articles

img

மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கழுத்தை நெரிக்காதே! -

மோடி அரசாங்கம், 2014இல் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்தே, ஏதே னும் ஒருவிதத்தில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கழுத்தை நெரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுதான் வந்திருக்கிறது. பொதுச் செலவினங்க ளை வெட்டி, தனியார்மயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்கிற நவீன தாராளமயக் கொள்கைக்கு விசுவாச மாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், அப்போதுதான் பொருளாதாரம் ‘உற்பத்தித் திறனு டன்’, இருக்கும் எனக் கருதியும், அரசாங்கம் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உட்பட, பல்வேறு நலத் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளைத் தொடர்ந்து வெட்டிச் சுருக்கிக்கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், இத்திட்டங்களை ஒழித்துக்கட்ட பல்வேறு விதமான நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டிருக்கிறது.

33 சதவீத வெட்டு...

மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தைப் பொறுத்தவரை, 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 73 ஆயிரம் கோடி ரூபாய் என்று முன்மொழியப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அப்போது அதற்கு செலவு செய்ய வேண்டிய தொகை 89,400 கோடி ரூபாய் என மதிப்பிடப் பட்டது. இதற்குமுன் 2021-22ஆம் ஆண்டில் செலவு செய்த தொகையான 98,467.85 கோடி ரூபாயிலி ருந்து சுமார் 10 விழுக்காடு வெட்டிச் சுருக்கப்பட்டு இவ்வாறு 89,400 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. எனினும், இப்போது 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் மேற்படி திருத்திய மதிப்பீட்டுத் தொகையான 89,400 கோடி ரூபாயில் 33 விழுக்காடு வெட்டப்பட்டிருக்கிறது. இப்போது ஒதுக்கீடு வெறும் 60 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமேயாகும். மோடி அரசாங்கம் இந்தத் திட்டத்தைச் சீர்குலைப்ப தற்காக இத்துடன் நின்றுவிடவில்லை. இந்த ஆண்டு ஜனவரியில், மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின்கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள், தங்கள் வருகையைப் பதிவு செய்திட ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.  அதாவது, நேஷனல் மொபைல் மானிட்டரிங் சர்வீஸ் (NMMS-National Mobile Monitoring Service) என்று அழைக்கப்படும் மொபைல் அடிப்படை யிலான செயலி ஒன்றின்மூலமாகத் தங்கள் வருகை யைப் பதிவு செய்ய வேண்டும் என்று பணித்திருக்கி றது. இதனால் நாடு முழுவதும் பணியிடங்களில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. 

தொழில்நுட்பம்: முதல் சூழ்ச்சி

இணையத் தொடர்பு அனைத்து இடங்களிலும் இல்லாத காரணத்தால், இதன்கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் வருகையைப் பதிவு செய்வ தற்காக, நீண்டநேரம் செலவிட வேண்டியிருந்திருக்கி றது. அவர்களைப் பொறுத்தவரை இது வாழ்வா சாவா  என்கிற பிரச்சனையாகும். ஏனெனில், அவ்வாறு வரு கையைப் பதிவு செய்யவில்லை என்றால், அவர்கள் அன்றைய தினம் செய்த வேலைக்கு அவர்களுக்கு ஊதியம் கிடைக்காது. இந்தத் திட்டத்திற்கு இத்த கைய உயர்தொழில்நுட்ப நடவடிக்கைகளைத் திணித் திருப்பது அரசின் சூழ்ச்சியேயாகும்.  இதேபோன்றே முன்பு பொது விநியோக முறைக்கும் கொண்டு வந்தது. இதன்மூலம் பல்லாயி ரக்கணக்கானவர்கள் தங்கள் பொது விநியோக முறை ரேஷன் அட்டைகள் (ஆதார் எண் பொருந்தவில்லை, வங்கிக் கணக்கு பொருந்தவில்லை, கைவிரல் ரேகை பொருந்தவில்லை முதலான பல காரணங்களால்) மிகச்சரியாக நிரப்ப முடியாமல் பறிக்கப்பட்டுவிட்டன.  இதேபோன்று இப்போது மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் வேலைசெய்யும் தொழிலாளர்களும் பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய விதிகள் காரணமாக பலர் இத்திட்டத்தின்கீழ் வேலை செய்ய வர முடியாமல் ஊக்கமிழக்கச் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஊதியம் இழுத்தடிப்பு  மற்றொரு சூழ்ச்சி

இந்த அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் மற்று மொரு முக்கியமான சூழ்ச்சி, இத்திட்டத்தின்கீழ் வேலை செய்யும் ஏழைத் தொழிலாளர்களுக்கு அவர்க ளுக்கு அளிக்கப்பட வேண்டிய ஊதியத்தையே அளித்திடாமல் இழுத்தடித்துக் கொண்டிருப்பதாகும். அவர்கள் வேலை செய்த நாட்களுக்கு, காலத்தே ஊதி யத்தை அளித்திடாமல், பதினைந்து நாட்களுக்கும் மேலாக ஊதியம் அளித்திடாது அவர்களை இழுத்த டிக்கிறது. அரசாங்கத்தின் தரவுகளின்படியேகூட, ரூ.3,630 கோடி ரூபாய் அளவிற்கு தொழிலாளர்க ளுக்கு 15 நாட்கள் கழித்துத்தான் ஊதியம் வழங்கப் பட்டிருக்கிறது. இன்னமும் 1,010 கோடி ரூபாய் ஊதியம் அளிக்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. மிகவும் குறைந்த ஊதியத்திற்காக முதுகை வளைத்து வேலை செய்திடும் தொழிலாளர்களுக்கு, அந்த ஊதி யத்தைக்கூட ஒழுங்காக அளித்திடாமல் இழுத்த டிக்கும் வேலையில் அரசாங்கம் இறங்கியிருப்பதால்,  பல தொழிலாளர்கள் இதைவிடக் குறைந்த கூலியாக இருந்தாலும் பரவாயில்லை, உடனடியாகக் கூலி கிடைத்தால் போதும் என்று வேறு வேலைகளுக்குச் செல்லத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

