2023 மே மாதம் இறுதி வாரம் கியூபாவின் முதல் மருத்துவப் படையின் 60 வது ஆண்டை குறிக்கிறது. கியூபா மீது அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்து நசுக்கினாலும் உல கோர் அனைவருக்குமான மருத்துவ சேவையை நோக்கி கியூபா தொய்வின்றி முன்னேறி வருகிறது. 1963 ஆம் ஆண்டு கியூபாவின் முதல் மருத்துவப்படை, பிரான்சில் இருந்து விடுதலை பெற்ற அல்ஜீரியாவிற்கு உதவி டுவதற்காக சென்றது. 60 ஆண்டுகள் கழித்து இன்று உலக சுகாதாரத்தில் கியூபா சிறந்த பங்களிப்பை செய்து வருகிறது.கோடிக்கணக்கான மக்களுக்கு அடிப்படை சுகாதாரம் கிடைப்பதையும் பெருந்தொற்றில் இருந்து காப்பாற்றப்படுவதையும் கியூப மருத்துவப் படைகள் உறுதி செய்துள்ளன. சகோதர நாடுகளை பாதுகாப்பதில் கியூபா அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. 2001 க்கு பிறகு ஏகாதிபத்திய அமெ ரிக்காவின் இராணுவப் படையால் உலகம் முழுவதும் நடத்திய போரால் நேரடியாக அதிகாரப்பூர்வ கணக்குகளின்படி 9,06,000 பேர் படுகொலை செய்யப்பட்டுள் ளனர். மறைமுகமாக இதை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப் பட்டு மரணித்து உள்ளனர். இதேவேளை யில் சோசலிசத்தை உயர்த்திப்பிடிக்கும் கியூபா தனது மருத்துவப்படைகள் மூலம் உலகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் அதிகமான பிரசவங்களை பாதுகாப்பாக கையாண்டு குழந்தைகளின் வாழ்வை உறுதிப்படுத்தியுள்ளது. “வெடி குண்டு களை அல்ல; மருத்துவர்களை அனுப்பு வோம்” என்று புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோ கூறியதை கியூபா நிறைவேற்றி யுள்ளது.
ஒன்றிணைந்து பொது சுகாதார கட்டமைப்புகளை உருவாக்குதல்
முதன் முதலில் 1963 ஆம் ஆண்டு அல்ஜீரியாவிற்கு செவிலியர்கள், மருத்து வர்கள் பல் மருத்துவர்கள் உட்பட 60 பேர் கொண்ட கியூப மருத்துவர் படை சென்றது. அன்றில் இருந்து 2022 வரை உலகள விலான பெருந்தொற்று,சுனாமி, புயல், பூகம்பம் உள்ளிட்ட அவசர காலகட்டங்க ளில் மக்களுக்கு சுகாதாரப் பணியாற்ற உலகம் முழுவதும் கியூபா 6,05,000 மருத் துவப் படை வீரர்களை அனுப்பியுள்ளது. உலக நாடுகளுக்கு மருத்துவப் படை வீரர்களை அனுப்பி சேவை செய்வது மட்டும் அல்லாமல் 2005 முதல் 2016 க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் உலகின் தென் பகுதி நாடுகளில் உள்ள 25,000 மாணவர்களுக்கு இலத்தீன் அமெரிக்க மருத்துவ பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சியை கியூபா வழங்கி இருக்கிறது.பணக்கார நாடுகளான அமெரிக்கா உள்ளிட்ட நாடு களைச் சேர்ந்த மாணவர்களையும் கணக் கில் எடுத்துக் கொண்டால் 27,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சி வழங்கியிருக்கிறது. பிறநாடுகள் போல் அல்லாமல் இலத் தீன் அமெரிக்கா மருத்துவப் பல்கலைக் கழகம் விவசாயிகள், தொழிலாளர்கள், பழங்குடியின சமூகங்களின் மாணவ- மாணவியரின் சேர்க்கைக்கு முன்னு ரிமை தருகிறது. இப் பயிற்சிப் பள்ளியில் மாணவர்கள் மருத்துவப் பயிற்சி மட்டும் பெறுவதில்லை; கியூபப் புரட்சியின் போது அறிவிக்கப்பட்ட மருத்துவம் சார்ந்த புரட்சிகரச் சிந்த னையை நன்கு விவாதம் செய்து அதை மெருகூட்டுகிறார்கள். துவக்க கால பயிற்சிக்குப் பிறகு மருத்துவ படைக் குழு வில் இணைக்கப்பட்டு நாடு முழுவதும் பணி செய்வதற்கு அனுப்பப்படுகி றார்கள்.
