articles

img

மீண்டும் கிராமங்களை நோக்கி... - செ.முத்துக்கண்ணன்

முதலாளித்துவம் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மூலதனத் தேடலின் உச்சமாக தங்களின் லாப வேட்கைக்காக  12 மணி வேலை சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துகிறார்கள். அதில் தோல்வியுற்றால் தொழிலாளர் நலச்சட்டங்கள் மீது ஆளும் அரசுகளின் வழியாக கை வைக்கிறார்கள். உண்மையான ஊதிய வீழ்ச்சியை தடுக்கவும், அது குறித்த புரிதலை உருவாக்கிடவும் தொழிலாளி வர்க்கக் கட்சி என்ற முறையில் சிபிஎம் போராடி வருகிறது.

“கையிலே வாங்கினேன், பையிலே போடல, காசு போன இடம் தெரியல” என பழைய சினிமா பட பாடல் நினைவுக்கு வரும் அளவில் இன்று ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் நெருக் கடி தலைவிரித்தாடுகிறது. விலைவாசி உயர்வும், வேலையின்மையும் புதிய சவாலாக திருப்பூரில் மாறி வருகிறது என்றால் மிகையல்ல. தொழிலாளிகளின் உழைப்புச் சந்தை தேக்கத்தில். ஆம், இந்தியாவின் பெரு நகரங்களில் 38 ஆவது இடத்தில் இருக்கும் திருப்பூர் மாநகரம் 1990 களில் நவீன தாராளமய, உலகமயமாக்கல் கட்டத்தின் அதி வேக வளர்ச்சிக்கு உதாரணமாகும். 1992இல் இந்த நகரத்தின் மக்கள் தொகை 3,35,000  லட்சம் (7.03 சதவீதம்) ஆகும். அதற்கு முன்பு 4.5 சதவீதத்திற்குள் இருந்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1992 முதல் 2000 ஆவது ஆண்டு காலத்தில் 5,71,000 ஆக வேகமாக வளர்ந்தது. ஏற்றுமதிக் கான சூழலில் உழைப்புச் சந்தையில் அதிகப் படியாக உழைப்புச் சக்தியை தேடியது.  இக்காலத்தில்தான் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அந்த பத்தாண்டுகளில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வேலை தேடி வந்த னர். இதனால் நகரமும் அதனை சுற்றிய  பகுதிகளில் ஏற்பட்ட புதிய குடியேற்றங்க ளும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு காரண மாக அமைந்தது. இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வேலை தேடி தொழிலாளர்கள் 2010க்கு பின் வர ஆரம்பித்தனர்.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வில் 2022இல் ஏறத்தாழ 15 லட்சம் (3.58 சதவீதம் பேர்) கொண்ட பெருநகர மாக இந்தியாவின் 38 ஆவது இடத்தில் திருப்பூர் உள்ளது.  2018க்குப் பின்பு உலக பொருளாதா ரத்தில் ஏற்பட்ட மாற்றமும், மோடி அரசின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி,  பின்னலாடை உற்பத்தியின் மூலப் பொருட்கள் விலை ஏற்றம், நூல் விலை யேற்றம் ஒன்றிய அரசின் அழுத்தத்தி னால் உருவாகியுள்ள சொத்துவரி, மின் கட்டண உயர்வு போன்ற காரணங்களால் ஏற்பட்ட தொழில் பாதிப்பு தொழிலாளர்க ளின் வாழ்க்கையின் மீதும் பெரும் தாக்கத்தை உருவாக்கியது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வது அதிகரித்துள்ளது.  குறிப்பாக திருப்பூர் மாநகரப் பகுதிக் குட்பட்டுள்ள திருப்பூர் வடக்கு, தெற்கு வடக்கு கல்வி மாவட்டத்தில் சுமார் 43,000 குழந்தைகள் நடுநிலைப்பள்ளிகளில் படித்து வந்த நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் 4000 குழந்தைகள் வரை படிப்பை  நிறுத்தி சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர்.

“வாடகைக்கு விடப்படும்” போர்டுகள் அதிகரிப்பு

தொழில் நெருக்கடியின் தாக்கம் திருப் பூரில் முன்பு வேலைக்கு ஆட்கள் வேண்டும் என திரும்பிய பக்கம் எல்லாம் போர்டு கள் எழுதி தொங்கும். தற்போதோ கம்பெனி கட்டிடங்கள் வீடுகள், வர்த்தக நிறுவனங் கள், கடைகள் வாடகைக்கு விடப்படும் போர்டு கள் அதிகம் தொங்குகிறது. இது நிலை மையின் தீவிரத்தை உணர்த்துகிறது.  சிறு குறு, நடுத்தர உற்பத்தியாளர்க ளின் பாதிப்பை மீட்டெடுப்பது, தொழி லாளர் களின் வாழ்வாதாரத்தை பாதுகாக் கும் நடவடிக்கையின் பகுதி என்பதை தனது கட்சித் திட்டமாக கொண்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சி யாக தொழில் பாதுகாப்பு, தொழிலாளர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தி தமிழக பருத்திக் கழகம் அமைப்பது, வங்கி கடனு தவி, மின்கட்டண விலை பட்டியலைக் குறைத்து மாற்றி அமைப்பது, சொத்து, குப்பை வரி குறைப்பது போன்ற கோரிக் கைகளை அரசின் கவனத்திற்கு சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் போராட்டங்களின் மூலம் கொண்டு செல்கிறது.

