கேரளத்தில், விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் தீங்கு விளைவிக்கும் எதையும் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்ததன் மூலம், டோடெக்ஸ் மாதிரி (மொத்த செலவு) ஸ்மார்ட் மீட்டர்களை எதிர்த்துப் போராடுவதற்குவழி காட்டியது இடது ஜனநாயக முன்னணி அரசு. ஒன்றிய அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்களை ரகசியமாக தொடர முயலும் அதிகார வர்க்கத்தை ஈவு இரக்கமின்றி எதிர்த்து சிஐடியு மற்றும் இந்திய மின் ஊழியர் சம்மேளனம் சரியான நேரத்தில் தலையிட்டதன் விளைவும் இதுவாகும்.
நரேந்திர மோடி அரசு மின்துறையில் ‘சீர்திருத்தங் களை’ வேகமாகச் செயல்படுத்தி வரு கிறது. விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து 2021-இல் விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது, விவசாயி களின் கவலைகளைக் கருத்தில் கொள்ளாமல் மின்சாரச் சட்ட (திருத்த) மசோதாவைக் கொண்டு வரமாட்டோம் என்று அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால் இது மீறப் பட்டுள்ளது. அமெரிக்க மூலதனத்தை ஈர்ப்பதற்காக, மோடியின் முன்னோடியான வாஜ்பாய் 2001 இல் மின்துறை யின் கட்டுப்பாட்டை நீக்கி, தனியார் நிறுவனங்களுக்கு உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்தில் இலவசத் துக்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் மின் மசோதாவை உரு வாக்கினார். மின்சாரம் (விநியோகம்) சட்டம் -1948 மற்றும் மாநில மின்சார வாரியங்களை நிர்வகிக்கும் விதிகள், சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் சமுதாயத்திற்கான மலிவு கட்டணத்தை வலியுறுத்துகின்றன. உணவுப் பாது காப்பு, விவசாய மேம்பாடு, ஏழைகளுக்கு மின்சாரம் வழங்கும் நோக்கத்தில் மின் மானியம் வழங்கப்பட்டது. இது நுகர்வோருக்கு மலிவு விலையில் மின்சாரம் கிடைக்க வழிவகுத்தது. கூடுதல் செலவினங்கள் அரசின் பட்ஜெட் ஒதுக்கீடுகள் மூலம் ஈடுகட்டப்படுகிறது. ஆனால் புதிய தாராளமயக் கொள்கைகளும் பெருநிறுவன ஏகபோ கமும் இந்த அமைப்பைத் தகர்க்க முயன்றன. மின்சாரத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் கடுமையான எதிர்ப்பால் இத்தகைய முயற்சி கள் முறியடிக்கப்பட்டன.
2001ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசால் கொண்டுவரப் பட்ட மின்சார மசோதா பல மாற்றங்களுடன் 2003ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியவை வணிக அடிப்படையில் இருக்க வேண்டும் என்று 2003 ஆம் ஆண்டு கட்டண விதிமுறைகள் சட்டத்தின் பிரிவு 61 குறிப்பிடுகிறது. மின்சாரம் வழங்குவதற்கான செலவை குறைக்க மானியங்கள் குறைக்கப்படும் என்பது சட்டத்தின் முன்மாதிரியாக இருந்தது. மின்சாரம் (திருத்தம்) சட்டம், 2007, மானியத்தை நீக்குவதற்கான மேற்கூறிய சட்டத்தின் பிரிவில் திருத்தம் செய்யப்பட்டது. இது முதல் ஐமுகூ அரசாங்கத்திற்காக தயாரிக்கப்பட்ட குறைந்த பட்ச பொதுத் திட்டத்தில் இடதுசாரிக் கட்சிகளின் தலை யீட்டால் நடந்தது. ஆனால், 2014இல் மோடி ஆட்சிக்கு வந்த ஆறு மாதங் களுக்குள், சூழ்நிலையை முழுமையாக ஆய்வு செய்யா மல், மற்றொரு வரைவு மசோதாவை கொண்டு வந்தார். விவசாயச் சட்டம் மற்றும் தொழிலாளர் சட்டத் தொகுப்பு கள் உள்ளிட்ட மூன்று சட்டங்களைப் போலவே 2020 ஏப்ரல் 17 அன்றும் பின்னர் 2022 ஆகஸ்ட் 8அன்றும் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பெருந்தொற்று மற்றும் பொது முடக்கம் ஆகியவற்றால் மக்கள் தத்தளித்துக்கொண்டிருந்தபோது ஏகபோக மூலதனத் தின் கட்டளையின்படி இது மேற்கொள்ளப்பட்டது.
