articles

இஸ்ரேலின் யூத இனவெறிக்கு ஆதரவாக பாஜகவின் இந்துத்துவா மதவெறி

க ேரளாவின் களமச்சேரியில் கிறித்தவக் குழு ஒன்றின் கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததை அடுத்து கேரளத்தை மதவெறியர்களின் தலைநகர் என அறிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருப்பது, காசா மீதான இஸ்ரேல் யுத்தம் சம்பந்தமாக ஆர்எஸ்எஸ்-பாஜக வகையறாக்கள் மேற்கொள்ளும் பிரச்சாரத்தின் விஷத்தன்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.

சந்திரசேகர், கிறித்தவர்கள் குழுமியிருந்த கூட்டத்தில் குண்டு வெடித்த உடனேயே இது ஜிகாதி களின் கைவரிசை என்று குறிப்பிட்டு, கேரள அர சாங்கத்தைக் குறை கூறினார். ஏனெனில் அரசுதான் ஹமாஸ் தலைவரை அந்தக் கூட்டத்தில் உரை நிகழ்த்த “அனுமதித்ததாம்”. அதனால்தான் அவர் உரை நிகழ்த்திய 24 மணி நேரத்திற்குள்ளாகவே  அங்கே குண்டு வெடிப்புகள் நடந்துள்ளதாம். மேலும் அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் முஸ்லீம்களை “முகஸ்துதி செய்திடும் அரசியலை” நடத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். 

ஒன்றிய அமைச்சரின் துரதிர்ஷ்டம்

இவர் குறிப்பிடும் உரையானது, முன்னாள் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) பேசியுள்ள பேச்சு. இது இணையத்தில் கிடைப்ப தாலும், எவர் வேண்டுமானாலும் அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். எனவே, ஹமாஸ் தலைவரின் பேச்சை “அனுமதித்துள்ளார்கள்” என்ற கேள்விக்கே இடமில்லை. மேலும், சந்திரசேகரும், அவருடைய கட்சியினரும் கூறுவது போல், ஹமாஸ் என்பது ஐ.நா.மன்றத்தால் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கூறப்படவில்லை.

குண்டு வெடித்த ஒருசில மணி நேரத்திற்குள்ளா கவே, தாக்குதலுக்குப் பொறுப்பேற்று, காவல் துறையினர் முன்பு ஒருவர் சரணடைந்திருப்பது மேற்படி சந்திரசேகரின் துரதிர்ஷ்டமேயாகும். அந்த நபர் சிறிய கிறித்தவக் குழு ஒன்றின் அதிருப்தியுற்ற உறுப்பினராவார். இது சந்திரசேகருக்குக் கேலிக்குரி யதுபோல் தோன்றினாலும், அவரது கருத்துக்களின் விஷத்தன்மையை கண்டுகொள்ளாமல் ஒதுக்கிட முடியாது. ஏனெனில், பாஜக மற்றும் இந்துத்துவா பேர்வழிகளுடன் இணைந்துள்ள சமூக ஊடகக் குழுக்கள் அனைத்தும் பாலஸ்தீன எதிர்ப்பு மதவெறிப் பிரச்சாரத்தை இந்த விதத்தில்தான் நடத்திக்கொண்டிருக்கின்றன.

தாயகத்தின் உரிமையும்  இனச் சுத்திகரிப்பு யூத இனவெறியும்

அவர்கள் பாலஸ்தீனர்கள் அனைவரையுமே ஜிகாதிகள் என்றும் ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் முத்திரை குத்திக்கொண்டிருக்கி றார்கள். இஸ்ரேல் எப்படி பயங்கரவாத வன்முறையை அனுபவித்துக்கொண்டிருக்கிறதோ அதே போன்றே அச்சுறுத்தல்களை இந்தியாவில் முஸ்லீம்க ளிடமிருந்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று இந்துக்களை எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். பாலஸ்தீனர்களும், ஹமாசும் அட்டூழியங்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று ஜோடிக்கப்பட்ட செய்திகளைக் கூறி முஸ்லீம்களுக்கு எதிராக ‘இஸ்லாமோஃபோபியா’ (‘Islamophobia’) என்னும் வெறியை விரிவான அளவில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய பயங்கரவா தத்தை எதிர்த்துப் போராடுவதில் இஸ்ரேலை ஒரு முன்மாதிரியாக இவர்கள் கருதுகிறார்கள்.

இத்தகைய இவர்களின் உலகளாவிய மதவெறிக் கண்ணோட்டத்தின் காரணமாகத்தான், சுதந்திர நாடு கோரி போராடிவரும் பாலஸ்தீனர்களின் போராட்டத்தை இவர்கள் ஒரு முஸ்லீம் பிரச்சனை யாகப் பார்க்கிறார்கள். பாலஸ்தீனர்களை அவர்களின் தாயகத்திலிருந்து இனரீதியாக அழித்தொழிக்க முயலும் யூத இனவெறித் திட்டத்தை இயல்பாகவே ஆத ரிக்கிறார்கள். உரிமைகளுக்காகப் போராடும் பாலஸ்தீனர்களை “பயங்கரவாதிகள்” என்று அழைக்கும் யூத தீவிரவாதிகள் மற்றும் இஸ்ரேலிய அரசின் சொல்லாடல்களை ஆர்எஸ்எஸ்-பாஜக அப்படியே ஏற்றுக்கொள்கிறது. 

