தில்லியில் ஓராண்டு காலம் நடைபெற்ற விவசாயப் போராட்ட அனுபவங்களையும், மகாராஷ்டிரா மாநில சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள் இடதுசாரிகளோடு இணைந்து தற்போது பணியாற்றி வருவதையும் குறிப்பிட்டு, நாம் ஒன்றிணைந்து இந்த சூழலுக்கு எதிராகப் போராட வேண்டும். உங்கள் முயற்சிகளுக்கு இடதுசாரிகள் எப்போதும் துணை நிற்போம்.
கோயம்புத்தூரில் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் இடைவிடாது தொடர்ந்து மழை. குளிரூட்டப்பட்ட அரங்கு இரண்டும் தந்த குளிர்ச்சியான சூழல். கலந்து ரையாடல் துவங்கியவுடனே கதகதப்பாக மாறி வெப்பக்கனல் துவங்கியது. இந்திய தொழில் வர்த்தக சபையின் கோயம் புத்தூர் பிரிவு முன்னெடுப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரியுடன் நடந்த தொழில்முனைவோர்க ளுக்கான கலந்துரையாடல் நிகழ்வில்தான் இந்த தட்பவெப்ப மாற்றம் நிகழ்ந்தது.
கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் முன்னிலையில் இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை பிரிவு தலைவர் பி.ஸ்ரீராமுலு தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பல்வேறு தொழில் அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கொடிசியா, கோயம்புத்தூர் ஸ்பின்னிங் மில்ஸ் உரிமையாளர் சங்கம், கோயம் புத்தூர் இன்ஜினியரிங் தொழில்முனைவோர் சங்கம், கோயம்புத்தூர் பம்ப் உற்பத்தியாளர்கள் அமைப்பு, இந்திய தொழில்வர்த்தக சபை நீலகிரி பிரிவு, கோயம்புத்தூர் வார்ப்பட தொழில்முனைவோர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கலந்துரையாடலின் துவக்கத்திலேயே கோவை யின் சிறப்புப் பற்றி சீத்தாராம் யெச்சூரி, சிறு, குறு தொழில்கூடங்கள் நிறைந்த மாவட்டம் இது. அதன் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகளை அள்ளித் தந்து வரும் நகரம். பம்ப் உற்பத்தியின் தலைநகரம் எனப் போற்றப்படும் நகரில் தென்னிந்தி யாவின் மான்செஸ்டர் என்று நீண்டகாலமாக புகழப் படும் ஊர். அத்தகைய மாநகரில் உங்களை சந்திப்ப தில் மகிழ்கின்றேன் என்று குறிப்பிட்டார்.
வரியை உயர்த்தி விட்டு வருவாயில் சாதனை என்பதா?
மேலும் இன்று ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் சிறு, குறு தொழில்களை ஆதரிப்பதாக இல்லை. அரசின் கொள்கைகளால் மக்களின் வாங்கும் சக்தியும் குறைந்துள்ளது. பணவீக்கம் அதிகரிப்பால் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள் ளன. விலை உயர்ந்ததால் ஜிஎஸ்டி வருவாயும் உயரத்தானே செய்யும். ஜிஎஸ்டி வரி வருவாய் உயர்வை பொருளாதார சாதனையாக சொல்லும் அரசை நாம் இன்றுதான் பார்க்கின்றோம். ஒரு சில பெரு முதலாளிகளுக்காக நமது நாட்டின் செல்வம் கொள்ளையடிக்கப்படுகிறது. நமது பெரும் மக்கள் தொகைக்கு வேலைவாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கும் விவசாயமும், சிறு, குறு தொழில் களும் புறக்கணிக்கப்படுகின்றன. இந்திய கிராமப்புற வருமானம் கடந்த சில மாதங்களில் 9சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளது. இது மக்களின் வாங்கும் சக்தியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றையெல்லாம் சரி செய்வதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு ஒன்றிய அரசுக்கு நெருக்கமான ஒரு சில பெரு முதலாளிகளுக்கு மட்டும் சலுகைகளை அள்ளி வழங்குகின்றனர். நாட்டின் சொத்துக்களை ஒரு சில தனி நபர்களுக்கு மடைமாற்றம் செய்யும் பணி நடைபெறுகிறது. இந்திய அரசின் மதச்சார்பற்ற தன்மையைக் கூட இந்து ராஷ்டிரம் என்ற பாசிச அரசியல் தன்மை நோக்கி நகர்த்துகின்றனர்.
சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள்தான் உள்நாட்டுத் தேவையை அதிகரிக்கக் கூடியவை. அதுதான் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை முன் நகர்த்திச் செல்லும். ஆடம்பர நுகர்வுப் பொருட்களின் அதிகரிப்பு பொருளாதார நடவடிக்கைகளை முன்நகர்த்த உத விடாது. எனவே சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை பாதுகாக்கப்பட வேண்டும். பெரும் கார்ப்பரேட் நிறுவன நலன்களுக்காகவும் பன்னாட்டு மூலதன நலன்களுக்காகவும் மட்டுமே நமது ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. அவர்க ளுக்காக நமது தேசத்தின் வளங்கள் சூறையாடப் படுகின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இதுபோ லத்தான் நடந்தது. வளர்ந்த நாடுகளின் நலனுக்காக அந்த நாடுகள் கொள்ளையடிக்கப்பட்டன.
