தில்லி நாடாளுமன்ற வீதியில் கூட, மாணவர்களும் இதரக் கிளர்ச்சியாளர்களும் ஆர்ப்பாட்டங்கள் மேற் கொண்டிருந்தபோது அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டார்கள். இந்நடவடிக்கைகள் அனைத்துமே, இஸ்ரேலை சிங்கமாகவும், பாலஸ்தீனர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாகவும் சித்தரித்திடும் ஆர்எஸ்எஸ்/ பாஜக-வின் கண்ணோட்டத்திலிருந்து துளிர்த்த வையேயாகும்.
இஸ்ரேல் நடத்திவரும் யுத்தத்தில் காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனக் குழந்தைகளை நினைவுகூர்வதுகூட இந்துத்துவா ஆட்சியாளர்களின் புதிய இந்தியாவில் ஒரு குற்றமாக மாறியிருக்கிறது. மும்பையில் குழந்தைகள் தினமான நவம்பர் 14 அன்று ஜூஹூ கடற்கரையில் காசாவில் கொல்லப்பட்ட குழந்தைக ளுக்காக சில குழந்தைகள் அமைதிப் பிரார்த்தனை நடத்தியிருக்கிறார்கள். இவர்களில் 17 சிறுமிகள் (இவர்கள் அனைவரும் முஸ்லிம் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த சிறுமிகள்) கைது செய்யப்பட்டு, மாலை வரை காவல் நிலையத்தில் இருத்தி வைக்கப் பட்டிருக்கிறார்கள். காசாவில் 5,600 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்ப தெல்லாம் பாஜக ஆட்சியா ளர்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது.
பாலஸ்தீன குழந்தைகளுக்காக பிரார்த்திக்கத் தடை
அன்றைய தினமே, தில்லி காவல்துறை, பல்வேறு மசூதிகளின் இமாம்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதில், பாலஸ்தீனம் குறித்தோ அல்லது காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திடும் தாக்குதல்கள் குறித்தோ பிரார்த்தனை கள் அல்லது மத போதனைகள் நடத்திடும் சமயத்தில் எதுவும் குறிப்பிடக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டி ருக்கிறது. காசாவில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட குழந்தைகள் குறித்து நினைவு கூறி, பிரார்த்தனை செய்வதுகூட தடை செய்யப்பட்டிருக்கிறது. இது, அடிப்படைப் பேச்சுரிமை மீதான தாக்குதல் மட்டு மல்ல, மதச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலுமாகும்.
ஸ்ரீநகரில், நகரின் முக்கிய மசூதியான ஜாமியா மசூதியை அக்டோபர் 13 வெள்ளிக்கிழமை அன்றும் அடுத்தடுத்த அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் மூட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் உத்தர விட்டிருக்கிறார்கள். தொழுகையின் போது காசா மக்களுடன் எவ்விதமான ஒற்றுமையை வெளிப் படுத்துவதையும் தடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் பாலஸ்தீன ஆதரவுக்கு தடை
பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்திலும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து எவ்விதமான இயக்கம் நடைபெற்றாலும் அது காவல்துறையினரால் தடை செய்யப்படுகிறது அல்லது தடுக்கப்படுகிறது. தில்லி நாடாளுமன்ற வீதியில் கூட, மாணவர்களும் இதரக் கிளர்ச்சியாளர்களும் ஆர்ப்பாட்டங்கள் மேற் கொண்டிருந்தபோது அவர்கள் சுற்றி வளைக்கப் பட்டார்கள்.
இந்நடவடிக்கைகள் அனைத்துமே, இஸ்ரேலை சிங்கமாகவும், பாலஸ்தீனர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாகவும் சித்தரித்திடும் ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் கண்ணோட்டத்திலிருந்து துளிர்த்த வையேயாகும். ஒட்டுமொத்த உலகத்தின் தெற்கு (global south) நாடுகள் அனைத்துமே காசாவிற்கு எதிராக நடைபெறும் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி, போர் நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ள அதே சமயத்தில் மோடி அரசாங்கம் மட்டும் அதற்கு ஆதரவளித்திட மறுத்து, இஸ்ரே லுக்குத் தன் முழுமையான ஆதரவினை அளித்தி ருப்பதில் பிரதிபலித்திருக்கிறது.
முஸ்லிம் எதிர்ப்பு சித்தாந்தம்
இந்துத்துவாவும், வலதுசாரி சியோனிசமும் சித்தாந்த ரீதியாக சகோதரர்களாவார்கள். இந்துத்து வாக் கருத்தாக்கத்தின் மூலகர்த்தாவான வி.டி. சாவர்க்கர், 1923இலேயே பாலஸ்தீனத்தில் யூதர்க ளுக்கான நாடு நிறுவப்படுவதற்கு ஆதரவு அளித்து எழு தியுள்ளார். சியோனிசத்தை, ஓர் முஸ்லிம் எதிர்ப்பு சித்தாந்தமாக சாவர்க்கர் பார்த்ததால் அதனை அவர் உறுதியாக ஆதரித்து வந்தார். இதற்கு நேர்மாறாக, காந்திஜி பாலஸ்தீனப் போராட்டத்தை உறுதியான முறையில் ஆதரித்தார். அவர் 1938இல், “அராபியர்கள் மீது யூதர்களைத் திணிப்பது தவறானது மட்டுமல்ல, மனிதாபிமானமற்றதுமாகும். இன்றையதினம் பாலஸ்தீனத்தில் நடைபெறும் நிகழ்ச்சிப்போக்குகள் எந்தவித தார்மீக நெறிமுறைகளாலும் நியாயப்படுத்த முடியாதவைகளாகும்,” என்று எழுதினார்.
