articles

img

மோடி ஆட்சியில் மண்ணைக் கவ்வும் பருத்தித் தொழில்

உலகில் மித வெப்ப மண்டல நாடுகளான அமெரிக்கா,  ஆப்பிரிக்கா,   ஐரோப்பா,  ஆசியா,   ஆஸ்திரேலியா,   சீனா,   இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் விளைகிறது பருத்தி. 

ரம்பரியப் பயிராகவும்    விளங்குகிறது. உலகில் இன்றைக்கு இந்தியாவில் தான் அதிக அளவிலான பருத்தி விளைகிறது.   இந்திய பருத்தி தரமான பருத்தி என கூறப் படுகிறது. இந்தியாவில் பல கோடி பேர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பருத்தியும் அதைச் சார்ந்த தொழிலும்; சுருண்டு விட்டது என்றே சொல்ல முடியும். அந்த அளவிற்கு இன்றைக்கு பருத்தி தொழிலில் நெருக்கடி நிலவுகிறது.  உலகில்  தொழிற்புரட்சி திருப்புமுனையை ஏற்படுத்தியது. நாட்டின் பொருளா தாரம் வேளாண்மையை சார்ந்து இருந்த நிலை மாறி தொழில் உற்பத்திகளின் மூலம் கிடைக்கின்ற வருவாய் பொருளாதாரத்தை மேம்படுத்தியது. கோடிக்க ணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பையும் நூற்பாலைகள் வழங்கின.தொழில் புரட்சியில் பஞ்சாலைகள் முக்கியப் பங்காற்றின என்றால் அது மிகை யல்ல. உலகில் 125 நாடுகளுக்கு இந்திய ஜவுளிகள் ஏற்றுமதியாகின்றன.

வெளிநாடுகளில் உள்ள வியாபாரிகளுக்கும் பெரு நிறுவனங்களுக்கும்,  அங்குள்ள வங்கிகளில் 2 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. அரபு நாடு களில்  வங்கிகளில் வட்டியில்லாத கடன் வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் உள்ள வங்கிகள் 8 சதவீத வட்டியில் கடன் வழங்குகின்றன. பருத்தியை வாங்கி விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு கடன் அடைக்கத்தான் கடன் பெற்றவர்கள் நினைப்பார்கள். பஞ்சை பதுக்குகிற வேலையை செய்ய மாட்டார்கள் என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இந்த பிரச்சனைக்குக் காரணம் விவசாயிகளிடம் வாங்கிய பஞ்சை பதுக்கி வைப்பது தான் என ஒன்றிய அரசு சொல்கிறது.  திருப்பூர்,  கோவை,   சேலம் போன்ற மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ள இந்த நெருக்கடி ஒன்றிய பாஜக அரசுக்கு பெரும் தலைவலியை தந்துள்ளது.  இதனையடுத்து பாஜகவினர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வரவழைத்து இந்த பருத்தித் தொழிலில் உள்ள நெருக்கடி குறித்து விசைத்தறி மற்றும் மில் உரி மையாளர்களை அழைத்து சிறப்புக் கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்மலா சீதாராமன் பேசும் போது தமிழ்நாட்டில் நீங்கள் பருத்தியை கொள்முதல் செய்து பதுக்கவில்லையா என்று கேள்வி எழுப்பினார். எங்களால் அந்த பதுக்கலை வெளிக்கொண்டு வர முடியும். ஆனால் அப்படி செய்யவில்லை. இந்த பிரச்சனைக்கு நீங்களே ஒரு தீர்வு சொல்லுங்கள் என்று ஆலோசனை கேட்பது போல மிரட்டல் விடுத்தார்.  