தொழிலாளர்களின் உண்மை ஊதியம்

அடிப்படைச் சம்பளம், பஞ்சப்படி, பயணப்படி உள்ளிட்டு தொழிலாளிகளின் உரிமைக்காக தொழிற்சங்கங்களின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளை வாக பஞ்சப்படி, பயணப்படி உள்ளிட்டு வாரச் சம்பளம் என்பது உறுதி செய்யப்பட்டது.  1980 களுக்குப் பின் பின்னலாடைத் தொழிலில் ஏற்பட்ட அபரிமிதமான மாற்றம், சம்பளம், கூலி என்ற வார்த்தை அகன்று ஒப்பந்த முறை, பீஸ்ரேட் என புதிய வடிவங்களில் தொழிலாளிகளின் ஊதி யங்களில் மாற்றம் ஏற்பட்டது. இதன் காரண மாக மாதத்தில் 26 நாட்கள் சாரசரியாக ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பது என்ற நிலைமைக்கு மாறாக பீஸ்ரேட்டிற்காக வேறு பின்னலாடை நிறுவனங்களுக்கு ஒரு பகுதி தொழிலாளிகள் வேலை தேடி செல் வதும், மாதத்தில் பாதி நாட்கள் மட்டுமே வேலை செய்வதும் என உள்ளது.  தொழில் நிறுவனங்களில் உரிய கால இடைவெளியில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதிய உயர்வை கேட்டுப் பெற வேண்டிய தொழிலாளிகள் பீஸ்ரேட் முறை க்கு சென்றதன் காரணமாக கூடுதல் உழைப்பை செலுத்தி வருமானத்தினை பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டனர். இது அடிப்படையான உண்மை ஊதியத்தை பெறுவதில் தடைகளை உருவாக்குகிறது. இது தொழிலாளியின் கூட்டு பேர உரிமையை தடுக்கிறது.  மேலும் அரசின் கொள்கைகளால் ஏற்படும் தாக்குதலும், வர்த்தகச் சந்தை யில் ஏற்படும் பாதிப்பும் முதலில் தொழி லாளிகளையே தாக்குகிறது. வேலையி ழப்பும், ஊதிய இழப்புக்கு ஆட்படும் தொழிலாளர்கள் நுண்நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடனாளிகளாக மாறுகின்றனர்.

அதிக உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் பெண்கள்

அதிகளவில் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுவது பெண்களே. பின்ன லாடை நிறுவனங்களில் பல பிரிவுகளில் நாள் ஊதியம் ரூ.400க்கும் குறைவாகவே உள்ளது. பெரும் பகுதி உற்பத்தி சார் தொழில்களில் இதே நிலையே பெண்களு க்கு உள்ளது.

வேலையின்மையும் புதுவகை ஊதிய இழப்பும்

தற்போது தொழில் அமைப்புகளின் சார்பில் வெளியிடப்படும் ஊடகச் செய்தி களே இதற்கு உதாரணமாகும். சைமா தொழில் அமைப்பு 40 சதவீதம் நிறுவ னங்கள் மூடப்பட்டுள்ளன எனச் சொல்கி றது. டீமா தொழில் அமைப்பு 60 சதவீதம் என சொல்கிறது.  இந்த நிறுவனங்களின் உற்பத்தி நிறுத்தம் அல்லது மூடல் காரணமாக தொழிலாளர்களின் சொந்த ஊருக்கு செல்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. அல்லது ஜாப் ஒர்க் என்ற பெயரில் இந்திய மற்றும் உள்ளூர் வர்த்தகச் சந்தைக்காக குறைந்த வருமானத்தில் உற்பத்தியில் ஈடுபடும் நிலை உள்ளது. உதாரணத்திற்கு ஒரு நிறுவனமாக உள்ளூர்ச் சந்தைக்கு ஒரு பனியன் தயாரிக்க தையல் கூலியாக 12 ரூபாய் ஆகும் என்றால், வீடுகளில் வைத்து தயாரிக்க 9 ரூபாய் போதும் என்ற குறைந்த கூலியில் தயாரிப்பது அவர்களின் உண்மையான ஊதியத்தை குறைக்கிறது.  வீட்டுவாடகை சராசரியாக ரூ.6000 தந்து குடியிருக்கும் ஒரு குடும் பத்திற்கு மாதம் ஒன்றிற்கு ரூ. 18000 முதல் ரூ. 21000 வரை குறைந்தபட்சம் தேவைப் படுகிறது. ஆனால் இந்த அளவு தனி நபர் வருமானம் கிடைப்பதில்லை. குடும்ப கூட்டு உழைப்பின் மூலமே இது ஒரு பகுதி குடும்பங்களில் ஈடு செய்யப்படுகிறது.

முதலாளித்துவம் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மூலதனத் தேடலின் உச்சமாக தங்களின் லாப வேட்கைக்காக 12 மணி வேலை  சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துகி றார்கள். அதில் தோல்வியுற்றால் தொழிலா ளர் நலச்சட்டங்கள் மீது ஆளும் அரசுக ளின் வழியாக கை வைக்கிறார்கள். உண் மையான ஊதிய வீழ்ச்சியை தடுக்கவும், அது குறித்த புரிதலை உருவாக்கிடவும் தொழிலாளி வர்க்கக் கட்சி என்ற முறை யில் சிபிஎம் போராடி வருகிறது.  உண்மையான ஊதியமும், வேலை வாய்ப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும் தரு ணத்தில் மார்க்சிஸ்ட் கட்சி, வேலை கொடு, விலையைக் குறை என ஒன்றிய அரசை வலியுறுத்தி செப்.7இல் நடை பெறும் மாநிலந்தழுவிய மறியலில் பங்கேற்போம்.

கட்டுரையாளர் : மாநில செயற்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)