இன்றைய சூழ்நிலையில் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது. பாஜக-வைப் பொறுத்தவரைக் கும், கர்நாடக மாநிலத்தில் தன் அரசியல் ஆதிக் கத்தை நிலைநிறுத்திக்கொள்ளத் துடியாய்த் துடிப்பது, இதர தென்னிந்திய மாநிலங்களில் தன் செல்வாக்கைப் பரப்புவதற்கான ஆசைக்கு முக்கியமாகும். தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் இருக்கக்கூடிய இந்த சமயத்தில் பாஜக, செல்லுமிடமெல்லாம் ஆட்சிக்கெதிராக மக்களிடம் காணப்படும் கோபத்தை எதிர்கொள்ள முடியாது தத்தளிக்கிறது. அதன் ஊழல் முடைநாற்றமெடுத்து வீசுவதன் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை அது நாள்தோ றும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கி றது. இத்துடன் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விவசாயிகளின் அவலநிலை ஆகியவற்றுக்குப் பதில் சொல்ல முடியாமல் திண்டாடுவதும் நன்கு தெரிகிறது.
பாஜக, 2019 ஜூலையில், காங்கிரஸ்-மதச்சார் பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசாங்கத்தை, “ஆப ரேஷன் கமலா” என்னும் திட்டத்தின்மூலமாக ஆளும் கூட்டணியில் கட்சித் தாவல் நடவடிக்கைகள் மேற் கொண்டு கவிழ்த்த பின்னர், ஆட்சியை அமைத்தது. அதன்பின்னர், கடந்த நான்கு ஆண்டுகளில், கர்நாடக மாநிலம் இரண்டு முதலமைச்சர்களையும், மூன்று துணை முதலமைச்சர்களையும் பார்த்து விட்டது. பி.எஸ்.எடியூரப்பா, 2021 ஜூலையில் பசவராஜ் பொம்மைக்கு வழி விட வேண்டியிருந்தது. பொம்மை அரசாங்கம் ஊழல் சேற்றில் புரண்டுகொண்டிருப்ப துடன், கொஞ்சமும் தகுதியற்ற ஒன்று என வரலாறு படைத்துவிட்டது. மதச்சார்பற்ற ஜனதா தளத்திலி ருந்து, பாஜக-விற்குத் தாவிய பொம்மை, தான் ஒரு வெறித்தனமிக்க இந்துத்துவா நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றுவதன் மூலம் பாஜக-விற்குத் தன் விசுவா சத்தைக் காட்டிக்கொள்ள விரும்பினார்.
மதவெறி நடவடிக்கையில் உ.பி., குஜராத்தை மிஞ்ச முயற்சி
பொம்மை அரசாங்கமானது, மக்கள் மத்தியில் பெரும்பான்மை உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்திட எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி பிரச்சாரம் மேற்கொண்டதைப் பார்த்தோம். பிரதானமாக முஸ்லீம்கள் மேற்கொண்டுவந்த இறைச்சி வர்த்த கத்தில் பல்வேறு சீர்குலைவு நடவடிக்கைகள் கொண்டு வந்தது, மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதற்குத் தடை ஏற்படுத்தியது. கிறித்தவர்களுக்கு எதிராக மிகக் கொடூரமான மதமாற்றத் தடைச் சட்டத்தை நிறை வேற்றியது. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் முஸ்லீம் சிறுமிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்தது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் முஸ்லீம்களுக்கு இருந்த 4 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. திப்பு சுல்தான் பிரிட்டிஷாரால் கொல்லப்பட்டார் என்கிற வரலாற்றையே இப்போது திரித்து எழுதும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. அவர் புராணங்களில் வரும் ஒக்காலிகர்களால் கொல்லப்பட்டார் என்று வர லாற்றையே திரிப்பதற்கான முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். கர்நாடகாவில் தற்போது ஆட்சி யாளர்கள் மேற்கொண்டுவரும் இந்துத்துவா மதவெறி நடவடிக்கைகள் உத்தரப்பிரதேசம், குஜராத் மாநில அரசாங்கங்களையெல்லாம் விஞ்சும் விதத்தில் அமைந்திருக்கிறது.
நாற்றமெடுக்கும் 40 சதவீத ஊழல்
எனினும், இவர்களின் முடைநாற்றமெடுக்கும் ஊழல், கார்ப்பரேட் ஆதரவு, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோதக் கொள்கைகள் மேலோங்கி யிருப்பதன் காரணமாக, இவர்களுடைய இந்துத்துவா மதவெறி நடவடிக்கைகள் அவற்றின்கீழ் அமுங்கிக் கிடக்கிறது. பொம்மை அரசாங்கத்தில் லஞ்சத்தின் கமிஷன் அளவு 40 விழுக்காடாக மாறி இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டைக் கூறுவது யார் தெரியுமா? மாநில ஒப்பந்தக்காரர்கள் சங்கம்தான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது. எந்தத் துறை யாக இருந்தாலும், எந்த அமைச்சகமாக இருந்தாலும் மொத்தம் உள்ள பில்லின் தொகையில் 40 விழுக் காட்டை லஞ்சமாகக் கொடுத்தால்தான் அந்த பில்க ளுக்கான பணம் ஒதுக்கப்படும் என்று வெளிப்படை யாக அது கூறியிருக்கிறது. அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா கேட்ட லஞ்சத் தொகையைக் கொடுக்க முடியவில்லை என்று கூறி ஒப்பந்தக்காரர், சந்தோஷ் பட்டீல், என்பவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். மேலும் சமீபத்தில் பாஜக எம்எல்ஏ ஒருவரும், அவருடைய மகனும் லஞ்சம் கேட்டார்கள் என்பதற்காக, லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் இல்லங்களிலிருந்து 8 கோடியே 10 லட்சம் ரூபாய் ரொக்கமாகக் கைப்பற்றி இருக்கி றார்கள்.
விவசாயத்தில் கார்ப்பரேட்டுகள்...
இவ்வாறு இவர்கள் நிறுவனரீதியாக லஞ்ச நடவ டிக்கைகளில் ஈடுபட்டு, மக்களைப் பல வழிகளிலும் சூறையாடும் அதே சமயத்தில், விவசாயிகள் விரோதக் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தி வரு கின்றனர். விவசாய நிலங்களை, விவசாயம் அல்லாத பயன்பாடுகளுக்காகவும் பயன்படுத்தும் விதத்தில் நிலச் சீர்திருத்தச் சட்டம் திருத்தப்பட அனுமதித்தி ருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் விவசாயச் சட்டம் நிறைவேற்றப்பட்டதுபோல் மாநிலத்தில் வேளாண் வர்த்தகத்தில் கார்ப்பரேட்டுகள் நுழைவதற்கு வகை செய்யும் விதத்தில் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டு, பலவீனப் படுத்தப்பட்டிருக்கின்றன. அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயர்வும், சமையல் எரி பொருள்களின் விலை உயர்வுகளும் ஏழை மக்க ளுக்குப் பெரும் பிரச்சனைகளாக மாறி இருக்கின் றன. ஆட்சியாளர்களின் ஊழல், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை மாபெரும் பிரச்சனைகளாக விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன.
முஸ்லீம்களுக்கு எதிராக...
மாநிலத்தில் உள்ள ஆட்சிக்கு எதிராக மக்களின் கோபாவேசம் அதிகரித்திருப்பதை நன்கு அறிந்துள்ள பாஜக மத்தியத் தலைமை, இந்துத்துவா பிரிவினை நிகழ்ச்சிநிரலை தூக்கிப்பிடித்திட திட்டமிட்டிருக்கிறது. அமித்ஷாவும் நரேந்திர மோடியும்தான் இதற்கான பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள். தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று பீற்றியி ருக்கிறார். அதுமட்டுமல்ல, காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாநிலத்தில் கலகம் வெடிக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார். நரேந்திர மோடி, காங்கிரஸ் தலை மையானது பயங்கரவாதிகளைப் பாதுகாக்கிறது என்றும், முகத்துதி செய்பவர்கள்தான் அதில் இருக்கி றார்கள் என்றும் கூறியிருக்கிறார். பாஜக-வின் தேர்தல் அறிக்கையானது, பொது சிவில் சட்டம் மற்றும் குடி