articles

img

நிலவுக்குச் செல்ல நாடுகள் ஏன் போட்டியிடுவதேன்? - த.வி.வெங்கடேஸ்வரன்

விண்வெளியில் பூமிக்கு மிக அருகில் இருப்பது நிலவு தான். அதனால் நிலவு குறித்த ஆராய்ச்சியில் உலக நாடுகள் ஆர்வம் காட்டு கின்றன என்பதையும் தாண்டி, அதில் சர்வதேச அரசியல், சர்வதேச வாணிபம் ஆகியவை அடங்கியுள்ளன என்பதே நிதர்சனமாக உண்மையாகும். 1958 முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 140 முறை நிலவுக்கு உலக நாடுகள் விண்கலத்தை அனுப்பியுள்ளன. அதில் வெகு சில திட்டங்கள் தான் மனிதர் களை உள்ளடக்கியவை. பெரும்பாலானவை ஆர்பிட்டர்கள், லேண்டர்கள் மற்றும் ரோவர்களைக் கொண்டவை தான். 

முதல்நாடு'
 

இதுவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 18 விண்கலங்கள் மட்டுமே நிலவின் தரையில் பாதுகாப்பாக இறங்கியுள்ளன. இவற்றுள் 6 ஆட்கள் இயக்கியவை. மீதமுள்ள 12-ஆம் ஆளில்லா விண்கலங்கள். 1959 ஆம் ஆண்டு முதன் முதலில் ரோபோவுடன் கூடிய விண்கலத்தை சோவியத் ரஷ்யா நிலவுக்கு அனுப்பியது. ஆனால் அதில் வெற்றி பெற வில்லை. இதைத்தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு லூனா 9 ஆய்வுக் கலத்தை தயார் செய்து நிலவுக்கு அனுப்பியது. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. அதுமட்டுமின்றி, மெதுவாக கலத்தை இறக்கிய முதல் நாடு என்ற வரலாற்று படைத்தது சோவியத் ஒன்றியம். ஆனால், அதற்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1969 ஆம் ஆண்டு அப்போலோ 11 ஆய்வுத் திட்டம் மூலம் நிலவில் மனிதனை கால்பதிக்க வைத்தது அமெரிக்கா. வரலாற்றுப் பதிவின் படி, அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடை பயின்ற நிமிடங்கள் சாதனை நொடிகளாகும். அப்போது தொடங்கி 1972 ஆம் ஆண்டு வரை அப்போலோ திட்டம் மூலம் 9 முறை விண்கலங்களை அனுப்பி 12 பேரை நிலவில் கால் பதிக்க வைத்துள்ளது அமெரிக்கா. அந்த வகையில் தற்போதைய நிலவரப் படி நிலவில் கடைசியாக கால்பதித்தவர் அமெரிக்காவை சேர்ந்த ஜீன் கோர்னென். சீனாவின் இலக்கு சோவியத் ஒன்றியம் தான் முதன் முதலில் விண்கலத்தை மெதுவாக நிலவில் தரையிறங்க வைத்ததுடன், அதன் லூனா 9, லூனா 13 ஆகியவற்றில் பொருத்தப்பட்டு இருந்த கேமராக்கள் மூலம் நிலவின் தரையில் இருந்து முதல் புகைப்படங்களையும் எடுத்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்கா ‘சர்வேயர்’ என்ற திட்டத்தில் 5 ஆளில்லா விண்கலங்களையும், அப்போலோ என்ற திட்டத்தின் வழியாக மனிதர்களைக் கொண்ட 6 விண்கலங்களையும் நிலவில் வெற்றி கரமாக தரையிறக்கியது. அமெரிக்கா நிலவில் ஆட்களைத் தரை இறக்கிய பின்னர், சோவியத் ஒன்றியம் தனது லூனா 16, லூனா 20, லூனா 24 ஆகிய திட்டங்கள் மூலம் ஆளில்லா விண்கலங்களை நிலவில் இறக்கி மண் மாதிரிகளை எடுத்து வரச்செய்தது.  இதைத்தொடர்ந்து சீன நிலவு ஆய்வுத் திட்டம் 2007-இல் சேன்ஞ்ச் 1 (Change 1) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. நிலவின் மிகத் துல்லியமான முப்பரிமாண (3D) வரை படத்தை உருவாக்குவதே சீனாவின் நோக்கம். அதன் தொடர்ச்சியாக 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘íL’ ரோவர் மூலம் சந்திரனில் மெதுவாக தரையிறங்கிய 3 ஆவது நாடானது சீனா. மொத்தமாக, சீனா 7 முறை நிலவு பயணங்களை முடித்துள்ளது. 2030 ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் சந்திரயான்

