articles

img

கணக்கோடு ‘கை’ கோர்க்கலாம் - மொ.பாண்டியராஜன்

போன முறை நான் கொடுத்த விளையாட்ட சிலர் எளிமையாக விளையாடிய தாகவும், சிலர் செய்ய முடியலன்னும் வருத்தப்பட்டிருந்தீங்க. கவலைப்படா தீங்க. நான் முன்பே சொன்னது போல தொடர்ந்த பயிற்சியில் நீங்கள் வெற்றி பெற முடியும். நிலங்களை பிரிப்பது கூட இன்று நேற்று நடந்தது கிடையாது. பல நூறு ஆண்டுகள் ஆகியிருக்கிறது. நீங்களா செய்யும் வரை முயற்சி செய்யுங்க. அவர்கள் வேட்டையாடி வாழ்ந்த காலத்தில் கூர்மையான முக்கோண வடிவ ஆயுதங் களையே பயன்படுத்தியுள்ளனர். இந்த முக்கோணத்திற்கு மூன்று பக்கங்கள் கூர்மையாக இருப்பதையும் அவர்கள் கண்டறிந்தனர். தொடக்கத்தில் கூற்மையான கற்களை செய்யவில்லை. இயற்கையாக கிடைத்த கற்களையே அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதனை கொண்டு விலங்குகளின் தோல்களை உரிக்கவும், வெட்டவும்  பயன்படுத்தி யுள்ளனர். இவர்களை தான் நாம பழைய கற்கால மனிதர்கள் என்கிறோம். வேட்டையாடும் போது காணப்போகிற கற்களை மீண்டும் கண்டுபிடிக்க முடியாத நிலை வருது. அதை உணர்ந்தார்கள்.

அது போன்றே மற்றொரு கல் ஆயுதத்தை  வடிவமைக்கத் தொடங்கினர். அதிலிருந்து பல வகையான கல் ஆயுதங்களை உருவாக்கினர். வடிவங்கள் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் அங்கமாகிவிட்டது. அவர்களுடைய கல் ஆயுதத்தில் வட்ட வடிவ ஆயுதமும் இருந்துள்ளது. இவங்களை நாம் நவீன கற்கால மனிதர்கள் என்று சொல்கிறோம்.  இந்த இரண்டு காலகட்ட மனிதர்களும் யாரிடமும் நம்மைப் போன்று கல்வி கற்கவில்லை. அப்படியென்றால் அவர்களுக்கு இது எப்படி தெரியும்? ஆம். தொடர்ச்சியான தேவை யாலும், பயிற்சியாலும், தொடர்ந்து உற்று நோக்கியதாலும் அவர்கள் கற்றுக் கொண்டுள்ளனர். நம்மைச்சுற்றி உற்று நோக்குவதன் மூலம் நாமும் கணிதத்தோடு கை கோர்க்கலாம். இன்னைக்கு நம் வீடுகளில் முக்கோண வடிவ ஆயுதம் ஏதேனும் உள்ளதா? அதை பட்டியல் இடவும். அப்படி இல்லை என்றால் ஏன் என்பதையும் ஒரு போஸ்ட் கார்டில் எழுதிப் போடவும். ஒரு சின்ன விளையாட்டு விளையாடலாம்.  போன முறை விளையாடியது போல தான் இதுவும். ஒரு சதுர வடிவ பேப்பரை எடுத்துக் கொள்ளவும். அதனை மூலைவிட்டமாக இரண்டு துண்டுகளை வெட்டவும். ஒரு துண்டை சரிசமமாக மடித்து அதையும் இரண்டாக வெட்டவும். இப்போது உங்களுக்கு மூன்று துண்டுகள் இருக்கும். இந்த மூன்று துண்டுகளையும் இணைத்து ஒரு செவ்வக வடிவமாக மாற்றவும். அதனை மீண்டும் சதுரமாக மாற்றவும். உங்கள் அனுபவத்தை எழுதுங்கள்.