articles

img

“நீதிக்கான நெடுமலையேற்றம்” - உலகச் சினிமா

ஆட்ரினோ காவ்லோ ஆறரை மாதக் கர்ப்பிணி.திடீரென அவளை ராணுவத்தினர் கண்ணைக்கட்டி காரில் இழுத்துச் சென்று, பல மாதங்கள் சித்ரவதை செய்கின்றனர். ஒருநாள் காரில் அவளை பலவந்தமாக அழைத்துச் செல்லுகையில், பிரசவ வலி ஏற்படுகிறது. குழந்தை வெளியே வரப் போவதை ராணுவத்தினரிடம் தெரிவித்த பின்பும் அலட்சியமாக சிரிக்கிறார்கள். பின்பு அவளது சுய முயற்சியால் வெளியே தள்ளிப் பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். தொப்புள் கொடியை குழந்தையோடு கட்டி, அவளிடமிருந்து குழந்தையைப் பிடுங்கிக் கொள்கின்றனர். அதிகாரியின் பங்களாவை நிர்வாணமாக சுத்தம் செய்தால் குழந்தையை தருவதாக உறுதி அளிக்கின்றனர். அவ்வாறே செய்து, பச்சிளம் சிசுவைப் கொடியவர்களிடமிருந்து மீட்கிறாள்.

இப்படிப்பட்ட கொடுமையும் நடக்குமா? நடந்துள்ளது! அர்ஜெண்டினாவில்!!

இதைபோல் எண்ணிலடங்கா சித்ரவதைகள்....1976 முதல் 1983 வரை, ராணுவத்தினர் செய்ததோடு, 30000 பேர்களை காணாமலடிக்கவும் செய்துள்ளனர். இக்கொடும்பாதக ராணுவத்தை, அனுபவமற்ற வழக்கறிஞர்கள் குழு, உலகிலேயே முதல் முறையாக சிவில் நீதிமன்றத்தில் “ட்ராய் குதிரை” என்ற கிரேக்க கதையில் வரும் யுக்தியை கையாண்டு, எதிர்த்து நடத்திய  சட்டப் போராட்டத்தின் உண்மைச் சம்பவத் தொகுப்பே, “அர்ஜெண்டினா 1985” என்ற திரைப்படம்.  1976 இல், அர்ஜெண்டினாவை ஃபோரன் ஆட்சி செய்கிறார். சர்வாதிகாரி ஜோர்ஜ் ரா விதேலாவின் தலை மையிலான ராணுவம் ஜூண்டா இந்த அரசை,கவிழ்த்து ஆட்சியைப் பிடிக்கிறது.புதிய கொடுங்கோல் அரசு, கம்யூனிஸ்ட்கள், கெரில்லாக்கள், குழந்தைகள், பெரோ னிஸ்ட் என்ற அதி தீவிரவாதிகள் ஆகியோரை எவ்வித விசா ரணையும் இன்றி, ஆள் கடத்தல், கொலைசெய்தல், காணாமல் போகச் செய்தல், கற்பழித்தல் போன்ற கடும்  கொடூரங்களை நிகழ்த்துகிறது. இதனால் பொருளா தாரம் நிலை குலைகிறது. மக்கள் தொடர் எதிர்ப்புகள் காரணமாக, 1983 இல் தேர்தல் மூலம் ரவுல் ஆல்போன்ஸின் அதிபராகிறார். ராணுவத்தின் கொடுமைகளை விசாரணைக்கு உட்படுத்துகிறார். ஜூலியோ ஸ்ட்ராஷ்ரா என்ற அரசு குற்றவியல் வழக்கறிஞரை விசாரணை அலுவலராகவும், உதவ துடிப்பான லூயிஸ் மொரினோவையும் அரசு நியமிக்கி றது. ராணுவத்தால் பாதிக்கப்பட்ட 7 இளம் அனுபவ மற்ற ஆண்பெண் வழக்கறிஞர்களை நேர்காணல் மூலம்  ஜூலியோ தேர்ந்தெடுக்கிறார். இக்குழுவே 9 கொடுங் கோலர்கள் மீது அரசு சார்பாக குற்ற அறிக்கை தாக்கல்  செய்கிறது. குற்றம் சாட்டப்பட்ட ராணுவத் தளபதிகள் சார்பாக வாதாட ஃபேஷில் தலைமையில் அனுபவமிக்க ஐந்து வழக்கறிஞர்கள் குழு ஆஜராகிறது.

6 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், 1984 அக்டோபரில் விசாரணையை துவக்குகிறது. ஜூலியோ குடும்பத்திற்கும், மொரினோவுக்கும், ராணுவம் மறைமுகமாக பயமுறுத்தல், தாக்குதல் எனப்  பல வழிகளில் மிரட்டல்களை தொடுக்கிறது. இதனை மீறி, ஜூலியோ குழு, காலத்தையும், வேலை யையும் சரியாகத் திட்டமிட்டு, நாடெங்கும் பம்பர மாக பயணித்து, பாதிக்கப்பட்ட உறவினர்களின் சாட்சி களையும், ஆதாரங்களையும் அறிக்கையாகத் திரட்டு கிறார்கள். ஏப்ரல் 22, 1985 இல் பொது விசாரணை துவங்கு கிறது. விசாரணையின் போதும் சாட்சிகள் மிரட்டப்படு கிறார்கள். குண்டு வெடிப்புச் சம்பவமும் நடக்கிறது. ஆட்சி மாறினாலும், ராணுவ ஆதிக்கத்தில் நடந்த கொடுமைகளை செய்த அதே அதிகாரிகளே, இந்த ஆட்சியிலும் தொடர்கிறார்கள். இவர்களை எதிர்த்து சாட்சி  சொல்ல அஞ்சுகிறவர்களை, தைரியப்படுத்தி சாட்சிய மளிக்கவும் வைக்கிறார்கள். இத்தனை இடர்பாடுகளை யும் சந்தித்த ஜூலியோ குழு, குற்றமிழைத்த ராணுவத் தளபதிகளுக்கு, தண்டனை பெற்றுக் கொடுத்ததா? என்ற  கேள்விக்கு பதிலே, மீதிப்படம். மேலே குறிப்பிட்ட ஆட்ரினோ காவ்லோ உள்ளிட்ட பல சாட்சிகள் தங்களுக்கு ராணுவத்தினரால் இழைக் கப்பட்ட கொடுமைகளை நீதிமன்றத்தில் கண்ணீர் மல்க  வாக்குமூலமளிப்பது; இரக்கமற்ற அரசு பயங்கர வாதத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது. அதிர்ச்சியையும் அளிக்கிறது.

6 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், 1984 அக்டோபரில் விசாரணையை துவக்குகிறது. ஜூலியோ குடும்பத்திற்கும், மொரினோவுக்கும், ராணுவம் மறைமுகமாக பயமுறுத்தல், தாக்குதல் எனப்  பல வழிகளில் மிரட்டல்களை தொடுக்கிறது. இதனை மீறி, ஜூலியோ குழு, காலத்தையும், வேலை யையும் சரியாகத் திட்டமிட்டு, நாடெங்கும் பம்பர மாக பயணித்து, பாதிக்கப்பட்ட உறவினர்களின் சாட்சி களையும், ஆதாரங்களையும் அறிக்கையாகத் திரட்டு கிறார்கள். ஏப்ரல் 22, 1985 இல் பொது விசாரணை துவங்கு கிறது. விசாரணையின் போதும் சாட்சிகள் மிரட்டப்படு கிறார்கள். குண்டு வெடிப்புச் சம்பவமும் நடக்கிறது. ஆட்சி மாறினாலும், ராணுவ ஆதிக்கத்தில் நடந்த கொடுமைகளை செய்த அதே அதிகாரிகளே, இந்த ஆட்சியிலும் தொடர்கிறார்கள். இவர்களை எதிர்த்து சாட்சி  சொல்ல அஞ்சுகிறவர்களை, தைரியப்படுத்தி சாட்சிய மளிக்கவும் வைக்கிறார்கள். இத்தனை இடர்பாடுகளை யும் சந்தித்த ஜூலியோ குழு, குற்றமிழைத்த ராணுவத் தளபதிகளுக்கு, தண்டனை பெற்றுக் கொடுத்ததா? என்ற  கேள்விக்கு பதிலே, மீதிப்படம். மேலே குறிப்பிட்ட ஆட்ரினோ காவ்லோ உள்ளிட்ட பல சாட்சிகள் தங்களுக்கு ராணுவத்தினரால் இழைக் கப்பட்ட கொடுமைகளை நீதிமன்றத்தில் கண்ணீர் மல்க  வாக்குமூலமளிப்பது; இரக்கமற்ற அரசு பயங்கர வாதத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது. அதிர்ச்சியையும் அளிக்கிறது.

நல்ல பின்னணி இசை; சிறந்த படத்தொகுப்பு; சிறந்த  திரைக்கதை உருவாக்கம்; நேர்த்தியான ஒளிப்பதிவு; 1985  காலத்தை சரியாக உணர்த்தும் ஒப்பனை அலங்காரம், உடைகள் மற்றும் பின்புல கட்டமைப்பு.  அர்ஜெண்டினாவில் பாசிச சர்வாதிகார ஆட்சியில், காணாமல் போனதாக அறிவித்து, கொலையுண்ட ஆயிரக்கணக்கான சிறு குழந்தைகளின் தாய்மார்கள், “மதர்ஸ் ஆப் த ப்ளாஷா டீ மாயா” என்ற அமைப்பை உருவாக்கி, குழந்தைகளின் அணையாடையை (Disper) தலைக்கவசமாக அணிந்து, தங்கள் மழலை களை ஒப்படைக்க, ராணுவ அரசை வலியுறுத்தி, வருடக்  கணக்கில் போராடினர் என்பது வரலாற்றின் துயரந் தோய்ந்த செய்தி.  இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது 25 நாட்களில் நடத்திய  இன ஒழிப்பு தாக்குதலில், 3600 பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பது இன்றைய கொடுஞ்செய்தி. வாச்சாத்தி முதல் அர்ஜெண்டினா வரை நீதிக்கான போராட்டம் நெடுமலை ஏற்றமாகவே உள்ளது என்பதே  இப்படச் செய்தி. சிறந்த வெளிநாட்டு மொழி பிரிவில், கோல்டன் குளோப் விருது மற்றும் பல விருதுகளை பெற்றுள்ளது. அர்ஜெண்டினாவில் அதிக வசூலை பெற்ற படம். பிரைம்  அமேசானில் உள்ளது.