குறைந்த பட்ச ஆதார விலை 

அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து பருத்தி நீக்கப்பட்டதால் இப்போது பருத்தியை யார் வேண்டுமானாலும் பதுக்கி வைக்க முடியும் என்ற நிலை உள்ளது.  1997ஆம் ஆண்டு 1,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 2001ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை பருத்தி விவசாயிகள் கிட்டத்தட்ட 16 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆந்திரா, மகாராஷ்டிரா,   கர்நாடகா குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் 86 ஆயிரம் பேர் . பருத்தி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்த நிலையில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்திய பருத்திக் கழகம் சாதாரண  விவசாயிகளிடம் கொள்முதல் செய்த பருத்தியை மில்களுக்கு விற்காமல் நேரடியாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக மில் அதிபர்கள் கூறுகிறார்கள்.  அப்படி பதுக்கி வைத்துள்ள பஞ்சை கைப்பற்ற வேண்டும் என்று கூட மில் உரிமையாளர்களால் கோரிக்கை வைக்க முடியவில்லை. பொதுவாக தொழில் நடத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு ஒன்றிய அரசை நம்பியிருக்க வேண்டிய சூழல் இருப்பதால் சிலர் வாய் திறக்க மறுக்கிறார்கள். ஒன்றிய மோடி அரசோ இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வை தருவதற்கு பதிலாக மிரட்டலில் ஈடுபடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளது. பெரும் போராட்டத்திற்கு பிறகு இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளதால் தான்  விவசாயிகளுக்கு தேவையான ஆதார விலை கிடைக்கிறது என்று மோடி புகழ் பாடுகிற வேலையை ஒன்றிய அமைச்சர்கள் செய்து வருகிறார்கள். 

2021-22ஆம் ஆண்டு ஓரளவு நீளமுள்ள பருத்திக்கு குவிண்டாலுக்கு ரூ.5726ம் அதிக நீளமுள்ள பருத்திக்கு குவிண்டாலுக்கு ரூ.6025ம் கொடுக்கப் பட்டுள்ளது. 2020-21 ஆண்டைக்காட்டிலும் அதாவது கடந்த 5 ஆண்டுகளில் விவ சாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூ.211ம், 200ம் தான்  கூடுதலாக ஒன்றிய அரசு கொடுத்துள்ளது.  பருத்தி தட்டுப்பாடு, நூல் தட்டுப்பாடு,   உலகச் சந்தையில் பருத்தியை வாங்க ஆள் இல்லாத நிலை என தொடருகிற இந்த மந்த நிலையை மாற்ற மோடி அரசு என்ன முயற்சி மேற்கொண்டுள்ளது என்பதை வெளிப்படையாக சொல்ல மறுக்கி றது. இதனால் பருத்தித் தொழிலில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவு நிலை இந்திய பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்பதை மறுக்க இயலாது. 

கட்டமைப்பு சீர்குலைவு

ஒரு காலத்தில் மகாராஷ்டிரா,   கோவை  போன்ற பகுதிகளில் ஏராளமான மில்கள் இருந்தன. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும்,   மறை முகமாகவும் வேலை வாய்ப்பை பெற்றனர். மில் தொழிலாளர் நலனுக்கான சட்டங்களுக்காக  செங்கொடி இயக்கங்களின் தொழிற்சங்கங்கள் போராடின. தொழிற்சங்கங்கள் வெறும் தொழிலாளர் பிரச்சனைகளை மட்டும் பேசவில்லை. தொழில் நெருக்கடிகளுக்கான தீர்வுகளையும் கூறின. நாடாளுமன்றங்களில், சட்டமன்றங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்ற இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதிகளின் ஆலோசனைகளின் பேரில் முதலாளிகள்,  தொழிலாளர்கள் தொழில், முதலீடு, லாபம், போனஸ் ஆகிய கட்ட மைப்பு மூலம் பல லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்தனர். இந்த கட்டுமானத்தை சிதைக்கும் முயற்சியில் மதவெறியர்கள் மதக்கல வரங்களை உருவாக்குவது, தொழிலாளர்களிடையே மதவெறியைப் புகுத்தி பிளவுபடுத்துவது போன்ற நடவடிக்கையாலும், இன்றைக்கு தொழிற்சங்கங்களின் பங்களிப்பு புறக்கணிக்கப்பட்ட நிலையில் தொழில் மந்தம் நிலவுகிறது. நிரந்தரத் தொழிலாளர்களும் இல்லை,  நிரந்தர முதலாளிகளும் இல்லை என்ற நிலை பஞ்சா லைத்தொழிலில் நீடிக்கிறது. இதன் காரணமாகவே அரசும் தொழில் நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்க முடியாத கையாலாகாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