ஆக இதுவரை சோவியத் ஒன்றியம், அமெ ரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகள் தான் நிலவில் வெற்றிகரமாக விண் கலங்களை தரையிறங்கிய நாடுகள். நிலவின் தென்பகுதியில் விண்கலத்தை தரையிறக்க இந்தியாவிலிருந்து சந்திரயான் திட்டம் செயல்படுத்தப்பட்டது. சந்திரயான் 1 தோல்வி யில் முடிந்தது. அதன்தொடர்ச்சியாக சந்திரா யன் 2 நிலவின் தென் துருவப்பகுதியில் இறங்கு வதற்கு முன்பு தோல்வியில் முடிந்தது. அதன் தொடர் முயற்சியாக சந்திரயான் – 3 நிலவின் தென் துருவப்பகுதியில் விக்ரம் லேண்டரை மெதுவாக தரையிறக்கியது இஸ்ரோ மையம். ஆனால், அதற்கு சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவின் லூனா - 25 வெற்றிகரமாக நிலவில் தென்துருவத்தில் தரையிறங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் இந்தியா விற்கு முன்பாக தென்துருவ தரையிறக்க சாதனை ரஷ்யாவிற்கு சொந்தமாகிவிடுமோ- என உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. குறிப்பாக, ரஷ்யாவை தனது எதிரி நாடாகவே கருதிக்கொண்டுள்ள அமெரிக்கா போன்ற நாடுகள் அஞ்சிக்கொண்டிருந்தன. ஆனால் ரஷ்யாவின் விண்கலம் உடைந்து போனதால், அமெரிக்கா மகிழ்ச்சியில் திளைத்தது. தொழில்நுட்பக் கோளாறு காரண மாக லூனா-25 நிலவின் தென்துருவத்தில் தரை யிறங்கவில்லை. அந்த மகத்தான சாதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்து முடித்துள்ளனர்.

இப்போது ஏன் போக வேண்டும்?

1976க்கு பிறகு சுமார் 40 வருடங்களுக்கு பிறகு சீனா நிலவு ஆய்வு திட்டத்தை செயல் படுத்த துவங்கியது. அதன்தொடர்ச்சியாக ரஷ்யா நிலவின் தென் துருவப்பகுதிக்கு விண்கலத்தை அனுப்ப முயற்சித்தது இஸ்ரோ சந்திரயான் – 3 மூலம் அதனை நிறை வேற்றி சாதனை படைத்துள்ளது. ஜப்பான், இந்தியாவுடன் இணைந்து நிலவு ஆராய்ச்சியை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. தற்போது ஏன் உலக நாடுகளின் கவனம் நிலவின் மீது திருப்பியுள்ளது?. அதற்குக் காரணம் அங்கு பரந்து விரிந்துள்ள அரிய தனிமங்களே காரணம். செல்போன், காற்றாலையிலுள்ள காந்தங்கள் உருவாக ‘ரேர் எர்த் எலிமண்ட்’ தேவைப்படுகிறது. இந்த தனிமம் நிலவில் கொட்டிக் கிடக்கிறது. நான்காவது தொழிற் புரட்சியின் அச்சாணியாக இருக்கப் போவது இந்த ‘ரேர் எர்த் எலிமெண்ட்’ தான். அதுமட்டுமின்றி, தற்போது சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் செயற்கை சூரியனை உருவாக்கி, அதிலிருந்து ஆற்றலை எடுக்கின்றன. அணுக்கருவு பிணைவு மூலம் இந்த ஆற்றலை பெற முடியும். இதற்கு ‘ஹீலியம் 3’ என்ற தனிமம் தேவைப்படுகிறது. அதாவது, ஒரு டன் ‘ஹீலியம் 3’ மூலம் இந்தியா விற்கு ஒரு வருடம் ஆற்றலை தர முடியும். ஆனால், இந்த தனிமமும் அரிதானதாகும். கடல் நீரிலிருந்து ‘ஹீலியம் 3’ எடுக்கப்படுகிறது. கடலில் இருந்து தோராயமாக நூறு கோடி துகள்களிலிருந்து, ஒரே ஒரு ‘ஹீலியம் 3’ மட்டுமே கிடைக்கும். ஆனால், நிலவில் இந்த தனிமமும் பரந்து காணப்படுகிறது. இதை அடைவதற்கே உலக நாடுகள் போட்டியிடு கின்றன.

