articles

img

விவசாயம் லாபகரமாக மாற அரசின் முதலீடு அவசியம்

சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை அடிப்படை உரிமையாக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆக.1 அன்று தென்சென்னை மாவட்டத்தில், மாநில சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. வர்க்க, வெகுஜன அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள ‘சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம்’ (மெஸ்) இந்த மாநாட்டை நடத்துகிறது. இதனையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில் ‘விவசாய துறையும் வேலைவாய்ப்பு உருவாக்கமும்’ எனும் தலைப்பில் விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.சண்முகம் ஆற்றிய உரையின் சுருக்கம்:

ஒவ்வொரு மனிதனுக் கும் உயிர் வாழ்கிற உரி மையை அரசியல் சாச னம் வழங்கி உள்ளது. சுயமரியாதை யுடன் வாழ கவுரவமான வேலை, ஊதி யம் வேண்டும். வேலை வழங்க வேண்டியது அரசின் கடமை. அதைப்பற்றி ஆட்சியாளர்கள் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. 1990ம் ஆண்டிற்குப் பிறகு தாராளமயக் கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு பிறகும் கூட இடதுசாரிகளின் வலுவான தலையீட்டால், கிராமப்புற மக்களுக்கு வேலை உத்தரவாத சட்டம் (100 நாள் வேலை) கொண்டு வர முடிந்துள்ளது. இந்தியாவில் வேலை அடிப்படை உரிமை இல்லை. ஆனால், இந்த நடவடிக்கையின் வாயிலாக வேலை சட்டப்படியான உரிமை என்று மாற்றப்பட்டது. கிராமப்புறத்தில் உள்ள கோடிக்கணக் கான மக்களுக்கு வேலை தரும் இந்த திட்டத்திற்கான நிதியை குறைத்து வருகின்ற னர். இதில் பணியாற்றும் தொழிலாளர்களை அவதூறு செய்கின்றனர். இந்த திட்டத்தை நாசமாக்கும் அரசின் நடவடிக்கைக்கு ஊடகங்களும், அரசியல் கட்சி தலை வர்களில் ஒரு பகுதியினரும் துணை போகின்றனர். இந்த திட்டத்தால் விவசாய வேலைக்கு ஆள்கிடைக்காமல், விவசாயம் நலிந்து போவதாக ஒரு சிறு பகுதியினர் பிரச்சாரம் செய்கின்றனர்.

100 நாள் வேலைத் திட்டம் என்று இருந்தா லும், ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 42 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதனால் எப்படி விவசாய வேலைகள் பாதிக்கும்?  நிதி ஒதுக்கீட்டை ரூ.60 ஆயிரம் கோடியாக குறைத்து விட்டதால், இனி ஒரு குடும்பத்திற்கு 15-20 நாட்களுக்கே வேலை கிடைக்கும் நிலை உள்ளது. எனவே, சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி, மாநிலத்தின் குறைந்தபட்ச கூலியான 294 ரூபாயை வழங்க வலியுறுத்துவோம்.

விவசாயத்தின்  இன்றைய கதி என்ன?

விவசாயம் செய்வோரில் 40 விழுக்காட்டி னர். வேறுவாய்ப்பு கிடைத்தால் விவசா யத்தில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளனர். இதற்கு காரணம் என்ன? விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை. அரசு லாபகரமான விலை தீர்மானிக்கவில்லை. எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்  படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த  பாஜக, அந்த பரிந்துரைகளில் ஒன்றைக்கூட அமல்படுத்தவில்லை. இந்தியாவில் 800க்கும் மேற்பட்ட விளை பொருட்கள் உற்பத்தியாகின்றன. அதில், 23 வகையான பொருட்களுக்கு மட்டுமே அரசு  விலையை தீர்மானிக்கிறது. விலை தீர்மா னிக்கிற அனைத்து பொருட்களையும் அரசு  கொள்முதல் செய்வதில்லை. நெல், கோதுமை போன்ற சிலவற்றை மட்டுமே கொள்முதல் செய்கிறது. இதனால் அரசு விலையை நிர்ணயித்தாலும், வியாபாரிகள் கொடுப்பதுதான் விலையாக உள்ளது. தமிழகத்தில் அனைத்து பகுதியிலும் நெல் கொள்முதல் செய்வதில்லை. மேற்கு, தென்  மாவட்டங்களில் நெல் கொள்முதல் முறை யாக நடைபெறுவதில்லை.

