articles

இரவு நேரப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்!

நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்க ளிலும் பெண்கள் ஏற்கனவே  பணியில் இருந்த வேலை வாய்ப்பு கள் என்பது கோவிட் பெரும் தொற்றுக்குப் பிறகு கணிசமான அளவில் குறைந்துள் ளது. பணியிடங்களில் பாதுகாப்பு ,மகப் பேறு நலச் சட்டம், மருத்துவப் பயன்க கள், குழந்தை நலக் காப்பகங்கள், ஓய்வு அறைகள் போன்றவை சட்டங்க ளில் இருந்தாலும், எதார்த்தத்தில் எட்டாக்கனியாகவே உள்ளது.  கிராமப்பு றப் பெண்கள் பெரிதும் பயன்  அடைகிற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  உறுதித் திட்டத்திற்கு அரசு நிதி குறைத்தி ருப்பது, கிராமப்புறப் பெண்களின் வேலை வாய்ப்பை குறைப்பதற்கான இன்னொரு ஏற்பாடாகும். கணினி போன்ற தொழில்நுட்பங்கள் சார்ந்த இரவு நேரப் பணிக்கு செல்பவர்களில்  பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு  நாள் அதிகரித்து வருகிறது.  அதுமட்டுமின்றி, 24 மணி நேரமும் நடைபெறக்கூடிய மருத்துவ சேவைகள், போக்குவரத்து பணிகள், செய்தி நிறுவனப் பணிகள் ,காவல் , தூய் மைப்பணி போன்ற இரவு நேர பணிக ளுக்கு செல்பவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனாலும் பணியிடங்களில் இவர்க ளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வில்லை.

இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட ஐடி ஊழியர்களில் கிட்டத்தட்ட 14 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர் கள்.  அதிகப் பணி நேரம், இரவு பணிச்்சுமை மற்றும் மகப்பேறு விடுப்பின்மை, பண்டிகை விடுப்பின்மை ஆகியவை இதற்கு முக்கி யக் காரணங்களாக கூறப்படுகிறது.

ஓய்வின்றி இரவிலும் பணியாற்றும் பெண்கள்...

  1.     நள்ளிரவில் பெரிய அளவில் ஓய்வு நேரம் ஏதுமின்றி, பணியில் ஈடுபட்டி ருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் ,பணி பாதுகாப்பு இல்லை. பணி இடங்களிலும் பாது காப்பு இல்லை. இவர்களில்  பெண்  தொழிலாளர்களே அதிகம். பெரும்பா லும் இவர்கள் ஒப்பந்த தொழிலாளர்க ளாகவே உள்ளனர் .
  2.     கடந்த 10 ஆண்டுகளில் நாடு அடைந்த மாற்றத்திற்கும், வளர்ந்த வேகத்திற் கும் பெண்களின் நிலை எங்கேயோ உச்சம் தொட்டிருக்க வேண்டும். ஆனால் உழைப்புக்கு ஏற்ற கூலி யின்மை, சமவேலைக்கு சம கூலி வழங்காதது, ஒப்பந்தக் கூலி, தினக்கூலி போன்ற உழைப்பு சுரண் டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
  3.     செங்கல் சூளைகளில் பாதுகாப்பற்ற சூழல்களில் பெண் குழந்தைகள் பணிய மர்த்தப்பட்டுள்ளனர்.  கார்மென்ட் மற்றும் ஆடை உற்பத்தி தொழிற் சாலைகளில் பெண்கள் அதிகமாகப் பணிபுரிந்து வருகின்றனர் . பல பன்னா ட்டு நிறுவனங்கள்  பெண் தொழிலா ளர்களை கொத்தடிமைகளாக நடத்தி வருகின்றன. அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, பாதுகாப்பான பணி சூழல், ஊதியத்துடன் கூடிய விடுப்பு, நிலையான ஊதியம், சுகாதாரப் பலன் கள் போன்றவை வழங்கப்படுவ தில்லை. பெண் உழைப்பாளிகள் உயி ருள்ள சரக்காக , பண்டங்களாகவே கருதப்படுகின்றனர் .
  4.     பணியிடங்களில் பாலியல் தடுப்பு கமிட்டி அனைத்து அரசு ,தனியார் நிறுவ னங்கள், கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்திட வேண்டும்.