ஒகேனக்கல்லில் நடைபெற்ற சிஐடியு மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
காலிப் பணியிடங்களை நிரப்புக!
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான அரசு போக்கு வரத்து, மின்சாரம், நுகர் பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களிலும், அங்கன்வாடி திட்டத்திலும், அரசுத் துறைகளிலும் காலியாக உள்ள நிரந்தரப் பணியிடங்களை நிரப்பாமல் ஒப்பந்த முறை, அவுட்சோர்சிங் போன்ற பல பெயர் களில் அத்துக்கூலிகளாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை ஈடுபடுத்தி வருவதை கைவிட்டு அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்பிட சிஐடியு வலியுறுத்துகிறது.
குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்திடுக!
தமிழ்நாடு அரசு குறைந்தபட்ச ஊதியச்சட்டம் 1948ன் கீழ் 54 தொழில்களை அட்டவணைப் படுத்தி குறைந்தபட்சம் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை விலைவாசி அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை மறுநிர்ணயம் செய்து வருகிறது. இதில் 10க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு 7 ஆண்டுகள் கடந்த பிறகும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்படாமல் உள்ளது. குறிப்பாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் தொழிலுக்கு 2022ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து முதனிலை அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை நாள் இறுதி அறிவிக்கை வெளியிடப்படவில்லை. இது போன்று 2022 ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட பீடித் தொழிலாளருக்கான 12(3) ஊதிய ஒப்பந்தப் படியான கூலி உயர்வுக்கு குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் அரசாணை வெளியிடப்படாமல் உள்ளது. மேலும் தோட்டத்தொழிலாளருக்கு நிர்ண யம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை எதிர்த்து தோட்ட போனஸ் கோரிக்கைகள்: தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துக! முதலாளிகள் தடையாணை பெற்றுள்ளனர்.இத னால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளதை அரசு கருத்தில் கொண்டு குறைந்த பட்ச ஊதியத்துக்கான அரசாணைகளை வெளியிட்டு அமலாக்க வேண்டும் என்று சிஐடியு வற்புறுத்துகிறது.
கட்டுமான நல வாரிய முடிவுகளை நிறைவேற்றுக!
கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் முத்தரப்புக் கூட்ட முடிவுகள் அரசுக்கு பரிந்துரைக் கப்பட்டு பல மாதங்களாகியும் எந்தவித நடவடிக்கை யும் எடுக்காமல் உள்ளது. குறிப்பாக ஓய்வூதியம் ரூ.2000, 55 வயதில் பெண் தொழிலாளருக்கு ஓய் வூதியம், பண்டிகைக் கால போனஸ் உள்ளிட்ட தொ ழிலாளர் பணப்பயன் சார்ந்த முடிவுகள் அமலாக் கப்படாமல் உள்ளன. மேலும் கட்டுமான நல வாரிய நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த வாரி யத்தின் முத்தரப்புக்கமிட்டியை கூட்டாமல் முடிவு களை தன்னிச்சையாக அறிவிப்பது பொருத்த மற்றது. குறிப்பிட்ட கால இடைவெளியில் வாரியத்தை கூட்டாமல் இருப்பது தொழிலாளர்களது பிரச்சனை கள் மற்றும் கோரிக்கைகளை விவாதிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு கூடுதல் தலையீடு செய்து வாரிய முடிவுக ளை அமலாக்கவும், வாரியத்தை கூட்டவும் நட வடிக்கை எடுத்திட வேண்டும்.
போனஸ் கோரிக்கைகள்: தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துக! '
மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கான போனஸ் கோ ரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி அறிவிக்கும் நடைமுறை கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கைவிடப்பட்டு தன்னிச்சையாக அறிவிக்கும் போக்கு புகுத்தப் பட்டது. அதே நிலைபாட்டை தற்போதைய அரசும் பின்பற்றி வருவது தொழிலாளர்கள் மத்தியில் அதி ருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எதிர் வரும் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுத்துறை நிர்வாகங்க ளுக்கு தொழிற்சங்கங்கள் போனஸ் கோரிக்கை அளிக்கவுள்ளன. இந்த கோரிக்கைகள் மீது சம் பந்தப்பட்ட பொதுத்துறை நிர்வாகங்கள் தொழிற் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போனஸ் அறிவிக்க தமிழ்நாடு அரசு உரிய வழிகாட்டுதலை செய்திட வேண்டும்.
உள்ளாட்சி தொழிலாளர் ஊதியக் குறைப்பை கைவிடுக!
