articles

img

சனாதன வழக்கும் உயர் நீதிமன்ற தீர்ப்பும் - அ.அன்வர் உசேன்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலை ஞர்கள் சங்கம் நடத்திய மாநாட்டில் சனா தனம் ஒழிப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதும் அமைச்சர் சேகர் பாபு அந்த மேடையில் இருந்ததும் பின்னர் இதே பிரச்சனையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் பேட்டியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு வழி வகுத்தன. இவர்கள் மூவரின் நடவடிக்கைகளும் அரசி யலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி அவர்க ளது பதவி பறிக்கப்பட வேண்டும் என சங் பரிவாரக் கும்பல்களால் வழக்கு தொடுக்கப்பட்டது.  இதுதொடர்பான வழக்கில் மார்ச் 6 அன்று  தீர்ப்பு அளித்த உயர்நீதிமன்ற நீதிபதி அனிதாசுமந்த், குற்றம்சாட்டப்பட்டவர்களின் பதவி பறிப்பை நிராக ரித்தாலும்  தனது தீர்ப்பில் முன்வைத்துள்ள பல கருத்து கள் ஆழமான கவலையை தோற்றுவிக்கின்றன.

சனாதனம் – தெற்கும் வடக்கும்

சனாதனம் கோட்பாடு குறித்து இந்தியாவின் தென்  பகுதி மக்களும் வடபகுதி மக்களும் மாறுபட்ட சிந்த னைகளை கொண்டுள்ளனர். அய்யா வைகுண்டர், வள்ளலார், பெரியார், நாராயண குரு, அய்யன் காளி, பசவண்ணா, ஆந்திராவின் வீரேசலிங்கம் ஆகியோ ரின் வலுவான சமூக சீர்திருத்த செயல்பாடுகள் சாதிய வேறுபாடுகளுக்கு எதிராகவும் பெண் கல்வி குறித்தும் ஆழமான தாக்கத்தை உருவாக்கின. எனவே தென் பகுதி மக்கள் சனாதனம் என்பது சாதிய வேறுபாடுக ளை முன்வைக்கும் கோட்பாடு என உணர்வு பெற்றனர். ஆனால் வட இந்தியா இத்தகைய சீர்திருத்த இயக்கங்க ளை கொண்டிருக்கவில்லை. சனாதனம் என்பது இந்து  மத வாழ்வியல் கோட்பாடு எனவும் சனாதனத்தை விமர்சிப்பது இந்து மதத்தை விமர்சிப்பதற்கு சமம்  எனவும் வட பகுதியில் மக்களிடயே கருத்து உருவாக் கப்பட்டுள்ளது. எனவேதான் சனாதனம் குறித்த விமர்ச னத்தை இந்தியா அணிக்கு எதிராக பயன்படுத்த பா.ஜ.க. முனைந்தது. அதே காரணத்துக்காக நாடாளு மன்ற தேர்தல்களின் பின்னணியில் சனாதனம் குறித்த விவாதங்கள் பா.ஜ.க.வுக்கு ஒரு ஆயுதமாக பயன் படுவதற்கு அனுமதிக்கக் கூடாது என இந்தியா அணி முடிவெடுத்ததும் பொருத்தமான ஒன்றே!  இந்நிலை யில் நீதிமன்ற தீர்ப்பு சனாதனம் குறித்து முரண்பட்ட கருத்துகள் இருப்பதை அங்கீகரிக்கவில்லை. மாறாக ஒரு குறிப்பிட்ட கருத்தியலைச் சார்ந்து தீர்ப்பு அமைந் துள்ளது. இது நியாயமானதா எனும் கேள்வியை எழுப்புகிறது.

பனாரஸ் இந்து  பல்கலைக்கழகமும் குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி மையமும்

