இந்திய நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 702 இனக்குழுக்களைச் சார்ந்த இவர்கள் மலைகளிலும் சமவெளிப்பகுதியிலும் வாழ்கின்றனர். அனைத்து பழங்குடி மக்களையும் ஒரு குடை யின் கீழ் திரட்டும் நோக்கத்துடன் தான் ‘ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பு’ உருவாக்கப் பட்டது. ஆனால், அது ஒன்றும் அவ்வளவு சுலபமான தாக இருக்கவில்லை. மக்களிடையே பிரிவினை உரு வாக்கும் சக்திகளும், அடையாள அரசியலும் இந்த நோக்கத்திற்கு பெரும் இடையூறாக இருக்கின்றன. பொது நீரோட்டத்தில் இம்மக்கள் இணையாமல் ஆளும் வர்க்கங்கள் பார்த்துக் கொள்கின்றன. இத்தனை தடைகளுக்கு மத்தியில்தான் 15 மாநிலங் களில் ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பு மக்களை ஒன்றுதிரட்டும் மாபெரும் அமைப்பாக வளர்ந்திருக்கிறது.
ஆதிவாசி மக்களின் உண்மைநிலை
ஆதிவாசி மக்களை அமைப்பாக்கி கோரிக்கைகளுக் காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தினாலும், அவர்களின் எண்ணிக்கையை விட அவர்களுக்கான பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது. பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் நாடு முழு வதும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2013ல் 6793; மோடி ஆட்சியில் 2019ல் 7570; 2021ல் 8802. இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் பழங்குடியினத்தை சேர்ந்த 4 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பாலியல் வன்கொடுமைகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது மட்டும் 2019ல் 1110; 2021ல் அது 1324 ஆக அதிகரித்திருக்கிறது. வெளியில் தெரியாமல் மிரட்டலின் காரணமாக புகாரே செய்யப்படாதது எவ்வளவோ? சாதி ஆதிக்க சக்திகள், அதிகார வர்க்கம், வனத்துறையினரால் போடப்படும் பொய் வழக்குகளால் மொத்த சிறைவாசிகளில் 11 சதவீதம் பேர் பழங்குடியினராக உள்ளனர்.
கொத்தடிமை போன்ற நிலை
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கை காரணமாக “பெரு முதலாளிகளின் பொற்காலமாக மோடியின் ஆட்சி காலம்” இருக்கிறது என்றால் மிகையல்ல! தேசத்தின் சொத்துக்கள் கார்ப்பரேட்டு களுக்கு தாரை வார்க்கப்படுவதற்கான சட்டப் பாது காப்புகளை ஒன்றிய பாஜக அரசு செய்துள்ளதை நாமறி வோம். இதன் விளைவு ஆதிவாசிகள் மத்தி யில் நிலமற்றவர்களின் எண்ணிக்கை ஆண்டுக் காண்டு அதிகரித்து வருகிறது. ஆதிவாசிகளில் நில மற்றவர்களின் எண்ணிக்கை 1991-92ல் 23 சதவீத மாக இருந்து 2018-19ல் 33 சதவீதமாக அதி கரித்துள்ளது. இதனால், சொந்த நிலத்திலேயே கூலிக் காரர்களாகவும், கொத்தடிமையாகவும் மாறும் அவல நிலைக்கு ஆதிவாசிகள் உள்ளாக்கப்படுகின்றனர். 2019-20 கணக்குப்படி பழங்குடியினரில் 51 சதவீதம் பேர் தினக்கூலிகளாக உள்ளனர். இவர்களுக்கான கூலி யும் சராசரியாக நாளொன்றுக்கு ஆண்களுக்கு ரூ.251, பெண்களுக்கு 181 என்ற அளவிலேயே உள்ளது. இந்த நிலையில் தான் காடுகளையும், மலைகளை யும், அதிலுள்ள கனிம வளங்களையும் தனியார் முத லாளிகளுக்கு வழங்க வழிவகுக்கும் வகையில் வனப் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2023, சுரங்கம் மற்றும் கனிம வளங்கள் திருத்தச்சட்டம் ஆகியவற்றை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. ஏற்கனவே, நடைமுறையிலுள்ள வன உரிமைச் சட்டம் 2006ஐ முறையாக அமல்படுத்தி ஆதிவாசி மக்களுக்கும், வனத்தைச் சார்ந்து வாழும் இதர சமூகத்தினருக்கும் உரிமைகள் வழங்க உருப்படியாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை ஒன்றிய அரசு. மாறாக அச்சட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில், அச்சட்டத்தில் ஆதிவாசி மக்களுக்கும் - கிராம சபைக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறிக்கும் வகையிலும் சட்ட திருத்தங்களை நிறை வேற்றியுள்ளது. வனத்துக்குச் சொந்தக்காரர்களான ஆதிவாசிகளை “ஆக்கிரமிப்பாளர்கள்” என்று முத்திரை குத்தி பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நிலங்களை அபகரித்து கொண்டனர். தற்போது “வளர்ச்சி” என்ற பெயரில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது.
இடஒதுக்கீடு எங்கே?
மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங் களில் வேலை வாய்ப்பில் சட்டப்படி பழங்குடி யினருக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள் ளது. ஆனால், இது நடைமுறையில் இல்லை. நாடு முழு வதுமுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் 2006-07ல் 16 லட்சம் பணியிடங்கள் இருந்தன. 2021-22ல் அது 8.4 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறை யில் மட்டும் 2,67,913 காலியிடங்கள் உள்ளது. இதன் காரணமாக நிரந்தரமான, பாதுகாப்பான பணிக்கு சென்றிருக்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான பழங்குடி சமூகத்தவர் வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுவிட்டனர். அது மட்டுமல்லாமல் சான்றிதழ் மெய்த்தன்மை அறிதல் என்ற பெயரில் பணியில் சேரும் போதும், பணியிலிருக்கும் போதும், பணி ஓய்வுக்கு பிறகும் விசாரணை என்ற பெயரில் பழங்குடி பணியாளர்கள் சித்ரவதைக்குள்ளாக்கப்படுகின்றனர். உச்சநீதி மன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகள், மத்திய பணி யாளர் துறையின் உத்தரவுகளை அதிகாரிகள் மதிப்ப தில்லை. இதனால் இறக்கும் வரை பணி ஓய்வுப் பலன் களை பெற முடியாமல் பழங்குடி மக்கள் மறைந்து போகின்றனர்.
ரூ.390 கோடி கூலி பாக்கி
அதேபோல், கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் நூறு நாள் வேலைத்திட்டம் 2021-22ல் பழங்குடியினருக்கு சராசரியாக 18 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினரில் 12.6 சதவீதம் குடும்பங்கள் மட்டுமே வேலை அட்டைபெற்றுள்ளனர். நாடு முழுவதுமுள்ள ஆதிவாசி குடும்பங்களில் ஆண்டுக்கு 100 நாள் வேலை பெற்றவர்கள் 6.9 சதவீதம் மட்டுமே. குறைந்த நாட்கள் வேலை, குறைந்த கூலி அதிலும் 2023 ஆகஸ்ட் வரை கூலி பாக்கி மட்டும் 390 கோடி ரூபாய். இதிலிருந்தே, இத்திட்டத்தை செயல் படுத்துவதில் கடுகளவும் ஆட்சியாளர்களுக்கு விருப்பம் இல்லை என்பது தெளிவாகிறது. மணிப்பூர் கலவரம் நாட்டு மக்களின் மனசாட்சி யை உலுக்கியிருக்கிறது. நான்கு மாதங்கள் கடந்த பிற கும் அமைதியை ஏற்படுத்த ஆட்சியாளர்கள் உருப்படி யான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரட்டை இன்ஜின் ஆட்சி இதற்காக வெட்கப்பட வேண்டும். பழங்குடியினர் மீதான மதப்பாகுப்பாட்டுடனான இந்த தாக்குதல் நீண்ட காலத்திற்கு பகைமையை மூட்டும் செயலாகும். ஒரு பிரிவு மக்களை பழங்குடி பட்டிய லில் சேர்ப்பதற்கான சட்டரீதியான வழிமுறைகளை அறிந்திருந்தும், பொய்யான வாக்குறுதிகளை கொடுத்த பாஜக தான் இந்த படுகொலைகளுக்கும், வன்முறைக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
நாமக்கல் மாநாடு
இத்தகைய சூழ்நிலையில் தான், ஆதிவாசி உரிமை களுக்கான தேசிய அமைப்பின் 4வது அகில இந்திய மாநாடு செப்டம்பர் 19,20,21 ஆகிய தேதிகளில் நாமக்கல் நகரில் நடைபெறவுள்ளது. முதல் மாநாடு, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும், இரண்டாவது மாநாடு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலும், மூன்றாவது மாநாடு ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திலும் நடைபெற் றது குறிப்பிடத்தக்கது. ஆதிவாசி மக்களின் அகில இந்திய மாநாடு தமிழ்நாட்டில் நடைபெறுவது இதுதான் முதல்முறை. இந்தியா முழுவதுமுள்ள 702 ஆதி வாசி பிரிவு மக்களையும் ஒருங்கிணைக்கும் பிரம் மாண்டமான அமைப்பு இது. இம்மாநாட்டில் ஆதிவாசி கள் வாழும் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தேர்ந் தெடுக்கப்பட்ட சுமார் 500 பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். செப்டம்பர் 21 அன்று மாலை பிரம்மாண்டமான பழங்குடி மக்களின் பண்பாட்டு பேரணி - பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மாநாட் டை கேரள தொழில் துறை அமைச்சர் பி.ராஜீவ் துவக்கி வைக்க இருக்கிறார். ஆதிவாசி மக்களின் நலன் காக்கும் போராட்டத்தின் நாயகி பிருந்தாகாரத் நிறை வுரையாற்றுகிறார். அகில இந்திய தலைவர் டாக்டர் பாபு ராவ், அகில இந்திய அமைப்பாளர் ஜிதேந்திர சௌத்ரி உட்பட நாடு முழுவதுமிருந்து ஆதிவாசி மக்களின் போராட்டத் தளபதிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
செப். 21 பேரணி
ஆதிவாசிகளின் வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்த இருக்கும் இந்த அகில இந்திய மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்துவது பெருமைக்குரியதாகும். தமிழ்நாட்டு பழங்குடி மக்களின் நம்பிக்கை நட்சத்திர மாக விளங்கும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. நமது முன்னணி செயல்வீரர்கள் மாநிலம் முழுவதும் பம்பரமாய் சுழன்று பணியாற்றி வருகின்றனர். செப்டம்பர் 21 நாமக்கல் நகரில் நடை பெறவுள்ள பழங்குடி மக்களின் பண்பாட்டுப் பேரணி யில் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்று வெற்றி பெறச் செய்வோம். “எடுத்த காரியம் யாவினும் வெற்றி” என்பதற்கொப்ப அகில இந்திய மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்துவோம்.