articles

img

பாலஸ்தீனர்கள் மீது திட்டமிட்டு நோய் பரப்பும் இஸ்ரேல்

பாலஸ்தீன மக்களின் மீது குரூரமான பாசிச தாக்குதலை பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இம்மாத துவக்கத்தில் ஜூலை 3 அன்று இஸ்ரேல் ராணுவம் ஜெனின் என்ற பாலஸ்தீன நகரிலும் அகதிகள் முகாமிலும் வான்  மற்றும் தரை வழித் தாக்குதலை தொடுத்தது. கடந்த 20 வருடங்க ளாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடுத்த தாக்குதல்களிலேயே இது மிகப்பெரிய தாக்குதல் என கூறப்படுகிறது. போர் விமானங்கள், டாங்குகள், 1000-க்கும் மேற்பட்ட ராணு வத்தினர் என மிகப்பெரிய அளவில் அணிவகுத்து தொடர்ந்து 18 மணிநேரம் தாக்கியுள்ளனர். இதில் 8-க்கும் மேற்பட்ட பாலஸ்தீ னர்கள் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் உயிருக்கு போராடினர். உலக வரலாற்றிலேயே மிகக் கொடூரமான நிலநடுக்கம் கடந்த பிப்ரவரி மாதம் சிரியாவில் நிகழ்ந்தது. அந்த நில நடுக்கத்திற்கு பின்னும் கூட 13 முறை அந்நாட்டின் மீது இஸ்ரேல்  தாக்குதல் நடத்தியது.

(ஜெனின் பகுதியை தாக்குவதற்கு முன்பும் சிரியாவில் தாக்குதல் நடத்தியது). மேலும் இந்த ஆண்டில் இதுவரை 19 முறை சிரியாவை தாக்கியுள்ளது. இந்த செய்திகள் இஸ்ரேல் பிரதமர் எத்தகைய ஒரு மிருகத்தனமான நடைமுறையை கையாள்கிறார் என்பதை உணர்த்துகின்றன. இதேபோல் இன்னும் குரூர மனநிலையோடு ஜூலை 27 அன்று பாலஸ்தீன மக்களின் விவசாய நிலங்களில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளில் சிமெண்ட் கலவையை ஊற்றி விவசா யத்தை அழித்தது. அதற்கு மறுதினமே தொற்று நோய்களை பரப்பும் நோக்கத்தோடு உயிரியல் போரைப் போல பாலஸ்தீன மக்கள் வாழும் வீடுகளில் சாக்கடைக் கழிவு நீரை இஸ்ரேல் ராணுவம் பீய்ச்சி அடித்தது. பாலஸ்தீனர்களை சுட்டுக்கொலை செய்வது, அவர்களின் விவ சாயத்தை அழிப்பது மற்றும் திட்டமிட்டு தொற்று நோய்களை உருவாக்கி பரவச் செய்வது என அமெரிக்காவின் கைக்கூலியான இஸ்ரேல் அரசு கொடூரமாக செயல்பட்டு வருகிறது. உலக அமைதியை நிலைநாட்ட போகிறேன் என்று கூறிக் கொண்டே போர்களை தூண்டி ஆயுத விற்பனை செய்துவரும் அமெரிக்கா, அதன் நட்பு வட்டத்தில் உள்ள வல்லரசு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் என யாரும் இஸ்ரேல் இத்தகைய கொடூர மான - வெளிப்படையான போர்க் குற்றங்களை வாய்திறந்து கண்டிக்கவில்லை.