சனாதனம் எனும் கோட்பாடை தி.மு.க. தலைவர் கள் ஆழமாக கற்கவில்லை என தீர்ப்பு குற்றம்சாட்டு கிறது. சனாதனம் எனும் கோட்பாடை விளக்குவதற்கு தி.மு.க. தரப்பு பின்னாட்களில் பனாரஸ் இந்து பல்க லைக்கழகம் என அறியப்பட்ட சென்ட்ரல் இந்து கல்லூரி 1916ல் வெளியிட்ட ஒரு நூலையும் “மனுவின் சட்ட விதிகள்” எனும் நூலையும் பரவலாக மேற்கோள் காட்டினர். இது போதாது என்று நீதிபதி அனிதா சுமந்த் தீர்ப்பு கூறுகிறது.  அப்படியானால் தீர்ப்பு எந்த ஆவணத்தை  அடிப்படையாகக் கொள்கிறது?  நீதிமன்றம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க “குப்பு சாமி சாஸ்திரி ஆராய்ச்சி மையம்” எனும் அமைப்பு  சனாதனம் பற்றி அளித்த விளக்கங்களையும் மதிப்பீடு களையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தி.மு.க. தலைவர்களின் வாதங்களை கேள்விக்குள்ளாக்கு கிறது. பனாரஸ் பல்கலைக்கழகத்தைவிட குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி மையம் எந்த விதத்தில் சனாதனம் கோட்பாடுகள் ஆய்வில் சிறந்து விளங்குகிறது என்பதை நீதிமன்றம் விளக்கவில்லை.  பனாரஸ் பல்கலைக் கழகம் அன்னி பெசண்ட் அம்மையாரின் ஆசியோடு 1916ம் ஆண்டு உருவாக் கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் சிருஷ்டி கர்த்தா மதன் மோகன் மாளவியா. மேலும் ராமேஸ் வர் சிங், பிரபு நாராயண் சிங் ஆகிய மன்னர்கள் நிதி உதவி செய்தனர். இவர்கள் அனைவரும் சனாதன கருத்துகளின் ஆழமான ஆதரவாளர்கள். பிரிக்ஸ் அமைப்பு அங்கீகரித்துள்ள 12 பல்கலைக்கழகங்களில் ஒன்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகம். இத்தகைய எந்த அம்சமும் 1945ல் துவங்கப்பட்ட குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி மையத்துக்கு இருப்பதாக தெரிய வில்லை. சனாதனம் குறித்து நீதிமன்றம் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் ஆவணத்தைவிட குப்பு சாமி சாஸ்திரி ஆராய்ச்சி மையத்தின் கூற்றுகளை ஏற்றுக்கொள்வது விந்தையாக உள்ளது.

சனாதனம்-வர்ணாசிரமம்  என்ன தொடர்பு?

சனாதனம் குறித்த விவாதங்களில் அடிப்படையான அம்சம் வர்ணாசிரமம் என்பது சனாதனத்தின் ஒரு பகுதியா இல்லையா என்பதுதான்! இதனை தீர்ப்பு தெளிவாக விளக்கவில்லை. சனாதனம் என்பது இந்து மதத்தின் வாழ்வியல் கோட்பாடுகள் என தீர்ப்பு திரும்பத் திரும்பக் கூறுகிறது.  வர்ணாசிரம தர்மம்தான் சனாதன தர்மம் எனும் கருத்தை தீர்ப்பு நிராகரிக்கிறது. மிக முக்கிய பிரச்ச னையே வர்ணாசிரமம் முன்வைக்கும் வர்ண பேதங் கள்தான்! இந்த பேதங்கள் இந்து மதத்துக்குள் இருப்ப தால்தான் எதிர்ப்புகள் உருவாகின்றன. இத்தகைய பேதங்கள் உள்ளன என்பதை பனாரஸ் இந்து பல்க லைக்கழகத்தின் ஆவணம் மட்டுமல்ல; பல ஆவ ணங்கள் இதனை தெளிவாக முன்வைக்கின்றன.  இதை எளிமையாகப் புரிந்து கொள்ள, வேத காலத்தின் நிலையைப்பற்றிப் பேச வேண்டும். ஆனால் நீதிபதி அனிதா சுமந்த் தீர்ப்பு அதற்குள் செல்ல வில்லை.

வேதங்களுக்கும் ஸ்மிருதிகளுக்கும் இடைப்பட்ட காலம்!

ஸ்ருதிகள் எனப்படும் வேதங்களுக்கும் ஸ்மிருதி கள் எனப்படும் சட்ட கோட்பாடுகளுக்கும் உள்ள பிரிக்க முடியாத உறவை ஆய்வு செய்ய தீர்ப்பு தவறுகிறது. வேதங்கள் வாழ்வியல் கோட்பாடுகளை முன்வைத்தன எனில், அந்த வாழ்வியல் கோட்பாடுகளுக்கு சட்ட வரை வுகளை ஸ்மிருதிகள் உருவாக்கின. இந்த சட்ட வரைவு கள்தான் மிகத்தெளிவாக வர்ணாசிரம கோட்பாடு களை வரையறுத்தன.  முதல் வேதமான ரிக் வேதத்துக்கும் ஸ்மிருதிக ளின் காலத்துக்கும் இடையே உள்ள சில நூற்றாண்டு கள் கொண்ட காலகட்டம் மிக முக்கியமானது. இந்த இடைவெளியில்தான் மேய்ச்சல் சமூகம் விவசாய சமூகமாக மாறியது. உபரி உற்பத்தி தோன்றியது. அந்த உபரியை அபகரிக்க ஒரு கூட்டம் உருவானது. அதனை இன்னொரு பிரிவு எதிர்த்தது. எதிர்ப்புக் குரல் இரு வழிகளில் ஒடுக்கப்பட வேண்டும்; ஒரு வழி அரசு அதிகாரம் மூலம் வன்முறையை பயன்படுத்துவது. இன்னொரு வழி உபரி உற்பத்தியை ஒரு சிறு கூட்டம் அபகரிப்பதை நியாயம்தான் என ஏற்றுக்கொள்ள வைக்கும் சித்தாந்தத்தையும் சட்ட வழிமுறைகளை யும் உருவாக்குவது.

