2007 ஆம் ஆண்டு, மன்னார்குடி நக ரத்தில், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் இளம் பெண்களுக்கான சிறப்பு மாநாடு ஒன்றை நடத்தியது. அந்த மாநாட்டின் தலைப்பு, ‘சுமங்கலித் திட்டம்’ என்ற பெயரில் நடை பெறும் உழைப்பு சுரண்டலுக்கு எதிரானது ஆகும். இன்று தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை என பிரிந்து இருந்தாலும் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் அது. அதேபோல் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்க ளையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பகுதி நெல் விளையும், செழிப்பான விவசாயம் கொண்டது. இதற்கு நேர் எதிரானது, கொங்கு மண்டலம் என்று அழைக்கப் படும் மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திண்டுக்கல்லின் ஒரு பகுதி. இந்த மாவட்டங்களில் பஞ்சாலைத் தொழில் நூற்றாண்டு காலமாக வளர்ச்சி பெற்று வேலைவாய்ப்பை கொண்டுள்ளது. விவசாய பாதிப்பு, இளம் தலைமுறைக்கு விவசாய வேலைகளில் நம்பிக்கை இன்மையை உருவாக்கி யது. மற்றொரு புறம் கிராமத்தில் சாதிய மேலாதிக்கம், சமூக அழுத்தம் சேர்ந்து வேறு இடங்களுக்கு புலம் பெயர இளைஞர்களைத் தூண்டியது. இளம் பெண்க ளுக்கு இருந்த சமூகக் கொடுமைகளான வரதட்சணை போன்ற பிரச்சனைகள் எல்லாம் சேர்ந்து மூலதனத்தி ற்கு, உழைப்புப் படையை அணி திரட்ட உதவியது என்றால் மிகையல்ல.
நெற்களஞ்சியத்திற்கும், தென் இந்தியாவின் மான்செஸ்டருக்கும் மையமான நகரமாக திருச்சி இருக்கிறது. திருச்சி பேருந்து நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சை பகுதி பேருந்துகள் வந்து நிற்கு இடத்தில் இருந்து, கோவை,கரூர், திருப்பூர் செல்லும் பேருந்துகளை நோக்கி இளம் பெண்கள் அணி வகுத்துச் செல்வர். இவர்களை ஏஜெண்டுகள் சிலர் அழைத்துச் செல்வதைக் காண முடியும். பல இளம் பெண்கள் பேருந்து நிலையத்தில் குமுறி அழும் கொடுமைகளும் நிகழும். வாழ்விழந்த பெண்கள் சூழ்ந்து நின்று, வலுவற்ற அந்த இளம் பெண்ணைத் தேற்றுவதையும் காணமுடியும்.
உழைப்புச் சுரண்டலின் தொடர் ஓட்டம்
இந்த பெண்கள் மூன்றாண்டு காலம் பணி அமர்த்தப் படுவர். வாரம் ரூ.500 கூலி தரப்பட்டதாக அன்றைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாலிபர் சங்கமும் இந்த தகவல்களை திரட்டியது. மூன்றாண்டு முடிவில் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை மொத்தமாக அளிக்கப்பட்டு அனுப்பப்படுவர். அத்துடன் வேலை வாய்ப்பு துண்டிக்கப்படும். அடுத்து புதிய நபர் இந்த வேலையைப் பெறுவார். இது ஒரு தொடர் ஓட்டம் போல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த உழைப்புச் சுரண்டலை எதிர்த்து வாலிபர் சங்கம், சிஐடியு, அனைத்திந்திய மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் போராட்டங்களை கூட்டாக நடத்தியது உண்டு. பல தன்னார்வக் குழுக்களும் இந்த போராட் டங்களில் ஈடுபட்டன. நீதிபதி அக்பர் அலி தலைமை யில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குறைந்த பட்சக் கூலி, பெண்க ளுக்கான பாதுகாப்பு போன்ற வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டது. அதன் விளைவு, ‘கேம்ப் கூலி’ எனும் நடைமுறை படிப்படியாக குறைந்தது.
