரை ஜூன் 9 அன்றும், 19 டிஎம்சியை ஜூலை 31 அன்றும் 24 டிஎம்சி யை ஆகஸ்டிலும் 45. 95 டிஎம்சியை செப்டம்பரிலும் 36.76 டிஎம்சியை அக்டோபரிலும் 20.22 டிஎம்சி நவம்பரிலும் 13.78 டிஎம்சியை டிசம்பரிலும் 7.35 டிஎம்சியை ஜனவரியிலும், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தலா 2.5 டிஎம்சிகளும் திறந்து விட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. ஆனால் கர்நாடக அணை களில் நீர் இருப்பு இருந்தாலும் எப்போதும் தமிழ்நாட்டிற்கான உரிமை நீரை உரிய முறையில் வழங்கியது இல்லை. கடந்த ஆண்டு கர்நாடக அரசு கூடுதலாக 103 டிஎம்சி நீர் வழங்கியதாக கூறிக்கொள்கிறது. ஆனால் வடகிழக்குப் பருவ மழை காலத்தில் தமிழ்நாட்டில் அதிக மழைப்பொழிவு இருக்கும் நேரத்தில் அக்டோபர் மாதத்தில் 20.22 டிஎம்சிக்கு 48.27 டிஎம்சியும் நவம்பர் மாதத்தில் 13.78 டிஎம்சிக்கு 71.56 டிஎம்சியும் டிசம்பரில் 7.75 டிஎம்சிக்கு 26.18 டிஎம்சியும் வழங்கியுள்ளது. குறிப்பிட்ட மாதத்தில் தேவையான நேரத்தில் கிடைக்கத் தான் தினந்தோறும் நீர் திறப்பு இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது. உபரி நீரைத் திறப்பது உரிமை நீராக மாறிவிடாது.
இந்திய நாடு முழுவதும் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படும் சூழலில் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. உலக அரிசி வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பு 40 சதவீதமாகும். எனவே ஆப்பிரிக்க நாடுகளில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் 36 லட்சம் ஹெக்டேர் நெல் இந்திய நாடு முழுவதும் பயிரிடப்பட்ட நிலையில் நடப்பு குறுவை பருவத்தில் 26 லட்சம் ஹெக்டேர் மட்டுமே நெல் பயிரிடப்பட்டுள் ளது. தற்போது சிறிது சாகுபடி பரப்பு உயர்வு ஏற்பட்டுள்ளது. மொத்த நெல் உற்பத்தியில் 80 சதவீதம் குறுவைப் பரு வத்தில் நடைபெறுகிறது. ஏறத்தாழ 25 சதவீத நெல் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 44 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்படும் நிலையில் காவிரிப் படுகை மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. 36 சதவீத தமிழ்நாடு நெல் உற்பத்தி பரப்பளவை காவிரி டெல்டா மாவட்டங்கள் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 91 லட்சம் டன் அரிசி தேவைப்படும் நிலையில் 30 லட்சம் டன் அரிசி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா வெளிச்சந்தையில் இருந்து கிடைக்கிறது. தற்போது தென்மாநிலங்களின் அரிசி வரத்து குறைய கூடிய வாய்ப்பு ஏற் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் ஒதுக்கீட்டை விட கூடுதலாக வெளிச்சந்தையில் மாதம் ஏழு லட்சம் டன் அரிசியை கொள்முதல்செய்கிறது. வெளிச்சந்தையில் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு வழங்கினால் மட்டுமே முடியும் என்கிற சூழல் ஏற்பட்டுள் ளது. இந்தப் பின்னணியில் தற்போது காவிரி படுகை மாவட்டங்களில் நீர் பற்றாக்குறை யால் ஏற்படும் உற்பத்தி இழப்பு தமிழ்நாட்டில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் சூழல் உள்ளது. இந்தப் பற்றாக்குறை, விலை ஏற்றத்திற்கு வித்திட்டு, மக்களின் வாங்கும் சக்தியை இழக்கச் செய்து பட்டினிச் சூழலை உருவாக்கும். கருகும் பயிர்களால் ஏற்படும் இழப்பு களை ஈடு செய்ய ஏக்கருக்கு 35 ஆயிரம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப் பெறுகிறது. இழப்புகளை சமாளிக்க பயிர்க் காப்பீட்டு நிறுவனம் முன் வராத நிலையில் மாநில அரசே பயிர் காப்பீட்டு நிறுவனத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த ஆண்டுகளைப் போல காவிரி நீர் வரும் கழனி விளையும் என எண்ணிய விவ சாயிகளுக்கு தற்போது ஏமாற்றமே ஏற் பட்டுள்ளது உணவு பற்றாக்குறை உள்ள தமிழ்நாட்டில் கருகும் பயிரால் வயிறும் காயும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நிலை மை மிகவும் மோசமடையும் முன்பு உரிய காவிரி நீரை கர்நாடகத்திடம் உரிமைப் போராட்டத்தின் மூலமாகவும் சட்ட ரீதியாகவும் பெறுவது மிக அவசியமாகிறது.
கட்டுரையாளர் : தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்ட தலைவர்.