ஸ்மிருதிகள் இந்த சட்ட வழிமுறை களை உருவாக்கின. அவையே வர்ணாசிரம கோட் பாடுகள். வர்ணாசிரமம் வெறுமனே ஒரு பிரிவை ஒடுக்க உருவாக்கப்பட்ட சமூக கோட்பாடு மட்டுமல்ல; உபரி மதிப்பை அபகரிக்கவும் அதனை எதிர்க்காமல் இருக்க வும் உருவாக்கப்பட்ட அரசியல் பொருளாதார கோட் பாடும் ஆகும். எனவே வர்ணாசிரமத்துக்கு சமூகக் காரணி மட்டுமல்ல; பொருளாதாரக் காரணியும் உண்டு.  ஒவ்வொரு சமூகத்திலும் உபரி மதிப்பு உருவாவ தும் அதனைப் பறிக்கும் கூட்டம் இன்னொரு பிரிவை ஒடுக்குவதும் தவிர்க்க இயலாத அரசியல் பொருளா தார பரிணாம நகர்வுகள். இந்திய சமூகத்தின் தனித்து வம் என்பது இந்த ஒடுக்குமுறை வர்ணாசிரம வடி வத்தில் உருவானது என்பது தான்.  வேதங்கள் சாதிய வேற்றுமையை முன்வைக்கின் றன என்பதை அங்கீகரிக்கும் தீர்ப்பு, சாதிகள் பிறப்பின் அடிப்படையில் அல்ல; மாறாக ஒருவரின் தொழிலின் அடிப்படையில்தான் வரையறுக்கப்படுகிறது என சொல்கிறது. வாதத்துக்காக இதனை உண்மை என ஏற்றுக்கொண்டாலும் தொழில் அடிப்படையில் பேதம் கற்பிப்பது நியாயமா எனும் கேள்வி எழுகிறது. ஒரு தொழிலை செய்பவர் இன்னொரு தொழிலை செய்ய அனுமதிக்கப்பட்டாரா எனும் கேள்வியும் முன் வருகிறது. உதாரணத்துக்கு நிலத்தில் உழைக்கும் சூத்திர உழைப்பாளி போர்த் தொழில் செய்து சத்திரிய னாக மாற அனுமதிக்கப்பட்டரா? அல்லது வேதங்கள் கற்று பிராமணராக மாற அனுமதிக்கப்பட்டாரா? இதற்கான எந்த ஆதாரமும் இல்லை. 

இட ஒதுக்கீட்டை  தீர்ப்பு நிராகரிக்கிறதா?

“பல்வேறு சாதிகளை சேர்ந்தவர்களிடையே உள்ள மூர்க்கத்தனம் என்பது அவர்களுக்கு தரப்படும் சலுகை களால்தான் விளைகிறது” எனக்கூறும் தீர்ப்பு இதற்கு எப்படி வர்ணாசிரமம் காரணமாக இருக்க முடியும் எனவும் கேட்கிறது. வர்ணாசிரமம் சனாத னத்தின் ஒரு பகுதியா இல்லையா என்பதை தெளிவாக கூறுவதை தவிர்க்கும் தீர்ப்பு, பின்னர் வர்ணாசிர மத்துக்கும் சாதிய மோதல்களுக்கும் தொடர்பு இல்லை எனக்கூறுகிறது. அதாவது வர்ணாசிரமத்தை நியாயப் படுத்துகிறது. அதைவிட ஆபத்தானது என்னவெனில் சாதிய மோதல்களுக்கு அவர்களுக்கு தரப்படும் சலுகைகள்தான் காரணம் எனவும் சொல்கிறது. தீர்ப்பு எந்த சலுகை அல்லது நன்மையை குறிக்கிறது? தெளிவாக  விளக்கவில்லை. எனவே இட ஒதுக்கீடு என்றுதான் முடிவுக்கு வரவேண்டியுள்ளது. சாதிய ஒடுக்குமுறை  பல நூற்றாண்டுகளாக இருந்த காரணத் தால்தான் இடஒதுக்கீடு கோரிக்கை எழுந்தது. இட ஒதுக்கீடு தவறு எனும் கருத்தியலை சார்ந்து தீர்ப்பு  அமைந்துள்ளதோ எனக் கருத இடமுள்ளது. இதே  போல ஆரிய இனம் குறித்தும்  சிந்து சமவெளி நாகரிகம் குறித்தும் தீர்ப்பின் தொனி ஒரு குறிப்பிட்ட கருத்தி யலைச் சார்ந்து உள்ளது போல தெரிகிறது. இத்தகைய கருத்துகள் ஏற்கத்தக்கவை அல்ல!