நவம்பர் 24 அன்று, புகழ்பெற்ற அசாமிய தளபதி லச்சித் போர்புகானின் 400 ஆம் ஆண்டு ஆகும். ஆண்டு முழுவதும், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான அசாம் அரசு, அவரது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாட்டங்க ளை நடத்துகிறது. பிப்ரவரியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடியசைத்து விழாவைத் தொடங்கி வைத்த நிலையில், நவம்பர் 23 முதல் 25 வரை தில்லி யில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அசாம் மாநில பாஜக அரசு தேசம் முழுவதும் உள்ள பத்திரிகைகளில் லச்சித் போர்புகானைப் போற்றுவதாக முழு பக்க விளம்பரத்தைக் கொடுத் துள்ளது. லச்சித் போர்புகான், முகலாயர்களை வீழ்த்திய இந்து மன்னன் என்ற சாயத்தை பூசித்தான் இந்த விளம்பரத்தை கொடுத்துள்ளார்கள். பாஜக வினர் மதத்தை பயன்படுத்தி தரம் தாழ்ந்த அரசிய லுக்கு செல்வார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. திருவள்ளுவரையே காவி சாயத்துக்குள் அமிழ்த்தி எடுக்கப் பார்த்தவர்கள் அல்லவா?
‘‘சத்ரபதி சிவாஜிக்கு நாடு வழங்கிய அதே கண்ணி யத்தைப் பெறாத’’ அஹோம் ஜெனரலுக்கு - அதாவது லச்சித் போர்புகானுக்கு ‘‘சரியான மரியாதைக்குரிய இடத்தை’’ உறுதி செய்வதற்காகக் கொண்டாட்டங்கள் என்று அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார். 1671 ஆம் ஆண்டு சராய்காட் போரில் முகலாயப் படை களைத் தோற்கடித்த போர்புகான் என்ற வீரராகவே அசாமில் எப்போதும் போற்றப்படுகிறார். அசாமில் பாஜகவின் எழுச்சிக்குப் பிறகு, அவரை தேசிய முக்கி யத்துவம் வாய்ந்த ஒரு போர்வீரராகக் காட்ட அக்கட்சி ஆர்வமாக உள்ளது. 2016 அசாம் சட்டமன்றத் தேர்தலை ‘சராய்காட்டின் கடைசிப் போர்’ என்று பாஜக குறிப்பிட்டது. அதாவது காங்கிரஸை முகலாயர்களுடன் ஒப்பிட்டு சமன் செய்தது. அசாமியர்கள் காவிக் கட்சியுடன் நெருக்க மாக இருக்குமாறு பாஜக வலியுறுத்தியது.
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, பாஜக இன்னும் வெளிப்படையான இந்துத்துவா வைத் தூண்டியது. மேலும் காங்கிரசும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியும், ‘சட்டவிரோதமாக குடியேறிய முஸ்லீம்களை’ ஆதரிப்பதாக முதல்வர் சர்மா பிரச்சாரம் செய்தார். சமீபத்தில், அவர் முக லாயர்களை தோற்கடித்ததால் இடதுசாரி வரலாற்றா சிரியர்கள் போர்புகானை புறக்கணித்ததாகவும் குற்றம் சாட்டினார்.
