articles

img

கார்ப்பரேட் கரசேவகர்கள் நடத்தும் காசி தமிழ்ச் சங்கமம் - டி.கே.ரங்கராஜன், சிபிஎம் மூத்ததலைவர்

உ.பி.மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் ஒன்றிய அரசு மற்றும் உ.பி. மாநில பாஜக அரசின் முழு ஆதரவுடன் ஒரு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. துவக்க நிகழ் வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி.மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் தமிழக பாஜக தலைவர்கள், சில மடாதிபதி கள் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசின் சார்பில் யாரும் அழைக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதாகவே அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி யின் மூளையில் தான் இந்தத் திட்டம் உருவானதாக இசைஞானி இளையராஜா வியந்து பாராட்டியுள்ளார். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்பதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தம். இந்த நிகழ்வில் தமிழ் மொழியின் தொன்மை குறித்தும், ஆன்மீகத் தொடர்பு குறித்தும் உரையாற்றியவர்கள் குறிப்பிட்டுள்ள னர். உலகின் மிகப் பழமையான மொழி மட்டுமல்ல, இன்று வரை உயிரோடு இருக்கும் மொழிகளில் ஒன்றா கவும் தமிழ் இருக்கிறது. இதை தமிழர்கள் மட்டுமல்ல,  உலக மொழியியல் அறிஞர்களும் ஒப்புக் கொள்கின்ற னர். தமிழின் தொன்மையைப் பாராட்டுகிற பிரதமர், தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய ஆட்சி மொழி யாக்க முன்வரவில்லை. மாறாக, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டுவது, ஒன்றிய அரசின் ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்ற அறிவிப்பு அதற்கான நடவ டிக்கைகளில் இறங்குவது போன்றவற்றில்தான் கவனம் செலுத்துகிறது.

இவர்களுக்கு தமிழின் மீதோ, தமிழர்கள் மீதோ எந்த அக்கறையும் இல்லை. இன்னும் சொல்லப்போ னால் இந்து மதத்தின் மீதோ கூட அக்கறையில்லை. இந்து மதம் என்பது வேறு, இந்துத்துவா என்பது வேறு. இவர்கள் புகுத்த நினைப்பது இந்துத்துவா எனும் ஆபத் தான அரசியல் கோட்பாட்டையே ஆகும்.

மதத்தின் அடிப்படையில்  நாடு இருக்க முடியாது

ஒரு மதம் என்கிற அடிப்படையில் இந்தியா, இந்து நாடு என்று ஸ்தாபிக்க தொடர்ந்து துடித்து வருகின்ற னர். அதன் ஒரு பகுதியே காசி தமிழ்ச் சங்கமம். மதத்தின் அடிப்படையில் ஒரு நாடு இருக்க முடியாது என்ப தற்கு வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. மத அடிப்படையில் பிரிந்து சென்ற பாகிஸ்தா னில் மொழி அடிப்படையில் வங்கதேசம் உருவானது. ஐரோப்பாவில் 45 நாடுகள் உள்ளன. பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்தவர்கள்தான் உள்ளனர். ஒரு மதத்தின் அடிப்படையில் 45 நாடுகளையும் இணைத்து ஒரே நாடாக மாற்றுவது என்பது சாத்தியமல்ல. ஒரு வாதத்திற்கு சொல்லப்போனால் 21 மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாமியர்கள்தான் பெரும்பான்மை யாக உள்ளனர். இந்த நாடுகள் அனைத்தையும் இணைத்து மத அடிப்படையில் ஒரே நாடாக உரு வாக்க முடியாது.  பண்டைய இந்தியா என்பது பல்வேறு சமஸ்தா னங்களாகப் பிரிந்து கிடந்தது. பிரிட்டிஷாருடைய வரு கைக்கு பிறகுதான் அவர்களது நிர்வாக வர்த்தக வசதிக்காகவும், வரி வசூலுக்காகவும், அதிகாரம் செலுத்த வசதியாகவும்,ஒரே நாடாக உருவாக்கப் பட்டது. அப்போதும்கூட இந்தியாவில் பல்வேறு மொழி களை பேசுகிற, பல்வேறு பண்பாட்டை பின்பற்றுகிற மக்கள் வாழ்ந்தனர். அவர்களது தனித்தன்மையை அழிக்க முடியவில்லை.  நாடு விடுதலை பெறும்போது மொழிவழி மாநிலங் கள் அமைய வேண்டுமென்று கம்யூனிஸ்ட் இயக்கம் குரல் கொடுத்தது. காங்கிரஸ் கட்சியும் கூட ஆரம்பத் தில் இதை ஏற்றது. அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி மாகாண அடிப்படையில் இயங்கியது. ஆனால்  நாடு விடுதலை பெற்றபிறகு மொழிவழி மாநிலங்கள் அமைவதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. பெரும் போராட்டத்திற்குப் பிறகுதான் மொழிவழி மாநிலங்கள் அமைந்தன. அந்த போராட்டங்களில் கம்யூனிஸ்ட்டுக ளுக்கு முக்கியப் பங்கு உண்டு.

