articles

img

மார்க்சியத் தத்துவமும் நடைமுறையும் - என்.குணசேகரன் ,மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்),

உலகில் பல்லாயிரம் தத்து வங்கள் தோன்றியிருந்தா லும், மாற்றத்திற்கான தத்துவமாக மார்க்சியமே ஒளி வீசிப் பிரகாசிக்கிறது. சுரண்டலற்ற, சமத்துவ உலகைப் படைப்பதற்கான நடைமுறையை வழி காட்டுகிற ஒரே தத்துவம், மார்க்சியத் தத்துவம். “இதுவரை வந்துள்ள தத்துவஞானி கள் எல்லாம் உலகை பல்வேறு வகைகளில் விளக்கியுள்ள னர்; ஆனால் பிரச்சனை என்னவென்றால், உலகை மாற்று வதுதான்” என்று எழுதிய காரல் மார்க்ஸ், இந்த மகத்தான இலட்சியத்திற்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.  மார்க்சியத்தின் ஒரு முக்கியமான சிறப்பியல்பு பற்றி லெனின் கூறுகிறார்: “மார்க்சியத் தத்துவம் வறட்டுச் சூத்திரம் அல்ல; செய லுக்கு வழிகாட்டி’ என்கிற ஏங்கெல்ஸின் கூற்று, மார்க்சி யத்தின் மிக மேலான ஆற்றலையும் உயிர்ப்பையும் வெளிப்படுத்துகிறது. இதை பலர் காண மறுக்கின்றனர். இதைக் காண மறுப்பது, மார்க்சியத்தை ஒற்றைப் பக்கம் கொண்டதாகவும், தலைகீழானதாகவும், உயிரற்றதாகவும் அணுகுவதற்கு இட்டுச்செல்கிறது.” எடுத்துக்காட்டாக, மானுட வரலாற்றின் வளர்ச்சிக் கட்டங்க ளை மார்க்சியம் எடுத்துரைக்கிறது. இதை மட்டும் பார்த்தால் போதுமானதல்ல. இது ஒரு ஆய்வுக்கு பயன்படலாம். ஆனால் மானிட வரலாற்றில் எதிர்காலம் சோசலிசம் என்பதையும், அதற்கு உலகத் தொழிலாளர்கள் ஒன்று சேர வேண்டும் என்கிற நடைமுறைக்கான வழிகாட்டுதலையும் மார்க்சிய-லெனினியம் எடுத்துரைக்கிறது.   எனவே ஒரு பகுதியை மட்டும் பார்த்தால் போதுமானதல்ல; நடைமுறை சார்ந்த மார்க்சியத்தின் போதனைகளையும் கற்றிட வேண்டும்.

மார்க்சிய நடைமுறை

நடைமுறை என்கிறபோது உழைக்கும் மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான போராட்ட நடைமுறை மட்டும் என்ற ஒற்றை இலக்கு மட்டும் போதுமானதல்ல. தொலை நோக்கு இலட்சியமான சோசலிசம், வர்க்க இயக்கத்தின் பிரிக்க முடியாத பகுதியாக இருக்க வேண்டும்.  தத்துவ நோக்கு, அரசியல் பொருளாதார விளக்கங்கள், சோசலிசப் பார்வை ஆகிய அனைத்தும் சேர்ந்த ஒருங்கிணை ந்த தத்துவமாக மார்க்சியம் விளங்குகிறது. காரல் மார்க்ஸ் தற்போதைய மனித வரலாறு வந்தடைந்து ள்ள முதலாளித்துவம் என்கிற இந்த சமூக முறையைப் பற்றி அலசி ஆராய்ந்தார். அந்த அமைப்பின் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்.   அவர் காலத்திற்குப் பிறகு பல லட்சம் ஆய்வுகள் வந்தாலும், மார்க்ஸின் அடிப்படை கருத்தாக்கங்கள் இன்றும் பொருந்து கின்றன. அவற்றை தர்க்கரீதியிலும் அறிவியல் அடிப்படை யிலும் யாராலும் நிராகரிக்கமுடியவில்லை.  இன்றைக்கும் கூட கீழ்க்கண்ட உண்மைகள் யாராலும் மறுக்க முடியா தவை. அரசாங்கங்களின் அதிகாரப்பூர்வ தரவுகளே இந்த உண்மைகளுக்கு ஆதாரம்:

‘இன்றைய உலகு அதிகரித்து வரும் ஏற்றத் தாழ்வுகள் கொண்டது.

