articles

img

தில்லி காற்று மாசுபாட்டிற்கு விவசாயிகள் காரணமா...?

பஞ்சாபில் நெல் அறுவடைக்குப் பின் எஞ்சி யுள்ள வைக்கோலை எரிப்பது உச்சத்தில் உள்ளது. தினசரி 1950-க்கும் மேற்பட்ட நிலங்களில் கோதுமை, நெல் வைக்கோல்கள் எரிக்கப்படுகிறது. இதனால் தில்லி, பஞ்சாப் மாநிலங்க ளில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. பஞ்சாப் மட்டுமல்ல ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களிலும் அறுவடைக்குப் பின் விளை நிலங்க ளில் வைக்கோலை எரிப்பது அதிகரித்துள்ளது. இத னால் சராசரியாக 50 முதல் 100 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் (பிஜிஐஎம்இஆர்) சுற்றுச் சூழல் சுகாதாரத்துறைப் பேராசிரியர் டாக்டர் ரவீந்திர கைவால், “விவசாயிகள்  அறுவடைக்குப் பின் மீண்டும் விவசாயத்தை தொடங்குவதற்காக நிலங்களை எரிப்பது அதிகரித்துள்ளது.  வட மாநிலங்களில் கோது மையிலிருந்து கிடைக்கும் வைக்கோல்கள் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்துகின்றனர். நெல்லிலிருந்து கிடைக்கும் வைக்கோல்களை பயன்படுத்துவதற்குப் பதில் அதை எரிக்கின்றனர். ஒன்றிய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் தரவுக ளின்படி, செப்டம்பர் 15-ஆம் தேதி முதல்  நவம்பர் 1-ஆம் தேதி வரை பஞ்சாப் மாநிலத்தில் வைக்கோல் களை எரித்தது தொடர்பாக 17,846 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 19 சத வீதம் அதிகம் ஆகும்.

ஹரியானா, உ.பியிலும்

ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் செப் டம்பர் 15-ஆம் தேதி முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை முறையே 2,083 மற்றும் 777 வழக்குகள் பதிவாகியுள்ளன.  கடந்தாண்டு, செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பஞ்சாபில் 71,304 வழக்கு கள் (77 சதவீதம்),  ஹரியானாவில் 6,987 (7.5 சதவீதம்), உத்தரப்பிரதேசத்தில் 4,242 (4.6சதவீதம்). வழக்கு கள் பதிவாகியுள்ளன. தரவுகளின் அடிப்படையில் வைக்கோல்களை எரிப்பது பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. வைக்கோல்களை எரிப்பதைக் குறைப்பதற்காக 2018-2021-ஆம் ஆண்டில் இயந்திர மயமாக்கல் முறை கொண்டுவரப்பட்டது. இதற்காக ஒன்றிய அரசு ரூ.2,400 கோடி (மானியமாக) ஒதுக்கீடு செய்திருந்தது. இதில் சுமார் ரூ.1,147 கோடியை பஞ்சாப் மாநிலம் பெற்றுள்ளது. ஒன்றிய அரசும் மாநில அரசும் நிலங்களை எரிப்ப தைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்திய கடந்த மூன்று நான்காண்டுகளாக மேற்கொண்ட இயந்திர மயமாக் கல் முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஒன்றியஅரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த அக்டோபர் 29-அன்று தில்லியில் காற்று மாசுபாடு கடுமை யாக இருந்தது. அக்டோபர் 30 க்குப் பிறகுநவம்பர் 1-ஆம் தேதி காற்று மாசுபாடு கடுமையாக இருந்தது.

தில்லி காற்று மாசுக்கு  பஞ்சாப் காரணமா?

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் வேளாண் வானிலை ஆய்வுத் துறையின் பேரா சிரியர் கிங்ரா கூறுகையில், “ தில்லியின் காற்று மாசுக்கு பஞ்சாப் பொறுப்பல்ல.கடந்த நான்காண்டுகளாக பஞ்சாப் மற்றும் தில்லியின் வளிமண்டல நிலைகளை நாங்கள் ஆய்வு செய்துள்ளோம். அக்டோபர், நவம்பர் மாதங்களில் காற்றின் வேகம் பஞ்சாப்பில் எரிக்கப்படும் புகையை தில்லிக்கு நகர்த்துவதற்கு போதுமானதாக இல்லை” என்பதைக் கண்டறிந்துள்ளோம் என்றார். அவர் மேலும் கூறுகையில், “வைக்கோல்களை எரிப்பதால் காற்றின் தரம் பாதிக்காது என்று கூற வில்லை. இது பஞ்சாபில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆனால் பஞ்சாபில் இருந்து வெளியே றும் புகை தில்லிக்கு நகர்ந்து  காற்றை மாசுபடுத்து கிறது என்று சொல்வது சரியல்ல. தில்லியில் காற்று மாச டைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என்றார்.

