ஆர்.கஸ்தூரி : பெண்ணுரிமைப் போர்க்குரல் - எஸ்.வெண்மணி
தேனி மாவட்டம் போடிநாயக்க னூர் மண் பெற்றெடுத்த வீரமகள் தோழர் ஆர்.கஸ்தூரி. இடதுசாரி இயக்கத்தின் மீது அசைக்க முடியாத பற்று கொண்ட தோழர் பி.ராமரை மணந்த பிறகு, அவரது உள்ளத்திலும் இடதுசாரி சிந்த னைகள் ஆழமாக வேரூன்றின. குடும்பப் பொறுப்புகளுக்கு மத்தியிலும், சமூகப் பொறுப்பை மறக்காத கஸ்தூரி, 1973-இல் திண்டுக்கல்லில் உருவாக் கப்பட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முதல் மாநிலக்குழு வில் உறுப்பினராக இருந்து தனது பெண்ணுரிமைப் பயணத்தைத் தொடங்கினார். சித்ரா, மேதினி, பாரதி என மூன்று பெண் குழந்தைகளின் தாயாக இருந்த போதிலும், சமூகத்தின் மாற்றத்திற்காக அயராது உழைத்தார். தாய்மையின் பாசத்துடன் சமூகப் போராட்டத்தின் உறு தியையும் இணைத்துக் கொண்டவர் தோழர் கஸ்தூரி. வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக எழுந்த பெண்களின் குரல் அரசின் எமர்ஜென்சி கொடுமைகள் நாட்டை உலுக்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில், பெண்கள் வரதட்சணைக் கொடுமைகளால் கொடூரமான கொலைகளுக்கு ஆளாகி வந்தனர்.
இந்த இருண்ட காலத்தில், 1976 ஜூலை 11 அன்று, ஆயிரக்கணக்கான பெண்க ளை ஒன்றிணைத்து, பாப்பா உமாநாத் தலைமையில், தோழர் கஸ்தூரி போடி யில் வரதட்சணைக்கு எதிரான மாநாட்டை நடத்தினார். மாதர் சங்கத்தின் ஸ்தாபக தலை வர்களான கே.பி.ஜானகியம்மாள், பாப்பா உமாநாத் ஆகியோரால் ஈர்க்கப் பட்ட கஸ்தூரி, பெண்களுக்கான போ ராட்டங்களை துணிச்சலுடன் முன்னி ன்று வழிநடத்தினார். அவரது போராட்டக் குணம் பல பெண்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது. சிறையிலும் அணையாத போராட்ட தீபம் 1982-ஆம் ஆண்டு, விலைவாசி உயர்வைக் கண்டித்து, நூற்றுக்கணக் கான பெண்களை ஒன்றிணைத்து பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார் தோழர் கஸ்தூரி. அப்போராட்டத்தில், கோம் பை-மேரி, போடி-சுந்தரம்மாள், பி.காளி யம்மாள், ரோஜா, பரிபூரணம், தங்க பொண்ணு ஆகிய தோழர்களுடன் கைக் குழந்தைகளுடன் கைது செய்யப் பட்டார். மதுரை ஆயுதப்படை வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்ட போதிலும், அங்கும் போராட்டத்தை நிறுத்த வில்லை.
அவரது முழக்கங்களால் வளா கமே அதிர்ந்தது. பின்னர் திருச்சி மத்திய சிறைச்சாலையில் 15 நாட்கள் குழந்தை களுடன் அடைக்கப்பட்டனர். சிறைச் சாலையின் இரும்புக் கம்பிகளும் அவரது போராட்ட உணர்வை அடக்க முடியவில்லை. போராட்டத்தின் முன்னணி வீராங்கனை ஒன்றாக இருந்த மதுரை மாவட்டத் தில், திண்டுக்கல் உட்பட பல பகுதிகளில் பெண்களை ஒன்றிணைத்து, மாதர் அமைப்பை வலுப்படுத்துவதில் சிறு குழந்தைகளையும் பராமரித்துக் கொண்டே அரும்பாடுபட்டார். போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தின் போது, போடி நகரில் போராட்டத்திற்கு எதிராக பேருந்தை ஓட்டியதைக் கண்டித்து, மாதர் சங்கம் சார்பில் தோழர் கஸ்தூரி, சிவந்தம்மாள் ஆகியோர் பேருந்தின் சக்கரத்தின் கீழ் படுத்து, அதை நகர விடாமல் தடுத்தது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது. இத்தகைய துணிச்சலான செயல்கள் மூலம் மக்களின் மனங்க ளில் இடம்பிடித்த கஸ்தூரி, பின்னா ளில் மக்களின் ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போடி நகர்மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டார். தேனி மாவட்ட மாதர் இயக்கத்தின் தாய் தேனி மாவட்டம் முழுவதும் பி.சுந்த ரம்மாள், சின்னம்மாள், பி.ரோஜா, காளி யம்மாள், பாக்கியம், ஆரோக்கிய மேரி, தேவாரம் ராமுத்தாய், பரிபூரணம் என ஏராளமான பெண் தோழர்களை மாதர்
அரங்கத்தில் செயல்பட வைத்ததில் தோழர் கஸ்தூரி மிகப்பெரும் பங்காற்றி னார். பல கிராமங்களில் தோழர்களின் வீடு களில் தங்கி, இரவு பகலாக உழைத்து, மாதர் அமைப்பை வளர்த்தெடுத்தார். மாவட்டத்தின் பல இடங்களுக்கு மாதர் சங்கப் பணிகளுக்காக பயணம் செய் யும் போது, தோழர்களின் வீடுகளில் தங்கி, அவர்களுடன் தனது அனுபவங்க ளையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். நெருப்புப் பெண்ணின் அயராத பயணம் பெண்ணுரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தோழர் ஆர்.கஸ்தூரி, தேனி மாவட்டத்தின் பெண்களுக்கு ஒரு வழி காட்டியாக, முன்னுதாரணமாக திகழ்கி றார். அவரது வாழ்க்கை வரலாறு நம் தலைமுறைக்கும், வரும் தலைமுறை களுக்கும் உத்வேகமளிக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது. குடும்பப் பொறுப்புகளுக்கும், சமூகப் பொறுப்புகளுக்கும் இடையே சம நிலை காத்து, இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட தோழர் கஸ்தூரி அவர்க ளின் வாழ்க்கை பெண்களுக்கு ஊக்க மளிக்கும் ஒளிவிளக்காக என்றென்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.