articles

img

மாற்றுத் திறனாளிகளும் சமூகத்தின் அங்கமே! - எஸ்.பகத்சிங்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தைப்பூச திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர் கள் பங்கேற்றார்கள். பக்தர்களின் பாதுகாப்பை உத்த ரவாதப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைக ளை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக பழனி கோட்டாட் சியர் தேவஸ்தான இணை ஆணையருக்கு கடந்த 30.01.23 அன்று ஓர் கடிதம் எழுதியிருந்தார். அக்கடி தத்தில் பழனி திருக்கோவிலுக்கு பாதயாத்திரையாக வருகைதரும் பக்தர்கள் தங்குவதற்காக பல கட்டி டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த கட்டி டங்கள் அனைத்தும் பாதுக்காப்பானவைதானா? பக்தர்களின் பாதுகாப்பிற்கு உகந்தவைதானா என ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார். பழனி கோட்டாட்சியர் பக்தர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த எடுத்த இந்த முயற்சியை வர வேற்கும் அதே வேளையில், இந்த தைப்பூச திருவிழா வில் மாற்றுத்திறனாளிகளும், வயதானவர்களும் பங்கேற்பார்கள் என்பது நிர்வாகத்திற்கு தெரியுமா? கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்து கேள்விஎழுப்பும் கோட்டாட்சியர் அந்த கட்டிடங்கள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வயதானவர்களுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேட்டிருக்க வேண்டும் அல்லவா?

மாற்றுத்திறனாளிகள் அனைத்து பொது இடங்களுக்கும் வழிபாட்டு தலங்களுக்கும் எளிதாக வந்து செல்லும் வகையில் குறிப்பாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம், வெஸ்டர்ன் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016 வலி யுறுத்தியுள்ளது. அது மட்டுமின்றி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வந்து செல்லும் வகையில் கட்டிடங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளது. ஒன்றிய அரசு குறிப்பிட்ட ஐந்து ஆண்டுகள் முடி வுற்ற பின்னரும் மாற்றுத்திறனாளிகள் இன்றுவரை தடையற்ற சூழலுக்காக தொடர்ச்சியாக போராட வேண்டிய நிலைமையே நீடித்து வருகிறது. சட்டங்கள் இயற்றினாலும், திட்டங்கள் தீட்டினாலும் மாற்றுத் திறனாளிகளை கண்டுகொள்ளாத போக்கே தொடர்ச்சியாக நிலவி வருகிறது. அதிகாரிகள் அனை வரின் பொதுப்புத்தியில் மாற்றுத்திறனாளிகள் என்கிற ஒரு சமூகம் இருப்பதாகத் தெரியவில்லை.

பழனி கோட்டாட்சியர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தினரிடமும் மாற்றுத்திறனாளிகள் பற்றிய புரிதலே இல்லை. பழனி திருக்கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களின் வசதிக்காக ஹெல்ப் லைன் வசதி ஏற்படுத்தி கொடுத்த நிர்வாகம் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக வீடியோ கால் வசதி ஏற்பாடு செய்திருக்க வேண்டும். பழனி கும்பாபிசேக நிகழ்ச்சியில் அனைத்து பக்தர்களும் பங்கேற்க வழிவகை செய்த நிர்வாகம் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய கும்பாபிசேக நிகழ்ச்சியை நடத்தியி ருக்க வேண்டும். திருவிழா கால முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆய்வு செய்யும் போதெல்லாம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பங்கேற்க ஏன் அழைப்பு அனுப்பப்படுவதில்லை? ஒவ் வொருமுறையும் மாற்றுத்திறனாளிகள் போராடினால் மட்டும்தான் அவர்களது கோரிக்கைகளை நிறை வேற்றப்படுமா?

மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்நாள் முழு வதும் உணவுக்கான போராட்டம், வேலைக்கான போராட்டம், தடையற்ற சூழலை ஏற்படுத்த போராட் டம், தன்மானத்தோடு, சுயமரியாதையோடு வாழ போராட்டம், பாலியல் வன்கொடுமையிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள போராட்டம், காவல் நிலையம் சென்றால் மாற்றுத்திறனாளிகள் சட் டத்தை அமல்படுத்த போராட்டம், பேருந்து, ரயில், விமானம் என அனைத்திலும் புறக்கணிக்கும் நிலை மையை கண்டித்து போராட்டம் என்ற நிலை இன்னும் எத்தனை காலம்தான் தொடர வேண்டும்.

கட்டுரையாளர்: மாவட்டச் செயலாளர், 
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு.