திரிபுராவில் தேர்தல்முடிவுகள் மார்ச் 2 அன்று அறிவிக்கப்பட்ட பின்னர், பாஜக நடத்திய வன்முறை வெறியாட்டங்களிலிருந்து, தான் தேர்த லில் பெரும்பான்மை பெற்றால், அது மிகச் சிறிய அளவிலானதாக இருந்தாலும் கூட, அது என்ன செய்யும் என்பதற்கு மீண்டும் ஓர் உதாரணமாகும்.
நேரடி தாக்குதல்கள் -இழிவான வடிவங்கள்
அதன்பின்னர் மார்ச் 6 வரையிலும் மாநிலம் முழுவதும் ஆயிரத்திற் கும் மேற்பட்ட இடங்களில் பாஜக குண்டர்கள் வன்முறை வெறியாட் டங்களில் ஈடுபட்டுள்ளார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி ஊழியர்களையும் ஆதரவாளர்களையும் நேரடியாகவே தாக்கியிருக்கிறார்கள், அவர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கி இருக்கிறார்கள், வீடுகளுக்குத் தீ வைத்திருக்கிறார்கள் மற்றும் கட்சி அலுவலகங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கி இருக்கிறார்கள். குறிப்பாக, ஊழியர்களின் வாழ்வாதா ரங்களைப் பறித்திடும் விதத்தில் அவர்களின் ரப்பர் தோட்டங்களை எரிப்பது, விவசாயம் செய்துள்ள பயிர்களை நாசம் செய்வது, அவர்க ளின் இ-ரிக்ஷாக்களையும், வாகனங்களையும் நாசப்படுத்துவது போன்ற விதத்தில் மிகவும் இழிவான வடிவங்களை மேற்கொண்டார்கள்.
2018 மார்ச்சில் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் இதுபோன்ற வடிவங்களி லேயே அவர்கள் தங்கள் தாக்குதல்களை மேற்கொண்டனர். கடந்த ஐந்தாண்டு காலமாகவே இதேபோன்றே அவர்களின் அடக்குமுறை, ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தொடர்ந்தன. தொழிலாளர்களின் குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிப்பது, அச்சுறுத்துவது போன்ற ஈனச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்தக் கால கட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 25 உறுப்பினர்களும், ஆதர வாளர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தடவை, எதிர்க்கட்சி யினரையும் இடதுசாரிகள்-காங்கிரஸ் இடையேயான கூட்டையும் நசுக்கிட நடவடிக்கைகள் மேற்கொண்டபோதும் அவற்றையெல்லாம் மீறி அவர்களுக்கு 35 விழுக்காடு வாக்குகள் கிடைத்திருப்பதையும், தங்களு டைய வாக்குகள் மற்றும் இடங்களில் கடும் சரிவு ஏற்பட்டிருப்பதும், பாஜக-வினர் மத்தியில் விரக்தி உணர்வையும், கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதன் விளைவே இவர்கள் இவ்வாறு மூர்க்க மான முறையில் வன்செயல்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தை அழித்திடும் இழிமுயற்சி
திரிபுராவிற்கு வெளியே இருக்கும் மக்கள், ஆளும் கட்சி, தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் இவ்வாறு எதிர்க்கட்சியின் மீது இவ்வளவு விரிவான அளவில் தாக்குதல் தொடுத்தது ஏன் என்று கேட்கக்கூடும். இங்கேதான் இவர்களின் வர்க்கத் தன்மை வெளிப்படுகிறது. மேற்கு வங்கத்தில் கட்டி எழுப்பப்பட்டிருப்பதைப்போலவே, திரிபுராவிலும் கடந்த பல ஆண்டுகளாக, வர்க்கப் போராட்டங்கள் மற்றும் வெகுஜன இயக்கங் கள் மூலமாக, கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. திரிபுரா வில் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி என்னவென்றால், இவ்வாறு உருக்குபோன்று உருவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாப னத்தையும், அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருந்து வரும் ஆதரவை யும் அழித்து ஒழித்திடவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இத்தகைய ஒடுக்குமுறை மற்றும் வன்முறை வெறியாட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி இயக்கம் மீதான இத்தகைய வர்க்கரீதியான தாக்குதல் தேர்தலுக்கு முன்பும், பின்பும் தொடர்கிறது. இவர்களின் நோக்கம் இங்கே கம்யூனிஸ்ட் இயக்கத்தையே அழித்திட வேண்டும் என்பதாகும்.
முதல்வரின் பொய்யும் பிரதமரின் புரட்டும்...
இந்த வன்முறை வெறியாட்டங்களுக்குப் பின்னே ஆளும் கட்சியான பாஜக இருந்து வருகிறது என்பது மார்ச் 8 அன்று இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாணிக் சகா இந்த வன்முறை வெறி யாட்டங்கள் குறித்து கருத்து கூறியிருப்பதிலிருந்து நன்கு அறிந்துகொள்ள முடியும். வன்முறை நடைபெற்ற இடங்களில் சிலவற்றைச் சுற்றிப்பார்த்த பின் அவர், “எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்களும் மற்றும் குறுகிய சொந்த நலன்களைக் கொண்ட மக்களும் (people with vested interests) மாநிலத்தின் வெவ்வேறான பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டுக் கொண் டிருக்கிறார்கள்,” என்று அவர் திருவாய் மலர்ந்திருக்கிறார். அதாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களே தங்கள் சொந்த வீடுகளுக்கும், கடைகளுக்கும், அலுவலகங்களுக்கும் பாஜக-வின் புகழைக் குலைக்கும் விதத்தில் தீ வைத்துக் கொண்டார்களாம். இவர்கள் மேற்கொண்டுவரும் மற்றொரு உத்தி என்னவெனில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் இடது முன்னணியும் ஆட்சி புரிந்த காலத்தில் அது எதிர்க்கட்சியை நசுக்கிட நடவடிக்கை எடுத்து வந்ததாகப் பழிபோடுவதாகும். இத்தகைய பொய்க் குற்றச்சாட்டை பிரதமர் மோடியே கையாண்டார். திரிபுராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களின்போதும், (பின்னர் மார்ச் 2 அன்று தில்லியில் நடைபெற்ற அவர்களின் தேர்தல் வெற்றிக் கூட்டத்தின்போதும் அது எதிரொ லித்தது) அவர், “முந்தைய காலங்களில் அகர்தலாவிலும் மற்றும் பல இடங்களிலும் ஒரு கட்சியின் கொடி மட்டுமே பறக்க அனுமதிக்கப்பட்டது. வேறு கட்சிக் கொடியை ஏற்ற எவராவது முன்வந்தால் அவர் கடுமை யாகப் பழிவாங்கப்பட்டார்,” என்று பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருந்துவரும் செல்வாக்கைக் கண்டு இவர்கள் மத்தியில் காணப்படும் ஆத்திரம் தெளிவாகவே தெரிகிறது.
அரசியல் நோக்கர்களின் வியப்பு
உதாரணமாக, 2018 சட்டமன்றத் தேர்தலின்போது, (அப்போது இடது முன்னணி அரசாங்கம் ஆட்சியில் இருந்தது) மாநிலம் முழுவதும் திடீ ரென்று பாஜக கொடிகளும், பதாகைகளும், விளம்பரங்களும் முளைத்தன. இந்த அளவிற்கு இவை வரக்கூடிய அளவிற்கு மாநிலத்தில் அந்தக் கட்சி அப்படி ஒன்றும் வலுவானதல்ல என்பதை அறிந்துள்ள அரசியல் நோக்கர்கள் இதனைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள். இதற்கு முன் பும்கூட, இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிதான் பிரதான எதிர்க்கட்சியாகும். அகர்தலாவைச் சுற்றி காங்கிரஸ் கட்சியின் கொடிதான் பறந்தன. 2021இல் அகர்தலா நகராட்சித் தேர்தல்கள் போல் அல்லாமல் (இந்தத் தேர்தலில் பாஜக வெளிப்படையாகவே தேர்தல் மோசடி நடவடிக்கை களில் ஈடுபட்டு மொத்தம் உள்ள 51 இடங்களையும் கைப்பற்றியது), இடது முன்னணி ஆட்சிக் காலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி 1995 டிசம்பரில் நடந்த நகராட்சித் தேர்தலில் பெரும் பான்மை இடங்களைக் கைப்பற்றியது. பின்னர் நடைபெற்ற தேர்தலிலும் கூட, மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றன. பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் அதற்கு 40 விழுக்காட்டுக்கும் மேல் வாக்குகள் கிடைத்தன.