யூனியன் பிரதேசங்களில் திணிக்கும் முயற்சி
கலிபோர்னியாவின் மின் நெருக்கடி இந்தியாவுக்கும் ஒரு பாடம். குறிப்பாக மோடி அரசு மின்சாரச் சட்டத் திருத்தம் மற்றும் ஸ்மார்ட் மீட்டர்களை கொண்டு வரும் போது. மின்துறை சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு எழுந்தது. அப்போது, இந்தியாவின் புத்திசாலித்தன மான ஆளும் வர்க்கம் முதலில் யூனியன் பிரதே சங்களில் அவற்றை செயல்படுத்த முயற்சித்தது. தாதர் மற்றும் நாகர் ஹவேலியின் அனைத்து சொத்துக்களும் குஜராத்தைச் சேர்ந்த டோரன்ட் நிறுவனத்திற்கு மாற்றப் பட்டன. 2022-23 நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 371 சதவிகிதம் அதிகரித்து ரூ.458.7 கோடியி லிருந்து ரூ.2164.6 கோடியாக உயர்ந்துள்ளது, வருவாயில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் லாபம் அதிகரித்துள்ளது. காலப்போக்கில், கிரிட் தொழில்நுட்பத்தின் நவீனமய மாக்கல் மற்றும் பலவற்றில் பெரும் செலவுகளை மேற்கோள் காட்டி நுகர்வோர் மீது பெரும் சுமைகள் ஏற்றப்பட்டுள்ளன. மோடி ஆட்சியில் அதானி, அம்பானி, டாடா நிறு வனங்கள் மின் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. 13,650 மெகாவாட் திறன் கொண்ட என்டிபிசி க்கு அடுத்து இந்தியாவின் மிகப்பெரிய தனியார் அனல் மின் உற்பத்தி யாளர் என்று அதானி பவர் லிமிடெட் கூறுகிறது. அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் மிகப்பெரிய முதலீட்டாளராக உள்ளது. அதானி நிறுவனம் இந்தியாவில் 22 சதவிகித தனியார் அனல் மின் ஆற்றலையும், அதிக எண்ணிக்கையிலான சூரிய மற்றும் காற்றாலைகளையும், 51 சதவிகித தனியார் மின் பரி மாற்றத்தையும் கட்டுப்படுத்துகிறது. அனில் அம்பானி யின் ரிலையன்ஸ் பவர் லிமிடெட் மற்றும் டாடா பவர் லிமி டெட் ஆகியவை இதர மின்சக்தி நிறுவனங்களாகும்.
ப்ரீபெய்டு மீட்டர்களின் துவக்கம்
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஒருங்கி ணைந்த போராட்டத்தால் சீர்திருத்தம் தோற்கடிக்கப்பட்ட பிறகு, அரசாங்கம் இப்போது “ஸ்மார்ட் மீட்டர்” திட்டத்தை செயல்படுத்துகிறது. முன்பணம் செலுத்தினால்தான் மின்சாரம் கிடைக்கும். ப்ரீ-பெய்டு மீட்டர்களின் ஆரம்பம் இது. முன்பணம் செலுத்திய மீட்டர்கள் பூஜ்ஜியத்தை அடைந்தவுடன், உடனடியாக இணைப்பு துண்டிக்கப்படும். மீண்டும் இணைப்பை பெற ரூ.500 அபராதம் விதிக்கப் படும். அனைத்து குழாய்க் கிணறுகள் மற்றும் பாசன மோட்டார்கள் ஸ்மார்ட் மீட்டர்களுடன் இணைக்கப்பட்டு, அனைத்து விவசாய மின் இணைப்புகளையும் ஏப்ரல் 2025 -க்குள் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு இலக்கு வைத்துள் ளது. ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாய். 7.5 குதிரைத்திறன் பம்ப் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் 34 யூனிட் பயன்படுத்தினால் 340 ரூபாய் வசூலிக்கப்படும். அதாவது மாதம் ரூ.10,200. ஒவ்வொரு ஆறு வருடங்களுக்கும் மீட்டர்களை மாற்று வதற்கு சுமார் 15,000 ரூபாய் தொடர்ச்சியான செலவாகும்.
உ.பி., ஆந்திரா விவசாயிகள்
விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு மானியம் மற்றும் இலவச மின்சாரம் இதன் மூலம் ஒழிக்கப்படும். உத்தரப்பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்மார்ட் மீட்டர்களை விவசாயிகள் கைவிடுவதற்கும் இதுவே காரணம். தற்போது ஆந்திர அரசு நேரடி பலன் பரிமாற்றம் போன்ற பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இத்தகைய சோதனைகளில் இறங்குவது விவ சாயிகளுக்கும், விவசாயத்திற்கும், நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும் சாவு மணியாகிவிடும். எனவே இதற்கு எதிராக அனைத்து பிரிவினரும் ஒற்றுமையாக நிற்க வேண்டியது அவசியம். கேரளத்தில், விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் தீங்கு விளைவிக்கும் எதையும் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்ததன் மூலம், டோடெக்ஸ் மாதிரி (மொத்த செலவு) ஸ்மார்ட் மீட்டர்களை எதிர்த்துப் போராடுவதற்கு வழி காட்டியது இடது ஜனநாயக முன்னணி அரசு. ஒன்றிய அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்களை ரகசியமாக தொடர முயலும் அதிகார வர்க்கத்தை ஈவு இரக்கமின்றி எதிர்த்து சிஐடியு மற்றும் இந்திய மின் ஊழியர் சம்மேளனம் சரியான நேரத்தில் தலையிட்டதன் விளைவும் இதுவாகும். இது போன்ற வலுவான பாதுகாப்பு தொடர வேண்டும். இரு ளுக்கும் அழிவுக்கும் எதிராக - மோசடிக்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கும் எதிராக ஒன்றுபடுவோம்.
தமிழில்: சி.முருகேசன்