உலகின் வட பகுதி நாடுகளில் உள்ள மருத்துவ மாணவர்களை விட மிகவும் வேறுவிதமாக கியூபாவில் பயிற்சி பெற்ற மாணவர்கள் சிறந்த மருத்துவ தொழில் நுட்பங்களுடனும் பாரம்பரிய மருத்துவர்க ளுடனும் இணைந்து தோழமை உணர்வு டன் உருவாகிறார்கள் என கியூபா வரலாற்று பொருளாதார ஆசிரியர் ஹெலன் யாஃபே பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். கியூப மருத்துவ மாணவர்கள் மருத்து வத் துறையின் புரட்சிகரத் தன்மை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தில் மருத்துவ வீரர்க ளின் பங்களிப்பு குறித்து பயிற்றுவிக்கப் படுகிறார்கள். இன்றைய நிலவரப்படி இலத்தீன் அமெரிக்க மருத்துவப் பள்ளி யில் 163 பாலஸ்தீன மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். 50 மாணவர்கள் இளங்கலை மருத்துவப் படிப்பில் இணைந்துள்ளனர் என்று கியூபா பொது சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆரோக்கியம் அனைவருக்குமானது
கியூபாவில் மருத்துவ வீரர்களை உரு வாக்கி வலுப்படுத்துவதற்கு இணையான முயற்சிகள் வெளிநாட்டு மாணவர்களுக் கும் எடுக்கப்படுகிறது. 2022 ஆண்டின் கணக்குப்படி ஆயிரம் கியூப மக்களுக்கு 9 மருத்துவர்கள் இருந்தனர். இதே வேளை யில் அமெரிக்காவில் ஆயிரம் பேருக்கு 2.5 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். பணக்கார நாடுகளை விட கியூபா வில் செவிலியர்கள், மருத்துவ வீரர்களுக் கான பணி நியமனமுறை வித்தியாசமான முறையில் இருக்கிறது. மோசமான சூழலை சமாளிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள மக்கள் எளிதில் அணுகும்படி பரவி இருக் கக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் அவர்கள் பணியமர்த்தப்படுகி றார்கள். இது மருத்துவ சேவை தேவைப் படும் மக்கள் அனைவருக்கும் எளிதாக கிடைக்க வழி வகுக்கிறது. இதே நேரத்தில் பணக்கார நாடுக ளான அமெரிக்கா உட்பட பல நாடுகள் மருத்துவ சேவை கொடுப்பதில் பாலை வனம் போல இருக்கின்றன. மருத்துவர் கள், செவிலியர்கள் பற்றாக்குறையால் அத்தியாவசிய சுகாதார சேவையை பெறு வதில் இருந்து கூட இந்நாடுகளின் கிரா மப்புறங்கள் அல்லது குறிப்பிட்ட சமூகங்க ளின் மக்கள் துண்டிக்கப்படுகின்றனர். உலகளாவிய சுகாதாரத் துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் கியூபாவை போல சொந்த நாட்டில் மருத்து வப் படைகளை உருவாக்கி, நெருக்கடி காலத்தில் உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் அனுபவத்தை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும்.
நெருக்கடியான காலகட்டத்தில் சர்வ தேச அளவில் கியூபா செய்யும் மகத்தான உதவியை வெறும் தொழில்நுட்ப உதவி யாக மட்டும் சுருக்கிப் பார்க்க சர்வதேச அளவில் இருந்து வரும் சுகாதாரப் பணியா ளர்களுக்கு கல்வியையும் பயிற்சியும் வழங்குவது போல, கியூபாவின் சர்வதேச சுகாதார திட்டங்கள் விவாதத்தில் ஆதிக் கம் செலுத்துவதும், கியூபாவின் சுகாதா ரக் கட்டமைப்பும் ஓர் ஆக்கப்பூர்வமான மாறுபட்ட பார்வையை தருகிறது.மேலும் கியூபாவின் பொதுக் கல்வி முறை மூலம் பயிற்சி பெற்ற மருத்துவ வீரர்கள் கொடுக்கும் மருத்துவ சேவை ஏழை - பணக்காரர் வேறுபாடு இன்றி அனைவருக்கும் சமமானதாக இருக்கிறது. “அனைவருக்கும் சுகாதாரம்” என்று உலக சுகாதார அமைப்பின் முழக்கத்தை உறுதியாக செயல்படுத்தும் மிக சில நாடுகளில் கியூபாவும் ஒன்று. மனித குல விடுதலைக்கான புரட்சிப் பயணத்தில் சோசலிச கியூபா, மருத்துவப் படைக ளோடு முன்னேறுகிறது.
பீப்பிள்ஸ் டெமாக்ரசி (ஜூன் 4)
தமிழில் சுருக்கம் : சேது