முப்பரிமாணவடிவில் அச்சிடப்பட்ட ஒரு புலியின் பல் அழிந்துவரும் அரிய உயிரினங்களை காப் பாற்றமுடியுமா? ஒரு நிறுவனம் அரு ணாசலப்பிரதேசத்தில் உள்ள ஆதிவாசி மக்களுக்கு அவர்கள் தலையில் அணியும் வன விலங்குகளின் உடற் பகுதிகளுக்கு மாற்றுப்பொருட்களை தயாரித்து இதற்கு தீர்வு காண முயல்கிறது. வடகிழக்கு இந்தியாவில் அருணாசலப்பிரதேசத்தில் தாழ்ந்த நிலப்பரப்பில் உள்ள மழைக்காடுகள் நிறைந்த பகுதிகளில் வாழும் புலிகள், பெரிய புள்ளி சிறுத்தைகள், கழுகுகள் மற்றும் இருவாயன் பறவைகள் வாழ்கின்றன. இப்பகுதியில் நியிஷி (Nyishi) ஆதிவாசிகள் சமூகம் பெரும்பான்மையாக வாழ்கிறது. இந்த மாநிலத்தில் பொதுவாக ஆண்கள் டான பையோபா (don a byopa) என்று அழைக்கப்படும் கலை வேலைப்பாடுகளுடன் கையால் நெய்யப்பட்ட அலங்கா ரங்கள் உள்ள தலைப்பாகையை அணிந்துகொள்வர். இதன் நுனியில் இருவாச்சி பறவையின் அலகு பொருத்தப் பட்டிருக்கும். பின்பகுதியில் கழுகின் நகம் இருக்கும். இவர்கள் பயன்படுத்தும் கத்திகளில் சிறுத்தையின் சிறிய தாடை அல்லது புலியின் பெரிய தாடை எலும்புகள் இருக்கும்.
சமூக மதிப்பின் அடையாளம்
புலி காட்டைஆள்கிறது. கழுகு வானை ஆள்கிறது. இவற்றின் உடற்பாகங்களை அணிந்துகொள்வது அவற் றின் மகத்தான வலிமையைப் பெற வழிசெய்கிறது. மக் களை பாதுகாக்கிறது. இது ஒரு சமூக மதிப்பின் அடை யாளம் என்ற கருத்து மக்களிடையில் பிரபலமாக இருந்து வருகிறது என்று பாப்பம் பேர் (Papum Pare) மாவட்டத்தில் வாழும் நியிஷி சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவர் நபம் பாப்பு (Nabam Bapu) கூறுகிறார். வன உயிரினங்கள் அழிந்துவரும் நிலையில் அரிய வகை வன விலங்குகளை வேட்டையாடி அவற்றின் உடற் பகுதிகளை அணிவது பாப்புவை வேதனைப்படுத்தியது. அவர் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பாளர் நண்பர் ஆனங் டாடாருடன் (Anang Tadar) சேர்ந்து பாரம்பரிய தலைப் பாகைக்கு பதில் முப்பரிமாண அச்சுப்பொறியின் உதவி யுடன் அதே மாதிரி விலங்குகளின் உடற்பகுதிகளை உரு வாக்கத் திட்டமிட்டார். இதன் பலனாக அவர்அருணாசல ஐவரி மற்றும் அலங் காரப்பொருட்கள் என்ற நிறுவனத்தை 2020 ஜனவரியில் வர லாற்று ஆராய்ச்சியாளர் மற்றும் தன் மனைவி லிக்கர் நானா வுடன் (Likha Nana) இணைந்து தோற்றுவித்தார். மாற்றுப் பொருட்களை உருவாக்கத் தொடங்கினார்.
தாவர பொருட்களில் இருந்து செயற்கை உடற்பாகங்கள்
இதற்காக செயற்கை ரெசின்கள் முதல் பிளாஸ்டிக் பொருட்கள், மரம் மற்றும் தீ பிடிக்காத கண்ணாடி வரை ஏராளமான மாற்றுப் பொருட்கள் ஆராயப்பட்டன. தாவ ரங்களை ஆதாரமாகக் கொண்ட, சூழலிற்கு நட்புடைய பொருட்களைப் பயன்படுத்துவது பற்றிய ஆய்வுகளும் நடைபெறுகின்றன. உள்ளூர்வாசிகளின் பாரம்பரி யத்தைப் பாதுகாப்பதுடன் உடற்பாகங்களுக்காக வன விலங்குகள் கொல்லப்படுவதை தடுக்கும் நோக்கத்துடன் உலகம் முழுவதும் செயல்படும் பல அமைப்புகளில் இந்நிறு வனமும் ஒன்று. தென்னாப்பிரிக்காவில் சிறுத்தைகளை பாதுகாப்ப தற்காக 2013ல் தோற்றுவிக்கப்பட்ட பாந்தரா (Panthera) என்ற அறக்கட்டளை உண்மையான சிறுத்தைப்புலியின் உரோமத்திற்கு பதில் செயற்கை உரோமத்தை தயாரித்து வழங்கும் வாழ்விற்காக உரோமம் (Furs for Life) என்ற திட்டத்தை தொடங்கியது.