தொழில்துறை ஏகபோகம் கூடாது
இங்கு உள்நாட்டு, பன்னாட்டு, பெரு நிறுவனங்க ளுக்காக நமது வளங்கள் கொள்ளையடிக்கப்படு கின்றன. இதற்கு அரசியலாக பெருநிறுவன மத வாதக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. நாம் அதை எதிர்க்க வேண்டும். நாட்டின் நலனுக்காக ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள பொருளாதார அடிப்படைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவ னங்கள், சிறு, குறுந்தொழில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தொழில்துறை ஏகபோகம் அனுமதிக்கப் படக்கூடாது. எல்லோரும் தொழில்துறையில் சம வாய்ப்புகளோடு பங்கேற்கும் ஏற்பாடு வேண்டும். ஒரு சிலருக்கு மட்டும் அதீத சலுகைகள் கூடாது என்று சொல்கின்றோம். எங்களைப் பொருத்தவரையில் சிறு, குறு, நடுத்த ரத் தொழில்துறை, வளர்த்தெடுக்கப்பட வேண்டும். ஏனென்றால் அவை ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடியவை. வேலைவாய்ப்புகள்தான் உள் நாட்டுத் தேவையை அதிகரிக்கும். எனவே ஒட்டு மொத்த நாட்டின் நலனுக்காக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையை நாங்கள் ஆதரிப்போம் என்றார்.
30 சதவீதத்தினர் உற்பத்தி நிறுத்தம்
தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் தாங்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் குறித்து தொழில்முனைவோர் பேசினர். இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக பேசிய அதன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் மின்மோட்டார் பம்ப் உற்பத்தி சந்திக்கும் நெருக்கடி களை விவரித்தனர். கடந்த ஜூலை மாதம் எந்த முன்ன றிவிப்பும் இன்றி எங்கள் கருத்துக்களையும் கேட்காமல் மோட்டார் பம்ப்களுக்கான ஜிஎஸ்டி வரி 12சதவீதத்தி லிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதோடு, விவசாயிகள் நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி உயர்த்தப் பட்டது. ஏற்கெனவே மூலப்பொருட்கள் விலை யேற்றம் மிகக்கடுமையாக உள்ளது. அரசின் பொதுத் துறை நிறுவனமான செயில் (SAIL) கூட விலைகளை உயர்த்திவிட்டது. இப்போது வரி உயர்வும் உடன்சேர கடும் நெருக்கடியில் பம்ப் உற்பத்தி தொழில் உள்ளது. ஏற்கெனவே இந்தத் தொழிலில் ஈடுபட்டி ருந்த 30சதவீதத்தினர் உற்பத்தியை நிறுத்திவிட்டனர் என்று கூறினார். மேலும் விவசாயிகள் ஆழ்துளைக் கிணறு அமைப்பது மற்றும் மோட்டார் பம்ப் அமைப்பதற்கான செலவு என்பது கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இருமடங்காக உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசின் துணை ஒப்பந்தப் பணிகளும் எங்களுக்கு வருவதில்லை. அப்பணிகளும் மிகப்பெரும் நிறுவனங்களுக்கு தரப்படுகிறது. அவர்கள் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு அப்பணிகளை நிறைவேற்று கின்றனர் என்று தெரிவித்தனர்.
பெரு நிறுவனங்களின் கடன் தள்ளுபடி; சிறு தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி
“கொடிசியா” அமைப்பின் சார்பில் பேசிய அதன் தலைவர்கள், ஜிஎஸ்டி வரி உயர்வு, மூலப்பொருட்க ளின் விண்ணுயர விலையேற்றம் இவை கட்டுப்படுத்தா விட்டால், சிறு, குறுந்தொழில்கள் நீடிப்பதே பெரும் சிரமம் என்றனர். மேலும் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்குவதில் உள்ள பாரபட்சம் பற்றியும் எடுத்து ரைத்தனர். மிகப்பெரும் நிறுவனங்களுக்கு உடனடி யாக பெரும் தொகைகள் கடனாக வழங்கப்படுகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினர், வங்கிக் கடனுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. கொரோனா பெருந்தொற்று முடிந்து இப்போதுதான் ஓரளவு இயல்புநிலைக்கு திரும்பியுள்ள நிலையில் கடன்களை திருப்பிச் செலுத்த கடும் நிர்ப்பந்தம் கொடுக்கிறார்கள். மறுபுறம், பெருநிறுவன கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதை பார்க்கின்றோம் என்ற னர். ஓரிருவரை வேலைக்கு அமர்த்தியுள்ள சிறு தொழிற்கூடங்கள் ஜிஎஸ்டிக்கான கணக்கினை பராமரிக்க பெரும் சிரமத்தை எதிர்கொண்டு பெரும் தொகையும் செலவிட வேண்டியுள்ளது.
