articles

img

சென்னையில் தனியார் மினி பேருந்து முதலாளிக்கு லாபம்; பொதுத்துறை வீழும்! - இரா.வேல்முருகன்,

பொதுத்துறை போக்குவரத்தின் எதிர்காலம் குறித்த கவலைகள்  எழுந்துள்ளன. சென்னை மாநகரில் சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட புறநகர் மண்ட லங்களில் முதற்கட்டமாக 2025 பிப்ரவரி மாதத்திலி ருந்து தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தைத் தனியார்மயமாக்கும் நடவ டிக்கைகளைக் கண்டித்து ஜனவரி 22 அன்று தமிழ் நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழி யர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர். இந்தப் போராட்டம் முடிந்த அடுத்தநாளே தமிழ்நாடு அரசாங்கம் இத்தகைய அறிவிப்பை முன் யோச னையின்றி வெளியிட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களில், ஓய்வு பெற்ற வர்களுக்குச் சேர வேண்டிய பணப்பயன், நிலுவை யில் உள்ள அகவிலைப்படி உயர்வு (டிஏ), ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, பழைய ஓய்வூதியத் திட்டம் என அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று கூறியிருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்று நான் காண்டுகள் முடியப்போகிறது. ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாகப் பொ துப் போக்குவரத்தைத் தனியாரிடம் தாரைவார்க்கும் வேலையைத் திட்டமிட்டுச் செய்து வருகிறது.

பொதுப்போக்குவரத்தின் வரலாறு

சென்னை மாகாணத்தில் 1956ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே பொதுப்போக்கு வரத்துத் துறை உருவாக்கப்பட்டது. ஆனால், அது  பேருக்குத்தான் போக்குவரத்துத் துறை என்று இருந்தது. அடுத்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு வெறும் 192 கிலோமீட்டர் தொலைவுள்ள வழித்தடங்க ளில் விரைவுப் போக்குவரத்துப் பேருந்துகளை இயக்கத் தொடங்கியது. 1967ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதியில், ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் போக்குவரத்துத் துறை நாட்டுடமையாக்கப்படும் என்றது. அன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றது. ஆட்சிக்கு வந்து தனியார் பேருந்துத் தடங்களை அரசு டமையாக்குவது தொடர்பாக ஆராய 1971ஆம் ஆண்டு சோமசுந்தரம் தலைமையில் ஒரு குழுவை அமைத் தது. அக்குழு பரிந்துரைப்படி படிப்படியாகப் பேருந்து வழித்தடங்கள் அரசுடமையாக்கப்பட்டன. அதன்படி 1972ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாளன்று தமிழ்நாடு அரசால் பல்லவன் போக்குவரத்துக் கழகம் உருவாக் கப்பட்டது. அதற்குப் பின்புதான் படிப்படியாகப் பிற போக்குவரத்துக் கழகங்கள் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டன. சென்னையில், 1972ஆம் ஆண்டு தனியார் முதலாளி களிடம் இருந்த பேருந்துகள் அனைத்தும் நாட்டுடமை யாக்கப்பட்டு, பல்லவன் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. அப்போது போக்குவரத்துக் கழகத்தின் வாயிலாக 8 பணிமனைகளில் இருந்து 176 வழித்தடங்களில் 1029 பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்பின் பல்லவன் போக்குவரத்துக் கழகம், பல பெயர்களைத் தாண்டி தற்போது மாநகர போக்கு வரத்துக் கழகம் [எம்டிசி] என்ற பெயரில் இயங்கு கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றிய ஊழியர்களின் அயராத கடும் உழைப்பால் கழகங்கள் ஆலமரமாக வளர்ந்தன. இது, மாநிலத்தின் கல்வி, பொருளாதார வளர்ச்சியை ஜெட் வேகத்தில் கொண்டு செல்ல வழிவகுத்தது. கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்தது.

