சர்வதேச நாணய மற்றும் நிதி அமைப்பு அனைத்து நாடுகளின் நலனுக்காகவும் செயல்படுகிறது என்று தாராளவாத கருத்து கூறுகிறது. இந்த அமைப்பு வர்த்தகத்திற்கு வசதியான கட்டமைப்பை வழங்குகிறது என்கிறார்கள். ஆனால் உண்மை வேறு. சர்வதேச நிதி அமைப்பு மேற்கத்திய ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த மேலா திக்கத்தை நிலைநிறுத்தவும் செய்கிறது. அமெரிக்க டாலர் இந்த சர்வதேச அமைப்பின் முதுகெலும்பாக இருப்பதால், டாலரின் மேலாதிக்கம் மேற்கத்திய ஏகாதி பத்தியத்தால் நிலைநிறுத்தப்படுகிறது, அதே நேரத்தில் டாலர் அந்த ஏகாதிபத்தியத்தை நிலை நிறுத்தவும் செய்கிறது.
டாலர் இல்லையெனில்...
இதை ஓர் எடுத்துக்காட்டு மூலம் புரிந்து கொள்ள லாம். நாடு 1-க்கு பொருள் X தேவை, அது நாடு 2-விடம் உள்ளது. நாடு 2-க்கு பொருள் Y தேவை, அது நாடு 1-விடம் உள்ளது. தற்போதைய அமைப்பில், இந்த இரு நாடுகளும் நேரடியாக பொருட்களை பரிமாறிக் கொள்ள முடியாது. ஒவ்வொரு நாடும் முதலில் டாலரைப் பெற்றிருக்க வேண்டும். போது மான டாலர் கையிருப்பு இல்லையெனில் இந்த வர்த்தகமே நடக்காது. வேறு வார்த்தைகளில் சொன்னால், சர்வதேச பரிவர்த்தனைகளில் டாலர்தான் பரிமாற்ற ஊடகம். சில நாடுகளிடம் டாலர் பற்றாக்குறை இருந்தால், அவர்களுக்கிடையேயான பரிவர்த்தனைகளே தடைப்படும். மூன்றாம் உலக நாடுகளுக்கிடையே யான வர்த்தகத்தில் இது மிகவும் உண்மை. அவர்கள் அனைவரும் டாலர் பற்றாக்குறையால் பாதிக்கப்படு கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த நாணயங்களில் வர்த்தகம் செய்ய முடிந்தால், அதாவது “டி-டாலரை சேஷன்” - (டாலரில் இருந்து வெளியேறுதல்) செய்தால், தங்களுக்கிடையேயான வர்த்தகத்தை விரிவுபடுத்த முடியும்.
வற்றாத தங்கச் சுரங்கம்
டாலர் சார்பை குறைப்பதை அமெரிக்கா இயல்பாகவே எதிர்க்கிறது. ஏனெனில் அதன் நாணயம் உலகப் பொருளாதாரத்தில் முக்கியமானதாக இருப்பதும், பொதுவாக “தங்கத்திற்கு இணையா னது” என்று கருதப்படுவதும், அமெரிக்காவுக்கு மிகப் பெரிய நன்மையை தருகிறது. இது இலவச, வற்றாத தங்கச் சுரங்கத்தின் மீது அமர்ந்திருப்பது போன்றது. வெறும் டாலர்களை அச்சடிப்பதன் மூலம் மற்ற நாடுகளின் வளங்களை வாங்க முடியும், அவற்றின் நிறுவனங்களை கைப்பற்ற முடியும், வெளிநாடுகளில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும், தனது நடப்புக் கணக்கு பற்றாக்குறையை சமாளிக்க நிதியளிக்க முடியும். உலகளவில் வரம்பற்ற கொள்முதல் சக்தியைப் பெறுவது மட்டுமல்லாமல், அமெரிக்கா, பிற நாடு களை அடக்கி ஆள்வதற்கும் டாலரைப் பயன்படுத்து கிறது. தான் ஆதரிக்கும் நாடுகளுக்கு டாலர்களை வழங்க முடியும். மாறாக, தண்டிக்க விரும்பும் நாடுக ளின் டாலர் சேமிப்பை முடக்கிவிட முடியும். இந்த டாலர் சேமிப்புகள் பெரும்பாலும் மேற்கத்திய வங்கிகளில்தான் வைக்கப்பட்டுள்ளன. ஈரான் முதல் ரஷ்யா வரை பல நாடுகளுக்கு இப்படி அமெ ரிக்காவால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தெற்குலக நாடுகளின் விருப்பம்
