articles

img

கணக்கோடு ‘கை’ கோர்க்கலாம் - மொ.பாண்டியராஜன்

இந்தா வந்திட்டிங்கள. ஹோம்வொர்க் கொடுத்துட்டீங்களான்னு சிலரு  எழுதியிருந்தீங்க. சிலரு கணக்கு  போட்டதுல சரியா வரலன்னு சொல்லியி ருந்தீங்க. சிலர் முயற்சி செய்திருந்ததை பார்க்க முடிந்தது. அனைவருக்கும் வாழ்த்து களும் பாராட்டுகளும். ஆனா ஒன்னும் மட்டும்  புரிஞ்சிருச்சு நீங்க கணக்கோடு கை கோர்த்திட்டீங்க. அப்படியே நடக்கலாம் வாங்க. 360 டிகிரி வட்டத்தில பல கோணங்களை நாம் உருவாக்க முடியும் தானே. ஒவ்வொரு முக்கோணத்திற்கும் கோணங்களின் கூட்டுத் தொகை 180 டிகிரி இருக்கும். ஒரு நேர் கோட்டில் உண்டாகும் கோணம் அதுவும் 180 டிகிரி தானே.  ஒரு டஜன் என்பது 12 தானே. 12 என்பதை 60/5=12 கிடைக்கிறது. 360 டிகிரியை எப்படி எழுதாலாம் 360/6=60 எனக் கிடைக்கிறது. 180 டிகிரியை எப்படி எழுதாலாம் 180/3=60

இவைகள் அனைத்தும் வடிவியல் சார்ந்தவை. இந்த வடிவியில் சார்ந்தவை தான் அவர்களை குடிசை அமைக்கவும், கால்வாய்கள் வெட்டவும், வானியல் சார்ந்த ஆய்வுகளை செய்வதற்கான ஆயுதங்களை செய்வதற்கும் பயன்படுத்தி இருக்காங்க. அத்தோடு மட்டுமல்லாம ஒரு மணிக்கு 60 நிமிடங்களாகவும், ஒரு நிமிடத்திற்கு 60 விநாடியாகவும் கணக்கிட்டனர். ஒரு நாளைக்கு 24 மணிநேரம் எனக் கணக்கிட்டடனர். (24 = 60x0.4) இவைகளை நாம் இன்றளவும் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் கூட நாம வடிவியல் படிக்கும் போது தடுமாறத்தான் செய்கிறோம். ஆனால் யாருமே சொல்லித்தராத அந்த காலத்துல இத எதுவுமே படிக்காதவங்கதான் புது புதுசா கண்டுபிடிச்சி பதிவு செஞ்சு வச்சிருக்காங்க. அதனால் நாம தெளிவாக தெரிஞ்சுக்க முடியும். பாபிலோனியர்கள் மட்டுமல்ல சுமேரி யர்களும் அறுபதை அடிப்படையாக கொண்டே  கணக்குகளை செய்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய வரிவடிவங்களை அவர்கள் பதிவு செய்த களிமண் தட்டிலிருந்து தெரிந்து கொள்ளலாம். களிமண் தட்டில் 1,10,60,3600 ஆகிய நான்கே நான்கு எண் குறியீடுகள் உள்ளது. இது அதனை உறுதி செய்கிறது. சுமேரியர்கள் கை விரல்களை கொண்டே  எண்களை அறிந்து உள்ளனர். ஒரு கை விரலை வைத்து ஐந்து வரை எண்ணலாம். மறு கையில் உள்ள விரல் கண்டங்களை ஐந்து ஐந்தாக வைத்து சேர்த்து மொத்தம் 5x12=60 என்ற அடிப்படையில் சுமேரிய முறை தோன்ற அடிப்படையாக இருக்கலாம்.  சுமேரியர்களை தொடர்ந்தே பாபிலோனி யர்கள் அதை மேம்படுத்தி பயன்படுத்தி வந்துள்ளனர்.