கையறு  அரசுகள் 

குறைந்த பட்ச ஆதார விலை தேவைக்காக பருத்தி விவசாயிகளிடம் பருத்தியை கொள்முதல் செய்த ஒன்றிய மாநில அரசுகள் தற்போது அதிக பருத்தி நல்ல விலை போகும் போது பருத்தியை கொள்முதல் செய்ய முன்வரவில்லை. விவசாயி நஷ்டப் படும் போது மட்டும் தலையிடுகிற அரசு விவசாயிக்கு லாபம் கிடைக்கும் போது பெரு வியாபாரிகளையும், முதலாளிகளையும் பருத்தியை கொள்முதல் செய்ய அனு மதித்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிறது. இன்றைக்கு ஒரு கிலோ பருத்தி ரூ.120க்கு விலை போகிறது. பருத்தி அதிகம் உற்பத்தி செய்யும் விளை நிலம் உள்ள பகுதி யில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்கவில்லை. இதன் காரணமாக மில் அதி பர்களும், ஜின்னிங் மில் அதிபர்களும் தங்களது வியாபாரிகளையும் ஏஜெண்டுக ளையும் அனுப்பி பருத்தியை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்கிறார்கள். அரசு பருத்தி விவசாயிகளை கண்காணிக்கும் நடவடிக்கையில் கூட ஈடுபட மறுக்கிறது. அப்படி கண்காணிக்கும் போது தான் பதுக்கலை தடுக்க முடியும் என அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.  ஆனால் அரசிடமும் கூட்டுறவு ஆலைகள் இருக்கின்றன. அந்த ஆலைகளுக்குக் கூட தனியார் மற்றும் இடைத்தரகர்களிடம் தான் பஞ்சை வாங்க வேண்டி உள்ளது.   வடநாட்டில் விளையும் பருத்தி ஓரளவு தரம் மிக்கதாக உள்ளது. 25.மி.மீ முதல் 35 மி.மீ வரை நீளும் தன்மை கொண்டது. தமிழ்நாட்டில் விளையும் பருத்தி குறைந்தது 30 மி.மீ நீளும் தன்மை கொண்டது. முதல் தரமானதும் கூட. நமது நாட்டில் 30 சதவீத பருத்தி உற்பத்தியே நடைபெறுகிறது. வியாபாரிகள் முன் கூட்டியே விவசாயிகளிடம் முன்பணம் கொடுத்து கொள்முதல் செய்கிற வழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பருத்தி முதல்தரமானது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதன் ஆயுள் குறைவு. பற்றாக்குறைக்காக வேறு வழியில்லாமல் இறக்குமதியை வியாபாரிகள் நாடுகிறார்கள். 