விவசாயிகளில் 90 விழுக்காட்டினர் சிறு, குறு விவசாயிகளாக உள்ள தால், பொருட்களை சேமித்து, விலை உயரும்போது விற்க முடியாது. எனவே, கிடைத்த விலைக்கு விற்கும் சூழல் உள்ளது. இதனால்தான், குறைந்தபட்ச விலை தீர்மானிப்பதோடு, கொள் முதல் செய்யும் வகையில் மத்திய சட்டத்தை இயற்ற தில்லி விவசாயிகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட ஒன்றிய அரசு, ஒன்றரை வருடமாகியும் நிறைவேற்றாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் தற்கொலை நடந்து கொண்டே இருக்கிறது. இதனை மறைக்க தற்கொலை கணக்கெடுப்பையே அரசு நிறுத்திவிட்டது. விலை, கொள்முதல் உத்தரவாதம் இல்லாமல் விவசாயம் லாபகர மாக இயங்க முடியாது.

72 லட்சம் ஏக்கர் தரிசு நிலம்

ஆண்டுதோறும் சராசரியாக ஒரு லட்சம் ஏக்கர் நல்ல விவசாய நிலங்கள், தொழிற்சாலை, கல்லூரி என வேறு பணி களுக்கு மாற்றப்படுகிறது. இதை நம்பி  இருந்த விவசாயிகள், விவசாய தொழிலா ளர்களின் குடும்பங்களின் நிலை என்ன? இதுகுறித்த எந்த ஆய்வும் இல்லை. தமிழ கத்தில் அரசு, தனியாரிடம் 72 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. நிலம் இருந்தும், ஆட்சி யாளர்களிடம் நிலப்பயன்பாட்டுக் கொள்கை இல்லை. நிலத்தை விருப்பத்திற்கு பயன் படுத்தி வருவதால், பிற மாநிலங்களில் இருந்து அரிசி இறக்குமதி செய்யும் நிலை உள்ளது. எனவே, நகர்ப்புற மக்களும் விவ சாயம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். நெல் விவசாயம் முழுக்க முழுக்க எந்திர மயமாக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதியில் நெல் விதைப்பது, நாற்று பறிப்பது, நடுவது, களை எடுப்பது, அறுவடை செய்வது, தூற்று வது, வைக்கோல் கட்டுவது, மூட்டை, வைக்கோலை ஏற்றுவது என அனைத்துப் பணிகளும் எந்திரங்கள் மூலம் செய்யப்படு கிறது. மனித உழைப்பே பெரும்பாலும் பயன்  படுத்தப்படுவதில்லை. இளந் தலைமுறை யினர் இடம்பெயர்ந்து, வேலைத்தேடி வெளி மாநிலம், மாவட்டங்களுக்கு சென்று விட்ட னர். எனவேதான், டெல்டாவில் உள்ள வீடு களில் வயதானவர்கள் மட்டுமே உள்ளனர். வருவாய்த்துறை ஆவணங்களில் ‘பேச்  சில்லா கிராமம்’ என்று இருக்கும். அது போன்று பல கிராமங்கள் மாறி வருகின்றன. இவையெல்லாம் வேலையில்லா கொடுமை யின் விளைவுகள்.

வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புள்ள துறையாக விவசாயம் உள்ளது.  அரசாங்கத்தின் பொதுமுதலீடு விவசா யத்தில் அதிகரிக்க வேண்டும். மாறாக, ஆண்டுக்காண்டு நிதி ஒதுக்கீடு குறைக்கப்  பட்டு வருகிறது. வேளாண் விளை பொருட்களை பயன்படுத்தி புதிய தொழிற் சாலைகளை, மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றும் சிறு தொழிற்சாலைகளை உரு வாக்க முடியும். இதற்கு அரசு நிதி, தொழில்நுட்ப உதவிகளை செய்ய வேண்டும். விளை பொருட்களை சேமித்து வைப்பதற்கான குளிர்பதன கிடங்கை அரசு  அமைக்க வேண்டும். அரசின் பங்களிப்பு இல்லாமல் விவசாயம் வளராது. இவை யெல்லாம் ஒன்று சேரும்போதுதான் விவசா யம் லாபகரமானதாக மாறும்; கூடுதல் வேலைவாய்ப்பு உருவாகும். வேளாண்மை பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.