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர், ஒப்பந்த/ தினக்கூலி/ தொகுப்பூதியம் மற்றும் அவுட்சோர்சிங் போன்ற பல்வேறு பெயர்களில் உள்ள தொழிலா ளர்களுக்கு 16.6.2023-இல் வெளியிடப்பட்ட குறைந்தபட்ச ஊதிய அரசாணையில் அடிப்படை சம்பளம், பஞ்சப்படி குறைக்கப்பட்டுள்ளது. நியாய மற்ற இந்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அரசாணை க்கு தடைவிதித்து, ஏற்கனவே உள்ள அரசாணை யின்படி ஊதியம் வழங்கவும் உத்தரவு பிறப் பித்துள்ளது. தமிழ்நாடு அரசு நீதிமன்ற உத்தரவின்படி, செப்டம்பர் மாதம் முதல் முந்தைய அரசாணையின் படியான ஊதியத்தை நகராட்சிகள் நிர்வாக இயக்கு நர், பேரூராட்சிகளின் நிர்வாக இயக்குநர், ஊரக வளர்ச்சி இயக்குநர் உள்ளிட்ட உள்ளாட்சி அமை ப்பு துறைகள் வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிராமப்புற ஊராட்சி அமைப்புகளில் பணிபுரி யும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண் டிய மாத சம்பளம் காலம் கடந்து வழங்கப்படுகிறது. சில இடங்களில் மூன்று மாதகாலம் கடந்து வழங் கப்படுகிறது. தமிழ்நாடு அரசு உள்ளாட்சித்துறை க்கு கூடுதல் நிதி ஒதுக்கி, மாதச் சம்பளத்தை முறை யாக வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
ஆன்லைன் அபராதம்: ரத்து செய்திடுக!
மோட்டார் வாகன சட்டத்திருத்தம் என்ற பெயரில் வாகன ஓட்டிகளிடம் அதீத அபராதத் தொகை வசூலிக்கப்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், மூன்று சக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகன ஓட்டி கள் என பல தரப்பட்ட ஓட்டுநர்களிடம் ஆன்லைன் அபராதம் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் அர சுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. சாலை விதிகள் பின்பற்றவும், தலைக் கவசம் அணி வதின் அவசியம் குறித்து தொடர் விழிப்புணர்வு பிரச் சாரத்தின் மூலம் வாகன ஓட்டிகளை ஒழுங்குபடுத்த உரிய நடவடிக்கையினை அரசு மேற்கொள்ள முன்வர வேண்டும். வாகன ஓட்டிகளை பெரிதும் பாதிக்கும் ஆன்லைன் அபராதம் வசூலிக்கும் முறை ரத்து செய்யப்பட வேண்டும். பயணிகள் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க வாகனமாக உள்ள ஆட்டோ ரிக்சா பயணத்திற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய தமிழ்நாடு அரசின் சார்பில் செயலி உருவாக்கி அமல்படுத்த வேண்டும். வல்லூர் அனல்மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துக! சென்னையை அடுத்த மீஞ்சூர் பகுதியில் இயங்கி வரும் ஒன்றிய-மாநில அரசுகளின் கூட்டு நிறுவமான என்.டி.இ.சி.எல்.நிறுவனத்தில் கடந்த 12 ஆண்டுகளாக மின் உற்பத்திப் பணிகள் அனைத் திலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒரு நிரந்தரத்தொழிலாளி கூட இல்லாமல் இருப்பது சட்டவிரோதமானதாகும். முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டிய நிறு வனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் அப்பட்ட மாக மீறப்படுகிறது. வல்லூர் அனல்மின்நிலைய தொழிலாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்திட வேண்டுமென்று பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியும் அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கண்டித்து வருகிற சட்ட மன்ற கூட்டத்தொடரின்போது சட்டமன்றத்தை நோக்கி பேரணி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் தமிழ்நாடு அரசு தலையிட்டு சுமூக தீர்வை காண முன் வர வேண்டும்.
மீனவர் நல வாரியத்தில் தொழிற்சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குக!
தமிழ்நாடு அரசின் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்படும் மீனவர் நல வாரியத்தில் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்காமல் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சமூகரீதியிலான அமைப்புகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது கண்ட னத்திற்குரியது. தமிழ்நாடு அரசு மீனவர் நலவாரி யத்தில் தொழிற்சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கவும், வாரியத்தை முறையாகச் செயல் படுத்த தனி அலுவலகம், அலுவலர்கள், ஊழியர் கள் நியமனம் செய்ய உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கு உரிமை வழங்குக! தமிழ்நாட்டில் ஏரி, குளம் போன்ற நீர் நிலைக ளில் மீன்பிடித்து வாழ்ந்து வரும் உள்நாட்டு மீன வர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பொது பணித்துறை மூலம் பொது ஏலம் விடப்பட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து 60க்கும் மேற்பட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையும் உத்த ரவை ரத்து செய்து கூட்டுறவு சங்கங்களுக்குதான் மீன்பிடிக்கும் உரிமை வழங்கவேண்டும் என தீர்ப்ப ளித்தது. தமிழ்நாடு அரசு இந்த தீர்ப்பின்படி உள் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்திடவேண்டும். மிரட்டும் ஒப்பந்ததாரர்கள் இராமநாதபுரத்தில் சந்தைகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் அதிகாரிகளிடம் பொய்யான தகவல்களை அளித்து இடத்தை காலி செய்ய நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். இதனால் சந்தை வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையா கப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனையில் தமிழ்நாடு அரசு சாலையோர வியாபாரிகள் பாது காப்புச் சட்டப்படி சந்தை வியாபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.