articles

img

சோசலிசமே மாற்று! மற்றதெல்லாம் ஏமாற்று! - ஜி.ராமகிருஷ்ணன்,அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

தமிழகம் முழுவதும் மக்கள் நல னுக்காக போராடி வருகிற எம் தோழர்கள் - போராட்ட வீரத்த ழும்பேறிய பிரதிநிதிகள் மதுரை மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மாநி லத்தின் அமைப்பு சார்ந்த கடமைகள், இன்றைய அரசியல் சூழல் குறித்தும், எதிர்காலக் கடமைகள் குறித்தும் இம் மாநாடு விவாதித்து அடுத்த கட்டத்திற்கு  முன்னோக்கி செல்ல திட்டங்களை தீர்மானமாக இயற்ற உள்ளது. இதே மதுரை மண்ணில் 1954ல் கட்சி யின் 3ஆவது அகில இந்திய மாநாடும்,  1972ல் கட்சியின் 9 ஆவது அகில இந்திய  மாநாடும் நடைபெற்றது. இந்த இரண்டு மாநாடுகளும் அன்றைய அரசியல், பொ ருளாளதார சூழல் குறித்து விவாதித்து அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமைகளை தீர்மானித்தது. இதேபோன்று தற்போது நடைபெற உள்ள மாநாட்டில் அத்தகைய அரசி யல், பொருளாதார சூழல் குறித்து விவா தித்து தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளது.

வீரம் விளைந்த மாமதுரையில் நடைபெறும் மாநாட்டின் முன்னோட்ட நிகழ்வாக, மார்ச் 23 (இன்று) இந்திய விடுதலைப் போராட்டத்தில் மாவீரர் கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகி யோர் தூக்கிலிடப்பட்ட நினைவு நாளில் கிராமங்களில், நகரங்களில், தொழில் நிறுவன வளாகங்கள், ஆலை வாயில்கள் உட்பட பட்டி தொட்டிகள் எங்கும் செங்கொடியை ஏற்றிட ‘கொடிநாள்’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவால் அறி விக்கப்பட்டுள்ளது. 1920 களில் துவங்கி தூக்கிலிடப் பட்ட நாள் வரையில் தேசவிடுதலைக் காக மாவீரன் பகத்சிங் போராடினார். இதோடு தேசத்து மக்கள் சந்திக்கிற பிரச்சனைகளுக்கு சோசலிசம்தான் தீர்வைத் தரும் என்பதை உறுதியாக நம்பினார்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பகத்சிங்,  நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்கிற புத்த கத்தை எழுதினார். இதில் தனது கருத் துக்களை பிரகடனம் செய்திருக்கி றார். நாட்டின் மக்கள் சந்திக்கிற பிரச்ச னைகளைப் பற்றி அலசுகிறபோது சோசலிசம்தான் தீர்வு என்பதை தனது எழுத்தில் தெளிவுபடுத்தியுள் ளார். 1929 ஆம் ஆண்டு கைது செய் யப்பட்டபோதும் அதற்கு முன்னரும், அவருக்கு மார்க்சியத்தின்பால் ஆர்வ மிக்க தேடல் இருந்ததும் தெரிய வரு கிறது. இத்தகைய நூல்களை வாசிக்கும் போது தேசிய இயக்கங்கள், உலகளா விய புரட்சி இயக்கங்களின் செயல்பாடு கள், சோசலிசம், மதம், மதவாதம் உட்பட நூல்களை வாசித்து அலசி ஆராய்ந்துள் ளார். இத்தகைய தேடல்கள்தான் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்கிற நூல் எழுதுவதற்கு உந்துதலாக இருந்துள் ளது. அந்நூலில் அவர், “பொதுவுடை மைத் தத்துவத்தின் தந்தையான மார்க்சின் நூல்களில் சிலவற்றை கற்று ணர்ந்தேன். மார்க்சியத் தத்துவத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய புரட்சியாளர் லெனின் அவர்களின் நூல் களையும் கற்றுணர்ந்தேன். இவர்கள் அனைவரும் பச்சை நாத்திகர்களே என்பதை நன்கு உணர்ந்தேன்” எனப் பதிவு செய்துள்ளார். மார்க்சிய மூல வர்களின் நூல்களை வாசித்ததே தனது வாழ்க்கையின் திருப்புமுனை என்று குறிப்பிடுகிறார். இத்தகைய தேடல்க ளின் இறுதியில்தான் மக்கள் அனு பவிக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு சோசலிசம்தான் என்கிற முடிவுக்கு பகத்சிங் வருகிறார்.

1929 ல் கைது செய்யப்பட்டு அவர் சிறையில் இருந்த இதேகாலத்தில் தான் கம்யூனிஸ்ட் இயக்கம் தனது பிர கடனத்தை வெளியிடுகிறது. 1920ல் கம்யூனிஸ்ட் இயக்கத்தை முளையி லேயே கிள்ளி எறிய வேண்டும் என பிரிட்டிஷ் அரசு முயன்றது. இதனைத் தொடர்ந்தே கம்யூனிஸ்ட்டுகள் மீது பெசாவர் சதிவழக்கு, கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு என பல்வேறு வழக்குகளை தொடுத்து கம்யூனிஸ்ட் இயக்கத்தினரை, அதன் தலைவர்க ளை சிறையில் அடைத்தனர். மீரட் சதி வழக்கில் கம்யூனிஸ்ட்டு கள் கைது செய்யப்பட்டு விசாரணைக் காக நீதிமன்றம் அழைத்து வந்தபோது, நீதிமன்ற வளாகத்திலேயே கம்யூனி ஸ்ட் கட்சியின் பிரகடனத்தை - கொள்கை அறிக்கையை வெளியிட்டனர். சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னர் அந்நிய ஆட்சியை அகற்றி இந்திய தேசத்தில் சமத்துவ சமுதாயத்தை- சோசலிச சமூகத்தைக் கட்டியமைக்க வேண்டும் என்கிற உன்னத லட்சியத்திற்கான கம்யூனிஸ்ட்டுகளின் பிரகடனம் வகுத்த பாதையில் இன்றும் செங்கொடி முன்னேறுகிறது.  