உலகின் மூன்றில் ஒரு பங்கு நாடுகள் ஒரு தலைப்பட்சமான - மேற்கத்திய பொருளாதாரத் தடை களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இந்தத் தடைகள் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவைப் பெறவில்லை. தென்னாப்பிரிக்காவின் மீது நிறவெறிக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளைப் போல இவை எந்தக் கொள்கைக்காகவும் விதிக்கப்படவில்லை. எனவே தென் உலக நாடுகளிடையேயும், இலக்கு வைக்கப் பட்ட நாடுகளிடையேயும் டாலர் சார்பை குறைக்க வேண்டும் என்ற வலுவான விருப்பம் உள்ளது. இந்த விருப்பம் சமீபத்தில் பிரிக்ஸ் நாடுகளின் கசான் உச்சி மாநாட்டில் வெளிப்பட்டது. டாலர் சார்பை குறைப்பதற்கான விருப்பத்தை வலுப்படுத்துவதில் மேற்கத்திய தடைகள் முக்கியக்காரணமாகிறது என்பதை அமெரிக்க நிர்வா கமே ஒப்புக்கொள்கிறது. அமெரிக்க நிதியமைச்சர் ஜெனட் யெல்லன் ஜூலை மாதம் பேசுகையில், “அமெ ரிக்கா அதிக தடைகளை விதிக்கும்போதெல்லாம், அமெரிக்க டாலரை உள்ளடக்காத நிதிப் பரிவர்த்த னை முறைகளை பிரிக்ஸ் நாடுகள் தேடும்” என்று ஒப்புக்கொண்டார். அமெரிக்கா, டாலர் மேலாதிக் கத்தைப் பயன்படுத்தி நாடுகளை தன் வழிக்கு கொண்டு வருகிறது என்பதையும், இப்படி கட்டா யப்படுத்தப்படும் நாடுகளின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது என்பதையும் யெல்லனின் கருத்து மறைமுகமாக ஒப்புக்கொண்டது. ஒருதலைப்பட்சமான தடைகள் மூலம் மேலா திக்கத்தை செலுத்துவதில் ஒரு குறிப்பிட்ட இயக்க வியல் உள்ளது. எதிர்ப்பு காட்டும் ஒன்றிரண்டு நாடுகள் மீது தடைகள் விதிக்கப்பட்டால், முழு அமைப்புக்கும் அச்சுறுத்தல் இல்லாமல் அவை பயனுள்ளதாக இருக்க லாம். ஆனால் பல நாடுகள் மீது தடைகள் விதிக் கப்படும்போது, அமைப்பே அச்சுறுத்தலுக்கு உள்ளா கிறது. நவதாராளமயக் கொள்கைகளின் கீழ் நாடுகள் எதிர்கொள்ளும் இன்னல்கள் காரணமாக, காலப்போக்கில் எதிர்ப்பு காட்டும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளது. தடைக ளுக்கு உள்ளாகும் நாடுகளின் எண்ணிக்கை அதிக ரிக்கும்போது, டாலர் சார்பை குறைக்கும் போக்கும் தொடர்ந்து வலுப்படுகிறது.
ரஷ்யாவின் சாதுர்யம்
டாலர் மேலாதிக்கத்திற்கு மிக முக்கியமான அடிப்படை 1970களில் அமெரிக்காவுக்கும் எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம். சவூதி அரேபியாவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, எண்ணெய் விலை கள் டாலரில் குறிப்பிடப்படும், எண்ணெய் வர்த்தகமும் டாலரில் நடத்தப்படும். எண்ணெய்யின் முக்கி யத்துவம் காரணமாக இது டாலருக்கு பெரும் ஊக்கம் அளித்தது. சமீபத்தில் ரஷ்யா மீது மேற்கத்திய தடை கள் விதிக்கப்பட்டபோது, ரூபிள் நாணயத்தை சீர ழிப்பதே நோக்கமாக இருந்தது. ஆனால் தனது எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கான அனைத்து வரவு -செலவும் ரூபிளில் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்திய தன் மூலம் தனது நாணயத்தை காப்பாற்றியது.