சுமேரியர்கள் மற்றவர்களோடு ஒப்பிடும் போது மிகவும் கருப்பா இருந்தார்கள். அதனால்  அவர்கள் தங்களை கருப்பு தலை மக்கள்ன்னு சொல்லிக்கிட்டாங்க. மண்பானை செய்யுற சக்கரம், சக்கரம்,  கலப்பை, சுயமாக விதைக்கும் கலப்பை, பாய்மரம் இதையெல்லாம் முதன் முதலில்  கண்டுபிடிச்சது இவர்கள் தான். இதுக்கெல் லாம் காரணம் என்ன? அவங்களோட கணக்கு அறிவுதான். சுமேரியர்கள் தான் காலண்டரை கண்ட றிந்தவர்கள். இவர்கள் கண்டறிந்த காலண்டர்  சந்திர காலண்டர். சந்திரனின் தோற்றம் மறைவுக்கு நீண்ட எண்ணிக்கை தேவைப்  பட்டது. பெரிய எண்ணை எப்படி விளக்குற துன்னு யோசிச்சாங்க. அதை எப்படி எளிய தாக்குவதுன்னும் யோசிச்சாங்க. அப்போது தான் அவங்களுக்கு ஒரு யோசனை தோனுச்சு  ஒவ்வொன்னுக்கும் ஒரு சின்னம் கொடுக்க லாமுன்னு. கோதுமையை போட்டு வைக்கிற  இடத்துக்கு ஒரு சின்னம். எண்ணை ஜாடி  வைக்கிறதுக்கு ஒரு சின்னம் என சின்னங் களை முதன் முதல பயன்படுத்துனவங்க இவுங்கதான். ஒன்றுக்கு ஒரு சிறிய களிமண் கூம்பு பத்துக்கு ஒரு களிமண் பந்து

அறுபதுக்கு ஒரு பெரிய களிமண் கூம்பு இப்படி சின்னங்களை பயன்படுத்தினாங்க. பின்னாளில் இது குறியீடாக வந்திருச்சு. நான் முன்பே சொன்னது போல காலத்தை கணக்கிடும் முறை கண்டறிந்தவர்கள் சுமேரி யர்கள். அவர்கள் கையாண்ட முறை யைத்தான் நாம் இப்போம் கடைபிடித்து வரு கிறோம். 12 சந்திர மாதங்களும், 3 வருடத்திற்கு  ஒரு முறை 1லீப் வருசத்தையும் கண்டு பிடித்தவர்கள் இவர்கள்தான். இவர்கள் தான் நாள்காட்டியை வடிவமைத்தவர்கள். நாம கையில் கட்டும் கடிகாரம் வட்டமாக  இருக்கு தானே. அது எப்படி வந்துச்சுன்னா சுமே ரியர்களின் 60 அடிமான எண்ணிலிருந்து தான். இந்த வட்ட வடிவம் பூமியின் வட்டப் பாதை யின் சிறிய வடிவம் என்றால் மிகையாகாது. 60 என்ற எண்ணால் வடிவமைக்கப்பட்ட சுமே ரியர்களின் காலக் கணக்கீடு இத்தனை ஆண்டுகள் கழித்தும் நம்மால் பயன் படுத்தப்படுவது என்பது கணக்கோடு கை கோர்த்து நடந்ததாலே தானே. நானும் அத்தோடு கை கோர்த்து செல்லலாம். ஒரு சின்ன செயல்பாடு செய்து பார்க்க லாமா? காலையில ஒரு நேரத்தை ஒதுக்கிங்க.  சுமார் 8 மணின்னு வச்சுக்கலாம். இப்போ நீங்க சூரியனை பார்த்து நில்லுங்க. உங்க நிழல் எந்த பக்கம் விழும்? ம் சரியா சொன்னீங்க. உங்களுக்கு பின்னால விழும். இப்போ ஒரு டேப்பை கொண்டு உங்க நிழலை அளங்க. அத ஒரு பேப்பரில் குறிச்சுக்கொங்க. உங்க  உயர்தையும் குறிச்சிக்கங்க. இந்த அளவு களை ஒரு பேப்பரில் வரைந்து கொள்ளுங்கள். இப்போ உங்க தலையிலிருந்து, நிழல் தலை  வரை கோடு போங்க. நீங்க புதுசா கோடு போட்டீங்கள, அதன் நீளம் என்ன? கண்டு பிடிச்சு ஒரு போஸ்டு கார்டு போடுங்க. இது தான் பிதாகராஸ் தேற்றம் என்பது.