2005 இல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலமாக கிராமப்புற கட்டமைப்பு வசதிகள், சிறு, குறு விவசாயிகளுக்கான பயன்பாடுகளை விரிவு படுத்துவது, தலித் மக்களுக்கு அரசால் கொடுக்கப் பட்ட நிலங்களுக்கான நீர் வரத்துகளை உத்தரவா தப்படுத்துவது. கால்வாய்கள், ஏரி, குளம் வாய்க்கால் மராமத்து செய்து நீர் நிலைகளைப் பாதுகாப்பது போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது. இதில் 53 சதம் பெண் பயனாளிகள் ஆவர். கிராமப் புற விவசாய கூலித் தொழிலாளி பெண்கள் சுய சார்பு டன் வாழ்வதற்கான வழியை ஓரளவுக்கு இந்தத் திட்டம் உத்தரவாதப்படுத்தி உள்ளது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் வேலை என்பதை கிராமப்புற மக்களுக்கான உரிமையாக முதலில் கூறிய சட்டம் இதுதான்.
நிதி ஒதுக்கீடு கடும் வெட்டு
ரியல் எஸ்டேட், பன்னாட்டுக் கம்பெனிகள், உள்நாட்டு கம்பெனிகள் ,அரசின் மெகா திட்டங்கள், குறிப்பாக சாலை விரிவாக்கம், பெட்ரோலிய கெமிக்கல் மண்டலங்களாக உருவாக்குவது, போன்ற பல்வேறு திட்டங்களின் பெயரால் நிலங்களிலிருந்து விவசாயிகள் அப்புறப்படுத்தப்படுவதனால், விவ சாயத்தோடு தொடர்புடைய ஏராளமான விவசாயத் தொழிலாளிகளும் வெளியேற்றக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. விவசாயத்தில் இருந்து வெளி யேற்றப்பட்ட கிராமப்புற விவசாயத் தொழிலாளிகள் கட்டுமானம், சுமைப் பணி, கடைகளில் வேலை செய்வது, கல் குவாரிகளில் பணியாற்றுவது, செங்கல் சூளைகளில் பணியாற்றுவது, அரிசி ஆலைகளில், சிறு கடைகளில், சிறு வியாபாரம், சுய தொழில் எனக் கிடைத்த வேலைக்கு குறைந்த சம்பளத்திற்கு உடல் உழைப்பை கடுமையாக செலுத்தி வருமா னம் ஈட்டி வருகின்றனர். இப்படிப்பட்ட கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு பயன் தரக்கூடிய 100 நாள் வேலை திட்டத்தைத்தான், இந்த நாட்டு மக்களின் வாழ்வியலையே புரிந்து கொள்ளாத சிலர் பேசுவதும் விமர்சனம் செய்வதும் வேடிக்கையான ஒன்றாக உள்ளது. இந்தியாவில் மொத்த விவசாயத் தொழிலாளர்கள் ஒரு 1, 31,48,575 பேர் வேலை அட்டை பெற்றவர்கள் மட்டும் 91,42, 546 பயனாளிகளாகும். ஒன்றிய அரசு 2021-22 ஆண்டிற்கு 98 ஆயிரம் கோடியை ஒதுக்கி யது. 2022-2023 ஆண்டுக்கு 73 ஆயிரம் கோடி ஒதுக்கி யது. 2023-2024-க்கு வெறும் 60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. நிதி ஒதுக்கீடு வீழ்ச்சி கார ணமாக அனைவருக்கும் வேலை கொடுப்பதற்கான உத்தரவாதத்தை செய்ய முடியாது.
100 நாளும் வேலை தருக!
