articles

img

அறிவியல் கதிர் - இரமணன்

நோபல் பரிசும் கோவிட் தடுப்பூசியும்

இந்த ஆண்டு மருத்துவம் /உடலி யலிற்கான நோபல் பரிசு கோவிட் தொற்று நோய் சிகிச்சைக்கான எம்ஆர்என்ஏ(mRNA) தடுப்பூசி கண்டுபிடித்த ஹங்கேரி யை சேர்ந்த கடாலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ட்ரூ  வெய்ஸ்மென் ஆகிய இரண்டு  விஞ்ஞானிகளுக்கு அளிக்கப்பட்டுள் ளது. கோவிட் தொற்று நோய் காலத்தில்  இந்த தொழில்நுட்பம் புகழ் பெற்றது. ஃபைசர்/ பயோஎன் டெக் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனகளின் தடுப்பூசி இதை அடிப்படையாகக் கொண்டதே.  நமது மரபணுக்களில் இருக்கும் டிஎன்ஏ எனும் வேதிப்பொருள் செல்களுக்கு எம்ஆர்என்ஏ மூலம் பல கட்டளைகளை அனுப்புகிறது. பல ஆண்டுகளாக அறிவியலாளர்கள் இதைப் பயன்படுத்தி எயிட்ஸ், புற்று  நோய் போன்றவற்றிற்கு தடுப்பூசி களை தயாரிக்கும் ஆய்வில் ஈடு பட்டுள்ளார்கள். இப்போது நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பு, சோதனை சாலையில் தயாரித்த எம்ஆர்என்ஏக் களை கோவிட் நோய்க்கெதிரான தடுப்பூசியாக பயன்படுத்துவதற்காக..  கோவிட் வைரசிலுள்ள ஒத்த புரதத்தை தயாரிக்க எம்ஆர்என்ஏ நமது  செல்களை பணிக்கின்றன. இதன் பின்னர் நமது நோய் எதிர்ப்பு மண்ட லம், அதை எதிர்ப்பது எவ்வாறு என்று  கற்றுக்கொள்கின்றன. இதற்கு முன் செயலிழக்கப்பட்ட கிருமிகள் அல்லது ஆன்டிஜென் எனும் எதிர்புரதத்தை நேரடியாக ஊசி மூலம் செலுத்தி நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டி விடும் முறையிலேயே செயல்பட்டன. இப்பொது நேரடியாக ஆன்டிஜென்னையே உருவாக்கும் முறை புரட்சிகரமானது.  இந்த தொழில்நுட்பத்தில் முதல்  பெரும் கண்டுபிடிப்பு 1970இல் நடந்தது. அப்போது எம் ஆர் என்  ஏவை பயன்படுத்தி சோதனைக்குழா யில் புரதம் தயாரிக்கப்பட்டது. பத்  தாண்டுகள் கழித்து அதே விளைவு  எலிகளில் பெறப்பட்டது. ஆனால்  மருத்துவ ரீதியாக பயன்படுத்துவதில் இரண்டு பெரும் தடங்கல்கள் இருந்தன. ஒன்று, உயிருள்ள விலங்கு களின் செல்கள், செயற்கை எம்ஆர்என்ஏக்களை எதிர்த்து ஆபத்தான எதிர்வினையை ஆற்றின. மேலும் எம்ஆர்என்ஏ மூலகங்கள் பலவீனமானவை; அவற்றை நமது அமைப்புக்குள் மாற்றம் அடையாமல் செலுத்துவது கடினமாக இருந்தது.  இப்போது நோபல் பரிசு பெற்ற கரிக்கோவும் வெயிஸ்மேனும் 2005இல் எம்ஆர்என்ஏவை ஒரு கொழுப்பு  உறைக்குள் பொதிந்து எந்தவித எதிர்மறை விளைவுகளும் இல்லாமல் உடலினுள் செலுத்த இயலும் என்று ஒரு ஆய்வை வெளியிட்டனர். இது  பெரும் முறிப்பு ஆய்வாகும். இது  மருந்தகத் துறையில் பெரும் பர பரப்பை எற்படுத்தியது. உலகெங்கி லும் எம்ஆர்என்ஏ சிகிச்சையில் ஈடு படும் பல புதிய நிறுவனங்கள் தோன் றின. இந்த தடுப்பூசியை பயன்படுத்தி ஃப்ளூ, நாய்க்கடி மற்றும் சிக்கா வைரஸ் போன்றவற்றிற்கும் மலே ரியா, எய்ட்ஸ் உட்பட தடுப்பூசிக்கு எதிர்ப்பை கொண்ட கிருமிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  புற்று நோயாளிகளில், சிறப்பு  சிகிச்சையாக புற்று நோய் கட்டி களிலுள்ள புரத மாதிரிகளைக் கொண்டு விசேஷ எம்ஆர்என்ஏக் களை உருவாக்கி அவை நோய்  எதிர்ப்பு மண்டலத்தை தூண்டி குறிப்பிட்ட புற்று நோய் செல்களை தாக்கி அழிக்கும் முறையையும் அறி வியலாளர்கள் தொடங்கியுள்ளனர்.

