மணிப்பூர் மாநிலத்தில் குக்கி பழங் குடி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை பழங்குடி அல்லாத சமூ கத்தின் ஆண்கள் கூட்டாக சேர்ந்து, நிர்வாணப் படுத்தி, வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு உலக அளவில் அதிர்ச்சியை ஏற் படுத்தியது. இது ஒட்டு மொத்த தேசத்தின் அவமானம். மணிப்பூரிலும், மத்தியிலும் பாஜக அரசே ஆட்சி நடத்துகிறது. தற்போது வரை மணிப் பூரில் நடக்கும் வன்முறை குறித்து பிரதமர் பேசாதது என்பது பாஜக ஆட்சி, மக்கள் நலனில் அக்கறையின்றி, முற்றிலும் தோல்வியடைந்த ஆட்சியாக மாறி இருக்கிறது என்பதற்கு மிகப் பெரிய உதாரணம். பிரதமரும், பாஜகவினரும் தேசபக்திக்கு குத்தகைதாரர்கள் போன்று வாய் கிழிய பேசி வருவது சமூக ஊடகங்களில் அன்றாட செய்திகளாக வருகிறது. மணிப்பூரில் மோச மான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண் ணின் கணவர் ஒரு ராணுவ வீரர் . இந்த தேசத்தை காக்கும் பணியில் இருக்கும் தன்னால் தன் மனைவியையும், தன் மக்களையும் காப்பாற்ற முடியவில்லை என்று கண்ணீரோடு சொன்ன செய்திகள் மனித மனங்களை உலுக்கி உள்ளது. இரட்டை எஞ்சின் அரசாங்கம் பழுத டைந்து பாழாய்ப் போனதன் சாட்சியாக மணிப்பூர் கொடூரங்கள் இருக்கின்றன.
முதலில் பண மதிப்பு இழப்பு துயரம் துவங்கி, கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாது காக்க தவறியது, கடுமையான விலைவாசி உயர்வு, வேலையின்மை என தொடர்ச்சியாக இந்திய மக்களை வாட்டி வதைத்துக் கொண்டி ருக்கக் கூடிய அரசாக நரேந்திர மோடி தலைமை யிலான பாஜக அரசு இருக்கிறது. மணிப்பூர் தொடர்பாக கிட்டத்தட்ட இரண் டரை மாதங்களாக மோடி அரசு கள்ள மௌனம் காத்து வருவது என்பது இந்திய பெண்களின் பாதுகாப்பு மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதையே காட்டுகிறது. நூற்றுக் கணக்கான ஆண்கள் மூன்று பெண்களை நிர்வா ணமாக்கி இழுத்து வருகிற கொடூரத்திற்கான மூல விதையை தூவிய பாஜகவே முதல் குற்ற வாளி. இக்கொடுர சம்பவத்தின் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்ட போதும், இரண்டு மாதங்க ளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெண்களின் உடல் மீது நிகழ்த்தும் வன் முறை என்பது மற்றவர்களை பழிவாங்குவது என்ற மனநிலையில் இருந்து நிகழ்த்தப்படு கிறது. இந்த அவமானகரமான சம்பவம் குறித்து மாநில காவல் துறையும், முதலமைச்சரும் வாய் திறக்காமல் இருந்தது குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான எல்லா நடவடிக்கைகளிலும் மணிப்பூர் அரசு உறுதியோடு இருப்பதையே காட்டுகிறது.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, கல்வி அளிப்பது குறித்து அடிக்கடி பேசி வரும் பிரதமர், நாட்டு மக்கள், எதிர்க்கட்சித் தலைவர் கள், பெண்கள் அமைப்புகள் பலமுறை அழைப்பு விடுத்தும் மணிப்பூரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து பேச மறுப்பது ஏன்? நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை மணிப்பூரில் நடைபெறும் வன்முறைகள் குறித்து பேச அனுமதி அளிக்காமல் நாடாளுமன்றத் திற்கு வெளியே பிரதமர் மோடி கருத்து சொல்வது இந்திய ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக் கக்கூடிய மோசமான செயலாகும். கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், சிறு பான்மையினர் மீதான தாக்குதல்களை பாஜக அரசு தொடர்ச்சியாக அலட்சியம் செய்து வருவது என்பது இந்த அரசு ஒடுக்கப்பட்ட வர்களுக்கு எதிரான அரசு என்பதை மீண்டும் மீண்டும் நிரூபணமாக்கி வருகிறது. ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய பெண்கள் ஆணையத்தின் செயல்பாடு என்பது சர்ச்சை க்கு உள்ளாகியுள்ளது. இவ்வளவு பெரிய வன்முறை நடந்தும் பாதிக்கப்பட்ட பெண்களை இது நாள் வரை சென்று சந்திக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
எனவே, உடனடியாக நடைபெற்ற சம்பவங்க ளுக்கு பொறுப்பேற்று மாநில பாஜக அரசு பதவி விலகிட வேண்டும்.
- மணிப்பூர் மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்பிட அனைத்து விதமான நடவடிக்கை களையும் எடுத்திட வேண்டும்.
- வன்முறை சம்பவங்களுக்கு காரணமா னவர்கள் மீது உடனடியான நடவடிக்கை களை எடுத்திட வேண்டும்.
- மணிப்பூர் மாநிலத்தில் பெண்களின் பாது காப்பை உறுதி செய்திடும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட கய வர்கள் மீது எவ்வித தயவு தாட்சண்யம் இன்றி கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
- மணிப்பூர் மாநிலத்தின் மக்களின் வாழ்வாதா ரத்தை மீட்டு பாதுகாத்திட வேண்டும்.
என்ற போராட்டத்தை நாடு முழுவதும் வலு வாக மேற்கொள்வோம். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை கண்டிராத கொடுங் கோல் ஆட்சி புரியும் மோடி அரசைத் தூக்கி எறிவோம்.