articles

img

பூட்டி வைக்கப்பட்டிருக்கும் உரிமைகளின் கதவுகளை திறக்கட்டும் நம் உறுதிமிக்க போராட்டங்கள்! - மு.அன்பரசு

உழைக்கும் தொழிலாளர்க ளின் உரிமைகளுக்காக பாட்டாளி மக்கள் தொடங்கிய முதல் போராட்டமும், ஊழியர்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் என்ற இந்த பேரியக்கத்தின் 40ஆம் ஆண்டு விழாவும் மே மாதத்தில் வருவது பொருத்தமான நிகழ்வே.  தொழிலா ளர்களுக்காக அரசு ஊழியர்கள் போராடுவதும், உழைக்கும் ஊழியர்களுக்காக தொழிலாளர்கள் போராட்டங்களில் கலந்து கொள்வ தும், இரு தரப்பினரின் உரிமைகளுக்காக எல்லோரும் சேர்ந்து இந்திய அளவில் வேலை நிறுத்தங்களை மேற்கொள்வதும் இன்றைய காலகட்டங்களில் வழக்கமான நிகழ்வுகளாக மாறியுள்ளன.   தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமானது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் என்பதை உயர்த்திப்பிடித்து வளர்ந்த இயக்கம்.  அதை பெற்றுத்தந்த பெருநிறைவும் இதற்கு உண்டு என்றாலும், இந்த நாற்பதாண்டு கால அரசு ஊழியர் சங்க வரலாற்றில் 20 ஆண்டுகளாக பழைய ஓய்வூதியத் திட்டமே மேலானது என்று வலியுறுத்தி, அரசாங்கத்திடம் அதைக்கேட்டு போராடி வருகிறோம்.  கடந்த இருபது ஆண்டுகளாக நீடிக்கும் தொடர் போராட்டம் காரணமாக அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் ஒப்புக்கொண்டாலும் இன்றுவரை அது நிறைவேறாமல் இருப்பது ஊழியர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அரசை நிர்ப்பந்திக்க, ஒப்புக்கொண்ட உரிமைகளை முழுவதுமாக பெற்றிட போராட்டங்கள் மட்டுமே நமக்கி ருக்கின்ற ஒரே பலம்.  அதை,அரசு ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினத்தில் அழுத்தி பதிவுசெய்ய வேண்டியுள்ளது.

ஒரு அமைப்பின் விலைமதிக்க முடியாத செல்வங்கள் சரியான முறையில் பயிற்று விக்கப்பட்ட ஊழியர்கள் தான்.  யார் இடையூறுகளைக் கண்டு ஓடி ஒளியாது, அஞ்சி நடுங்காது, அவற்றை வெல்வதற்கும், களைந்தெறி வதற்கும் தயாராக நின்று அந்த இடையூறுகளை நேரடியாகச் சந்திக்கிறார்களோ, அவ்வாறு இடையூறுகளை எதிர்த்துப் போராடுபவர்களால்தான் வெல்ல முடியும். அது தனி மனிதனால் சாத்தியமல்ல. அத்தகைய தோழர்களின் சங்கமமே சாதிக்கும். இன்று எங்கு பார்த்தாலும் யோகா, மன வளக்கலை என பயிற்சிக்கூடங்களை முதலாளிகள் நடத்துகிறார்கள். எதற்காக...? கோபங்கள்,  போர்க்குணங்கள், சோர்வுகள் நீக்கி மழுங்கடிக்கப்பட்ட தொழிலாளிதான் அவர்களுக்குத் தேவை. தடையற்ற உற்பத்திக்கு தோதான தொழிலாளி உருவாக்கப்படுகிறார். அதன்காரணமாக ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை தடுக்கப்படும் போது எதிர்க்க முடியாமல் அந்த ஊழியர் முடக்கப்படுகிறார். கிட்டத்தட்ட அடிமை நிலைக்கு மாற்றப்படுகிறார்.  

இந்தப் போக்கு அரசு அலுவலகங்களிலும் மெல்ல பரவி வருகிறது. 

இத்தகைய சூழலில் ஊழியர்களின் மனங்களை வெல்ல வேண்டும்; அவர்களை   முழு மையான தொழிற்சங்கப் பயிற்சிக்கு உட் படுத்தி போராட்டக் களங்களுக்கு தயார் படுத்த வேண்டும். தளராத மனஉறுதியை அவர்கள் பெற்றிட நாம் வென்ற உரிமைப் போராட்ட வரலாறுகளை கூறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் அரசு ஊழியர் சங்கம் உறுதியுடன் உள்ளது. அது மட்டுமல்ல; முரண்கள் ஏதுமில்லா அணுகுமுறை, தீர்வு குறித்த தெளிவு, காலம் எதிர்பார்க்கிற கடப்பாடு, ஊழியர் நலன், மக்கள் மீது அக்கறை, தொழிற்சங்க உரிமை போன்ற கோட்பாடுகளில் உறுதியாக நின்றே எந்தப்பிரச்சனையையும் அரசு ஊழியர் சங்கம் அணுகுகிறது. சங்கங்களைப் பொ றுத்தவரை மாநிலத்திற்கு மாநிலம் ஒரு நிலை என்பது இல்லை. ஒரே உறுதியான நிலைதான் எல்லா மாநிலங்களிலும். ஒருமைப்பாடும், உழைக்கும் மக்களுக்கான உரிமைகளை காப்பதுவும், இழந்த உரிமைகளை மீட்பதுவுமான வலிமையான போராட்டங்களும், உறுதிப்பாடுகளும்தான் இன்றைய இன்றியமையா தேவைகளாகியுள்ளன.  

மக்களை ஒருமுகப்படுத்தி நேர்மையான, நியாயமான உரிமைகளுக்காக அவர்களை போராட வைக்கவும், அதன்மூலம் உரிமைகளை வெல்வோம் என்ற உறுதியுடனும் இன்றிலிருந்து அடியெடுத்து வைப்போம். நம்முடைய முன்னோடித் தோழர்கள் பெற்றுத்தந்த உரிமைகளை எப்பாடுபட்டேனும் காப்போம் என்ற உறுதியுடன் இந்த அமைப்பு தினத்தில் சூளுரைப்போம்.  நாம் இதுவரை பெற்ற உரிமைகள் அனைத்தும் அரசின் கருணையால் அல்ல; ஓயாத போராட்டத்தினால் பெற்றோம் என்பதை ஒவ்வொரு ஊழியருக்கும் புரிய வைத்து அவர் களை  அமைப்புக்குள் கொண்டு வந்து சேர்ப்போம். இதை நாம் இந்த அமைப்பு தினத்தின் உறுதிமொழியாக ஏற்போம்.