 ‘கார்ப்பரேட் பெரு நிறுவனங்களின் மூலதனக்குவியல் அதிகரித்து வருகிறது.இத்துடன் இணைந்ததாக வறுமையும், வேலையின்மையும்,வாழ்வாதார வீழ்ச்சியும் அதிகரித்து,அடித்தட்டு மக்களின் வாழ்க்கை இன்னல்கள் தீவிரமாகியுள்ளன.

 ‘உலக அளவில் ஏகாதிபத்திய நாடுகள் தங்களது மேலாதிக்கத்தை வலுப்படுத்தி வருகின்றன. போர்களைத் தூண்டி வருகின்றன.சோஷலிசப் பாதையில் செல்லும் நாடு களின் வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கின்றன.

‘ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முதலாளித்துவ சக்திகளும், அரசுகளும், தங்களது நாட்டு உழைக்கும் வர்க்கத்தை கடும் சுரண்டலுக்கு ஆளாக்கி வருகின்றன. உரிமை பறிப்பு தீவிரமாகி உள்ளது. இந்த உண்மைகள் எடுத்துரைக்கும் படிப்பினை என்ன? இன்றைய முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து, சோசலிசம் என்கிற நிகழ்ச்சி நிரலை நோக்கி உலகம் பயணிக்க வேண்டும் என்பதுதான். அதற்கான நடைமுறைகள் அவசியமானவை. 

மார்க்சின் மீதான விமர்சனம்

மார்க்சியத்தை விமர்சனம் செய்பவர்கள் ‘இன்றைய முதலாளித்துவம் வெகுவாக மாறிவிட்டது;இது மார்க்ஸ் கால முதலாளித்துவம் அல்ல’என்று பேசுகின்றனர். முத லாளித்துவம் மாற்றத்துக்கு உள்ளானதால் அதை எதிர்க்க  வேண்டியதில்லை என்றும், முதலாளித்துவம் தன்னை சரி செய்து கொள்ளும் என்றும் எழுதுகின்றனர். முதலாளித்து வத்தைப் பற்றியோ அல்லது அதன் பொருளாதார நெருக்கடி கள் பற்றியோ பெரிதாக கவலை கொள்ள வேண்டியது இல்லை’ என்றெல்லாம் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. முதலாளித்துவ எதிர்ப்பு காலாவதி ஆகிவிட்டது என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.  மார்க்ஸே முதலாளித்துவம் எப்போதும் மாற்றங்களுக்கு ஆளாகி வந்துள்ளது என்பதை பதிவு செய்துள்ளார். வணிக மூலதனம், தொழில்துறை மூலதனம் ,ஏகபோக மூலதனம், நிதி மூலதனம், சர்வதேச மூலதனம் என அதன் வளர்ச்சி வடிவங்களை அவர் ஆராய்ந்துள்ளார். அனைத்தும் மாற்றங்களுக்கு உள்ளாகும்; எல்லாமே மாறும்’எல்லாமே இயக்கத்தில் இருக்கிறது, என்ற இயக்க வியல் விதியை பின்பற்றியவர் மார்க்ஸ். தன் காலத்திற்குப் பிறகும் முதலாளித்துவம் மாற்றங்களுக்கு உட்படும் என்பதை அவர் அறியாதவரா ? மார்க்ஸ் கருத்துக்களை அடிப்படை இல்லாமல் விமர்சிப்ப தன் நோக்கம் என்ன?. முதலாளித்துவத்தை தூக்கி எறிய வேண்டும் என்ற மார்க்சிய நடைமுறை இலக்கின் மீது உழைக்கும் வர்க்கம் பெரி தாக கவனம் செலுத்தக் கூடாது என்பது தான்.  1980-90-களில் மார்க்சியத்தின் மீதான பொய்யான பிரச்சாரங்களுக்கு உலகில் பல தொழிலாளி வர்க்க இயக்கங்க ளும் இடதுசாரி இயக்கங்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பல இயக்கங்களும் கூட இரையாகின. முதலாளித்துவத்தை வீழ்த்த வேண்டு மென்ற அடிப்படை இலட்சியத்தை முன்னி றுத்த வேண்டியதில்லை; மாறாக, உழைக் கும் வர்க்கத்தின் வாழ்க்கை  மேம்பாட்டுக் கான சில கோரிக்கைகளை முன் வைத்தால் போதும் என்ற நிலை எடுத்தனர். 