சர்வதேச விண்ணியல் வாணிபம்

பூமியில் ஒரு சர்வதேசச் சட்டம் (Finder Keeper) இருந்தது. இந்த சட்டமானது, யார் முதலில் ஒன்றை கண்டுப்பிடிக்கிறார்களோ, அதனை அவர்கள் சொந்தம் கொண்டாட முடியும். அதாவது, கடலில் செல்லும் போது, ஒரு தீவை எந்தவொரு நாடு கண்டுபிடித்து, தனது நாட்டுக் கொடியை பறக்க விடுகிறதோ, அதனை அந்த நாடு தனதாக்கிக்கொள்ளும். இந்தச் சூழ்நிலையில்தான், சோவியத் ஒன்றியம், நிலவில் தனது விண்கலத்தை இறக்கியது. அத்துடன், அதன் விண்கல ஊர்தி நகரத் துவங்கியது. அப்போது, அதிலிருந்து சோவியத் ஒன்றியத்தின் தேசியக்கொடி நிலவில் பறந்தது. இதனால் நிலவை சோவியத் ஒன்றியம் தனதாக்கிக்கொள்ளும் என பயந்த அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள், அவசர அவசரமாக புதிய சர்வதேசச் சட்டத்தை கொண்டு வரத் துடித்தன. அப்போது, “நிலவை மனிதகுலத்தின் பொதுச்சொத்து” என்று அறிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனையேற்று கொண்ட உலக நாடுகள், அதில் கையெழுத்திட்டன.  எந்தவொரு சர்வதேசச் சட்டமும் 50 ஆண்டு களுக்கு பிறகு மறுபரிசீலனைக்கு வரும். தற்போது அந்த சட்டம் மறுபரீசிலனையில் உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, அமெரிக்கா தனக்கு தானே ஒரு சட்டத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. அதன்படி, நிலவின் எந்தப் பொருட்கள் எடுத்தாலும், அதனை தனியார் நிறுவனங் கள் உரிமம் கொண்டாட முடியும். இது உலக அளவில் பெரும் விவாதத்திற்குள்ளாகி யுள்ளது. எதிர்காலத்தில் நிலாவில் உடமை அனுமதிக்கப்படும் என்றால், இந்த அனுமதியானது அனைத்து நாடுகளுக்கும் கிடைக்குமா என்றால் உறுதியாக கிடைக்காது. குறிப்பாக காங்கோ, பாப்புவாகினீயா போன்ற நாடுகளுக்கு கிடைக்காது. நிலாவில் யார் முதலில் கால் வைக்கிறார்களோ, அவர் களுக்கு மட்டுமே அந்த அனுமதி கிடைக்கும்.  முதலில் அணுகுண்டு தயாரித்த நாடுகள் மட்டுமே, அணுகுண்டு வைத்துக்கொள்ளலாம். ஆனால், மற்ற நாடுகள் அணுகுண்டு வைத்துக்கொள்ளக் கூடாது என்று சர்வதேசச் சட்டம் கூறுகிறது. அப்படிச் சட்டம் இருக்கையில், நிலவில் யாரெல்லாம் கால்தடத்தை பதித்திருக்கிறார்களோ, அந்த நாடுகள் மட்டும் உடமை அனுமதி கோர முடியும் என்று நினைத்து தான் தற்போது உலக நாடுகள் நிலாவிற்கு செல்லத் துடிக்கின்றன. அதனால் தான் ஜப்பான், இஸ்ரோவுடன் ஒரு ஒப்பந்தத்தை போட முன்வந்துள்ளது. இருவரும் ஒன்று சேர்ந்து நிலவிற்கு சென்று, இருநாட்டு கொடிகளையும் பறக்க விடலாம் என்று அழைப்பு விடுத்துள்ளது. அதேசமயம் சந்திரயான் 3 ஒரு அற்புதமான திட்டம். தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந் துள்ளதற்கான எடுத்துக்காட்டு. ஆனாலும், அதில் சர்வதேச விண்ணியல் வாணிபம் உள்தென்பதை நினைவுகூர வேண்டும். - முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்துக்களின் தொகுப்பு:  -விளாடிமிர் பீட்டர்