சாவர்க்கர் காலத்திலிருந்தே...

இந்துத்துவா சித்தாந்தத்தை நிறுவிய வி.டி.சாவர்க்கரின் காலத்திலிருந்தே, இந்துத்துவாவாதிகள் யூத இனவெறியையும், பாலஸ்தீனத்திலிருந்து அரேபி யர்களையும், பாலஸ்தீனர்களையும் விரட்டியடித்து விட்டு அங்கே இஸ்ரேல் நாடு நிறுவப்படுவதையும் ஆதரித்தே வந்திருக்கிறார்கள்.

இந்த இந்துத்துவா உலகக் கண்ணோட்டம்தான் இன்றையதினம் மோடி அரசாங்கத்தின் நிலைப்பா டாகும். இதுதான், ஜோ பைடன், ரிஷி சுனக் மற்றும் ஓலாஃப் ஸ்கோல்ஸ்  ஆகியோர் போலவே இஸ்ரேலை முழுமையாக ஆதரித்திடவும், காசா மீதான யுத்தத்தை நிறுத்திடக்கோரி வரும் எவ்விதமான அறை கூவலையும் எதிர்த்திடவும் நரேந்திர மோடியை இட்டுச் சென்றிருக்கிறது.  ஐக்கிய நாடுகள் பொது மன்றத்தில் 120 நாடுகள் ஆதரவு அளித்திட்ட “மனிதா பிமான போர்நிறுத்த” தீர்மானத்திற்கு ஆதரவு அளித்திடாமல் இந்தியா விலகிக் கொண்டதன் மூலம், தெற்கு உலக நாடுகளின் நிலைப்பாட்டிலிருந்து விலகி, இஸ்ரேலுக்குக் கண்மூடித்தனமாக ஆதரவு அளித்துவரும் மேற்கத்திய நாடுகளுடன் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.

அகதிகள் முகாம் மீதான குண்டுவீச்சுக்குப் பின்னும்...

காசா மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், இந்திய அரசாங்கம் இஸ்ரேல் ஆயுதப் படையினர் மேற்கொண்டு வரும் யுத்தக் குற்றங்கள் குறித்து வாயே திறக்காமல் மவுனமாக இருக்கிறது. வடக்கு காசாவில் ஜபாலியா அகதிகள் முகாமில் காட்டுமிராண்டித்தனமான குண்டுவீச்சுக்குப்பின்னர், (இந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்), ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த சில நாடுகளின் அயல்துறை அமைச்சர்கள் கூட யுத்தம் தொடர்பான சர்வதேச சட்டங்களை இஸ்ரேல் மதித்து நடந்திட வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். ஆயினும் இந்திய அயல்துறை அமைச்சகமோ வாயே திறக்கவில்லை. 

மோடி அரசாங்கம், தனி நாடு கோரி போராடிவரும் பாலஸ்தீனர்களையும், இஸ்ரேலையும் சமமாகவே பாவித்துவருகிறோம் என்று இதுவரை காட்டிவந்த பாசாங்குத்தனத்தை இப்போது கைவிட்டுவிட்டது.  

வெறுக்கத்தக்க நேதன்யாகு ஆட்சிக்கு காசாவில் மக்களைக் கொன்று குவித்திடவும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பட்டினிக் கொடுமைக்குள் தள்ளுவதற்கும், குடிப்பதற்குத் தண்ணீர்கூட அளிக்காது கொடுமைப்படுத்துவதற்கும் அமெரிக்கா  முழு அனுமதி அளித்திருக்கிறது.

92 வயது முதியவர் கைது

இஸ்ரேல் மேற்கொண்டு வரும் மனிதாபி மானமற்ற போர் நடவடிக்கைகளுக்கு மோடி அரசாங்கம் உடந்தையாக இருந்து வருகிறது. மிகவும் கொடூரமான முறையில் பாதிப்புக்கு உள்ளாகி யிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு அளிக்கா தது மட்டுமல்ல, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவா கவும், இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் நடை பெற்றுவரும் மக்கள் போராட்டங்களை நசுக்கிடும் வேலையிலும் ஒன்றிய மோடி அரசாங்கமும், பாஜக ஆளும் மாநில அரசாங்கங்களும் இறங்கி யிருக்கின்றன. இதில் சமீபத்திய உதாரணம், ஜம்முவில் 92 வயதுள்ள முன்னாள் ஜனசங்கத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவர், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு கோரி கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காகக் கைது செய்யப்பட்டிருப்பதாகும்.  

போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் அர சாங்கம் மறுத்திருப்பதால், காசாவில் நடைபெறும் யுத்தம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கக் கூடும். எனவே, பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்தும், இந்தப் பிரச்சனையில் மோடி அரசாங்கத்தின் பிற்போக்கு மற்றும் மதவெறி நிலைப்பாட்டைத் அம்பலப்படுத்திக் காட்டக்கூடிய விதத்திலும் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் தங்கள் பிரச்சாரத்தை மேலும் விரிவான அளவில் முடுக்கிவிட வேண்டியது அவசியமாகும். நவம்பர் 2, 2023 தமிழில் : ச.வீரமணி