கம்யூனிஸ்ட்டுகளின் அன்றைய கொள்கைப் பிரகடனத்தில், அரசிய லில் இருந்து மதத்தை முற்றாக விலக்கி வைக்க வேண்டும் என்பதை மிக அழுத்தமாக வெளிப்படுத்தினர். அதே போல, சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து களமாடவும் அறைகூவல் விடுத்தனர்.

கான்பூரில் 1925ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி யின் முதல் மாநாட்டில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமை உரையில் தீண்டாமைக் கொடுமை பற்றியும், அதை ஒழிப்பதற்காக போராட வேண்டிய அவசியம் பற்றியும் வலி யுறுத்தினார். அதில், “நமது நாட்டு மக்கள் தொகையில் நான்கில் ஒரு  பகுதியினர் தீண்டத்தகாதோர் எனப் படுபவர்கள். தங்கள் ஆண்டைகளுக் குத் தொண்டூழியம் செய்வதைத் தவிர நாட்டு மக்களின் பிற வர்க்கங்களுடன் வேறெந்த சமூக உறவுமில்லாத, மானிட சமுதாயத்தைச் சார்ந்த உயிரி னம். பொது ஆலயங்களில் நுழைவ தற்கு அவர்களுக்கு உரிமை கிடை யாது. பொதுக் குளங்களில் அவர்கள் குளிக்க முடியாது. சில இடங்களில் பொதுச் சாலைகளை அவர்கள் பயன் படுத்த முடியாது” என விவரித்தார்.

தோழர் சிங்காரவேலர் கான்பூரில் உரையாற்றியது மட்டுமல்ல; தமிழ கத்தில் தீண்டாமைக் கொடுமை ஒழிக் கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து தந்தை பெரியார் நடத்திய குடிஅரசு இதழில் பல கட்டுரைகளும் எழுதியி ருக்கிறார். நாட்டின் பல பகுதிகளில் சாதி வேறுபாட்டிற்கு எதிராக குரலெ ழுப்பப்பட்டு வந்த பின்னணியில் தான்  சிங்காரவேலரும் சாதிக் கொடுமைக ளை ஒழிக்க வேண்டுமென்று வலி யுறுத்தினார்.

மதவெறியையும் சாதிக் கொடுமை களையும் களத்தில் இறங்கி எதிர்த்த இத்தகைய மாபெரும் பாரம்பரியம் கம்யூனிஸ்டுகளுடையது. இந்நிலை யில், 2014 ஆம் ஆண்டு பாஜக அரசு ஆட்சியில் ஏறியதோ அப்போது முதல் அதிகாரத்தை பயன்படுத்தி அரசு இயந்திரத்தில் மதவெறி ஆர்எஸ்எஸ் ஊடுருவியுள்ளது. கார்ப்பரேட் இந்துத் துவ அரசாக - அரசியல் சட்டத்திற்கு எதிராக - ஜனநாயகம் உள்ளிட்ட நான்கு தூண்களையும் தகர்த்து வரு கிறது பாஜக அரசு.

இரண்டாவது (2019) முறையாக பாஜக பதவி ஏற்ற உடனேயே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை ஒன்றிய அரசு கலைத்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஐஏ) இயற்றியது. மேலும் அதன் தொடர்ச்சியாக தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்), அடுத்து தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) இருக்கும் என்றும் அறிவித்தது. இது  குடியுரிமையை மதத்துடன் எவ்வகையி லும் இணைக்காத அரசியலமைப்புச் சட்டத்தினை அப்பட்டமாக மீறுவதே ஆகும். 

அரசு அமைப்புகள், நிர்வாகம், கல்வி, ஊடகங்கள், பண்பாட்டுத் துறை, வரலாறு போன்றவற்றை மத வெறி மயமாக்கி வருகிறது. பெரும் பான்மை வகுப்புவாதத்தின்  வளர்ச்சி என்பது சிறுபான்மை வகுப்புவாதத்தை தூண்டிவிட்டு தேச ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிப்பதாக அமையும்.  இத்தகைய சூழலில் மக்களின் உரிமை, கூட்டாட்சித் தத்துவம், ஜன நாயகம், மக்களாட்சியின் மாண்பு இவையனைத்தையும் பாதுகாக்க கொள்கைப் பிரகடனத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நிறை வேற்ற உள்ளது. இத்தகைய மாநாட் டின் செய்திகளை பட்டி தொட்டிகளில் கொண்டு சேர்க்கும் வகையில், மார்ச் 23 மாவீரன் பகத்சிங் நினைவு நாளில் செங்கொடியை ஏற்றிடுவோம். சோசலி சமே மாற்று; மற்றதெல்லாம் ஏமாற்று என்பதை மக்களிடம் கொண்டு செல்வோம்!