அத்வானி பயணமும் ஏரியல் ஷரோன் வருகையும்
மோடி அரசாங்கம், பாலஸ்தீனம் மீதான இந்தி யாவின் நிலைப்பாட்டை மாற்றியமைத்திருப்பது, பாஜக தலைமையிலான முதல் வாஜ்பாயி அரசாங்கத்தினால் இஸ்ரேலுடன் மேற்கொள்ளப்பட்ட போர்த்தந்திர உறவுகளின் உச்சகட்டமாகும். வாஜ்பாயியின் அமைச்சரவையில் துணைப் பிரதம ராக இருந்த எல்.கே. அத்வானி, 2000இல் இஸ்ரே லுக்குச் சென்றிருந்தார். அவ்வாறு சென்ற முதல் இந்திய அரசாங்கத்தின் தலைவர் அவர்தான். அதன் பின்னர் இஸ்ரேலுடன் பல்வேறு ராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகள் கையெழுத்தாயின. அதனைத் தொடர்ந்து சியோனிச வலதுசாரி சித்தாந்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷரோன் (Ariel Sharon) இந்தியாவிற்கு விஜயம் செய்தார். இவ்வாறு விஜயம் செய்த முதல் இஸ்ரேல் பிரதமர் இவர்தான்.
நரேந்திர மோடி, தன்னைப்போலவே வலதுசாரி சித்தாந்தத்துடன் ஆட்சி செய்துவரும் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் போர்த்தந்திர உறவுகளை ஆழப்படுத்தியிருக்கிறார். இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு, முக்கியமான தொழில் நுட்பங்களையும், தளவாடங்களையும் அளித்திடும் முக்கிய விநியோகஸ்தராக இஸ்ரேல் மாறி இருக்கிறது. இஸ்ரேலிய நிறுவனம் ஒன்றால் இஸ்ரேல் அரசாங்கத்தின் அனுமதியுடன் இந்திய அர சாங்கத்திற்கு அளிக்கப்பட்ட தொழில்நுட்பங்களில் ஒன்றுதான் பெகாசஸ் உளவுமென்பொருள் ஆகும்.
பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப்பாடு...
காசாவில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வரும் இனப்படுகொலை தாக்குதல் உலகம் முழு தும் கண்டனக் கணைகளையும், கிளர்ச்சிப் போராட்டங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்ரே லுக்கு ஆதரவாக இருந்திடும் நாடுகளிலும்கூட, பல்லாயிரக்கணக்கான மக்கள், வீதிகளில் இறங்கி, பாலஸ்தீன மக்களுக்குத் தங்கள் ஆதர வையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தி இருக்கி றார்கள்.
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் ஆக்கிர மிப்புக்கு பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் அர சாங்கமும், அங்கே எதிர்க்கட்சியாகவுள்ள தொழிற்கட்சியும் முழுமையாக ஆதரவு அளித்து வந்த போதிலும், யுத்தத்தைக் கண்டித்து ஒவ்வொரு சனிக் கிழமையும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோன்று பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் அரசாங்கங்கள் அத்தகைய போராட்டங்களுக்கும், பாலஸ்தீனக் கொடியைக் காட்டுவதற்கும் தடை செய்துள்ள போதிலும், பாரிசிலும் பெர்லினிலும் உள்ள மக்கள் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிரந்தரப் போர் நிறுத்தத்துக்கு அழுத்தம் அவசியம்
இப்போது, இஸ்ரேலியச் சிறைகளில் உள்ள 150 பாலஸ்தீனப் பெண்களையும் குழந்தைகளையும் அதேபோல் ஹமாஸ் பணயக் கைதிகளாகவுள்ள 50 பெண்களையும், குழந்தைகளையும் விடுவிப்ப தற்காக வெளிவந்துள்ள நான்கு நாட்கள் போர்நிறுத்த அறிவிப்பு தற்காலிகமான ஒன்றேயாகும். நேதன் யாகு, இந்தப் போர்நிறுத்தக் காலம் முடிவடைந்த பின் யுத்தம் தொடரும் என்று தெளிவாக அறிவித் துள்ளார். எனவே, பிரச்சனைக்கு ஓர் அரசியல் தீர்வு எட்டப்படும்வரை ஒரு நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் தர வேண்டியது அவசியமாகும்.
இந்தியாவில் கேரளாவின் அனைத்து மாவட்டங்க ளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் ஒருமைப்பாடு கூட்டங்கள் நடந்துள்ளன. கொல்கத்தாவில் இடதுசாரிக் கட்சிகளின் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. பல மாநிலங்களில் இடதுசாரிக் கட்சிகள் ஒருமைப்பாட்டு நடவடிக்கைக ளையும், கூட்டங்களையும் நடத்தி இருக்கிறார்கள்.
இஸ்லாமிய வெறுப்பை முறியடிக்க
ஆனாலும், பாஜக மற்றும் கார்ப்பரேட் ஊடகங் கள் பாலஸ்தீனர்களை “முஸ்லிம் பயங்கரவாதிகள்” என முத்திரை குத்தி வருவதால், இந்தப் பிரச்சனை யில் இதர மதச்சார்பற்ற கட்சிகள் செயலற்ற நிலை யிலேயே இருந்து வருகின்றன. இந்நிலையில் நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாகவும், பாலஸ்தீனத் தின் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடவும், சுதந்திர பாலஸ்தீன நாடு அமைந்திடவும் இடதுசாரிக் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை மிகவும் விரிவான அளவில் நீடித்த காலத்திற்கு எடுத்துச் செல்லவேண்டியது மிக முக்கிய மாகும். இதன்மூலம் பாஜக மேற்கொண்டுவரும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சனையை முறியடித்திடக் கூடிய விதத்தில் அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளையும் அணி திரட்டிட வேண்டும்.
நவம்பர் 22, 2023.
தமிழில் : ச.வீரமணி