அற்பமான ஊதியம்

அரசாங்கம் இப்போது இத்திட்டத்தின்கீழ் ஊதி யத்தை உயர்த்தி யிருப்பதாக வழக்கமான தம்பட்டத்து டன் அறிவித்திருக்கிறது. இந்த ஊதிய உயர்வு என்பது 2 விழுக்காட்டுக்கும் 10 விழுக்காட்டுக்கும் இடையே இருக்கிறது. அதாவது தொழிலாளர்களுக்கு 7 ரூபாயி லிருந்து 26 ரூபாய் வரை நாளொன்றுக்கு இந்த ஊதிய உயர்வு இருந்திடும். கடந்த சில மாதங்களாக பண வீக்கத்தின் உயர்வு 6 விழுக்காட்டிற்கும் 8 விழுக்காட்டிற் கும் இடையே இருக்கக்கூடிய நிலையில், இதன் காரண மாக உணவுப் பொருள்களின் விலைகள் 8 விழுக்காட்டி லிருந்து 10 விழுக்காடுவரை உயர்ந்துள்ள நிலையில் தான் இந்த அற்ப ஊதிய உயர்வை அரசு அறிவித்தி ருக்கிறது.  வரவிருக்கும் நிதியாண்டில் பணவீக்கத்தின் உயர் விகிதம் குறையும் என நம்புவதற்கான காரணம்  எதுவும் இல்லை. உண்மையில் இதர தொழிலாளர்களு க்கு அளிக்கப்படும் ஊதியத்தைக் காட்டிலும் இத்திட்டத்தின்கீழ் ஊதியம் மிகவும் குறைவாகும். 2022-23இல் இத்திட்டத்தின்கீழ் சராசரி ஊதியம் நாளொன்றுக்கு 217.87 ரூபாயாக இருந்தது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியின் தரவின்படி பொதுவான ஆண் விவசாயத் தொழிலாளர்களுக்கான ஊதியம் 349.77 ரூபாய் என்பதுடன் ஒப்பிடும்போது இது எந்த அள வுக்குக் குறைவு என்பது தெரியவரும்.  

47 நாட்களே  வேலை வழங்க முடியும்...

மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ஆண்டிற்கு 100 நாட்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்று இருந்தபோதிலும், இப்போது இவர்கள் ஒதுக்கி யிருக்கும் தொகை காரணமாக சராசரியாக 47 நாட்களுக்கே வேலை அளிக்கும் நிலை இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வா றாக, குறைந்த நாட்களுக்கே வேலை, அவ்வாறு வேலை செய்தாலும் ஊதியம் தருவது எப்போது என்பது தெரியவில்லை, வேலைக்கு வருவோர் டிஜிடல் போன்கள் வைத்திருக்க வேண்டும் என்பன போன்ற  காரணங்களால் வேலைக்கு வருவோர் எண்ணிக்கை யிலும் மிகப்பெரிய சரிவுக்கு இட்டுச் சென்றிருக்கி றது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, சென்ற ஆண்டு  10 கோடியே 60 லட்சம் பேர் வேலை செய்ததுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இந்தத் திட்டத்தின்கீழ் சுமார் 8 கோடியே 60 லட்சம் பேர்தான் வேலைக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதாவது சுமார் 2 கோடி பேர் அல்லது 20 விழுக்காட்டினர் வேலைக்கு வரவில்லை. இந்தத் திட்டத்தின்கீழ் வேலை செய்வ தற்காக, 1 கோடியே 60 லட்சம் பேர் வேலைக்கு விண் ணப்பித்திருந்தும் பல்வேறு காரணங்களைக் கூறி அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில் மேற் கண்டவாறு தரவுகள் தெரிவிக்கின்றன.  

ஜீவ நாடியை  நெரிக்கக்கூடாது

மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் என்பது, அதன் ஊதியம் மற்றும் வேலைநாட்கள் குறைவாக இருந்தபோதி லும்கூட, நாட்டில் மிகவும் அடித்தட்டில் உள்ள கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்துத் தந்தது. நாட்டில் வேறெந்த வேலையும் கிடைக்காத நிலையில், உணவுப்பொருள்களின் விலைகள் குடும்ப பட்ஜெட்டுகளை கடுமையாக அழித்துக்கொண்டிருக்கக்கூடிய நிலையில்,  இந்தத் திட்டத்தின்கீழ் கிடைத்துவந்த அற்ப ஊதியம்தான் அவர்கள் உயிர்பிழைத்திருப்பதற்கு ஜீவநாடியாக இருந்து வந்தது. எனவே, இப்போது உடனடியாக செய்யப்பட வேண்டிய தேவை என்னவெனில், இந்தத் திட்டம் முடக்கப்படக்கூடாது, மாறாக இந்தத் திட்டத்தின்கீழ் ஊதியம் மற்றும் வேலைநாட்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதுடன், நகர்ப்புற பகுதி களுக்கும் இச்சட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும். பூனை எலியைப் பிடித்து விளையாடுவதைப்போல, அரசாங்கம் இந்தத் திட்டத்துடன் விளையாடுவதற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்.

மார்ச் 29, 2023, 
தமிழில்: ச.வீரமணி