மூலப்பொருட்கள் தட்டுப்பாடு 

30 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் மயம், தாராளமயம்,  உலகமயக் கொள்கைகள் இந்தியாவில்  அமலாக்கப்பட்ட போது இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்தனர். எதிர்க்கட்சியாக இருந்த பாஜக அன்றைக்கு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தது. அதன் விளைவு இன்றைக்கு இந்தியத் தொழில்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. பாரம்பரியத் தொழில்கள் காணாமல் போய் விட்டன. உலகமயத்தின் விளைவுகளை இன்றைக்கு நாம் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு உதாரணம் இந்த பஞ்சாலைத் தொழில்.   தொழிலாளர் தங்கள் பிரச்சனைக்காக போராடும் போதெல்லாம் இவர்க ளுக்கு வேறு வேலையில்லை என்று ஏளனம் செய்த இந்திய பஞ்சாலை முதலாளி கள் இந்திய அரசு கடைப்பிடித்த  உலகமயத்தில் சிக்கி சின்னாபின்னாமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே பஞ்சாலைத் தொழிலில் ஏற்பட்டிருக்கிற நெருக்கடி காட்டுகிறது.  வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் மில் அதிபர்கள் கூறும் போது, இன்றைக்கு காட்டன் 95 ஆயிரத்திற்கு விலை போகிறது. பருத்தி இறக்குமதிக்கு வரி போட்டது மிகப்பெரிய தவறு. பருத்தி விளைச்சல் நன்றாக இருக்கும் போதே 30 லட்சம் பேல் தான் இறக்குமதி செய்வோம். வருடம் முழுவதும் 70 லட்சம் பேல் ஏற்றுமதி செய்கி றோம். 70 லட்சம் பேல் ஏற்றுமதி செய்யும் போது 30 லட்சம் பேல் இறக்குமதி என்றால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்கப் போவதில்லை. இதற்கு  ஒன்றிய அரசு வரி போட்டது. இந்த வரியை நீக்க வேண்டும் என்று நிதி அமைச்சரைச் சந்தித்து பேசி னோம். தமிழ்நாடு ஜவுளித்துறை அமைச்சர் காந்தியும் உடனிருந்த போது தான் நாங்கள் சொன்னோம்.

வரி நீக்கம் குறித்த செய்தி பட்ஜெட்டில் வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. உத்தரப்பிரதேச தேர்தலுக்கு பிறகாவது நீக்கு வார்களா? என்று எதிர்பார்த்தோம். அப்போதும் நீக்கவில்லை. பஞ்சாலைகள் தான் இந்தியாவில் அதிக பட்ச முதலீடாகும். லட்சக்கணக்கான  புலம் பெயர் தொழிலா ளர்களும் நமது மாநில தொழிலாளர்களும் உள்ளனர். இந்த தொழில் நவீன மய மாக்கப்பட்டு வருகிற சூழலில் மூலப்பொருட்கள் கிடைக்கவில்லை என்பது ஏற்கக் கூடியது இல்லை. இந்த ஆண்டு 106 லட்சம் பேல் வரவேண்டியது, ஆனால் 62 லட்சம் பேல் தான் வந்திருக்கிறது. யாரிடமும் எந்த புள்ளிவிவரமும் இல்லை.  கிளன்கோர், ஓலம்  கம்பெனிகள் உலகம் முழுவதும் உள்ள தானியங்களை யும், பொருட்களையும் அதாவது பருத்தி, கோதுமை,சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பலவற்றையும் வாங்கக்கூடிய நிறுவனங்கள்.  இந்த நிறுவனங்கள் காட்டன் கார்ப்ப ரேசன் ஆப் இந்தியாவிடமிருந்து ரூ.45  ஆயிரத்திற்கு வாங்கி மில்களுக்கு ரூ. 1 லட்சம் வரை விற்கிறார்கள். இந்த தவறுகளை சீர் செய்ய வேண்டும். எனவே பதுக்கலை அனுமதிக்கக்கூடாது என்பது தான் எங்களது நோக்கம். பெரிய 5 நிறு வனங்களிடம் மட்டும் 30 முதல் 35லட்சம் பேல் பருத்தி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். 

