சங் பரிவாரத்தின் கருத்தாக்கத்தில் அயோத்தி எந்த அளவுக்கு முக்கியத்துவமும் புனிதமானதும் என கருதப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த ‘புனிதமான’ அயோத்தியிலேயே முறைகேடு நடத்தியுள்ளார்கள் என்று தணிக்கை ஆணையம் சுட்டிக்காட்டுகிறது எனில் மற்ற திட்டங்களில் கூறத்தேவையில்லை.
பா.ஜ.க. அரசாங்கம் பல திட்டங்களுக்கு புதிய பெயர்கள் சூட்டியது போல சுற்றுலாவுக்கு “சுவதேஷ் தர்ஷண் திட்டம்” எனப் பெயரிட்டது. தணிக்கை ஆணையத்தின் அறிக்கை இத்திட்டத்தை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ஒரு துறை எப்படி திறமையின்றியும் தனது அரசு வகுத்த விதிகளை தானே மீறுவது என்பதற்கும் தான்தோன்றித் தனமாக செயல்படுகிறது என்பதற்கும் ஒன்றிய சுற்றுலாத் துறை ஒரு மோசமான உதாரணம் என புரிதல் ஏற்படும் அளவுக்கு தணிக்கை அறிக்கை அமைந்துள்ளது. சுற்றுலா அமைச்சகம் 15 சுற்றுலா பாதைகளை உருவாக்கியது. அவற்றில் கீழ்கண்ட ஆன்மீகம் தொடர்பான பாதைகளும் அடங்கும்: கிருஷ்ணா சுற்றுப்பாதை; புத்தா சுற்றுப்பாதை; ஆன்மீக சுற்றுப்பாதை; ராமாயணா சுற்றுப்பாதை; தீர்த்தங்கர் சுற்றுப்பாதை; சுஃபி சுற்றுப்பாதை. இவற்றில் சுஃபி சுற்றுப்பாதை மட்டும் அமலாக்கப் படவில்லை. காரணம் அறிய முடியாத ஒன்றல்ல!
தணிக்கை அறிக்கையின் இடித்துரைகள்
சுற்றுலாத்துறை என்பது இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய வேலை வாய்ப்புகளை உரு வாக்கவல்லது என நிதி அயோக் இனம் கண்டுள்ளது. அத்தகைய துறையில் அமைச்சகம் எந்த அளவுக்கு திறமையாகவும் ஈடுபாட்டுடனும் செயல்பட வேண்டும் என்பதைக் கூறத்தேவையில்லை. ஆனால் மோடி அரசின் கீழ் இந்த அமைச்சகம் எப்படி செயல் பட்டது? இந்த அமைச்சகத்தின் திறமையின்மையை தணிக்கை ஆணையம் கீழ்கண்டவாறு பட்டியலிடு கிறது:
- திட்டக்குழு (பின்னர் நிதி ஆயோக்) இந்த திட்டங் களுக்கு ஆட்சேபணை தெரிவித்தது. எனினும் ஆட்சேபணைகள் உதாசீனப்படுத்தப்பட்டன.
- எத்தகைய விரிவான ஆய்வும் திட்ட அறிக்கை களும் இல்லாமலேயே இந்த திட்டங்கள் அமலாக்கப்பட்டன.
- இந்த திட்டங்களுக்கான செலவுகள் 2016-17 ஆண்டி லேயே ரூ.4000 கோடியை தாண்டிவிட்டது. 1000 கோடிக்கு மேல் எனில் அமைச்சரவையின் அனுமதி பெற வேண்டும். அத்தகைய அனுமதி இல்லாமலேயே திட்டங்கள் அமலாக்கப்பட்டன.
- 15 சுற்றுலா பாதைகளில் 14க்கு எவ்வித திட்ட அறிக்கைகளும் இல்லை. தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ திட்டங்களும் ஒருங்கிணைப்பும் உருவாக்கப்படவில்லை. இதன் விளைவாக நூற்றுக்கணக்கான மாறுதல் கள் ஏற்படுத்தப்பட்டன. கால விரயமும் வீண் செலவும் ஏற்பட்டது.
- கிராமப்புறம் இந்த சுற்றுலா பாதைகளில் சேர்க்கப்படவில்லை. மொத்த செலவில் கிராமப்புற சுற்றுலாவுக்கு வெறும் 30.84 கோடி மட்டுமே; அதாவது 0.76 சதவீதம் மட்டுமே செலவு செய்யப்பட்டது.
- 76 திட்டங்களுக்காக 243 மாவட்டங்களில் 910 இடங்கள்/6898 பணிகள் தேர்வு செய்யப்பட்டன. இவ்வளவு பரவலான பணிகளை ஒருங்கிணைக்க எவ்வித ஏற்பாடுகளும் இல்லை. எனவே ஏராளமான குழப்பங்கள்! l
- 76 திட்டங்களில் ஒன்று கூட குறித்த காலத்தில் பூர்த்தி செய்யப்படவில்லை. சில திட்டங்கள் 6 ஆண்டுகள் காலதாமதம் ஏற்படுவதற்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் காரணமாக இருந்தது.