குறைந்த பட்சம் ஒரு கிராமப்புற குடும்பம் நூறு நாள் வேலை செய்தால் ஆண்டுக்கு 29,300 ரூபாய் பெற வேண்டும்.ஆனால் நூறு நாளும் வேலை கொடுக்காத மோடி அரசு நிதி ஒதுக்கீட்டை குறைத்து வேலை நாட்களை குறைக்கிறது. தனக்கு வேலை கிடைக்கும் என்று ஏக்கத்தோடு மக்களை வைத்துள் ளது. குறைந்தபட்சம் 25 லிருந்து அதிகபட்சம் 75 நாட்கள் வரை மட்டுமே வேலை கிடைத்துள்ளது. தமிழ்நாட்டிற் கான உரிய நிதி ஒதுக்கீட்டை முறையாக ஒன்றிய அரசு எந்த துறைகளிலும் செய்யாமல் தமிழகத்தினு டைய வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. 100 நாள் வேலை திட்ட பயன்பாட்டை முழுமை யாக கண்காணித்து அனைத்து வேலை அட்டைக ளுக்கும் 100 நாள் வேலை கொடுப்பதை உத்தர வாதப்படுத்த வேண்டிய நிதியை ஒதுக்குவது ஒன்றிய அரசின் கடமையாகும். தமிழ்நாடு அரசு சமீபத்தில் 2023 ஜூலை மாதம் மட்டும் ஒன்றிய அரசுக்கு ஜிஎஸ்டி ரூ.8, 500 கோடி செலுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இது ஒருவரிடம் மாதத்தில் ரூ.1,500 வரி வசூலித்ததாக அர்த்தம். உத்தரப்பிரதேச மாநிலம் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.7,000 கோடி மட்டும் கட்டியுள்ளது. இதன்படி, அங்கு வாழும் ஒரு நபரிடம் ரூ.318 மட்டுமே வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைவிட கூடுதல் மக்கள்தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் கூடுதல் ஜிஎஸ்டியை பெறாமலும், பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலம் என்பதால் கூடுதல் சலுகைகளை வழங்கியும் மோடி அரசு மாற்றான் தாய் மனப்பான்மையோடு, பாஜக ஆளாத மாநிலங்களை வஞ்சித்து வருகிறது. தமிழகத்தி லிருந்து கூடுதலான ஜிஎஸ்டியை பெற்றாலும் கூட தமிழக மக்களுக்கான அரசு நலத் திட்டங்களை அறிவிப்பதில் மோடி அரசு மெத்தனமாகவே உள்ளது. ஆனால் பெரு முதலாளிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வரிச் சலுகையை வாரி வழங்குகிறது. தமிழக அரசு நகர் புறத்திற்கும் 100 நாள் வேலைத்திட் டத்தை விரிவாக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களி டையே வலுப்பெற்ற நிலையில் முதற் கட்டமாக ரூ.100 கோடி நகர்ப்புற வேலைத் திட்டத்தை விரிவாக்குவ தற்காக ஒதுக்கீடு செய்துள்ளது. சில நகராட்சிகளில் ஓரிரு வார்டுகளில் நடைமுறைப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதை இன்னும் கூடுதலாக தமிழக அரசு கண்காணித்து அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகளிலும் நிதி பகிர்ந்து அளிக்கப்பட்டு வேலை கொடுக்கப்படுவதை உத்த ரவாதப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. தமிழக அரசு, பெண்கள் தலைமை தாங்கக்கூடிய குடும்பங்களுக்கும் 50 நாள் கூடுதலாக வேலை நாட்களை வழங்குவதாக அறிவித்ததும் பாராட்டத் தக்கதாகும். இது பஞ்சாயத்துகளில் நடைமுறைப் படுத்தப்படுகிறதா என்பதை கண்காணித்திட வேண்டும்.
தோழர் கஸ்தூரி நினைவாக...
தமிழ்நாட்டில் மாதர் சங்கத்தை உருவாக்கிய ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவராக இருந்த தோழர் கஸ்தூரி அவர்களது நினைவு தினமான செப்டம்பர் 12 (இன்று) 100 நாள் வேலையை கிராமப்புறங்களில் முழு மையாக அமல்படுத்தி அனைத்து பயனாளிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும், நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண் டும் என்ற கோரிக்கையோடு தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி மனு அளிக்கப்படுகிறது.
கட்டுரையாளர் : மாநிலத் தலைவர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்