நாடு முழுவதும் பற்றாக்குறை

கடந்த 2020-21 அக்டோபர் முதல்  2021-22 ஏப்ரல் 30 வரையான கணக் கீட்டின்படி குறைவான பருத்தி இறக்குமதியாகியுள்ளது. பஞ்சாப், அரியானா, அப்பர் ராஜஸ்தான், லோயர் ராஜஸ்தான் ஆகிய வடக்குப் பகுதியிலிருந்து 2020 ஆம் ஆண்டில் 63 லட்சத்து 81ஆயிரம்  பேல்களில் தற்போது 44 லட்சத்து 7 ஆயிரத்து 300 ஆக குறைந்துள்ளது.  குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மத்தியப் பகுதியிலிருந்து 2020ஆம் ஆண்டில் ஒரு கோடியே  80, 25,000 பேல்களிலிருந்து தற்போது ஒரு கோடியே  42 லட்சத்து 64 ஆயிரமாக  ஆக குறைந்துள்ளது. தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்களில் 2020ஆம் ஆண்டு 87 லட்சத்து 35,000 பேல்களில் தற்போது  55 லட்சத்து, 6 ஆயிரத்து 600 ஆக குறைந்துள்ளது.  அதாவது நாடு முழுவதும் 3 கோடியே 36 லட்சத்து 36 ஆயிரம் பருத்தி பேல்களி லிருந்து தற்போது 2 கோடியே 46 லட்சத்து 15 ஆயிரத்து 600 பேல்கள் ஆக குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 90 லட்சம் பேல் பற்றாக்குறை. இந்த பற்றாக்குறையை எப்படி ஈடுகட்டுவது என்ற பிரச்சனை உள்ளது.  உயர் ரக பருத்தி மார்க்கெட்டுக்கு வரவில்லை. பல மில்கள் பருத்தி கிடைக்கா மல் எப்போது இழுத்து மூடப்படும் என்ற நிலை உள்ளது. பருத்தியின் விலை உயர்வு நீடித்தால் இன்னும் 2 மாதங்களில் மில்களை மூடும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்று மில் அதிபர்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.  

ரூ.200 கோடி இழப்பு

பருத்தி அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்த காரணத்தால் நாங்கள் எவ்வளவு பருத்தி இருக்கிறது என்ற இருப்பு குறித்து தகவல் கொடுப் போம். அந்த பட்டியலில் இருந்து பருத்தி எடுக்கப்பட்டதால் யார் வேண்டுமானா லும், எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் என்ற நிலை தற்போது உள்ளது. நாங்கள் விவசாயிகளுக்கு புறம்பாக பேசவில்லை. விவசாயி களிடம் இருந்த பருத்தி வெளியே வந்துவிட்டது. தற்போது ஜின்னிங் பேக்டரிகளில் இருக்கிறது. பெரிய பெரிய வியாபாரிகளிடமும், அந்நிய நிறுவனங்களிடமும் தான்  பருத்தி பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பருத்தியை இந்திய பருத்திக் கழகம் நேரடியாக விற்கிறது. அந்த பணம் இந்திய அரசின் கஜானாவிற்கு செல்கிறது என்றால் எங்களுக்கு சந்தோசம். ஆனால் அப்படிச் செல்லவில்லை.  விவசாயிகள் குறைந்த பட்ச ஆதார விலை கோரும் போது தான் இந்திய பருத்திக்கழகம் உள்ளே வரும். விவசாயிகளிடம் இருந்து குறைந்த பட்ச விலையை கொடுத்து வாங்குவார்கள். அந்த குறைந்த பட்ச ஆதார விலையை யும் விட அதிகமாக விற்கும் போது பருத்திக் கழகம்  தலையிடாது. தமிழ்நாட்டுக்கு ஒரு வருடத்திற்கு 120 முதல் 140 லட்சம் பேல் தேவை இருக்கிறது. ஆனால் தட்டுப்பாடு உள்ளது. இதனை ஈடுகட்ட முடியாத நிலை உள்ளது. ஒரு நாளைக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்படுகிறது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாய மும் ஏற்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுக்கு இங்கிருந்து பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பின்னலாடையில் ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டித்தருகிற மாவட்டமாக திருப்பூர் உள்ளது. 