நசுக்கப்படும் எதிர்க்கட்சிகள், ஜனநாயக உரிமைகள்
இப்போது உள்ள எதார்த்த நிலை என்னவெனில், கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சியில், எதிர்க்கட்சிகளின் உரிமைகள் அப்பட்டமாக மறுக்கப்பட்டுள்ளன என்பதும், ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமை கள் கொடூரமாக நசுக்கப்பட்டிருப்பது என்பதுமாகும். கடந்த ஐந்தாண்டு காலத்தின்போதும், மாநிலத்தில் மொத்தம் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 16 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட, தங்கள் தொகுதிகளில் சுதந்திரமாக சென்று தங்களுடைய இயல்பு நடவடிக்கை களை மேற்கொள்ள முடியவில்லை என்பதிலிருந்தே திரிபுராவில் எத்தகை யதொரு எதேச்சதிகார, பாசிஸ்ட் ஆட்சி நடைபெற்று வந்தது என்பதை அறிய முடியும். மேலும் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மாணிக் சர்க்கார் கூட, 2021 செப்டம்பரில் அவர் தொகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மக்களுடன் சென்று மனு கொடுக்க முனைந்த போது, பாஜக குண்டர்களால் மிக மோசமாகத் தாக்கப்பட்டதையும், அந்த சமயத்தில் மாநிலம் முழுதும் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள், கட்சி ஊழியர்களின் வீடுகள், ஏன் மாநிலத்தின் தலை நகரில் இருந்த மாநிலக் குழு அலுவலகமும் மிகவும் கூச்ச நாச்சமின்றி தாக்கப்பட்டதையும் பார்த்தோம்.
துணிந்தது எப்படி எனும் ஆச்சரியம்
ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணியை பலவீனப்படுத்தி, இயங்கா மல் செய்திட கடந்த ஐந்தாண்டுகளாகத் தொடர்ந்து ஈடுபட்டுவந்த போதி லும்கூட, அவ்வாறு செய்தும் இப்போது நடைபெற்ற தேர்தலில், அவர்களை எதிர்த்து, மிகவும் அற்ப பெரும்பான்மையுடன்தான் வெற்றி பெற முடிந்துள்ளது என்பதை நன்கு தெரிந்து கொண்டுள்ளார்கள். கடந்த ஐந்தாண்டுகளாக இடது முன்னணி ஊழியர்கள் உயிருக்கும் உட மைக்கும் ஊறு விளைவித்துவந்தபோதிலும், அவற்றையெல்லாம் மீறி, அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் துணிவுடன் ஈடுபட்டது எப்படி என்று அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இடதுசாரிகள் இப்போதும் அவர்களை ஆட்டிப்படைத்திடும் பூதமாகவே அங்கே இருந்து வருகிறார் கள். இடதுசாரிகள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு எதிராக வன்முறை வெறி யாட்டங்களில் அவர்கள் ஈடுபடுவதென்பது அவர்கள் மத்தியில் உள்ள பயத்தையும், பாதுகாப்பின்மை உணர்வையுமே வெளிப்படுத்துகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணியும் தங்களுக்கு எதிராக ஏவப்பட்டுள்ள வன்முறை வெறியாட்டங்களை எதிர்த்து நின்று, மக்களுடனான இணைப்பையும் பிணைப்பையும் தொடர்ந்து மேற்கொண்டு வரும். இந்த முயற்சியில், நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக, முற்போக்கு மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் ஆதரவினை அவர்கள் பெறுவார்கள்.
மார்ச் 8, 2023. தமிழில்: ச.வீரமணி