articles

கலப்பட மருந்துகள் உற்பத்திக்கு அதிக அபராதம் விதிக்க சட்டத்திருத்தம்

புதுதில்லி, ஆக.13- மருந்துகள் கலப்படும் செய்யப்படு வது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத்தலைவர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்வி க்கு, ஒன்றிய அமைச்சர் பல்வேறு நட வடிக்கைகள் எடுத்திருப்பதாக பதில் அளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை வரை நடை பெற்றது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், நாட்டில் கலப்பட மருந்துகள் உற்பத்தியாளர்கள் மற்றும் வழங்குநர்களுக்கு (Suppliers) கடுமை யான தண்டனை அளிப்பதை உள்ளடக்கும் விதத்தில், தற்போதுள்ள விதிகளை திருத்தியமைக்க அரசு முன்மொழிகிறதா என்றும், ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் கூறியதாவது: 1940ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் மற்றும்  விதிகளின் கீழ், நாட்டில் மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவை மாநில அரசுகளால் ஒழுங்கு படுத்தப்படுகின்றன. போலியான மற்றும் கலப்பட மருந்துகளை உற்பத்தி செய்வோர் மீது, அதிக கடுமையான அபராதங்கள் விதிக்க வகை செய்யும் விதத்தில், மேற்படி சட்டத்தில் 2008ஆம் ஆண்டு திருத்தங்கள் கொண்டுவரப் பட்டன. மேலும், நாட்டில் மருந்துகளின் தர த்தை உறுதிப்படுத்த, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் (Central Drugs Standard Control Organisation - CDSCO) மற்றும் சுகாதார & குடும்ப நலத் துறை அமைச்சகமும் ஒழுங்கு நட வடிக்கைகளை எடுத்துள்ளன. இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார். (ந.நி.)