மகளிர் இலவசப் பயணத்திட்டம்

இதன் தொடர்ச்சியாகவே ‘விடியல் பயணம்’ என்கிற மகளிர் இலவசப் பயணத் திட்டத்தைத் திமுக அரசு தற்போது கொண்டு வந்தது. உழைக்கும் பெண்கள், குறைந்த கூலியில் பணிபுரியும் பெண்களுக்குக் கட்ட ணம் இல்லா பேருந்து மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறியது. 2024 மே மாதம் வரை மட்டுமே தமிழ்நாடு முழுவதும் 445 கோடி முறை பெண்கள் கட்டணமில்லா மல் பயணம் செய்துள்ளதாக அரசே அறிவித்தது. ஒரு பயணத்திற்கு குறைந்தபட்சம் 10 ரூபாய் என்றால் கூட  4,450 கோடி ரூபாய் பெண்களுக்குச் சேமிப்பாகி உள்ளது. பெண்களுக்கான விடியல் பயணத்தைப் போன்று, மாணவர்களுக்கு இலவச பேருந்துப் பயணம், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்துப் பயணம், மாற்றுப் பாலினத்தவர், முதியவர்கள், முன்னாள் ராணு வத்தினர் என பல்வேறு பிரிவினருக்குச் சலுகை அளிக் கிறது. இதற்கு ஈடான பணத்தைப் போக்குவரத்துத் துறைக்கு அரசு கொடுத்தால் போக்குவரத்துக் கழ கங்கள் செழிப்பாக இருக்கும். அதாவது அரசு, போக்கு வரத்துக் கழகத்திற்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி  வைத்துள்ளது. இத்தகைய நெருக்கடியிலும், மக்கள் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக, லாபம் தராத, வருவாய் இழப்பு ஏற்படுத்தக்கூடிய 10 ஆயிரம் வழித்தடங்களில் போக்குவரத்துக் கழகங்கள் பேருந்துகளை இயக்கு கின்றன. தமிழகத்தின் பொருளாதார, கல்வி வளர்ச்சி யைக் கருத்தில் கொண்டு நட்டத்தை ஏற்றுக் கொண்டு பேருந்துகளைப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்குகின்றன. சென்னையில், மாநகர போக்குவரத்துக் கழகம் 40 பணிமனைகளில் இருந்து 3365 வழித்தடங்களில் 3637  பேருந்துகளை இயக்குகிறது. நாள்தோறும் 50 லட்சம் மக்கள் பயணிக்கின்றனர். பயணிகளின் எதிர்காலத் தைச் சுமந்து பேருந்துகள் ரத்த நாளங்களைப் போல் சென்னை நகருக்குள் ஊடாடி வருகின்றன. மழை, வெள்ளம், புயல் எத்தகைய இயற்கை இடர் ஏற்பட்டா லும் ஊழியர்களும் உயிரைப் பணயம் வைத்துப் பேருந்துகளை இயக்குகின்றனர்.

படிப்படியாகத் தனியாரை நுழைக்கும் போக்கு

சென்னை நகரிலிருந்து விழாக்காலங்களில் லட்சக்கணக்கான எளிய மக்கள் சொந்த கிராமங்க ளை நோக்கிச் செல்கின்றனர். பெரும்பகுதி மக்கள் பேருந்தில் இடம் கிடைக்காமல் அல்லாடிக்கொண்டு செல்கின்றனர். இத்தகைய பண்டிகைக்காலங்களில் ஏற்கனவே அரசு கூடுதலாகப் பேருந்துகளை இயக்கி வந்தது. தற்போது பண்டிகைக்காலங்களில் சிறப்புப் பேருந்து இயக்கத்தில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதியளித்து இதற்காகத் தனியார் பேருந்து முதலாளிகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 52 ரூபாயை அரசு கொடுக்கிறது. தனியார் முதலாளிகளுக்குக் கொ டுக்கும் பணத்தை அரசுப் போக்குவரத்துக் கழகங்க ளுக்குக் கொடுத்தால் அவை நஷ்டமின்றிச் செயல் படும். அரசு அறிவிக்கும் சலுகைகளைத் தொய்வின்றி வழங்குவதோடு, லாபகரமாகச் செயல்படும். அதனைச் செய்ய மறுப்பது ஏன்? தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிப்பது மக்களின் நலன் சார்ந்து அல்ல, முதலாளிகள் கொள்ளையடிப்பதற்குத்தான்.

பொதுப் போக்குவரத்து எனும் சந்தை

சென்னை புறநகர்ப் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்க உள்ளதாக அரசு தற்போது அறிவித்துள்ளது. இதேபோன்றதொரு அறிவிப்பிற் காக 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி அரசு கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்தியது. அப் போது மக்கள் மத்தியில் எழுந்த கருத்து வேறுபாடு களால் அத்திட்டம் மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொள் ளப்பட்டது. தற்போது மாநகர் போக்குவரத்துக் கழகம் இத்திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது. பொதுப்போக்குவரத்துச் சந்தையில் தனியார் பங்க ளிப்பு அதிகரிப்பதன் விளைவுகளை ஆராய வேண்டி யது அவசியம். லாபம் வரும் வழித்தடங்களைத் தனியா ருக்குக் கொடுத்துவிட்டு, நட்டம் வரும் வழித்தடங்க ளில் அரசுப் பேருந்துகளை இயக்குவது என்பது பொ துத்துறையின் நிலைத்தன்மையை பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மனு பரிசீலனை செய்க!

அரசு விமான நிறுவனங்களின் தனியார்மய மாக்கல் அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். உக்ரைனில் போர் தொடங்கிய போது கட்டண உயர்வு பயணிகளை பாதித்தது போல, போக்கு வரத்தை முழுமையாகத் தனியார்மயமாக்குவது பொது மக்களின் நலனைப் பாதிக்கும் அபாயம் உள்ளது. இலவச பஸ் பாஸ் திட்டங்களின் தொடர்ச்சியும் கேள்விக்குறியாகலாம். மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தனியார் மினி பேருந்துகள் அனுமதி என்பது ஒரு தொடக்கம் மட்டுமே. இதன் நீண்டகால விளைவுகளை கவன மாக ஆராய வேண்டும். பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்துப் பயணம், மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயணம் போன்ற சமூக நலத் திட்டங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். தமிழகத்தின் கல்வி, பொருளாதார வளர்ச்சி யை மேம்படுத்த பொதுப்போக்குவரத்து துறையின் பாதுகாப்பு மிக முக்கியம். எனவே தமிழ்நாடு இந்த முக்கிய முடிவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.