articles

img

40 ஆயிரம் மகளிர் குடும்பங்களைக் காப்பாற்றுங்கள்! - எஸ்.ஜி.ரமேஷ்பாபு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM)  என்பது கிராமப்புறங்களில் உள்ள ஏழைக ளின் வலுவான மற்றும் துடிப்பான நிறுவன தளங்க ளை உருவாக்குவதற்கும், அவர்களின் வாழ்வாதார மேம்பாடு, நிதி மற்றும் பிற சேவைகளை அணுகுவதன் மூலம் அவர்களின் குடும்ப வருமானத்தை  அதிகரிக்கவும்  சென்னை தவிர பிற மாவட்டங்களில் 388 வட்டாரங்களில் உள்ள 12,524 ஊராட்சிகளில்  ஒன்றிய - மாநில  அரசுகளால் வழங்கப் படும் வறுமை ஒழிப்புத் திட்டமாகும்.  இந்திய அரசின் வழிகாட்டுதல்படி 2017 ஆம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து திட்ட செயல்பாடுகளையும் ஊக்குவிக்கவும், வளர்க்கவும் மற்றும் கண்காணிக்கவும் சமூக வள பயிற்றுநர்கள் (CRP), சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்களின் (CST), சமுதாய வல்லுநர் (வேலை), சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் (CBC) சேவை களை பயன்படுத்துமாறு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வா தார இயக்கம் அறிவுறுத்தி பணிகளை மேற்கொண்டது.   மேற்கண்ட பணிகள் 2017 ல் துவங்கியதாக கூறப் பட்டாலும் 2013 முதல் இத்தகைய திட்டங்களில் கிராமப்புற பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

மாதம் ரூபாய் 500 என துவக்கத்தில் நிர்ணயிக்கப்பட்டு அதுவும் பல மாதங்க ளுக்கு ஒருமுறை கிடைக்கும் நிலையில் 12,524 ஊராட்சிக ளில் தலா 3 பேர் என்ற அடிப்படையிலும், வட்டாரத்திற்கு 6  சமுதாய வள பயிற்றுநர்கள் (தொழில் மேம்பாடு) என சுமார் 40 ஆயிரம் பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.  இவர்கள் செய்த பணிகள் மிக முக்கியமானவை . அனை த்து விதமான மொபைல் செயலி, (எ.கா)  e mathi, min mathi, e mathi shg, looks, lakhpati Didi, Miction Andotiya போன்ற வைகளில் விபரங்களை சேகரிக்கும் பணி.  கிராம அடிப்படை தகவல் (VPDP, GPTP)   online  uptade  Miction Andotaya போன்றவைகளை உருவாக்கியது.  கிராம வறுமை ஒழிப்புச்சங்க இலக்கு மக்கள் பட்டியல் (pip) சர்வே மற்றும் online uptade போன்றவைகளையும், மாற்றுத்திறனாளி சர்வே மற்றும் அடையாள அட்டை  உபகரணங்கள் வாங்கி கொடுத்தல், முதியோர், நலிவுற்றோர் சர்வே மற்றும்  குழு அமைத்தல், பண்ணை சார்ந்த தொழில்,பண்ணை சாரா தொழில் சர்வே மற்றும்  குழு அமைத்தல்.  தொகுப்பு வீடு பழுது பார்ப்பு சர்வே மற்றும் mobile app uptate,  கிராம சபையில் சுய உதவிக் குழு பங்களிப்பு கூட்டம் சேர்தல்,  குடிநீர் பரி சோதனை செய்தல் மற்றும் online uptade, மகளிர் சுய உதவி குழு அமைத்தல், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் வங்கி பெருங்கடன் வாங்கி கொடுத்தல், பழங்குடி (ST) மக்கள் சர்வே மற்றும் அவர்களை குழுவில் இணைய ஊக்குவித்தல், இளைஞர்கள் சர்வே மற்றும் அவர்களை பயிற்சிக்கு ஊக்குவித்து அனுப்புதல்,  கலைஞர் மகளிர்  உரிமை திட்டம் படிவம்  பூர்த்தி செய்தல்  மற்றும் பல பணி களுக்கு இவர்கள் உழைப்பைச் செலுத்தி வருகின்றனர். இதற்கெல்லாம் உச்சமாய் கொரோனா காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இவர்கள் தடுப்பு மருந்து வழங்க செய்த உதவிகள் மிகவும் பாராட்டுக்குரியது. இவர்கள் எல்லோரும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள்.  ஆனால் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் தின் செயல்பாடுகள் தொடர்ந்து விரிவடைந்து வருவதாலும், சமுதாய வள பயிற்றுநர்களுக்கு தற்சமயம் வழங்கும் ஊக்கத் தொகை குறைவாக இருப்பதாலும், அவர்களை கள அளவில் தக்கவைத்துக்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் காரணத்தால் ஒவ்வொரு கிராமத்திற்கும் சமுதாய வள பயிற்று நர்களின் எண்ணிக்கையை பகுத்தாய்வு செய்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் அவர்களின் செயல்திறனை உறுதி செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கை மிகவும் வரவேற்புக்குரியது.

மாதாந்திர ஊக்கத் தொகையை ரூபாய் 4500 என உயர்த்தியதும் பாராட்டுக்குரியது. ஆனால் ஒரு ஊராட்சியில் 3 என இருந்த சமுதாய வள பயிற்றுநர்கள் எண்ணிக்கையை 2 என குறைப்பதும். குறைந்தபட்சம் கல்வித் தகுதியை 12 ஆம் வகுப்பு என மாற்றி யதும் இப்போதுள்ள, அதாவது 10 ஆண்டுகாலம் உழைத்த பெண்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது மட்டுமல்ல; அவர்கள் செய்து வந்த வேலை இனி அவர்களு க்கு கிடைக்காது என்ற நிலையையும் உருவாக்கி உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 30.03.2023 அன்று அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு எண் 19 மூலம்,  சுமார் 10 ஆண்டுகளாக கிராமங்களில் முன்னேற்றத்திற்கு அயராது உழைத்த, இதை நம்பி திருமணம் ஆகி குழந்தை களுடன் வாழ்ந்து வருகிற எளிய பெண்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறி உள்ளது.  எனவே இந்த அறிவிப்பை திரும்பப் பெற்றும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் செயல்முறை ஆணை  செமுந.க. எண்.6114/இ1/2023 உரிய மாற்றங்களுடன் மீண்டும் வெளியிட்டும் கிராமப்புற ஏழை பெண்களின் கண்ணீரை துடைத்திட வேண்டும். கட்டுரையாளர் : மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)