50 சதவீத உற்பத்தி

தமிழ்நாட்டில் உள்ள விசைத்தறியாளர்கள் நூல் விலையேற்றம் காரணமாக  15 நாட்களில் 50 சதவீத உற்பத்தியை மட்டுமே  எட்ட முடிந்துள்ளது.  அகமதாபாத்தில் உள்ள  2.5 லட்சம் விசைத்தறிகள் 15 நாட்களில் 50 சதவீத உற்பத்தியை நிறுத்தியுள் னன. இதன் மூலம் ஏற்றுமதி பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக கூறப்படுகிறது. 

குஜராத் நெருக்கடி

மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தைப் பொறுத்தவரை நூல் ஏற்றுமதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் உள்ளூர் மார்க்கெட் மிகவும் மோசமாக உள்ளது. உலகச்சந்தையில் பருத்தி நூலுக்கான கிராக்கி குறைவாக இருப்பதால் உள்ளூரில் பருத்தி நூல் கொள்முதல் செய்ய யாரும் முன்வர வில்லை என்ற நிலை உள்ளது. அதற்கு காரணம் இந்த ஆண்டு தரமான பருத்தி விளையவில்லை என்பது தான். குஜராத்தில் ஒரு கண்டி பருத்தி தற்போது ரூ.95 ஆயிரத்திற்கு விலை போகிறது. குஜராத்தில் உள்ள நூல் மில்களில் 30 முதல் 40 சதவீத நூல் உற்பத்தியே நடைபெறுகிறது.  மேலும் பெரும்பாலான மில்களில் வாரத்தில் 2 நாட்கள்  விடுமுறையும் விடப்படுகிறது. இதனால் குஜராத்தில் உள்ள மில் உரிமையாளர்கள் ஒரு கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை நஷ்டமடைகிற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.  மோடி அரசு இறக்குமதி பருத்திக்கான 11 சதவீத வரியை ரத்து செய்துள்ளதால் தான் பருத்தி விலை உயருகிறது என்றும் விவ சாயிகளுக்கு நல்ல ஆதார விலை கிடைக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. பருத்தி விலையேற்றத்தையொட்டி நூல் விலையையும் ஏற்றி லாபம் பார்ப்பதாக ஒன்றிய அரசின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இதில் எந்த உண்மையும் இல்லை.  இது தொடர்பாக தனபால் கூறும் போது, ஒரு கண்டி என்பது 355.616 கிலோ  பஞ்சு ஆகும். அதே போல 2 பேல் சேர்ந்தது ஒரு கண்டி. ஒரு கண்டியின் விலை ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் வரை விற்ற நிலையில் கடந்த சில மாதங்களாக ஏற்றம் கண்டு ரூ.1 லட்சம் வரை உயர்ந்து உள்ளது.  மான் சாண்டோவின் பி.டி. பருத்தியை கைவிட்டு இந்திய பாரம்பரியப் பருத்தியை உற்பத்தி செய்த நிலையில் இன்றைக்கு பருத்தி தட்டுப்பாடு நிலவுவதாக சொல்லப்படுகிறது. இயற்கை தட்ப வெப்ப நிலை மாற்றம் காரணமாகவும் பருத்தி சாகுபடியில் ஒரு பின்ன டைவு இருந்தாலும் உற்பத்தியாகும் பருத்தி பதுக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. 