மூலப் பொருள்களாக இடம் பெயரும் மனிதர்கள்
உலகம் இன்று சுருங்கி விட்டதாக பலர் கூறுவதை எதார்த்தமாக காண முடிகிறது. உலகில் பலநாடுகளில் முதலாளிகளின் லாபக் குவிப்பிற்கு புலம்பெயர் தொழி லாளர்கள், பெரும் பங்களிப்பை செய்கின்றனர். அமெரிக்காவில் கருப்பர்கள் எனக் கொண்டால், மேற்கு ஆசியாவின் பல நாடுகளில் நம் தமிழர்கள் உள்ளிட்டு இந்தியர்கள் குறைந்த கூலிக்கான உழைப்புப் படையாக கருதப்படுகின்றனர். கேம்ப் கூலி அல்லது நவீன கொத்தடிமை முறை ஒருவழியாக கட்டுக்குள் வந்தாலும், அது வேறு வடிவத்தில் வேறு நபர்கள் மூலம் அவதரிக்கும் நிலையை மூலதனம் உருவாக்கி வருகிறது. போக்கு வரத்து வளர்ச்சி ஒரு ஊரில் இருந்து பல ஊர்களை சுற்றிப் பார்க்க கூடிய வசதிகளை மட்டும் உருவாக்குவ தில்லை; மாறாக மூலதனத்திற்கான மூலப்பொருள்க ளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்வது அதன் மற்றொரு பிரதான பயன்பாடு. நிலக்கரியைப் போல், பருத்தியைப் போல், சிமெண்ட்டைப் போல், இரும்பைப் போல், இன்று மனிதர்களும் மூலப்பொருளாக (உற்பத்திக் கருவியாக) ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கின்றனர்.
ஹவுராவில் இருந்து திருச்சிக்கு வந்த ரயிலில் பயணித்த போது, மேற்படி மூலப்பொருள்களுடன் பய ணிக்கிறோம் என்ற உணர்வு தோன்றவில்லை. ஆனால் ரயில் நள்ளிரவு நேரம் திருச்சியை அடைந்த போது, அதை உணர முடிந்தது. ரயில் நிலையத்தின் வெளியே ஈரோடு, கரூர், கோவை செல்லும் அரசுப் பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்ததும், ரயிலில் வந்த அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்க ளில் இருந்து வந்த இளம் தொழிலாளர் படை அந்த வாகனங்களில் ஏறிச் சென்றதும், மேற்படி உணர்த லை வலி மிகுந்ததாக மாற்றியது. அதோடு முடியவில்லை. ரயில் நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கிலான ஆண்களும், பெண்களு மாக இளம் உழைப்புப் படை, திருச்சி பேருந்து நிலையத்தை நோக்கி பேரணி போல அணி வகுத்த னர். அங்கிருந்த தேநீர் கடையினர் அல்லது ஆட்டோ - வாகன ஓட்டிகள் யாரும் இதை ஒரு பொருட்டாக கருத வில்லை. அந்த ஊர்வலத்தில் சென்ற இளைஞருடன் பேசிய போது தான் தெரிந்தது’ இது தினமும் ஹவுரா வில் இருந்து திருச்சி வரும் ரயிலில் இருந்து வரும் பயணிகளின் அன்றாட நிகழ்வு என்று. வேலை மட்டும் பழகிக் கொள்வதில்லை; மக்கள் காட்சிக ளுக்கும் பழகிக் கொள்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
தமிழகத்தில் இன்று வடமாநில தொழிலாளர்கள்
சில ஆண்டுகளுக்கு முன் விமர்சனத்திற்கு உள்ளான சுமங்கலித் திட்டம் இல்லாமல் போனது. ஆனால் புதிய ‘கேம்ப் கூலி முறை’ வடகிழக்கு மாநில தொழிலாளர்களைக் கொண்டு தமிழகத்தில் அரங் கேற்றப்படுகிறது. சுரண்டல் மிகுந்த சமூகத்தில், வலி மிகுந்த வாழ்க்கையை வாழும் போராட்டமாக, புலம் பெயர்தல் உள்ளதைக் காணமுடியும். விவசாயத் தொழிலாளியாக சுரண்டப்படும் போது ஏற்படும் அதி ருப்தியை எதிர்க்கும் வடிவமாக புலம் பெயர்ந்து ஆலைகளில் காண்ட்ராக்ட், பயிற்சி போன்ற தொழி லாளர்களாக பணியாற்றுவதில் ஒரு சமாதானம் கிடைக்கிறது. இதை மூலதனம் பயன்படுத்தி கொள்கி றது. தனக்கான மூலதன திரட்சிக்கு இத்தகைய உழைப்பு சுரண்டலைப் பயன்படுத்தி கொள்கிறது. உள்ளூர் தொழிலாளிக்கு நியாயமான ஊதியம் வழங்க மறுக்கும் தொழிலதிபர், புலம் பெயர் தொழிலா ளர் மூலம் கொள்ளை லாபம் ஈட்டுகிறார். சட்டபடியான வேலைநேரம், குறைந்த பட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற எதுவும் அற்ற தொழிலாளர்களை காலம் தோறும் முதலாளித்துவம் பயன்படுத்திக் கொள்கிறது. நிலமற்ற மக்கள், காடுகளுக்கு உள்ளிருந்து வெளியேற்றப்படும் பழங்குடியினர் திறனற்ற தொழிலாளர்கள் அல்ல. மாறாக, கேள்வி கேட்கும் திறனற்றவர்களாக, பேச்சற்ற வர்களாக, குரல் தொலைத்தவர்களாக, புலம் பெயர்ந்து, அடைக்கலம் தேடிய இடத்தில் வாழ்வது, மூலதனத்திற்கு உகந்த ஒன்றாக உள்ளது.