தேவையை கணக்கில் கொள்ளாமல் ஏற்றுமதிக்கு அனுமதிப்பதால் பாதிப்பு
தென்னிந்திய நூற்பாலை சங்கத்தின் சார்பாக பேசிய அதன் தலைவர், பருத்தி மற்றும் நூல் விலையில் காணப்படும் ஏற்றத்தாழ்வு பெரும் நெருக்க டியை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டார். ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை பருத்திக்கான பருவகாலம். அப்போது அதிக அளவில் பருத்தி கிடைக்கும். நூற்பாலைக ளுக்கான பருத்தி தேவையும் அதிகமாக இருக்கும். கடந்த 3 ஆண்டுகளாக சரியாக பருவம் (சீசன்) துவங்கும் நேரத்தில் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வது குறித்து, கவனத்தில் கொள்ளாமல் பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி கொடுக்கிறது ஒன்றிய அரசு. இதனால் உள்நாட்டு தேவைக்கு பஞ்சு கிடைக்கா மல் அவதிப்படுகின்றோம். பிப்ரவரி மாதத்திற்கு பிறகு, ஏற்றுமதிக்கு தடை விதித்து, இறக்குமதிக்கு அனுமதி கொடுக்கின்றார்கள். அப்போது பஞ்சுகளை ஏற்கெனவே பதுக்கி வைத்துள்ள பெரும் நிறு வனங்கள் அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால் சிறு, மற்றும் நடுத்தர அளவிலான நூற்பாலைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். பஞ்சாலைத் தொழிலில் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறு வனங்கள் மட்டுமே கோலோச்ச முடியும் என்ற நிலை விரைவில் உருவாகிவிடுமோ என்ற அச்சம் உள்ளது என்று குறிப்பிட்டனர். நீலகிரி மாவட்டதொழில் முனைவோர்களும் சீத்தா ராம் யெச்சூரியை சந்திக்க வந்திருந்தனர். தேயிலை உற்பத்தி தொழில் சந்திக்கும் நெருக்கடிகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
தில்லி, மகாராஷ்டிரா போல் ஒன்றிணைந்து எதிர்கொள்வோம்
கலந்துரையாடலின் முடிவில் சீத்தாராம் யெச்சூரி, நம்பிக்கையோடு இந்த சூழலை எதிர்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். தில்லியில் ஓராண்டு காலம் நடைபெற்ற விவசாயப் போராட்ட அனுபவங்களையும், மகாராஷ்டிரா மாநில சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள் இடதுசா ரிகளோடு இணைந்து தற்போது பணியாற்றி வருவதை யும் குறிப்பிட்டு, நாம் ஒன்றிணைந்து இந்த சூழலுக்கு எதிராகப் போராட வேண்டும். உங்கள் முயற்சிக ளுக்கு இடதுசாரிகள் எப்போதும் துணை நிற்போம் என்றார். ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் முற்றிலும் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளது. சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையை அவர்கள் விழுங்க காத்துக் கிடக்கின்றனர். இந்தச் சூழலை அனுமதிக்கக்கூடாது. நாட்டின் நலன்களுக்காக இதை நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டும். மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ளவர்கள், நாட்டின் மொத்த தொழில் துறையையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கின்ற னர். அரசும் அவர்களோடு ஒத்துழைக்கின்றது. இதைத் தான் நாங்கள் கூட்டுக்களவாணி முதலாளித்துவம் என்கின்றோம்.
பன்னாட்டு மூலதனம் தங்குதடையின்றி இங்கு வரவேற்கப்படுகின்றது. அவர்களுக்கு எல்லா சலுகை களும் தொழில் துறையில் அளிக்கப்படுகின்றது. நிலம், மின்சாரம் கடன் உதவி என எல்லாம் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றது. அதனால் தான் இந்தியாவில் நடைபெறும் ஜனநாயக மீறல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்கத்திய ஊடகங்கள் வாய்திறக்க மறுக்கின்றன. நிறைய எழுத்தாளர்கள், கருத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அரசை விமர்சித்ததற்காகவே பிணையின்றி சிறைகளில் உள்ளனர்.
வெளிப்படைத்தன்மை சிதைப்பு
மிகச் சிறந்த புள்ளிவிவர தகவல்களை சேகரிக்கும் கட்டமைப்பை நாம் பெற்று உள்ளோம். ஆனால் 8 ஆண்டுகால ஆட்சியின் தோல்விகளை மறைக்க உண்மை புள்ளி விவரங்கள் கூட மறைக்கப்படு கின்றன. நமது புள்ளி விவர கட்டமைப்பு உருவாக்கி யுள்ள வெளிப்படைத்தன்மையே தற்போது சிதைக்கப் படும் ஆபத்தில் உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும், பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு மூலதனத்துடனான இவர்களது கூட்டை முறியடிக்க நாம் கூட்டணி சேர வேண்டும். சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள், அந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் இடதுசாரிகள் ஒன்றிணைந்தால் தேசத்தை பின்னுக்கு இழுக்கும் கூட்டணியை தோற்கடிக்க முடியும். நமது அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க முடியும் என்று கூறி சீத்தாராம் யெச்சூரி நிறைவு செய்தார்.
தொகுப்பு: கே.எஸ்.கனகராஜ்