அதில் உண்மையில்லை.  ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் குவிண்டல் உற்பத்தி யான நிலை மாறி தற்போது 5 ஆயிரம் குவிண்டால் கூட பருத்தி சாகுபடி ஆவ தில்லை. பருத்தி எடுப்பு காலத்தில் மழையும், விளைச்சல் காலத்தில் வெயிலும் குறைந்த சாகுபடிக்கு காரணமாக உள்ளது என சொல்லப்படுகிறது. இந்திய பருத்தி கொள்முதலில் ஒரு கண்டி ரூ.1 லட்சத்திற்கு விலை என்றால் இறக்குமதி செய்யும் பருத்தி ரூ.1லட்சத்து 18 ஆயிரம் விலை போகிறது. நமது பருத்தியில் ஈரப்பதம் 10 சதவீதம் என்றால் இறக்குமதி செய்யப்படும் பருத்தியின் ஈரப்பதம் 5 சதவீதம் ஆகும். நமது பருத்தியில் 4 முதல் 5 சதவீத கழிவு என்றால் இறக்குமதி பருத்தியில் 1 சதவீதம் மட்டுமே. பருத்தி விலை ஏற்றம்,  நூல் விலை ஏற்றம்,   உலகச்சந்தையில் பருத்திக்கு போதிய கிராக்கி இல்லை என்பதால் பருத்தி கொள்முதலுக்கு ஆர்டர் கொடுத்தவர்களும்,  நூலுக்கு ஆர்டர் கொடுத்தவர்களும் கூட தற்போது ஆர்டரை கேன்சல் செய்கிற அளவிற்கு ஒரு மந்த நிலை உருவாகி உள்ளது. ஒன்றிய பாஜக அரசு இந்த பிரச்சனையில் ஒரு முறிப்பை ஏற்படுத்த முடியாமல் கையறு நிலையில் உள்ளதால் பல கோடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.  

ஒரு கோடி வரை ஜி.எஸ்.டி. 

6 லட்சம் விசைத்தறி ஆலைகளை நம்பி உள்ள 30 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு யூனிட்டை நம்பி 20 ஆயிரம் குடும்பங்கள்  வாழ் கின்றன. மாதம் தோறும் ஒரு கோடி வரை ஜி.எஸ்.டி. செலுத்தப்படுவதாகவும், ரூ. 10 கோடி மதிப்பிலான பருத்தி துணி நூலுக்கு ஜி.எஸ்.டியாக ரூ.50 லட்சம் கட்டுவதா கவும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.  பருத்தியை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று இறக்குமதி செய்யும் பருத்திக்கு 11 சதவீத வரியை ஒன்றிய பாஜக அரசு விதித்தது. இதனை எதிர்த்து  ஜவுளி தொழிலில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து போராடினர். 2022-23ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் பாஜக  அரசு இந்த 11 சதவீத வரியை ரத்து செய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் அதை ரத்து செய்யவில்லை. இதனால் பருத்தி தொழிலில் ஈடுபட்டவர்கள் வேலைநிறுத்தத் திற்கு செல்ல தயாரானதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் 11 சதவீத வரியை ரத்து செய்துள்ளது மோடி அரசு என்றார் தனபால்.  இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு நூல் ஏற்றுமதி செய்வதை தற்காலி கமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு ஆயத்த ஆடை ஏற்று மதியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ஆண்டு 20 ( 1பில்லியன் =100 கோடி) பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு நிர்ணயித்து கடுமையாக உழைத்த நிலை யில் மூலப்பொருளான பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததன் காரணமாக பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 7 மாதங்களாக காட்டன் விலை இரட்டிப்பாகி உள்ளது. இந்த நெருக்கடியை தீர்க்க ஒன்றிய ஜவுளித்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 

