ஆறுகள் பூமியின் ரத்த நாளங்கள் என்று வர்ணிக்கப்படுகின்றன. ஆற்றின் கரை ஓரங்களில் தான் நாகரிகங்கள் தோன்றின. கி.மு.4000-3500இல் டைகிரிஸ் ஆற்றின் ஓரம் மெசபடோமிய நாகரிகம் வேரூன்றியது. கி.மு.3100இல் நைல் நதியை ஒட்டி பண்டைய எகிப்து நாகரிகமும், கி.மு.3300இல் சிந்து நதியோரம் சிந்து சமவெளி நாகரிகமும் உருவாகின. ஆறுகள் மூலம் உணவு உற்பத்தியும், போக்குவரத்தும், வர்த்தகமும் எளிதா னது. இதனால் உலகெங்கும் நவீன நகரங்கள் உரு வாகி வளர்ச்சியடைந்தன. காவிரி, கோதாவரி, கங்கை, யமுனை, சரஸ்வதி எனப் பெரும்பாலான ஆறுகளின் பெயர்கள் பெண் பால் சார்ந்தவை. “காவிரி தென்பெண்ணைப் பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி என மேவிய ஆறு பலவோடத் திருமேனி செழித்த தமிழ்நாடு” என்று பாரதி பெருமையோடு பாடினார். இப்போது ஆறுகளும் தொலைந்தன; கூடவே செழிப்பும் தொலைந்து போயின.
ஆறுகளின் அழிவு
தமிழ்நாட்டிலுள்ள ஆறுகளை அழிந்த ஆறுகள் என்றும் அழிந்து கொண்டிருக்கும் ஆறுகள் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். ஆறுகளின் அழிவு என்பது மாசுபடுத்தல் மற்றும் மணல் கொள்ளை என இருவிதங்களில் நடக்கிறது. கழிவுகள் கொட்டப்படும், சங்கமிக்கும் இடமாக ஆறுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 600 கோடி கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை, குப்பைகளைக் கடலுக்குள் கொண்டு செல்வதில் ஆறுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், விவசாய நிலங்களில் இருந்து மழைநீரோடு வரும் பூச்சிக் கொல்லிகள், மருத்துவக் கழிவுகள், சாயப்பட்டறைக் கழிவுகள், தோல் பதனிடும் தொழிற் சாலைக் கழிவுநீர், இறந்த விலங்குகள், நெகிழிக் கழிவுகள், பி.வி.சி தொழிற்சாலைக் கழிவுகள், கார் உற்பத்தி தொழிற்சாலைக் கழிவுகள், கால்நடைப் பண்ணைக ளில் இருந்து உருவாகும் கழிவுகள் போன்றவை ஆறு களுக்குத் திருப்பிவிடப்படுவதால் ஆறுகள் மாசடை கின்றன. இந்த நடவடிக்கைகள் ஆற்றின் தன்மையைப் பெரிய அளவில் பாதிக்கின்றன. இதனால் படிப்படி யாக நில மேற்பரப்பு நீர்வளம், நிலத்தடி நீர்வளம் இரண்டுமே கெட்டுப்போய்க் கொண்டிருக்கின்றது.
மணல் கொள்ளையும் மரணங்களும்
அடுத்து, ஆற்று மணல் கொள்ளை. ஆற்று மணலை வரை முறையின்றி அள்ளுவதால் ஆறுகளின் தடையற்ற நீரோட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப் படுகிறது. ஏறக்குறைய தமிழகத்தின் எல்லா ஆறுகளி லும் மணல் கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தின் ஆறுகளின் மரணத்துக்கு மணல் கொள்ளையே முக்கியக் காரணம். அதிகப் படியான மற்றும் சட்டவிரோத மணல் அள்ளுதல் கங்கையின் ஸ்திரத்தன்மையை மோசமாக்கியது. இது, உத்தரகண்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் போது பாதகமான விளைவுகளைத் தீவிரப்படுத்தி யது. இதனால் 2013-ல் 5 ஆயிரம் பேர் இறந்தனர். 2021-ல், ஒரு பெரிய நீர்மின் கட்டுமானம் நந்தாதேவி தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள ஒரு பகுதியை சீர்குலைத்து, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். 1985-ல் கங்கா செயல் திட்டம் தொடங்கப்பட்டது. 2017-ல் கங்கையை சட்டப்பூர்வ நபர் என்று உத்தர கண்ட் உயர்நீதிமன்றம் அறிவித்தது. இருப்பினும், நாட்டின் மற்ற ஆறுகளைப் போலவே கங்கையும் மாசிலிருந்து தப்பவில்லை. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஆறுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை நாம் போதியளவு பாதுகாப்பதில்லை என்ற விமர்சனம் உண்டு. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் 30 மாநி லங்களில் ஓடும் 603 ஆறுகளில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டதில் 279 ஆறுகளில் 311 இடங்களில் மாசு அளவு மிக அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நீரில் பி.ஓ.டி. - உயிர் வேதியியல் ஆக்சிஜன் தேவை - எவ்வளவு உள்ளது என்ற அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தூய்மையான நீரில் இயற்கையாகவே உயிரினங்கள் வாழ ஏற்ற அளவில் உயிர் வேதியியல் ஆக்சிஜன் இருக்கும். இந்த ஆய்வில் சென்னையில் உள்ள கூவம் ஆறு தான் இந்தியாவிலேயே மிகவும் மாசடைந்த ஆறு என்று கூறப்பட்டுள்ளது.