செயற்கை உரோமத்தொப்பிகள்
உரோமத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் தொப்பிகள் பாரம்பரிய உரோமம் அல்லது அமாம்பாத்தா (amambatha) என்று அழைக்கப்படுகின்றன. இவை அந்நாட்டில் உள்ள மிகப்பெரிய ஆதிவாசி மக்களுக்கான மிகப்பெரிய தேவாலயங்களில் ஒன்றான ஷெர்ம்ப் (Shembe) எண்ற தேவாலயத்தின் மக்களால் பயன் படுத்தப்படுகின்றன. இந்த முயற்சியால் தொப்பிகள் தயாரிப்பதற்காக உண்மையான சிறுத்தைப்புலியின் உரோ மம் பயன்படுத்தப்படுவது 50 சதவிகிதம் குறைந்துள்ளது என்று பாந்தரா கூறுகிறது. பாப்பு மற்றும் டாகர் ஆகியோர் ஒவ்வொரு மாதமும் ஒரு முறை புழுதி படிந்த அருணாசலப் பிரதேசத்தின் கிரா மப்புறச்சாலைகளில் கிராம முதியோருடன் கலந்தாலோ சனை செய்ய தங்கள் புதிய பொருட்களுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செல்கின்றனர். பல தலைமுறைகளாக வேட்டையாடுவதில் அனு பவம் பெற்றவர்கள் என்பதால் முதியோரால் மட்டுமே செயற்கைப்பொருட்களால் உருவாக்கப்பட்ட மாற்றுப் பொருட்களின் தரத்தை சோதித்துப் பார்த்து அவை உண்மையான உடற்பகுதிகள் போல இருக்கின்றனவா என்பதை உறுதி செய்யமுடியும் என்று பாப்பு கூறுகிறார்.
செயற்கைப் பற்களும் அலகுகளும்
இதுவரை அருணாசல ஐவரி மற்றும் அலங்காரப் பொருட்கள் நிறுவனம் சிறுத்தை புலிகள் மற்றும் புலிகளின் நூற்றிற்கும் மேற்பட்ட பால் போல வெண்மை நிறத்துடன் உள்ள செயற்கைப் கோரைப் பற்கள், பாதி வெண்மை யுடன் இருக்கும் காட்டுப்பன்றியின் செயற்கைப் பற்கள், நியான் மஞ்சள் நிறம் உடைய கழுகின் நகங்களை உற்பத்தி செய்துள்ளது. இந்திய இருவாச்சி பறவைகளின் (Great Indian Hornbill) அலகுகளை முப்பரிமான அச்சுத் தொழில் நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கும் முயற்சிகள் இப்போது நடைபெறுகிறது. அருணாசலப் பிரதேசத்தில் நியிஷி (Nyishi), ஆடி ( Adi), காலோ (Galo), அபடானி (Apatani) மற்றும் டாஜின் ( Tagin) உட்பட 26 முக்கிய ஆதிவாசி இன மக்கள் வாழ்கின்றனர். தங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கங் கள் மறைந்து வருவதாக அஞ்சும் மாநில அரசு வாரம்தோறும் வெள்ளிக்கிழமையன்று மாணவர்களை பாரம்பரிய ஆடை அணியவேண்டும். அரசு ஊழியர்கள் மாதம் ஒரு முறை பாரம்பரிய ஆடையில் வரவேண்டும் என்று கூறியுள்ளது. இதனால் வன விலங்குகளின் உடற்பாகங்களுக்கு இப்போதும் கிராக்கி நீடிக்கிறது. உடற்பாகங்களை எல்லோ ராலும் வாங்கமுடியாது. கள்ளச்சந்தையில் ஒரு புலிப் பல் 400,000 முதல் 500,000 ரூபாய் வரை விற்கிறது. கள்ள வேட்டை மற்றும் உடல் பாகங்கள் சர்வதேச அளவில் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதை தடுக்க அரசு தீவிர முயற்சி செய்கிறது. என்றாலும் இந்த மாநிலம் கிழக்கில் மியான்மார் மற்றும் மேற்கில் சீனாவை எல்லைகளாகக் கொண்டிருக்கிறது. இதனால் வேட்டையாடுதல், கள்ள வணிகத்தைத் தடுப்பது சவாலானது என்று மாநில வனத்துறை துணைத்தலைமை அதிகாரி டானா டாப்பி (Tana Tapi) கூறுகிறார். இந்த சட்ட விரோத வணிகத்திற்கு எதிராக ஐவரி நிறுவனம் முக்கி யப்பங்கு ஆற்றிவருகிறது.
உள்ளூர் மக்களிடம் மன மாற்றம்
பாப்பு போன்றோரின் முயற்சிகள் மகத்தானவை. ஆனால் இவற்றின் வெற்றி உள்ளூர் மக்கள் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றனர் என்பதைப் பொறுத்தே அமையும். உண்மையான மாற்றம் ஏற்பட தொழில் முனை வோர் செல்வாக்கு மிக்க உள்ளூர் நிறுவனங்கள் செயற்கை பொருட்களை ஏற்குமாறு முயற்சி செய்யவேண்டும் என்று வடகிழக்கு மாகாணங்களில் பத்தாண்டுகளாக சூழல் பாது காப்பு சேவையில் ஈடுபட்டுவரும் ஆய்வாளர் ராஜ்கமல் கொஸ்வாமி (Rajkamal Goswami) கூறுகிறார். தங்கள் நிறுவனம் இதில் பெரியதொரு மாற்றத்தை உறுதியாக ஏற்படுத்தும் என்று பாப்பு நம்புகிறார். உயர் தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் துப்பாக்கி களைப் பயன்படுத்தி மக்கள் ஈவு இரக்கமில்லாமல் வன விலங்குகளை சுட்டுக்கொல்லும்போது அதே வன உயிரி னங்களைப் பாதுகாக்க, கலாச்சாரப் பாரம்பரியத்தைமீட்க ஏன் இதே போன்ற உயர் தொழில்நுட்பத்தைப் கொண்டு தயாரிக்கப்படும் மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த முன்வரக்கூடாது? விரைவில் நல்லதொரு மாற்றம் ஏற் படும்போது அழிந்துவரும் வன விலங்குகள் பாதுகாக்கப் படும் என்று சூழல் செயல்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.