இதற்கேற்றவாறு, மார்க்சியத்தை திரிக்கும் வகையில் பல தத்துவங்கள் முன்வைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக ,பின் நவீ னத்துவம், எனும் பெயரில் பலர்”விளிம்பு நிலை மனிதர்கள்” தாங்கள் வாழும் சமூக அடையாளம் சார்ந்து ஒன்றுபட்டால் போதுமானது; வர்க்க ரீதியில் ஒன்று திரண்டு முதலாளித்து வத்தை வீழ்த்தி, அரசு அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய தில்லை என்றெல்லாம் பல கருத்தாக்கங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்தனர். இது போன்று, வர்க்க இலக்கை புறக்கணி க்கும் கருத்தியல்கள் உலகம் முழுவதும் தொழிலாளி வர்க்க இயக்கத்தை பெரும் அளவில் பலவீனமடைய செய்தன. நவீன தாராளமயப் பாதையில் பயணித்த முதலாளித்துவ அரசுகளும் மேலும் மேலும் வலிமை பெற்றதாக மாறின. தொழிலாளர் உரிமைகளும், ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டன; போராடிப் பெற்ற நலத்திட்டங்கள் சிதைக்கப் பட்டன. பிற்போக்கு வலதுசாரி வாதங்கள் வலுப்பெற்றன.மறுபுறம், முதலாளித்துவ அரசுகளை தூக்கி எறிந்து புரட்சிகர மான மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்கிற சிந்தனைகள் விதைக்கப்பட்டன.  தவறான, திசை திருப்பும் இந்த கருத்தியல்களை எதிர்த்து வர்க்க இயக்கம் மார்க்சிய நடைமுறைத் திட்டங்களோடு முன்னேறிட வேண்டும்.

மார்க்சின் வாழ்க்கை 

தத்துவத்தையும் நடைமுறையையும் இணைத்துச் செயலாற்றுவதில், மார்க்சின் வாழ்க்கையே முன்னுதாரண மாகத் திகழ்கிறது. முதலாவது அகிலம் எனப்படும் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் கூட்டமைப்பில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரும் தீவிரமாகச் செயல்பட்டனர்.1864-ல் நிறுவப்பட்ட அந்த அமைப்பில் அதன் வேலைத் திட்டம் அமைப்பு விதிகள் உருவாக்குவதில் மார்க்ஸ் முழுமூச்சாகச் செயல்பட்டார். இதையொட்டி பல்வேறு நகல்கள் ,கருத்துக்கள் முன்வைக்கப்பட்டபோது, அவற்றை எதிர்த்து கருத்துப் போராட்டத்தையும் மார்க்ஸ் மேற்கொண்டார். பிரெஞ்சு அமைப்பின் ஒரு தலைவரின் நகல் பற்றி குறிப்பிடுகிறபோது, “அது பயங்கரமான வார்த்தை ஜாலங்கள் நிறைந்ததாக இருந்தது; படுமோசமாக எழுதப்பட்டிருந்தது;கோட்பாடுகளைப் பற்றி பிரகடனம் போன்ற பாவனைதான் இருந்தது; பிரெஞ்சு சோசலிசத்தின் தெளிவற்ற, துண்டு துக்காணிகளால் பட்டை போடப்பட்டிருந்தது..” என்று ஏங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் விவரித்திருந்தார்.