எதிர்த் திசையில் பயணித்தவர்கள்

அப்போதும்கூட ஜனசங்கம், ஆர்எஸ்எஸ், இந்து மகாசபை போன்ற இந்துத்துவா அமைப்புகள் மொழி வழி மாநிலங்களை ஒருபோதும் ஆதரித்ததில்லை. பழைய மன்னராட்சி முறைதான் அவர்களது விருப்பம். ஆனால் விடுதலை பெற்ற இந்தியா அவர்களுக்கு எதிர்த் திசையிலேயே இயங்கியது.  நாடு விடுதலை பெற்ற பிறகு இந்தியாவின் பன்முகத் தன்மையையும், ஒற்றுமையையும், மத நல்லிணக் கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாக்க பெரும் போராட்டங்களை இந்திய இடதுசாரி இயக்கம் நடத்தியதோடு, பிரிவினை வாதம் உள்ளிட்ட சீர்குலைவு சக்திகளை எதிர்த்த போராட்டத்தில் பெரும் தியா கத்தைச் செய்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். 

அகண்ட பாரதம் என்பதும் அதிகாரங்கள் குவிக்கப் பட்ட ஒன்றிய அரசு பலவீனமான அதிகாரமும், தனித்து வமும் அற்ற மாநில அரசுகள் என்பதும் தான் ஆர் எஸ்எஸ் மற்றும் பாஜகவின் விருப்பம். தமிழ் உள்ளிட்ட மொழிகளின் வளர்ச்சியை அவர்கள் விரும்பவில்லை. இந்தி அதன் வழியாக சமஸ்கிருத மேலாதிக்கம் என்பதே அவர்களது திட்டம். ஆனால் வரலாற்றில் அதற்கு இடமில்லை.  சதி எனும் உடன்கட்டையேறும் கொடிய பழக்கத்தி ற்கு எதிராகப் போராடிய இராஜாராம் மோகன்ராய் இந்தியாவின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டு வரவேண்டும் என்பதை ஏற்கவில்லை. ஆங்கி லம் தொடர் மொழியாக இருக்க வேண்டும் என்றே அவர் வாதிட்டார். ஆனால் இந்துத்துவாவாதிகள் அதை தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இது எதார்த்தத்தி ற்கு முற்றிலும் முரணான ஒன்று. ஒரு மொழியின் மூலமோ, ஒரு மதத்தின் மூலமோ இந்தியாவை கட்ட மைக்க முடியாது. பன்முகத்தன்மையை பராமரிப்ப தன் மூலமே இந்திய ஒற்றுமையையும், ஒருமைப் பாட்டையும் பாதுகாக்க முடியும். ஆனால் அந்த ஒற்று மையைக் கெடுக்கவே பாஜகவினர் முயல்கின்றனர். 

ஒற்றுமை இழையை  அறுக்க முயலும் கூட்டம்

தமிழகத்திற்கும், காசிக்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு. அதை இவர்கள் சொல்லித்தான் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.  காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் 1813 ஆம் ஆண்டுமுதல் இயங்கி வருகிறது. இந்தச் சத்திரத் தில் சாதி, மத வித்தியாசமின்றி தங்குமிடமும், மூன்று வேளை உணவு வசதியும் செய்யப்பட்டு வந்துள்ளது. காசி விஸ்வநாதர் கோவிலில் நடை சாத்தப்படுவ தற்கு முன்பு நகரத்தார் சத்திரத்திலிருந்து அனுப்பப் படும் பால், பழம் போன்றவற்றை கொண்டுதான் பூஜை நடைபெறுகிறது. காசி விசாலாட்சி கோவிலையும் நக ரத்தார்களே நிர்வகிக்கின்றனர். ஆனால் பாஜகவின் நோக்கம் இந்த தொடர்பைச் சொல்வதல்ல, மாறாக, மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்த செய்யப் படும் முயற்சியேயாகும். பாரத ரத்னா விருது பெற்ற பிஸ்மில்லா கான் அவர்களது மாமா அலிபக்ஸ் காசி  விஸ்வநாதர் கோவிலில் இசைக் கலைஞராக பணி யாற்றியுள்ளார். பின்னர் பிஸ்மில்லா கானும், காசி விஸ்வநாதர் கோவிலில் பணியாற்றியுள்ளார். அவரது திருப்பள்ளி எழுச்சி இசையைக் கேட்டே காசி விஸ்வ நாதர் கண்விழித்துள்ளார். இந்த ஒற்றுமை இழையை அறுக்க இந்துத்துவா கூட்டம் முயல்கிறது. உடன்கட்டை ஏறுதல், விதவை திருமணத்தை மறுத்தல் போன்ற பழமைவாதச் சிந்தனைகளையே ஆர்எஸ்எஸ் கூட்டம் மனுவின் பெயரால் உயிரூட்டி வளர்க்க முயல்கிறது. 