- l நிலங்கள் கையகப்படுத்தப்பட்டனவா என்பதை உத்தரவாதம் செய்யாமலே நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்பட்டன. எனவே பின்னர் நட்டமும் குழப்பங்களும் உருவாகின. l இத்திட்டங்களை கண்காணிக்க தேசிய வழி காட்டும் குழு உருவாக்கப்பட்டது. ஆனால் 7 ஆண்டுகளில் 29 கூட்டங்களுக்கு பதிலாக வெறும் 6 கூட்டங்கள்தான் நடத்தப்பட்டன. எனவே பரிசீலனை அல்லது குறைகளை போதுமான அளவுக்கு சரி செய்ய இயலவில்லை.
- எர்ன்ஸ்ட் & யங் எனும் நிறுவனத்தை திட்ட ஆலோசக ராக நியமித்ததில் டெண்டர் கோரப்படவில்லை. இந்த நிறுவனம் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கவில்லை. எனவே ரூ.2.39 கோடி நட்டம்.
- சுற்றுலா திட்டங்கள் குறித்து வெளிநாட்டவர் உட்பட மக்களிடையே பரவலான பிரச்சாரமும் புரிதலும் உருவாக்க ரூ.546 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டது. ஆனால் இதில் ரூ.10.70 லட்சம் அதாவது 0.02சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மீதிப் பணம் எங்கே எனத் தெரியவில்லை.
- இந்த துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பல ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை அமைச்சகம் உதாசீனப்படுத்தியது.
- 7 ஆண்டுகளுக்கு பின்னரும் எந்த நோக்கத்துக் காக சுற்றுலா சுற்றுப்பாதைகள் திட்டமிடப்பட்ட னவோ அவை ஓரளவு கூட நிறைவேறவில்லை.
அயோத்யாவில் முறைகேடு
சங் பரிவாரத்தின் கருத்தாக்கத்தில் அயோத்தி எந்த அளவுக்கு முக்கியத்துவமும் புனிதமானதும் என கருதப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த ‘புனிதமான’ அயோத்தியிலேயே முறைகேடு நடத்தியுள்ளார்கள் என்று தணிக்கை ஆணையம் சுட்டிக்காட்டுகிறது எனில் மற்ற திட்டங்களில் கூறத்தேவையில்லை.
ஆணையம் சுட்டிக்காட்டும் முறைகேடுகள்
திட்டம் பகுதி முறைகேடு/வீண் செலவு
தொகை ரூபாயில்
ராமாயணா சுற்றுப்பாதை அயோத்யா மேம்பாடு 8.22 கோடி
கடலோர சுற்றுப்பாதை கோவா 6.58 கோடி
கடலோர சுற்றுப்பாதை பாண்டிச்சேரி 5.26 கோடி
சூழலியல் சுற்றுப்பாதை உத்தர்கண்ட் 5.14 கோடி
இமாலாயா சுற்றுப்பாதை ஜம்மு/காஷ்மீர் 3.33 கோடி
பழங்குடி சுற்றுப்பாதை தெலுங்கானா 1.00 கோடி
இமாலாயா சுற்றுப்பாதை இமாச்சலப் பிரதேசம் 0.97 கோடி
இது 76 திட்டங்களில் வெறும் 7 மட்டுமே! இவற்றில் இந்த அளவுக்கு முறைகேடு எனில் அனைத்து 76 திட்டங்களிலும் எந்த அளவுக்கு முறைகேடுகள் இருக்கும் என்பதை நாம் ஊகித்து கொள்ளலாம்.
அதீத தாமதம்
ஒரு திட்டம் செயல்படுத்தப்படுவதில் தாமத மானால் அது பல பின்விளைவுகளை உருவாக்குகிறது. முக்கியமாக செலவுகள் அதிகரிக்கின்றன. மக்களின் வரிப்பணம் வீணாகிறது. மக்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகள் தாமதமாகின்றன. இதனால் மக்கள் பாதிப்படைகின்றனர். என்வேதான் அரசு திட்டங்களில் காலதாமதம் தவிர்க்கப்படுவது அவசியமாகிறது. ஆனால் சுற்றுலா துறையில் தாமதம் என்பது அதீத எல்லைக்கு சென்றுள்ளது.
பணிகள் ஒப்படைப்பதில் 36 மாதங்களுக்கு மேல் ஏற்பட்ட காலதாமதம்
சுற்றுப்பாதை மாநிலம் காலதாமதம்/மாதங்கள்
சூழலியல் சுற்றுப்பாதை உத்தர்கண்ட் 38
கடலோர சுற்றுப்பாதை பாண்டிச்சேரி 42
பழங்குடி சுற்றுப்பாதை சத்தீஸ்கர் 49
பாரம்பரிய சுற்றுப்பாதை குஜராத் 50
புத்தா சுற்றுப்பாதை மத்தியப் பிரதேசம் 53
இமாலயா சுற்றுப்பாதை ஜம்மு/காஷ்மீர் 58
மேற்கண்ட திட்டங்களில் சத்தீஸ்கர் தவிர மற்றவை அனைத்தும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் என்பது கவனிக்கத்தக்கது. தனது அரசு அதிதிறமை கொண்டது என பிரதமர் கூறிக்கொள்கிறார். ஆனால் அவரின் கீழ் இயங்கும் சுற்றுலாத்துறை திறமை யின்மைக்கு ‘மாடலாக’ உள்ளது என தணிக்கை ஆணையத்தின் விமர்சனங்கள் வெளிப்படுத்து கின்றன. நிர்வாகம் மற்றும் திறமை குறித்து பிரதமருக்கு சிறிதேனும் புரிதலும் கவலையும் இருக்குமானால் சுற்றுலா அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அது நடக்காது.
கல்லில் நார் உரிக்க முடியுமா?