நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளும் தொழிற்சங்கங்களும், மாதர் அமைப்புகளும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளன. ஆனால் ஒன்றிய அரசின் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் வெறும் கண் துடைப்பே.
பெண்கள் மீதான தாக்கு தல்கள் அதிகரித்து வருவதாகவும் மநு நீதியின் அடிப்ப டையில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பெண்களின் உரிமை களைப் பறிக்கிறது என்றும் பெண் தொழிலாளர்களுக்கான சம ஊதி யம் உள்ளிட்டவை மறுக்கப்பட்ட சூழ்நிலையிலேயே பணி செய்கின்ற னர் என்றும் சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர். கே.ஹேமலதா கூறினார். சிஐடியு - இந்திய கட்டுமான தொழி லாளர் சம்மேளனத்தின் சார்பில், அகில இந்திய கட்டுமான பெண் தொழி லாளர் மாநாடு நவம்பர் 6- ஆம் தேதி கன்னியாகுமரியில் நடை பெற்றது. பல்வேறு மாநிலங்களி லிருந்து வருகை தந்த பிரதிநிதி களின் பன்மொழி எழுச்சி முழக்கங் களுக்கிடையே கட்டுமான பெண் தொழிலாளர் உப குழுவின் தமிழ் மாநில அமைப்பாளரும், சம்மேளன அகில இந்திய நிர்வாகியுமான லூர்து ரூபி சங்கத்தின் செங்கொடியை ஏற்றி வைத்தார். சிஐடியு மற்றும் கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவர் கே. ஹேமலதா தலைமையிலான தலைமைக் குழு மாநாட்டை வழி நடத்தியது.
கே.ஹேமலதா தனது தலைமை யுரையில், பாலஸ்தீனத்தில் குழந்தை கள், நோயாளிகள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட பத்தா யிரத்திற்கும் மேற்பட்டோரை படு கொலை செய்துள்ள இஸ்ரேலின் கொடூர போருக்கு வன்மையான கண்டனம் தெரிவித்தார். பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் அறைகூவல் விடுத்தார். ஒன்றிய அரசு தொழி லாளர்களுக்கான நலச் சட்டங்களை அமல்படுத்த மறுப்பதோடு, ஏற்கனவே போராடிப் பெற்ற நலன் களையும், உரிமைகளையும் காவு கொள்ளும் வகையில் நான்கு சட்ட தொகுப்புகளாக மாற்றியுள்ளது. தபால் துறை, இந்திய வானியல் ஆராய்ச்சிக் கழகம், பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட துறைகளில் பெரும் பான்மை ஊழியர்களை உறுப்பினர் களாகக் கொண்டுள்ள தொழிற்சங்கங் களை ஒன்றிய அரசு ஒடுக்க முயற்சிக்கிறது. ஒன்றிய அரசின் தனியார்மய கொள்கைகளை எதிர்ப்பதாலும், விவ சாயிகள் போராட்டத்தை ஆதரித்ததா லும், உலக தொழிற்சங்க சம்மேள னத்துடன் இணைந்திருப்பதாலும் அவற்றுக்கான அங்கீகாரம் பறிக்கப்படுகிறது. அரசை விமர்சி க்கும் செய்திகளை வெளியிடக் கூடாது என ஊடகங்கள் மிரட்டப்படு கின்றன. ஆனால் ஆர்.எஸ்.எஸ் - இந்துத்துவா சக்திகள் வெறுப்புப் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமிய மாணவனை இந்து மாணவர்களைக் கொண்டு வகுப்பறையில் ஆசிரியரே அடிக்கச் செய்கிறார். இதுபோல் பல்லாயிரக்கணக்கான, மக்களின் மனதில் விஷம் தோய்ந்த மத வெறியை உருவாக்குகிறது.
நாடாளுமன்றம், சட்டமன்றங் களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளும் தொழிற்சங்கங்களும், மாதர் அமைப்புகளும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளன. ஆனால் ஒன்றிய அரசின் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் வெறும் கண் துடைப்பே. பெண் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு, தனி கோரிக்கை களுக்காகப் போராடுவதோடு ஒட்டு மொத்த தொழிலாளர் வர்க்கத்தோடு இணைந்து உரிமைகளுக்காகப் போராட வேண்டும். அதற்கு இந்த மாநாடு வழி காட்டும் என தெரிவித்தார்.
27 பேர் ஒருங்கிணைப்புக்குழு
ஷீலா அலெக்ஸை ஒருங்கி ணைப்பாளராகக் கொண்டு 27 பேர் கொண்ட அகில இந்திய ஒருங்கி ணைப்புக் குழு தேர்ந்தெடுக்கப் பட்டது. இதில் தமிழ்நாட்டிலிருந்து லூர்து ரூபி, எம். வேலம், கலைச்செல்வி, கலாவதி இடம் பெற்றுள்ளனர். ஆர். சிங்காரவேலு உள்ளிட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய நிர்வாகிகளும், சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் வி.குமார், சிஐடியு மாவட்ட நிர்வாகி கள் பி. சிங்காரன், கே. தங்க மோகன், எம். சித்ரா உள்ளிட்டோரும் மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டை ஒட்டி கன்னியாகுமரி நகரப் பகுதி செங்கொடிகளாலும், வாழ்த்துப் பதாகைகளாலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வர்க்க உணர்வின் ஒளி
கன்னியாகுமரிக்கு சொந்த அலுவலாக வந்த கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மாநாட்டு பதாகைகளால் ஈர்க்கப்பட்டு மாநாட்டு அரங்க வாயிற் பாதுகாப்புப் பணியில் இருந்த போக்குவரத்து துறை தொண்டர் களை சந்தித்து வாழ்த்து தெரி வித்ததோடு ஆயிரம் ரூபாய் நன்கொடையும் அளித்துச் சென்றார். இது வர்க்க உணர்வின் வெளிப் பாடாக இருந்தது.
- தொகுப்பு : பி.இந்திரா, தலைவர், மாநாட்டு வரவேற்புக்குழு