ஒன்றிய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல் படும் சிஸ்டம் ஆஃப் ஏர் குவாலிட்டி அண்ட் வெதர் ஃபோர்காஸ்டிங் அண்ட் ரிசர்ச் (SAFAR)- இன் தரவு, தில்லியில் காற்று மாசடைவதற்கு “ எரிக்கப்படும் குப்பைகளும்  பிரதானம்” என்கிறது. இது காற்று மாசு பாட்டுக்கு குப்பைகளை எரிப்பதில் பங்கு உள்ளது என்பதைக் குறிக்கிறது. கடந்த சில நாட்களில் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் வைக்கோல்களை எரிப்பது கணிசமாக அதிகரித்ததால், தில்லியின் பிஎம் (PM) 2.5 மாசுவில் வைக்கோல் எரியும் பங்கு அக்டோபர் 26-ஆம் தேதி  5 சதவீதமாக  அக்டோபர் 30-ஆம் தேதி 26 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது என்று ஏர் குவாலிட்டி அண்ட் வெதர் ஃபோர்காஸ்டிங் அண்ட் ரிசர்ச் தரவு தெரிவிக்கிறது.

ஏர் குவாலிட்டி அண்ட் வெதர் ஃபோர்காஸ்டிங் அண்ட் ரிசர்ச் அமைப்பின் தரவுகளை மறுத்துள்ள பஞ்சாப் மாசுகட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செய லாளர் க்ருனேஷ் கர்க், “வைக்கோல்களை எரிப்பதால் ஏற்படும் புகை தில்லிக்கு செல்கிறது என்பதை நிரூபிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. அப்ப டியே தில்லியின் காற்று மாசுபாட்டிற்கு பஞ்சாப்பின் பங்குள்ளது என்று ஒருவர் கருதினாலும், அதன் தாக்கம் அவ்வப்போது இருக்கும். அதுவும் ஒரு வருடத்தில் இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்காது” என்றார். பஞ்சாப் வேளாண் துறை இயக்குநர் குர்விந்தர் சிங் கூறுகையில், “விவசாயிகளுக்கு 26,000 அறுவடை இயந்திரங்களை வழங்குவதன் மூலம்  நிலங்களை தீயிட்டு எரிப்பதைக் குறைக்க முடியும். இருப்பினும், செப்டம்பர்  கடைசி வாரத்திலும், அக்டோபர் முதல் வாரத்திலும் பெய்த மழையால் நெல் அறுவடை தாமத மானது. இது கோதுமை பயிர் விதைப்புக்கான காலத்தை எடுத்துக்கொண்டால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்வயல்களை எரிக்க முடிவு செய்தனர்”. என்றார்.

இயந்திரம் யாருக்கு பயனளிக்கிறது?

அறுவடை இயந்திரங்களைப் பயன்படுத்துவது தான் சிறந்த தீர்வு என விளம்பரப்படுத்துகின்றனர். இதனால் பெரிய விவசாயிகள் மட்டுமே பலனடைய முடியும் என்கின்றனர் விவசாயிகள். இதற்கு அவர்கள் கூறும் காரணம், பஞ்சாபில் 32 சதவீத விவசாயிகள் 2.02 ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தை வைத்துள்ளனர். இந்த சிறு- குறு விவசாயி களால் மானியம் வழங்கினாலும் அவர்களால் இயந்தி ரத்தை வாங்கமுடியாது. அப்படியே வாங்கினாலும் அவர்களுக்கு குறைந்தது ரூ.1.5 லட்சம் தேவை. இது சாத்தியமா என்று கேட்கின்றனர் விவசாயிகள்.  இதற்கிடையில் அக்டோபர் 19-ஆம் தேதி தில்லி -என்சிஆர் பகுதியில் பயிர்களின் கழிவுகள் எரிக்கப் படுவது குறித்து அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டத்தில்  பேசிய ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந் தர் யாதவ், “பஞ்சாப்  பயிர்க்கழிவுகளை எரிப்பதைத் தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.

இதற்கு பதிலளித்த ஆம் ஆத்மி கட்சி, “பஞ்சாப்பில் பயிர்க்கழிவுகள் எரிப்பது அதிகரித்து வருவதற்கு ஒன்றிய அரசுதான் காரணம். சிறு-குறு விவசாயிகள் வாடகைக்கு இயந்திரங்களை அமர்த்துவதற்கு ஊக்கத் தொகை வழங்க ஒன்றிய அரசு மறுக்கிறது என்றார். தில்லி, பஞ்சாப் அரசு மீதும் பஞ்சாப் தில்லி அரசு  மீதும் பழி போடுகின்றன. மொத்தத்தில் காற்று மாசு பாட்டால் ஒரு மனிதன் தனது வாழ்நாளில் ஐந்தாண்டு களை இழக்கிறான் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.