டிரம்ப் மிரட்டல்
இந்தப்பின்னணியில், 1970களில் எண்ணெய் ஏற்றுமதியாளர்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் மட்டும் இப்போது டாலர் மேலாதிக்கத்தை உறுதி செய்ய போதுமானதாக இல்லை. முன்னர் டாலர் சார்பை குறைப்பது பற்றிய பேச்சுக்களை அலட்சியப்படுத்திய ஜெனட் யெல்லன் கூட இப்போது அதை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார். இந்த சூழலில், டாலரிலிருந்து விலகிச் செல்ல முயலும் நாடுகளின் மீது 100 சதவீத வரி விதிப்பதாக டொனால்டு டிரம்ப் மிரட்டியிருப்பது ஆச்சரியமல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டா யப்படுத்தும் அதிகாரம்தான் டாலர் மேலாதிக்கத்தின் பின்னணியில் இருக்கிறது என்பதை டிரம்ப்பின் மிரட்டல் படம்பிடித்துக் காட்டுகிறது. இத்தகைய கட்டாயப்படுத்தல் அமெரிக்காவுக்கு பயனுள்ளதாக இருக்க முடியும். ஏனெனில் டாலர் சார்பை குறைப்பது என்பது நேரம் எடுக்கும் செயல்முறை. இந்த காலகட்டத்தில் டாலர் சார்பை குறைக்க முயலும் நாடுகளின் அமெரிக்க ஏற்றுமதிகள் குறைக்கப்பட்டால், அவை கடும் டாலர் பற்றாக் குறையை சந்திக்க நேரிடும். டாலர் அல்லாத வரவு - செலவுகள் மூலம் தங்கள் இறக்குமதித் தேவை களை எப்படியோ சமாளித்தாலும், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி அல்லது மேற்கத்திய நிதி நிறுவ னங்களுக்கு டாலரில் செலுத்த வேண்டிய கடன்களை செலுத்த முடியாமல் போகும். எனவே டிரம்ப்பின் மிரட்டல் தீவிரமானது. ஆனால் குறுகிய காலத்தில் பயனுள்ளதாக இருக் கக்கூடிய இந்த மிரட்டலே, டாலர் மேலாதிக்கம் என்பது அமெரிக்காவுக்கு அடிமைப்படுவதைக் குறிக்கிறது என்பதை மேலும் பல நாடுகள் உணர வைக்கும். டிரம்ப்பின் மிரட்டலுக்குப் பிறகு, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் டாலர் சார்பை குறைப்பதில் தங்களுக்கு ஆர்வமில்லை என்று தெரிவித்துள்ளன. அமெரிக்கா வின் நல்லெண்ணத்தை தக்க வைத்துக் கொள்ள இது உடனடி நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால் ஏகாதிபத்தியம் தீவிரமான சவாலை எதிர்கொண் டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
நமக்கு என்ன தேவை?
டாலர் மேலாதிக்கத்திற்கு மாற்றாக வரவேண்டிய நிதிக் கட்டமைப்பு குறித்து பிரிக்ஸ் நாடுகளிடையே தற்சமயம் தெளிவான யோசனை இல்லை. உலகின் முற்போக்கு சக்திகள் உறுதி செய்ய வேண்டியது என்ன வென்றால், இந்த மாற்றம் வரும்போது டாலர் மேலா திக்கத்திற்கு பதிலாக வேறொரு நாணயத்தின் மேலா திக்கம், அல்லது வேறு ஏதேனும் நாடு அல்லது நாடுகளின் மேலாதிக்கம் வந்துவிடக் கூடாது. இதற்காக, டாலருக்கு பதிலாக வேறு ஏதேனும் நாணயம் - அது ஏற்கனவே இருக்கும் நாணயமாக இருக்கலாம் அல்லது புதிய பிரிக்ஸ் நாணயமாக இருக்கலாம் - வரும்போதும் அதே ஏற்பாடுகள் தொட ரக்கூடாது. விதிகளே மாற வேண்டும். பிரெட்டன் வுட்ஸ் அமைப்பின் கீழும், இப்போதும் இருப்பது போல பொரு ளாதாரச் சமநிலையை அடைய பற்றாக்குறை நாடு கள் மீது சரிகட்டும் சுமை விழுவதற்கு பதிலாக, உபரி நாடுகள் மீது அந்த சுமை விழ வேண்டும் என்பது முக்கியமான மாற்றங்களில் ஒன்று.
பீப்பிள்ஸ் டெமாக்ரசி (டிச.15),
தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்