articles

img

பிறவியினால் வருவதல்ல அறிவு... - சே.அறிவழகன்

பால்ராப்சன் என்ற உலகபிரசித்தி பெற்ற அமெரிக்க நீக்ரோ பாடகர் தம் மகனைப் பற்றிக் கீழ்க்கண்ட வாறு கூறுகிறார். “அமெரிக்காவில் தம் மகன் பள்ளி க்குச் செல்வதானாலும், தன் வயது சிறுவர்களுடன் விளையாடச் சென்றாலும் மிகச் சோகமுடன் இருப்பா னாம். அவனைப் பால்ராப்சன் சோவியத் யூனியனுக்கு அழைத்துச் சென்று ஒரு பள்ளியில் சேர்த்தாராம் அவன் பல சோவியத் சிறுவர்களின் நண்பனாகி விட்டபடியால், பள்ளிக்குச் செல்லவும், சோவியத் சிறுவர்களுடன் கலந்து விளையாடவும் மெத்த மகிழ்ச்சியுடன் இருந்ததாகவும் கூறுகிறார்.  ஒரு குழந்தை வளரும் சூழல் எவ்வளவு பரந்த நோக்கத்துடனும், அன்புடனும் இருக்கிறதோ அங்கே மகிழ்ச்சி என்பது இயற்கையாகவே அமைந்து விடுகிறது.

பூர்வகால பூஜாபலனின் காரணமாக சிலர் உயர்ந்த குலத்தில் பிறக்கின்றனர். சிலர் தங்கள் பூர்வ ஜன்மத்தில் செய்த தீவினைகளின் காரணமாக சூத்தி ரர்களாக பிறக்கின்றனர். ஆகவே, பிறப்பின் காரணமாக நல்லதும் கெட்டதும் அனுபவிக்க வேண்டும். இது அவரவர்களுடைய தலை எழுத்து என்று மனுதர்ம, இந்து சமய சாத்திரங்கள் கூறு கின்றன என்பது வேதங்களை பாராயணம் செய்த பிராமணர்களின் கருத்துருவாக்கம். இந்தியாவில் பிராமணர்கள், சத்ரியர்கள், வைசியர்கள்,  சூத்தி ரர்கள் என்கிற சதுர்வர்ணங்களை கட்டமைத்து இவர்கள் இன்ன வேலை செய்ய வேண்டும் என்று, செய்யும் வேலை அடிப்படையில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று பிரித்தனர். இதுவல்லாத பிரிவு பஞ்சமர்கள். இவ்வாறு பிரித்து,  பட்டியல் – பழங்குடி சமூகத்திற்கு அசுத்தமான,  அருவெறுப்பான வேலைகளை செய்ய வேண்டும் என்பதை ஒதுக்கி மேலெழ விடாமல் பல ஆண்டுகாலமாக தடுத்தவை இந்து சமய சாத்தி ரங்கள். இதில் உயர்ந்தகுடி என்று முதல் மூன்று வர்ணங் களை வைத்து, அவர்களுக்கு சேவகம் செய்பவர்க ளாக சூத்திரர்கள் இருக்க வேண்டும் என்பதும், பிராம ணர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் பிராம ணர்களுக்கு கட்டுப்பட்டு அவர்கள் இடும் வேலை களையும், சேவைகளையும் செய்ய வேண்டுமென்பது உழைக்காமல் இதரர்களை ஏமாற்றிப் பிழைக்க ஏற் படுத்திய நுட்பமான வழிமுறை. இப்படிப்பட்ட வழி முறை நிலைத்திருந்தால் மட்டுமே எவ்வித துன்பமும் இல்லாமல் வாழலாம் என்பது அவர்களின் விருப்பம். அப்படிப்பட்ட உளவியல் சூழல் இப்போதும் இருக்க வேண்டும் என இந்துமத சாத்திரங்களை நம்பு பவர்கள் கூறி வருகிறார்கள். 