அஹோம் இராஜ்ஜியம்
அஹோம் இராஜ்ஜியம் (1228–1826)அசாமில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் வரலாற்றின் இடைக்காலத்தின் பிற்பகுதியில் இருந்தது. வட கிழக்கு இந்தியாவில் முகலாய விரிவாக்கத்தை வெற்றி கரமாக எதிர்த்துப் போராடியது. சுமார் 600 ஆண்டு கள் தனது இறையாண்மையை தக்க வைத்து ஆட்சி செய்தது. மோங் மாவோ பிராந்தியத்தைச் சேர்ந்த (இன்றைய யுன்னான் மாகாணம், சீனா) தை (TAI) வம்ச இளவரசரான சுகபாவால் அஹோம் இராஜ்ஜியம் நிறுவப்பட்டது. இது 16 ஆம் நூற்றாண் டில் சுஹுங்முங்கி ஆட்சியின் கீழ் விரிவடைந்து. முழு பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த அரசு விரிவாக்கம் செய்யப்பட்டபோது பல இனங்க ளின் தன்மைகளை கொண்ட அரசாக மாறியது. மோமோ ரியா கிளர்ச்சியின் எழுச்சியுடன்(அதிகார போட்டி) இராஜ்ஜியம் பலவீனமடைந்தது. பின்னர் அசாம் மீது பர்மாவின் தொடர்ச்சியான படையெடுப்பைத் தொ டர்ந்து அஹோம் அரசு வீழ்ச்சியடைந்தது. முதல் ஆங்கிலோ-பர்மியப் போருக்குப் பிறகு பர்மியர்கள் தோல்வி அடைந்தனர். 1826 ல் யாண்டபோ உடன் படிக்கையின் மூலம், இராஜ்ஜியத்தின் கட்டுப்பாடு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கைகளுக்குச் சென்றது. இதுதான் இந்த அஹோம் இராஜ்ஜியத்தின் கதை. லச்சித் போர்புகான் (24 நவம்பர் 1622 - 25 ஏப்ரல் 1672) மேற்கண்ட அஹோம் இராஜ்ஜியத்தில் தளபதி மற்றும் போர்புகான் ஆவார். போர்புகான் என்றால் அமைச்சர் என்று பொருள்படும். லச்சித் டெக்கா பின்னர் லச்சித் போர்புகானாக மாறினார்.அஹோம் இராஜ்ஜியத்தில் 5 போர்புகான்களில் ஒருவராக லச்சித் இருந்தார்.
இந்த பதவி அஹோம் இராஜ்ஜியத்தின் அதிகார வரம்புடன், நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரங்க ளை உள்ளடக்கியது. போர்புகானின் தலைமையகம் கலியாபோரிலும், 1681 இல் இட்டாகுலி போருக்குப் பிறகு குவஹாத்தியில் உள்ள இட்டாகுலியிலும் அமைந்திருந்தது. அஹோம் தலைநகரில் இருந்து தொலைவில் இருந்ததால் சக்தி வாய்ந்ததாகவும் சுதந்திர சாயலைக் கொண்டதாகவும் இருந்து செயல் பட்டது. கலியாபோரின் கிழக்கே உள்ள பகுதி லச்சித் போர்புகானால் ஆளப்பட்டது. அஹோம்கள் 1615-1682 வரை ஜஹாங்கீரின் ஆட்சியில் இருந்து அவுரங்கசீப்பின் ஆட்சி வரை தொ டர்ச்சியான மோதல்களில் ஈடுபட்டனர். ஆரம்பகால இராணுவ மோதல் ஜனவரி 1662 ல் நடைபெற்றது. முக லாயர்கள் ஒரு பகுதியில் வெற்றிபெற்று அசாமின் சில பகுதிகளையும், அஹோம் தலைநகரான கர்கா னின் சில பகுதிகளையும் கைப்பற்றினர்.
இழந்த அஹோம் பிரதேசங்களை மீட்பதற்கான எதிர்த்தாக்குதல், அஹோம் மன்னர் ஸ்வர்கதேயோ சக்ரத்வாஜ சிங்கா தலைமையில் தொடங்கியது. அஹோம்கள் சில ஆரம்ப வெற்றிகளை பெற்றனர். அவுரங்கசீப் 1669 ல் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ஜெய்ப்பூரின் ராஜா ராம் சிங் தலைமையில் இழந்த பகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்காக படையை அனுப்பினார். இறுதியில் 1671 ல் சராய்காட் என்ற இடத்தில் போர் நடந்தது. முகலாயர்கள் தங்கள் வலுவான படைகளுடன் திறந்தவெளியில் போரிட வந்தனர். லச்சித் போர்பு கான் கொரில்லா தந்திரங்களை பயன்படுத்தி யுத்தம் செய்தார். லச்சித் பெரிய முகலாய முகாம்களிலும், நிலையான நிலைகளிலும் சேதத்தை ஏற்படுத்தினார். சராய்காட் யுத்தத்தில் லச்சித் தலைமையிலான அஹோம் படைகள் வெற்றி பெற்றன. இதற்காக லச்சித் போர்புகான் அசாம் மக்களால் எப்போதும் போற்றப்படுகிறார். 1930ஆம் ஆண்டிலி ருந்து தளபதி லச்சித் பிறந்த நாள் விழா அசாம் மக்களால் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னால் அசாமில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு கவுஹாத்தி யிலுள்ள பிரம்மபுத்திரா பகுதியில் 35 அடி உயரமுள்ள லச்சித் சிலையை அமைத்தது. 1999 ஆம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்ச்சி பெற்ற வீரர்களுக்கு லச்சித் பெயரில் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. 1930ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிற விழாக்களில் லச்சித் ஒரு மதம்சார்ந்தவராக அடை யாளப்படுத்தப்படவில்லை. சராய்காட் போரும் மதம் அடிப்படையில் பார்க்கப்படவில்லை. அவ்வாறு நடை பெறவும் இல்லை. மன்னராட்சி சாம்ராஜ்யங்களின் விரி வாக்கத்தை எதிர்த்த மோதலாகவே அது இருந்தது.