கூட்டமைப்பின் துவக்க உரையில் மார்க்ஸ் தொழிலாளி வர்க்கத்தின் நடைமுறை லட்சியங்களை விவரித்தார். “பாட்டாளி வர்க்கத்தின் இறுதி இலட்சியம், எல்லா வகை யான வர்க்க ஆட்சி முறையை இறுதியாக ஒழிப்பதாகும்” “ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் நடத்தும் அரசியல் போராட்டம், ,முதலாளித்துவ அமைப்பு முறையின் ஒடுக்குமுறையிலிருந்து உழைக்கும் மக்களை முழுமையாக விடுவிக்கும் கருவியாகும்”  இந்த லட்சிய போராட்டங்களை நடத்துவதற்கு அடிப்படை கோட்பாடுகளையும் மார்க்ஸ் வரையறுத்தார்: “வர்க்க அடிப்படையில் அனைத்து சக்திகளின் ஒற்றுமை யும், பாட்டாளி வர்க்க சர்வதேசியமும் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு மிகவும் முக்கியமான கோட்பாடுகளாகும்” என்றார்.  அகிலத்தின் பணிகளிலும், பல நாடுகளில் வர்க்க இயக்கம் வளர்வதற்கும் தொடர்ந்து மார்க்ஸ் வழிகாட்டுதல்களை அளித்து வந்தார். பல நாடுகளில் நடந்த புரட்சிகர எழுச்சி களுக்கும் மார்க்சின் வழிகாட்டுதல்கள் இருந்தன. பாரிஸ் நகரத்தில் புரட்சி நடந்து தொழிலாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றிய போது,அதன் அனுபவங்களை மிக நுணுக்கமாக தொகுத்து, எதிர்காலப் புரட்சிகளுக்கு அனுபவ படிப்பினைகளை வரையறுத்தார்.  மார்க்சின் வாழ்க்கையில் தத்துவமும் நடைமுறையும் பின்னிப்பிணைந்திருந்தது.அவரது காலத்திற்குப் பிறகு மார்க்சின் போதனைகளை அடியொற்றி பல நாடுகளில் வர்க்க  இயக்கங்கள் வளர்ச்சி பெற்றன.

இந்தியாவில் மார்க்சிய இயக்கம்

மார்க்சின் கோட்பாடுகளை மையமாகக் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடைமுறைத் திட்டங்களை உருவாக்கி வருகிறது.  1. வர்க்க சக்திகளின் விரிவான ஒற்றுமை. சாதிய, பாலின ஒடுக்குமுறை உள்ளிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து, வகுப்புவாத பிளவு முயற்சிகளுக்கு எதிரான போராட்டங்களோடு ,விரிவான வர்க்க ஒற்றுமையை கட்டும் பாதையில் கட்சி முன்னேறி வருகிறது. 2. ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கிய சர்வதேசப் பார்வை. இது கட்சியை வழிநடத்தும் கோட்பாடாக அமைந்துள்ளது.  இந்தியாவில் தொழிலாளி, விவசாயி மற்றும் உழைக்கும் வர்க்கங்களின் வர்க்கக் கூட்டணி அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அயராது பாடுபட்டு வருகிறது. இந்த மக்கள் ஜனநாயக கூட்டணியே இந்தியப் புரட்சிக்கு இட்டுச் செல்லும். இன்றைய நிலையில் பாஜக உள்ளிட்ட பெரு முதலாளி த்துவ நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு எதிராக அனைத்து இடதுசாரி ஜனநாயக சக்திகளை அணி திரட்டுவதற்கான நடைமுறைகளை கட்சி உருவாக்கிச் செயல்பட்டு வருகிறது. தத்துவம், நடைமுறையை இணைத்து சோசலிச மாற்றத்தை ஏற்படுத்துவதே, மார்க்சின் பிறந்த தினத்தில், அனைவரும் மேற்கொள்ள வேண்டிய உறுதிப்பாடாக அமையும்.