மூடுவிழா காணும் நூற்பாலைகள்

2014ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள நூற்பாலைகள் மூடுவிழா கண்டு வருகின்றன. சுமார் 383 நூற்பாலைகள் இயங்காமல் உள்ளன. இதில் 184 தமிழகத்தில் உள்ளன.  குஜராத்தில் 70 சதவீதம் இயங்காத ஆலைகள் உள்ளன.  மூடப்பட்ட ஆலைகளின் எண்ணிக்கையில் குஜராத் இரண்டாவது இடத்தில் உள்ளது. அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி ஆஃப் இந்தியா (அசோசெம்) நடத்திய ஆய்வில், இயங்காத ஆலைகளில் தமிழ்நாடு 54 சத வீதத்தை கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து குஜராத் (16 சதவீதம்), மகா ராஷ்டிரா (10 சதவீதம்), பஞ்சாப் (4 சதவீதம்)  மற்றும் உத்தரப் பிரதேசம் (3 சதவீதம்).  இதில் செயல்படாத ஆலைகளின் பெரும்பகுதி கூட்டுறவு மற்றும் அரசுத் துறை யில் (நேஷனல் டெக்ஸ்டைல் கம்பெனி) உள்ளவை. அவை வீழ்ச்சியடைந்ததாக தனி யார் ஆலைகள் கூறினாலும், தனியாருக்கு ஏற்படும் இழப்பும் கொஞ்சமல்ல.

படுத்துறங்கும் பருத்தி  சாகுபடி இயக்கம்

அதிமுக ஆட்சி காலத்தில்  மாநில நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தனது பட்ஜெட் உரையில், “மாநிலத்தில் பருத்தி உற்பத்தி போதுமானதாக இல்லாததால், லட்சியமான தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கம், முதற்கட்டமாக ரூ.50 கோடியில் தொடங்கப்படும்” என்றார்.  2014-15 ஆம் ஆண்டுக்குள் 3.70 லட்சம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்ய உத்தேசிக்கப்பட்டது. இந்த சாகுபடி  இயக்கத்தின் மூலம் 5 ஆண்டுகளில் 6 லட்சம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யவும் உத்தேசிக்கப்பட்டது. தற்போது 3.34 லட்சம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்படுவதாக அரசு புள்ளி விவரம் கூறுகிறது. இதன் மூலம் 4 லட்சம் பேல் பஞ்சு உற்பத்தி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு கூறுகிறது.   ஆனால் மாநில அளவில் 1948 நூற்பாலைகளுக்கு 10 லட்சம்பேல் பஞ்சு தேவைப்படுகிறது. இப்போது வரை பருத்தி சாகுபடியிலும் அரசு நிர்ணயித்த இலக்கு மற்றும் பருத்தி சாகுபடி இயக்கம் நடைபெறவில்லை என்பதே விவசாயிகளின் கருத்தாக உள்ளது. 

பருத்தித் தொழிலில் ஒரு அசாதாரணமான சூழல் நிலவுகிறது. கடந்த மே 16,18 ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் நூல் விலை உயர்வுக்கு எதிராகவும், பஞ்சு விலை உயர்வுக்கு எதிராகவும் வேலைநிறுத்தம் நடை பெற்றது. இதன் காரணமாக பல கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த வேலை நிறுத்தம் தேவையற்றது என்று பாஜகவினர்  பேசினர். உண்மை தான் ஒன்றிய பாஜக அரசும்,மாநில திமுக அரசும் இந்த பிரச்சனையில் உரிய நேரத்தில் தலை யிட்டிருந்தால் இந்த வேலைநிறுத்தம் தேவைப்பட்டிருக்காது தான். ஆனால் நெருக்கடியை சமாளிக்க இரண்டு அரசுகள் தரப்பிலும் உருப்படியான திட்டம் இல்லை என்பது வேதனையிலும் வேதனை.  நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்றால் தரமான பருத்தி விதை களை ஒன்றிய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு கொடுத்து மகசூலை பெருக்க திட்டமிட வேண்டும். பருத்தி உலகளாவிய பொருளாதார பயிர் என்பதால் கூடுதல் அக்கறை செலுத்துவதன் மூலம் நாட்டிற்கு தேவையான அந்நியச் செலாவணி கிடைக்கும். தேவைப்பட்ட கடன், மானியம் கொடுத்து பருத்தியில் லாபம் பெறலாம் என்று விவசாயிகளை ஊக்கப்படுத்தி உற்பத்தியை பெருக்கினால் மட்டுமே நூல் விலையை கட்டுப்படுத்த முடியும். 

இலமு,  திண்டுக்கல்