மூலதனக்குவிப்பும் முகாரி ராகமும்
‘இங்கிலாந்து தொழிலாளி வர்க்கம்’ என்ற கட்டுரையை, தோழர் ஏங்கெல்ஸ் எழுதினார். விவசாயம் பொய்த்து போன போது, நிலமற்ற தொழிலா ளர்கள் எப்படி பஞ்சாலைகளில் உறிஞ்சப்பட்டனர் என்பதை அதில் சுட்டிக் காட்டி இருப்பார். அதை இன்று நமது மாநிலத்தில் காண முடிகிறது. அயர்லாந்து தொழி லாளர்களை பிரிட்டிஷ் முதலாளிகள் சுரண்டினர்; பின்னர் இந்தியா போன்ற நாடுகளின் தொழிலாளர்க ளையும் சுரண்டும் மூலதனமாக வளர்ச்சி பெற்றதைப் போலவே, இன்று தமிழக கிராமப் புறத் தொழிலாளர்க ளை சுரண்டிய ஆலைகளின் வளர்ச்சி, பிற மாநில தொழிலாளர்களைச் சுரண்டும் பெரும் ஆலைகளாக வளர்ச்சி பெற்றுள்ளன. ஆனாலும் பஞ்சாலைத் தொழில் படுத்துக் கிடக்கிறது என்ற ஒப்பாரி ஓய வில்லை. தொழில் முதலாளிகளின் முகாரி ராகம், நம் புலம்பெயர் தொழிலாளர்களின் வலியை, இழப்பை, ஆதரவற்ற நிலையை நிராகரிக்க முயல்கிறது. இதை அனுமதிக்க முடியாது. எதிர்த்த போராட்டங்கள் பல வகையில் அதிகரித்து வருகிறது. வரும் மார்ச் 28,29 தேதிகளிலும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்த அறைகூவலை விடுத்துள்ளன. ஜனநாயக அமைப்புகள் இந்த வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும். மாநிலத்திற்குள்ளேயே இடம் பெயர்ந்து ஃபாக்ஸ் கான் நிறுவனத்தில் வேலை செய்த இளம் பெண்கள் மீது நடத்தப்பட்ட சுரண்டலை பொறுத்துக் கொள்ள முடி யாமல் தொழிலாளர்கள் போராடிய அனுபவத்தை தமி ழகம் கண்டது. குறைந்த சம்பளம், தங்கும் விடுதி, உணவு ஆகியவற்றில் நடத்தப்பட்ட கொள்ளையை எதிர்த்த போராட்டமாக அது இருந்தது.
உள்ளூர் தொழிலாளர்களின் கூலி அதிகம்; அதிக நேரம் உழைப்பதில்லை என்பது முதலாளிகளின் மற்று மொரு வாதம். இந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் வகை யில் தான், மோடி தலைமையிலான பாஜக அரசு, சட்டத் திருத்தங்களை மேற்கொள்கிறது. கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் மற்றும் அரசுகளின் கூட்டுக் கொள்ளை யானது தொழிலாளர்களைச் சுரண்டி மேலும் மூலதனம் குவித்துக் கொழுத்து வருவதைக் காண முடியும். இந்த கொடுமையின் வேகத்தை கட்டுப்படுத்தவே, அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற உச்சநீதிமன்ற வழி காட்டுதலை வலியுறுத்துகின்றன. வேலை நேரம் உயர்த்தப்படக் கூடாது என உறுதிபடத் தெரிவிக்கின் றன. இதை கோரிக்கைகளாக, முழக்கங்களாக சொல்லும் போது அரசுகளும், முதலாளிகளும் கேட்ப தில்லை என்பதாலேயே, வேலைநிறுத்தம் என்ற உற்பத்தி முடக்கத்திற்கு தொழிலாளர்களும், தொழிற் சங்கங்களும் செல்ல வேண்டியுள்ளது.
வெல்லட்டும் வேலைநிறுத்தம்!
கட்டுரையாளர் : மாநில உதவி பொதுச் செயலாளர், சிஐடியு