உலகின் அதிக விதவைகள் கொண்ட நாடு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்க ளவை உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் தனிநபர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதில் இந்தியாவில் 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக் கெடுப்பின் படி 5 கோடி விதவைகள் இருக்கிறார்கள். உலகிலேயே அதிக விதவைகளை கொண்ட நாடு இந்தி யாதான். இந்துத்துவாவாதிகள் புனிதம் என கொண்டா டும் கங்கை நதிக்கரை காசியிலும், யமுனை நதிக்கரை மதுராவிலும் வாழும் விதவைகளின் துயரம் மிகக் கொடுமையானது. அவர்களது கண்ணீர் கங்கை, யமுனை நதியில் ஓடும் நீரை விட அடர்த்தியானது.  இவர்களின் சனாதன தடைகள்தான் விதவைகளுக்கு மறுவாழ்வு கிடைக்கவிடாமல் செய்கிறது. சாவை நோக்கி காத்தி ருக்கும் நிலைக்கு அவர்களைத் தள்ளுகிறது.  பிருந்தாவனத்தில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற் பட்ட விதவைகள் இருந்துள்ளனர். இந்த விதவைக ளைப் பற்றி பாஜக என்றைக்காவது வாய் திறந்து பேசி யதுண்டா, ஆனால் இதைப்பற்றி வாட்டர் என்ற பெயரில் இயக்குநர் தீபா மேத்தா - திரைப்படம் எடுக்க முயன்ற போது, அடித்து நொறுக்கி அதை தடுத்தார்கள்.  இந்திராகாந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 40லிருந்து 64 வயதிற்கு உட்பட்ட விதவைகளுக்கு மாதம் 200ரூபாய்தான் ஓய்வூதிய மாக வழங்கப்பட்டது. அந்த ஓய்வூதியத்தை பெறுவதி லும் கூட ஏராளமான தடைகள். விதவைகளுக்கு மனநல ஆலோசனை உள்ளிட்ட மருத்துவ வசதி வழங்க வேண் டும். பல்வேறு ஆலோசனைகளை திருச்சி சிவா தன்னு டைய தீர்மானத்தில் கொண்டு வந்தார். விதவைக ளுக்கான ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் வலியுறுத்தினர். ஆனால் அந்த தீர்மானத்தை இந்த அரசு ஏற்கவில்லை.

இரு கண்ணில் ஒன்றை குத்தி...

மதத்தின் பெயரால் பெண்களுக்கு எதிரான கொடு மைகளை நியாயப்படுத்துவதும் மட்டுமல்ல, அதை  நிலைநிறுத்தவும் முயலும் கூட்டம் தான் பாஜக. மகாகவி பாரதியார் காசிக்கு வந்ததை பெருமையா கக் கூறும் இவர்கள் பெண்ணுரிமைக்கு ஆதரவாக அவர் எழுப்பிய ஓங்காரமிக்க குரலை காதில் வாங்கவே  இல்லை. கண்ணில் இரண்டில் ஒன்றை குத்தி நல்ல காட்சி கெடுத்திடலாமோ? என பெண்ணுரிமை பாடிய பாரதியை இவர்களுக்குத் தெரியாது. செப்பு மொழி பதி னெட்டுடையாள் எனினும் ஒன்றுடையாள் என ஒற்றுமை கீதம் பாடிய பாரதியையும் இவர்களுக்குத் தெரியாது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று  பாடிய திருவள்ளுவரையும் இவர்களுக்குத் தெரியாது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடிய கணியன் பூங்குன்றனாரையும் இவர்களுக்குத் தெரியாது. இவர்க ளுக்குத் தெரிந்ததெல்லாம் கார்ப்பரேட் முதலாளிக ளுக்கு கரசேவை செய்வது எப்படி என்பதுதான். அதை மறைக்க மக்களை மதத்தின் அடிப்படையில் மோத விடுவது என்பதுதான். மொத்தத்தில் இவர்களது நோக்கம் தமிழை வளர்ப்பதல்ல, தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றி விட முடியுமா என்ற பல்வேறு சர்க்கஸ் வேலைகளில் ஈடுபடுகின்றனர். அதில் ஒன்றுதான் இந்த காசி தமிழ்ச் சங்கமம்.
 


 

 

 

;