மாசடைந்த 10 ஆறுகள்
மேலும் தமிழகத்தில் காவிரி, பவானி, அமராவதி, பாலாறு, சரபங்கா, தாமிரபரணி, மணிமுத்தாறு, வசிஸ்டா நதி, அடையாறு, கூவம் ஆகிய 10 ஆறுகள் அதிகபட்சமாக மாசடைந்து உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் அடையாறு, கூவம், மணி முத்தாறு, வசிஸ்டா நதி ஆகியவற்றில் பி.ஓ.டி. தேவை மிக அதிகமாக இருப்பதால் இவை உயிரி னங்கள் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கிறது. தில்லி அறிவியல் சுற்றுச்சூழல் மையம் மற்றும் செய்தி நிறுவனங்கள் இணைந்து சுற்றுச்சூழல் தரவரிசை ஆய்வை நடத்தி சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டன. இதன் அறிக்கையில், 2016ஆம் ஆண்டுக்குப்பின், சுற்றுச் சூழலில் தமிழகம் பின்தங்கியுள்ளது எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. தரவரிசை பட்டியலில் தமிழகம் 21ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு மாசுபடும் போது, அதை நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ சார்ந்திருக்கும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்து வாழ்க்கை முறை களும் பாதிக்கப்படுகின்றன. ஆறுகளில் மாசுபட்ட மற்றும் குறைந்து வரும் நீர் பல கடல் விலங்குகளின் வாழ்விடத்தை இழக்கச் செய்கிறது. கடல் சார் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படும் போது, அது மீன வர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது. இந்த மாசுக்க ளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுகள், உணவுச் சங்கிலி வரை சென்று இறுதியில் மனிதர்களை மாய்க்கச் செய்கிறது.
ஆண்டுக்கு ஆயிரம் குழந்தைகள் தண்ணீர் பிரச்சனையால் பலி
ஒரு கணக்கெடுப்பானது, 2026 இறுதிக்குள், சுமார் 400 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வார்கள் என்கிறது. தற்போது, உலகளவில் சுமார் 120 கோடி மக்களுக்குச் சுத்தமான, குடிநீர் மற்றும் சரியான சுகாதார வசதி இல்லை. தண்ணீர் தொடர்பான பிரச்சனைகளால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட ஆயிரம் குழந்தை கள் இறப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு, குடிநீருக்கு, கால்நடைகள் உள்ளிட்ட எல்லா ஜீவராசிகளுக்கும், வாழ்க்கையின் எல்லா மேம்பாட்டுக்கும் நீர் தேவை, அதைத் தருவது ஆறுகள் தான். ஆறுகள் ஒரு நாட்டின் பொருளா தாரத்திற்கு மிகவும் முக்கியமானவை, ஆறுகள் மதிப்பு மிக்க இயற்கை வளம். தாதுக்கள் நிறைந்த வண்டல் மண்ணை எடுத்துச் செல்வதன் மூலம் மண் வளத்தை உறுதி செய்கின்றன. மின்சாரம் உற்பத்திக்கு பயன் படுகிறது. போக்குவரத்துக்கும் வழிவகுக்கிறது. மனிதர்களின் உணவுக்கான மீன் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள் தேவையையும் ஆறுகள் பூர்த்திச் செய்கின்றன.
மாசடைவதை தடுப்பதில் சமரசம் கூடாது
அமராவதி ஆறு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் பானர்ஜி, செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் ஆறுகள் மாசடைவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை. இதில் அரசு எந்தச் சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தினர். கழிவுகள் ஆற்றில் கலக்காமலிருப்பதற்கான விதிமுறைகளைத் தொழிற்சாலைகள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். அரசும் அதனைக் கண்காணிக்க வேண்டும். சாக்கடைக் கழிவுகளை ஆறுகளில் விடுவதற்கு முன்பாகச் சுத்திகரிப்பது நல்லது. நமது ஆறுகளுடன் சமரசம் செய்யாமல் தொழில் மய மாக்கல் மற்றும் நகரமயமாக்கல் வளர்ச்சியைத் தக்க வைக்க முடியாதா என யோசிக்க வேண்டும். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்புவரை, பெரும்பா லான ஆறுகளில் ஆண்டுக்குக் குறைந்தது ஆறு மாதங்கள் நீர் ஓடும். அவை காய்ந்த போதும், கால்நடை களுக்கும் அன்றாடத் தேவைகளுக்கும் போதுமான தண்ணீர் இருந்தது. ஆற்றின் அருகே விவசாயிகள் சிறு சிறு விவசாயம் செய்வார்கள். இன்று ஏது மில்லை. ஆறுகள் நமக்கு அந்நியமாகிவிட்டன. நமக்கும் ஆறுகளுக்கும் இடையே உள்ள தொடர்பு எங்கோ தொலைந்து விட்டது. குறைந்த பட்சம் எஞ்சியிருப்பதையாவது காக்க வேண்டும். இழந்த பெரிய உறவை மீண்டும் ஒருமுறை கட்டியெ ழுப்ப வேண்டும். இதுதான் இன்று நம்முன் உள்ள பிரதான கடமையாகும்.
கட்டுரையாளர் : சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்