இன்னும் சொல்லப் போனால், லச்சித் போர்புகான் இந்து மதத்தைச்சேர்ந்தவர் அல்ல. தை(TAI) மொழி பேசும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அஹோம் அரச பகுதிகள் இந்து மதம்சார்ந்த பகுதியும் இல்லை. மன்னர் சிப் சிங் [1714-1744] ஆட்சியின் போது மட்டுமே இந்து மதம் பிரதான மதமாக மாறியது. லச்சித்தின் கீழ் இருந்த பல வீரர்கள் பழங்குடியினப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். அஹோம் ராணுவத்தில் முஸ்லிம்களும் முக்கியப் பதவிகளை வகித்தனர். உதாரணமாக, பாக் ஹசாரிகா என்றும் அழைக்கப்படும் கடற்படை ஜெனரல் பதவியை வகித்தவர் இஸ்மாயில் சித்திக் என்ற முஸ்லீம் ஆவார். லச்சித் போரிட்ட முகலாய தளபதி அம்பரைச் சேர்ந்த ராஜா ராம் சிங் கச்வாஹா ஒரு ராஜபுத்திரர். எனவே இது போன்ற போர்களுக்கு எந்த மதக் கோண மும் இல்லை. ஔரங்கசீப்பின் படையில், பல இந்து வீரர்கள் இருந்தனர்.
போர்புகானின் புராணக்கதை முதன்மையாக அவரது வீரம் மற்றும் கடமை உணர்வு பற்றி பாடப் பட்டது. போரின் போது அவர் போராடிய மிக உயர்ந்த கடமை உணர்வின் காரணமாக பாராட்டப்பட்டாரே தவிர மதத்தின் சிறப்பால் அல்ல. ஆனால், இத்தகைய உண்மை வரலாற்றை மொத்த மாக ஓரங்கட்டிவிட்டு ,400வது பிறந்தநாள் கொண்டாட் டங்கள் மதமயமாக்கப்பட்டுள்ளது. அசாமில் உள்ள வரலாற்றாசிரியர்கள் போர்புகா னின் கதை வகுப்புவாதப்படுத்தப்பட்ட விதம் மற்றும் அஹோம் ராஜ்ஜியத்திற்கும் முகலாய சாம்ராஜ்யத் திற்கும் இடையிலான போரை இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான போராக முன் வைக்கிற மததுவேஷ வேலைகளை பாஜக செய்வதை கண்டிக்கின்றனர்.
அசாமில் பாஜகவின் எழுச்சிக்குப் பிறகு, லச்சித் போர்புகானை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போர்வீரராகக் காட்ட அக்கட்சி ஆர்வமாக உள்ளது. “முஸ்லிம் படையெடுப்பாளர்களை” தடுப்பதற்காக போர்புகானை அடிக்கடி பாஜக தலைவர்கள் முன்னிறுத்துகின்றனர். வடகிழக்கு மாநிலமான அசாமில் பாஜக மதவெறி அரசியலை நிலை நாட்டுவதற்கு பழங்குடி போர் வீரர் களை இந்து என்ற சாயத்தை பூசி இஸ்லாமியர்க ளுக்கு எதிரானவர்களாக மாற்றி கலவரத்தை உரு வாக்கி வருகிறது. இந்திய நாடு முழுவதும் சத்ரபதி சிவாஜி, ராணா பிரதாப் சிங் போன்ற மன்னர்களை இந்து மன்னர்களாக கட்டமைத்து இஸ்லாமியரை எதிர்த்து போராடிய வர்கள் என்று, மத வெறி உணர்வை ஊட்டியது. தற்போது அந்தப் பட்டியலில் அசாம் வீரர் லச்சித் போர்புகானையும் சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்துள்ளது. பாஜக நினைத்தபடி வரலாற்றை மாற்றி எழுதும் திட்டத்தை மக்களிடையே அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்.