articles

img

ஒன்றுபடுவோம்! வர்க்கப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்துவோம்!- து.ராஜா

கண்ணூரில் நடைபெற்று வரும்  சிபிஎம் அகில இந்திய மாநாட்டின் துவக்க  பொது மாநாட்டில் (ஏப்ரல் 6)  சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா ஆற்றிய உரை:

அன்பார்ந்த தோழர்களே, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில  இந்திய மாநாட்டுக்கு  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் என் புரட்சி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கி றேன். மாநாட்டின் துவக்கவிழா அமர்வுக்கு என்னை அழைத்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு, கேரளாவில் நடந்துகொண்டிருக்கிறது. 1957இல், அதாவது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, ஜன நாயகரீதியாக  தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட் அரசாங்கத்தைப் பெற்றது கேரளா. அதன்பின்னர், இத்தனை ஆண்டு காலமாக கேரளம் நாட்டில் இடது மற்றும் ஜனநாயக இயக்கத்தின் நிகரற்ற மையமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. மக்களால் மேற்கொள்ளப்பட்ட எண்ணற்ற போராட் டங்களாலும், இயக்கங்களாலும் கேரளம் இதனைச் சாதித்திருக்கிறது.

இந்த மாநாடு மிகவும் இக்கட்டான ஒரு காலகட்டத் தில் நடந்து கொண்டிருக்கிறது. நாடு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வலதுசாரி சக்திகளின் தாக்குத லுக்கு ஆளாகி இருக்கிறது. இந்தியக் குடியரசின் அடிப்ப டைகளின்மீதே அது தாக்குதல் தொடுத்திருக்கிறது. எனினும், எதிர்காலம் அப்படி ஒன்றும் இருள் சூழ்ந்ததாக இல்லை. ஆட்சியாளர்கள் மேற்கொண்டுவரும் மக்கள் விரோதக் கொள்கைகளை, பிளவுவாதக் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் தொழிலா ளர்களோ, விவசாயிகளோ, பெண்களோ, இளைஞர்க ளோ, மாணவர்களோ, உழைக்கும் மக்களின் இதர பிரிவி னரோ இல்லை. தாங்கள் கடுமையாகப் போராடிப் பெற்ற  உரிமைகளைப் பாதுகாத்திட அவர்கள் வீதியில் இறங்கிப் போராட முன்வந்திருக்கிறார்கள்.2008-09 பொருளாதார மந்தத்திற்குப் பின்னர், வலதுசாரி எதேச்சதிகாரம் தலை தூக்கி இருப்பது உலகளாவிய ஒன்றாக மாறி இருக்கிறது. உலகில் பல பகுதிகளில் நவீன தாராளமய கார்ப்பரேட் ஆதரவு சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கின்றன. இந்த சக்திகள் தங்கள் நாடுகளில் உள்ள முற்போக்கு சக்தி களையும், மனிதகுலம் அடைந்துள்ள அறிவியல் சாதனைக ளையும் அழிக்கும் வேலைகளில் இறங்கி இருக்கின்றன.  

சர்வதேச நிதி மூலதனத்தின் சூழ்ச்சித்திட்டங்கள்

பாசிச சக்திகள் ஜெர்மனியிலும் பல ஐரோப்பிய நாடுகளி லும் மக்கள் மத்தியில் வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, வேலையின்மை அதிகரித்திருப்பது, பணவீக்கம் முதலானவற்றைப் பயன்படுத்திக்கொண்டு மிகவும் அபாய கரமான முறையில் தங்களை விரிவுபடுத்திக் கொண்டி ருக்கின்றன.  அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தூண்டுதலால்  நாடுகளிடையே ஆயுத மோதல் மீண்டும் அதிகரித்திருப்ப தையும் பார்க்கிறோம். இதன் சமீபத்திய வெளிப்பாடுதான் உக்ரைன் மற்றும் ரஷ்ய மக்களின் உயிர்களைக் காவு கொடுத்து, அந்நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பை அமெரிக்கா மற்றும் நேட்டோ தலைமையிலான ஏகாதி பத்திய சக்திகள் பலவீனப்படுத்தி இருப்பதாகும். நம்மைச் சுற்றியுள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம் , மியான்மர் ஆகிய அண்டை நாடுகளிலும்கூட பெருமளவில் அமைதியின்மை யும் நிலையற்றத்தன்மையும் ஏற்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் அதன் கொந்தளிப்புக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இவற்றின் பின்னணியில் சர்வதேச நிதிமூலதனத்தின் சூழ்ச்சித் திட்டங்கள் இருக்கின் றன என்பதைக் காண முடியும். இத்தகைய இவர்களின் சூழ்ச்சித்திட்டங்கள் பல நாடுகளில் எதிர்க்கப்பட்டு வருகின்றன என்பதும் உண்மை தான். குறிப்பாக லத்தீன்  அமெரிக்க நாடுகள் இவற்றை உறுதியுடன் எதிர்த்துக் கொண்டிருக்கின்றன.

ஜனநாயகத்தை ஏற்காத  ஆர்எஸ்எஸ் - பாஜக

நாடு சுதந்திரம் பெற்று எழுபதாண்டுகளுக்குப் பின்னர், வறுமையும், மக்கள் மத்தியில் அதீத சமத்துவமின்மையும் நாட்டைப் பீடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டு களில் நிலைமைகள் மிகவும் மோசமாகி இருக்கின்றன. பசி-பட்டினி அட்டவணை உட்பட  நாட்டின் மனிதவளக் குறி யீடுகள் அனைத்திலும், நம் நாட்டில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டி ருப்பதைப் பார்க்கிறோம். ஒருசிலரின் கைகளில் மட்டும் நாட்டின் செல்வங்கள் குவியும் அதே சமயத்தில், கோடிக்க ணக்கான மக்கள் வறுமைக்குழிக்குள் தள்ளப்பட்டு அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கோவிட்-19 பெருந்தொற்று நாட்டின் வளர்ச்சி என்பது எந்த அளவிற்கு சமச்சீரற்று இருக்கிறது என்பதை அம்ப லப்படுத்திவிட்டது. நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் பாஜக அரசாங்கம் நம் நாட்டின் அடிப்படை விழுமியங்களை அழித்திடும் வேலைகளில் இறங்கியிருக்கிறது. மதச் சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சித்தத்துவம், சேமநல அரசு மற்றும் சுயேச்சையான அயல்துறைக் கொள்கை  என அனைத்தையும் அழிக்கும் வேலையில் இறங்கியி ருக்கிறது. நீதித்துறை, தேர்தல் ஆணையம் மற்றும் நாடாளுமன்றம் அனைத்தும் அரித்துவீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) , அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்பு கள் அவை ஏற்படுத்தப்பட்ட நோக்கங்களுக்கு எதிராக, ஆட்சியாளர்களின் எடுபிடிகளாகச் செயல்பட்டு அவர்க ளின் அரசியல் எதிரிகளை மிரட்டும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றன. ஆர்எஸ்எஸ்/பாஜக எந்தக் காலத்தி லுமே நம் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட தில்லை. இப்போது அவை நம் அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தையே அழித்திடும் வேலையில் இறங்கியி ருக்கின்றன.

தகர்க்கப்படும் குடியரசு

அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்தது, மக்களைப் பிளவுபடுத்திடும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது, கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது, தொழிலாளர் நலச் சட்டங்களை தொகுப்புச் சட்டங்கள் (Labour Codes) என்ற பெயரில் முதலாளிகள் நலச்சட்டங்களாக மாற்றியி ருப்பது என அனைத்துமே மோடி அரசாங்கத்தின் அடாவடித் தனமான எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும்.  பாஜக, நாடாளுமன்றத்தில் தனக்கிருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தை யே அரித்துவீழ்த்திடும் வேலையில் இறங்கியிருக்கிறது. ஆளும் கட்சியின் விருப்பங்களுக்கேற்ப நாடாளு மன்றத்தில் அடிபணிய வைத்திருக்கிறது. அது மக்களின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் உயர்ந்த பீடமாக இருந்த நாடாளுமன்றத்தின் பங்கையே  பறித்துவிட்டது.  அரசாங்கத்தையோ அதன் கொள்கைகளையோ எவர் கேள்வி கேட்டாலும், அவர்கள் மீது தேசத்துரோகக் குற்றப்பிரிவு மற்றும் கொடூரமான சட்டவிரோத நடவடிக்கை கள் தடைச்சட்டமும் பாயும். அவர்கள் தேசவிரோதிகள் எனவும், பயங்கரவாதிகள் எனவும் தன்னால் ஆட்டு விக்கப்படும் ஊடகங்களின் உதவியுடன் முத்திரை குத்தப் படுவார்கள். பீமா கொரேகான் மோதல் வழக்கில் அரசு எந்திரம் மிகவும் கொடூரமான முறையில் விளிம்புநிலை மக்களுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் செயல்பட்டுக்கொண்டிருந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறது. நம் அரசமைப்புச் சட்டத்தின், நம் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் படிக்கற்களாக விளங்கும் பகுத்தறிவு, அறிவியல் மனப்பான் மை மற்றும் அரசமைப்புச்சட்ட நெறிமுறைகள் திட்டமிட்டு, படிப்படியாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கூட்டுக் களவாணிகளின் ஆட்சி

இவ்வாறு குடியரசின் அடித்தளங்கள் தகர்க்கப்பட்டுக் கொண்டிருப்பதுடன், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கம் நாடாளுமன்றத்திலும், வீதிகளிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதிலும் அவற்றையெல்லாம் மீறி, ஈவிரக்கமின்றி நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவற்றின் பேரழி வுத் தாக்கங்கள், பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகளுக்குத் தடையாகத் தொடர்கின்றன. பொதுத்துறை நிறுவ னங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டுக் கொண்டி ருக்கின்றன. இவர்களின் இந்த நடவடிக்கைகளில் சமீபத்தில் ரயில்வே, எல்ஐசி மற்றும் பொதுத்துறை வங்கிகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆட்சி யாளர்களின் ஆதரவுடன் அவர்களின் கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகளால் பொதுத்துறை வங்கிகளிலிருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் சூறையாடப்பட்டிருக்கின்றன. இவ்வாறு சூறையாடியவர்கள் எளிதாக வெளிநாடு களுக்குத் தப்பி சுகபோக வாழ்க்கை வாழ அனுமதிக்கவும் பட்டிருக்கின்றனர்.வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த ஐம்பதாண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாகி இருக்கிறது. மக்கள் பணவீக்கத்தால் அல்லாடிக் கொண்டி ருக்கிறார்கள். மோடி அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கை கள் ஒருசில கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பயன் அளித்தி ருக்கின்றன. இதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு செல்வம் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரிடம் குவிந்திருக்கிறது, சமத்துவமின்மை அதி கரித்திருக்கிறது. கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகள் யார் என்றால் அவர்கள் அதானி மற்றும் அம்பானி என்று மக்களால் கூறப்படும் அளவுக்கு மாறியிருக்கின்றன.

மதவெறியும் சாதிவெறியும்

ஆர்எஸ்எஸ்/பாஜக ஆட்சியில் மதவெறித் தீயும், சாதி வெறித் தீயும் விசிறிவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆர்எஸ்எஸ்-உம் அதன் பரிவாரங்களும் சமூகத்தை மதவெறி அடிப்படையில் பிளவுபடுத்தி, மக்கள் மத்தியில் அச்ச உணர்வையும், வெறுப்பு உணர்வையும், பிளவுவாத சிந்தனைகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத முயற்சிப்பதோடு மட்டுமல்லாமல், இந்திய தேசத்தையே மறுவரையறை செய்திடவும் நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கின்றன. இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான வேலைகளில் இறங்கி யிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அரசமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்ட சமயத்தில் இதனை அழுத்தந்தி ருத்தமாக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நிராகரித்தார்.   மனு (அ)நீதியை உயர்த்திப்பிடிக்கும் ஆர்எஸ்எஸ், டாக்டர் அம்பேத்கரின் சாதியற்ற சமுதாயம் அமைக்கும் சிந்த னையை முழுமையாக எதிர்க்கிறது. நால்வர்ண சாதிய அமைப்புமுறையே என்றென்றும் இருந்திட வேண்டும் என்றும் அதன் பிரதிநிதிகளாகவே நாங்கள் இருந்து வருகிறோம் என்றும் கூறுகிறது. ஆர்எஸ்எஸ் தலைமை யின்கீழ் மற்றும் அவர்களின் மனோபாவத்தின் அடிப்படை யில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் மீது தாக்கு தல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்க ளால் தண்டிக்கப்படமாட்டோம் என்கிற தைரியத்துடன் பட்டி யலின மற்றும் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இடதுசாரிகள் சாதி எதிர்ப்பு சக்திகளை அணிதிரட்டி இவர்களுக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்திட வேண்டும்.

பெண்ணுரிமை காப்போம்!

அதேபோன்று, மனுஸ்மிருதி நிகழ்ச்சிநிரலின் அடிப்ப டையில் ஆணாதிக்க சிந்தனையையும் இவர்கள் உயர்த்திப் பிடித்து, பெண்களை மட்டமாகப் பார்க்கும் பார்வையை யும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சமத்துவத்திற்காக வும், நீதிக்காகவும் போராடும்போது எள்ளிநகையாடுகி றார்கள்.  ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் நடவடிக்கைக ளுக்கு எதிராக சமரசமின்றிப் போராடும் அதே சமயத்தில், நம் போராட்டத்தில் பாலின சமத்துவப் பிரச்சனைக ளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். கீதா முகர்ஜி மற்றும் பல தோழர்கள் பெண்களின் இட ஒதுக்கீட்டுக்காகவும், பாலின சமத்துவத்திற்காகவும் போராடினார்கள். அதனை நாம் தொடர்ந்து எடுத்துச் சென்றிட வேண்டும்.

வர்க்கப் போராட்டத்தை கூர்மைப்படுத்துவோம்!

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு அநேக மாக ஒரு நூற்றாண்டைக் கடந்துவிட்டது. இப்போது நாட்டின் அரசியலை வடிவமைப்பதிலும் மாற்றுவதிலும் முக்கிய பங்களிப்பினைச் செய்து கொண்டிருக்கிறது. நாட்டின் நிகழ்ச்சிநிரலை வடிவமைப்பதில் நம்முடைய வரலாற்றுப் பங்களிப்பினை நாம் உணர்வுப்பூர்வமாகப் பெற்றிருக்கி றோம். இந்திய சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வைப் போக்குவதற்காக பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சக்திகளிடம் நாம் போராடிய காலத்திலிருந்து, நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு போராட்டத்திலும் முற்போக்கு சித்தாந்த நிகழ்ச்சிநிரலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். கடந்த நூறாண்டுகளில் இந்திய சமூகம் பல்வேறு மாற்றங்க ளைச் சந்தித்திருக்கிறது. நம் எதிர்காலத் திட்டங்களை நம்மைச்சுற்றி நடைபெறும் அரசியல் நிலைமைகளின் அடிப்படையில் அமைந்திட வேண்டும். மார்க்சியத்தை இந்தியாவின் நிலைமைகளுக்கேற்ப பொருத்தும் அதே சமயத்தில், கம்யூனிஸ்ட்டுகளாகிய நாம், சாதி, வர்க்கம் மற்றும் ஆணாதிக்க சிந்தனைக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்திட வேண்டும். இந்தியா வில் புரட்சியை நடத்திட, சுரண்டலின் அனைத்துவிதமான வடிவங்களுக்கு எதிராகவும். சமூக நீதி, சமத்துவம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டங்களுடனும் வர்க்கப் போராட்டத்தைத் தீவிரப்படுத்திட வேண்டும். கம்யூனிஸ்ட்டுகளாகிய நாம், கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, மக்களுக்குக், குறிப்பாக உழைக்கும் மக்களுக்கு,  குடியிருப்பு வசதிகள் ஆகியவற்றுக்காக வெகுஜனப் போராட்டங்களைக் கட்டி எழுப்பிட வேண்டும்.

ஆம், மிஸ்டர் மோடி... 

சமீபத்தில், ஊடக நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டி அளித்த பிரதமர் மோடி, கம்யூனிசம் ஓர் ஆபத்தான சித்தாந்தம் என்று குறிப்பிட்டார். அதற்கு நான் இவ்வாறாக பதி லளித்தேன்: “ஆம், மிஸ்டர் மோடி, ஆர்எஸ்எஸ்-இன் வகுப்புவாத சிந்தனைக்கு நாங்கள் ஆபத்தானவர் கள்தான். உங்களின் பிளவுவாத சிந்தனைக்கு நாங்கள் ஆபத்தானவர்கள்தான். உங்களின் கூட்டுக்களவாணி களைக் கொழுக்க வைத்திடும் சிந்தனையை, நாட்டின் சொத்துக்களை சூறையாடுவதை, எப்போதும் நாங்கள் சமர சமின்றி விடாப்பிடியாகத் தொடர்ந்து எதிர்த்துவருவோம். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சித்தாந்தரீதியாக எதிர்ப்பதால் அவர்களுக்கு நாங்கள் ஆபத்தானவர்கள்தான். ஆம், நாங்கள் ஆர்எஸ்எஸ்-க்கு ஆபத்தானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஏனெனில் ஆர்எஸ்எஸ் நாட்டுக்கு ஆபத்தான ஒன்று.”

ஒன்றுபடுவோம் !

தோழர்களே, ஆர்எஸ்எஸ் இயக்கத்தை எதிர்த்து முறி யடிப்பது, அதற்கு சித்தாந்தரீதியாக சவாலாக இருப்பது  இடதுசாரிகளால் மட்டுமே முடியும். ஆர்எஸ்எஸ்-இன் சிந்தனைக்கு ஒரு மாற்றை இடதுசாரிகளால் மட்டுமே அளித் திட முடியும். நம் போராட்டத்தில், சமூகத்தின் அனைத்து முற்போக்கு, மதச்சார்பற்ற, ஜனநாயக பிரிவினரையும் இணைத்துக்கொள்ள வேண்டும். இது நம் வரலாற்றுக் கடமையாகும். இன்றைய சூழ்நிலையில் கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு கொள்கையின் அடிப்படையில் மீண்டும் ஒன்றுபட வேண்டியது அவசியம் என்று எங்கள் கட்சி உறுதிபட கூறிக்கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ்-இயக்கத்தை அரசியல்ரீதியாகவும், சித்தாந்தரீதியாகவும் முறியடித்திட நம்மிடையே ஒற்றுமை தேவைப்படுகிறது. எப்படி அத்தகைய ஒற்றுமையைப் பெறுவது என்பது குறித்து நாம் ஆய்வு செய்திடுவோம்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இப்போது நடந்து கொண்டிருக்கும் 23ஆவது அகில இந்திய மாநாடும், 2022 அக்டோபரில் நடைபெறவிருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடும் இதுகுறித்து ஆய்வு செய்திட, விவாதம் செய்திட அதனைத் தொடர்ந்து துல்லிய மாக செயலூக்கமுள்ள ஒரு திட்டத்தை உருவாக்கிட, சிறந்த மேடைகளாகும். தோழர்களே, நண்பர்களே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாட்டின் விவாதங்கள் இடதுசாரி ஒற்றுமைக்குப் பங்களிப்பினைச் செய்திடும் என்றும், ஆர்எஸ்எஸ்/பாஜகவிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் திட்டங்களை வகுத்திடும் என்றும் நான் நிச்சயமாக நம்புகிறேன்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு  வெற்றி பெற வாழ்த்துகிறேன். இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்துவோம்! மார்க்சிசம் லெனினிசம் நீடூழி வாழ்க!  புரட்சி ஓங்குக!  இன்குலாப் ஜிந்தாபாத்!

தமிழில்: ச.வீரமணி