தங்களுக்கு மட்டுமே மேலதிக திறமை, அறிவு இருப்பதாகக் கூறுகிறார்கள். மற்றவர்கள் எவருக்கும் திறமை, அறிவு இருப்பதாக அவர்கள் ஏற்றுக் கொள்வ தில்லை. இந்த வகையிலான அளவுகோலை கொண்டு  தங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள சமூகத்தினர் தங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று இந்து தர்ம சாத்திரங்கள் அடிப்படையில் உரு வாக்கம் செய்கின்றனர். இவற்றின் விளைவு தான் பட்டியல்-பழங்குடி பிரிவில் இருப்பவர்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள் – கொடுமைகள். இதிலி ருந்து பட்டியல் – பழங்குடியின சமூகத்தை பாதுகாத்து  ஏனைய மக்கள் போல் வாழ வழிவகை செய்ய  வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் என்ற மனநிலை யில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். மத்தியில் ஆட்சி செய்யும் சனாதன தர்மங்களை நிலைநிறுத்தத் துடிக்கும் பாஜக அரசின் கொள்கை யின் வெளிப்பாடு கல்வியிலும் நடக்கிறது. இத னால் தான் ஐஐடியில் மாணவர்கள் சேர்க்கையி லும், சேரும் மாணவர்களையும் துன்புறுத்துவதிலும் நடைபெறுகிறது. முடிந்தால் பிழைத்துக்கொள்ள ளுங்கள் என்று நீட், கியூட் தேர்வுகள் கொண்டு வரப்படு கின்றன. 5, 8 ஆம் வகுப்புக்கு கூட பொதுத் தேர்வு கொண்டு வந்து அடித்தட்டு மாணவர்களின் கல்விக்  கனவை கேள்விக்குட்படுத்தி வருகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இடஒதுக்கீடு என்பதே அநியாயம் என்று கூறி திறமையோடு போட்டி போடுங்கள் என்று  மனரீதியான தாக்குதல்களை நடத்திவருகிறார்கள்.

இன்றைய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சமூகத்தில் ஏழைகளுக்கும், தொழிலாளி வர்க்கத் துக்கும் உயர்ந்த பண்பு இல்லை என்ற கருத்துரு வாக்கம் செய்யப்படுகிறது. இங்கு செல்வந்தர்களுக்கு மட்டுமே பண்பு உண்டு அப்படியென்றால் உழைப் பாளி வர்க்கத்தை சார்ந்தவர்களது வாழ்வியல் சூழலை, உடல் பாவனைகளை, மொழி பயன்பாடு களை பண்பற்றது என கருதுகிறார்கள். பண்பும் இனத்தைச் சேர்ந்தது என்கிறது இந்திய தர்ம சாத்தி ரங்கள்.  அதாவது, நல்ல இனத்திற்கு மேலான துணை இல்லை. உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள் உயர்ந்தவர்களே. தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்கள் தாழ்ந்தவர்களே. அவர்களுக்கு பிறவித் துன்பம் என்று வேறில்லை என்று கதைக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை சாதி என்பது மிகப்பெரிய பிரச்சனை யாகவே இருந்து வருகிறது. அதனால் இங்கு வர்க்கப்  போராட்டத்தோடு, சாதிக்கு எதிரான போராட்டங்க ளையும் சேர்த்தே முன்னெடுக்க வேண்டியுள்ளது. பட்டியல் – பழங்குடி சமூகத்தில் உள்ளவர்க ளுக்கு பிற சாதி ஆதிக்கவாதிகளால் அரங்கேற்றப் படும் அனைத்து கொடுமைகளுக்கும் பின்புலமாக இருப்பது இந்து சமய சாத்திரங்கள். அவைதான் மக்களை பிளவுபடுத்துகின்றன. அம்பேத்கரும், பெரி யாரும், இடதுசாரிகளும் அவற்றின் உள்ளடக்கத்தை தோலுரித்துக்காட்டினர். சாதிக்கொடுமையால் அச்சப் பட்டு நின்ற அடித்தட்டு மக்களின் மனநிலையை தகர்த்து மனதளவில் விடுதலை பெறும் அரும் பணியை செய்தனர். அவற்றின் வழியே இம்மண்ணில் பிறந்த பட்டியல்-பழங்குடி மக்களுக்கு மேலதிக திறமை – அறிவு – பண்பு உள்ளதென உரக்கச் சொல்வோம். ஒருசாரருக்கே அது உரியது என்பதை முறியடிப்போம்.

கட்டுரையாளர் : சிபிஐ(எம்) விழுப்புரம்  மாவட்டச் செயற்குழு உறுப்பினர்