மக்களுக்கான தேசியப் பதிவேடு கொண்டுவரப்படும் என்று கூறுகிறது. கோவில்களைச் சுற்றி உள்ளூர் வர்த்த கங்கள் முறைப்படுத்தப்படும் என்றும் கூறியிருக்கி றது. இதன் பொருள், கோவில்களின் அருகே முஸ்லீம்கள் கடைகள் வைத்திட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதாகும். பாஜக இதுவரை கடைப்பிடித்துவந்த வழக்கமான உத்திகள் மற்றும் கோஷங்கள் அதற்குப் பெரிய அளவிற்கு உதவிடவில்லை என்பது நன்றாகவே தெரி கிறது. ‘இரட்டை இன்ஜின் சர்க்கார்’ என்னும் கோஷம் முற்றிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இவர்களின் இந்துத்துவா வெறிப் பிரச்சாரத்திற்கு பெரிய அளவில் மக்கள் ஏமாறவில்லை. குறிப்பிட்ட ஒருசில பகுதிகளில் மட்டுமே அது எடுபட்டிருக்கிறது. விரிவான அளவில் மக்களிடம் அது செல்ல முடியவில்லை. கடற்கரை மாவட்டங்கள் மற்றும் மத்தியில் சில பகுதிகள் மற்றும் மாலானாட் பிராந்தியத்தில் மட்டும் சற்றே எடுபட்டி ருக்கிறது. மேலும், பாஜக, லிங்காயத்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கவில்லை எனக்கூறி அதன் முக்கியமான தலைவர்களில் சிலர் பாஜக-வை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.
மொழி அடையாளத்தை அழிக்க முயலும் பாஜக
மேலும் இவர்களின் இரட்டை இன்ஜின் கோஷத்தால், அனைத்தையும் மத்தியத்துவப் படுத்தும் போக்கிற்கு எதிராக, இப்போது கன்னட அடை யாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வும் இந்தத் தேர்தலில் முன்னுக்கு வந்திருக்கிறது. ஒன்றிய அரசாங்கத்தின் போட்டித்தேர்வுகள் அனைத்திலும், கன்னட மொழியைப் புறக்கணித்துவிட்டு, இந்தியைத் திணித்திடும் இவர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அதேபோன்று, ‘அமுல்’ பால் நிறுவனத்தை, கர்நாடக பால் கூட்டுறவு சம்மேள னத்துடன் இணைத்திடும் இவர்களின் பேச்சானது தங்கள் மாநிலத்தில் புகழ்பெற்று விளங்கும் ‘நந்தினி’ அடையாளத்திற்கு ஆபத்தை ஏற்படுத்திடும் என்ற எண்ணமும் இவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
இமாச்சல் வழியில் தோல்வி உறுதி
இவ்வாறு எந்தப்பக்கம் திரும்பினாலும் அடி விழுவதன் காரணமாக விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்பட்டுள்ள பாஜக, கடைசியாக மோடியையே முழுமையாக நம்பி இருக்கிறது. பசவராஜ் பொம்மை பேசும்போதெல்லாம், பாஜக வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்கு, நரேந்திர மோடியைப் போற்று வதைக் காட்டுவதற்கு சமம் என்று பேசத் தொடங்கி யிருக்கிறார். இதேபோன்றுதான் இமாச்சலப்பிர தேசத்தில் நரேந்திர மோடி பேசும்போது, ‘நீங்கள் வேட்பாளரைப் பார்க்காதீர்கள் தாமரை சின்னத்தைப் பாருங்கள்’ என்று கூறினார். ‘தாமரைக்கு அளிக்கும் வாக்கு மோடிக்கு அளிக்கும் வாக்கு’ என்றார். அங்கே என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும். பாஜக தோற்க டிக்கப்பட்டு, அதன் அரசாங்கம் கவிழ்ந்தது. தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடக மாநிலம் மட்டும்தான் ஆர்எஸ்எஸ்/பாஜக தத்துவார்த்த ரீதி யாகவும், அரசியல்ரீதியாகவும் சொல்லிக்கொள்ளக் கூடிய அளவிற்கு இருக்கக்கூடிய ஒரேயொரு மாநில மாகும். இங்கே இதற்கு ஏற்படும் தோல்வி, இந்துத் துவா சக்திகளுக்கு மாபெரும் பின்னடைவாக அமைந்திடும். 2024 மக்களவைத் தேர்தலின்போது பாஜக-விற்கு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் மிகப்பெரிய சவாலாக அமைந்திடும்.
மே 3, 2023, தமிழில்: ச.வீரமணி