காசநோயும் சர்க்கரை வியாதியும் 

காசநோய் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப்பேர் சர்க்கரை நோய்க்கும் ஆளாகியிருப்பது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னையிலுள்ள எம்.வி.சர்க்கரை நோய் ஆராய்ச்சி மய்யத்தை சேர்ந்த மரு.விஜய் விஸ்வநாதன் இதில் அதிக  ஆய்வு செய்துள்ளார். வட சென்னையை சேர்ந்த 187 காச நோயாளி களில் 76 பேர் சாதாரண சர்க்கரை அளவு உள்ளவர்களாகவும் 111  பேர் ஆரம்ப நிலை சர்க்கரை நோய் உள்ள வர்களாகவும் இருந்தனர். இவர்களுக்கு தீவிர  சிகிச்சை அளித்தபின் முதல் வகையில் 8.6% பேரே காச நோய் அறிகுறிகளுடன் இருந்தனர். இரண்டாவது வகையில் 23.8% நபர்கள் தொடர்ந்து காச நோய்  அறிகுறிகளுடனே இருந்தனர். சிகிச்சைக்குப் பின் நோய் மீண்டும் வருவதும் இறப்பு விகிதமும் சர்க்கரை வியாதி முன் நிலை உள்ளவர்களுக்கு அதிகமாக எர்படுகிறது. எனவே காச நோய் கண்டறியும்போது சர்க்கரை நோய் சோதனையும் நடத்தப்பட வேண்டும்; காச நோய் சிகிச்சையின் போதும் அதற்குப் பின்னும்  அவர்களை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்கிறார் விஸ்வ நாதன். மேலும் சர்க்கரை அளவை ரேண்டம் சோதனை மூலமாக இல்லாமல் ஃபாஸ்டிங் முறை மூலமே கண்டறிய வேண்டும் .ஏனெனில் சர்க்கரை நோய் முன்நிலை நபர்கள் எந்தவித அறிகுறிகளும் இல்லா மல் இருப்பார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். சர்க்கரை நோய் பரவலாக இருப்பதை மாற்றாமலும் முன் நிலை சர்க்கரை நோயை குறைக்காமலும், 2025க்குள் காச நோயை ஒழிக்க வேண்டும் என்கிற இலக்கை அடைய இயலாது என்கிறார் அவர்.

மூளையில்லாமலேயே கற்கும் ஜெல்லி மீன் 

மேம்பட்ட கற்கும் திறனுக்கு மய்யப்படுத்தப்பட்ட மூளை தேவை என்கிற புரிதலை ஜெல்லி மீன்களில் நடத்தப்பட்ட ஒரு சோதனை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. நகம் அளவிற்கே உள்ள இந்த மீன்கள் 24 கண்கள் பெற்றிருக்கின்றன. இதன் மூலம் சிக்கலான பார்வை அமைப்பை கொண்டுள்ளது. தடைகளை அறியவும் அவற்றை தாண்டிச் செல்லவும் இவற்றை ஆய்வாளர்கள் பழக்கினர். உணர்வு தூண்டுதல்களுக்கும் நடத்தைக்கும் மன அளவில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் ‘இணைப்புக் கற்றல்’ (associate learning)எனும் முறையில் இவை தடைகளை தவிர்க்கும் திறனை வளர்த்துக் கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். அலையாத்தி சதுப்பு நிலங்களில் வாழும் இவை கலங்கலான தண்ணீரில் தங்களது பார்வைத் திறனால் இயங்குகின்றன. நீருக்கடியில் உள்ள மர வேர்களில் திடீரென திரும்பி இரைகளை பிடிக்கின்றன. கற்றல் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றின் படிநிலை வளர்ச்சி குறித்து இந்தப் பரிசோதனை புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது.