articles

img

ரூ.8 கோடியில் 37 சமுதாயக் கூடங்கள்

தொகுதி மேம்பாட்டு நிதியும், பி.ஆர்.நடராஜன் எம்பி.,யின் பங்களிப்பும்

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த படியாக வளர்ந்து வருகின்ற மிகப்பெரிய மாவட்டம் கோவை.  கோவையில் பஞ்சாலைகள், விசைத்தறி, இன்ஜினியரிங் ஆலைகள், பனியன், பம்பு செட், வெட் கிரைண்டர், கோழி வளர்ப்பு, விவ சாயம். கட்டுமானம் உள்ளிட்ட சிறு, குறு  தொழில்கள் வளர்ச்சி என்பது மிகப்பெரிய அளவில் உள்ளது. மேற்கண்ட அனைத்து தொழில்களிலும் மனித உழைப்பு அடிப்ப டையாக உள்ளது. மனித உழைப்பை செலுத்துகின்ற உழைக்கும் மக்களின் கணிச மானோர், அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி  மூட்டையாக இருக்கிற அருந்ததிய சமூக மக்களே. நிலையான வருமானம் இல்லாமல் அன்  றாட கூலிகளாக இன்றளவும் உள்ளனர். நகர்ப்புறப் பகுதிகள் என்றாலும், கிரா மப்புற பகுதிகள் என்றாலும், இம்மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் இவர்கள் தங்கள் பகுதி களிலிருந்து வெளியே சென்று வாழ முடிவ தில்லை. ஒரு பக்கம் சாதிய ஒடுக்குமுறை, மறுபுறம் பொருளாதார ஒடுக்குமுறை. நகர்ப்புற பகுதிகளில் எவ்வித அடிப்படை வச தியும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

வெளி மண்டபங்களில் சாதி காரணத்தி னாலும், பொருளாதார வாய்ப்புகள் இல்லாத  காரணத்தினாலும் திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகளை சிறப்பாக நடத்த முடிவதில்லை.  இந்நிலையில், 2009 - 2014 , 2019 - 2024 இரண்டு  முறை கோவை நாடாளுமன்ற உறுப்பினராக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை வர் பி.ஆர்.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார்.  இக்காலத்தில் பட்டியலின மக்கள் - குறிப்பாக அருந்ததிய மக்கள் வசிக்கிற பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து ரூ.8 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து, 39 சமுதாய கூடங்கள் அமைக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டிலேயே குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். சூலூர் சட்டமன்றத் தொகுதியில் நடை பெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாள ருக்கு ஆதரவாக மு.க ஸ்டாலின் அவர்கள்  பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, நாடாளுமன்ற  உறுப்பினர் பி.ஆர்.நடராஜனின் நிதியில் அருந்ததிய மக்கள் வசிக்கும் இடத்தில், சமு தாயக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ள பணி யை பாராட்டிப் பேசியதோடு, திமுக அரசும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.  இதுபோன்றே பல்வேறு தலைவர்கள் பி.ஆர்.நடராஜன் எம்பி.,யின் இப்பணிகள் குறித்து பல்வேறு இடங்களில் மேற்கோள் காட்டி பேசியுள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்  செயலாளர் கே.சாமுவேல்ராஜ் கூறுகையில்,  சமூக ரீதியாக பின்தங்கியவர்கள், பொரு ளாதார ரீதியாக பின் தங்கியவர்கள் என்கிற  இரண்டு விதமான சுரண்டல்களுக்கும், ஒடுக்கு முறைக்கும் உட்படுத்தப்பட்டிருக்கிற உழைக்கும் மக்கள்தான் தமிழ்நாட்டின் அருந்ததியர் மக்கள். தலித் அருந்ததியர் மக்களின் வாழ்வுரிமையோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் வர்க்க வெகு ஜன அமைப்புகளும் என்றும் இணைந்து பய ணப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன என்பது

மறுக்கவியலா உண்மை. 

தமிழ்நாடு முழுவதும் சென்னை மாநக ராட்சி முதல் கன்னியாகுமரியின் ஊராட்சிகள்  வரை துப்புரவுப் பணி, தூய்மை பணியில் விடுபட முடியாமல் இன்றைக்கும் திணிக் கப்பட்டிருக்கிற அருந்ததியர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களின் உரிமை களுக்கு உரத்து குரல் கொடுத்து கொண்டி ருப்பது செங்கொடி ஏந்திய தொழிற்சங்கத் தோழர்களே.  அங்கே அதிகாரிகளால், ஊழியர்களால் அவமானப்படுத்தப்படுகிற போதெல்லாம் ஆர்த்தெழுந்தது செங்கொடி இயக்கங்கள். இத்தகைய இணைப்பின் ஒரு பகுதியாக தான் அருந்ததியர் மக்களின் 3 சதவீத உள்  இட ஒதுக்கீட்டு உரிமைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்கிற பேரியக்கம் 2007  செப்டம்பர் 17 ல் விருதுநகர் தேசபந்து மைதா னத்தில் துவங்கி தமிழ்நாடு முழுவதும் மறைந்த அன்பு தலைவர் தோழர் என்.வரத ராஜன் அவர்களின் தலைமையில் மாநிலம் முழுவதும் போராட்டங்களையும் சிறப்பு மாநாடுகளையும் முன்னெடுத்தது.

2008 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று  சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான  பேரணியின் நிறைவில் தான் தலித் அருந்த தியர்களின் இட ஒதுக்கீட்டு உரிமைக்காக நீதி பதி ஜனார்த்தனன் ஆணையம் அமைக்கப் படும் என்று அன்றைய முதல்வர் கலைஞர்  கருணாநிதி அறிவித்தார். 2009 ஏப்ரல் 29 அன்று அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு தமி ழகத்தில் செயல்பாட்டுக்கு வந்தது. கோரிக் கையை உருவாக்கி, இதன் துவக்கமாக  போராடியது பல்வேறு அருந்ததியர் அமைப்புகள் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு உண்மை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் களத்தில் தந்த மாபெரும் அழுத்தம் என்பது.  தமிழக சமூக நீதிப் போராட்ட வரலாற்றில்  பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படத் தக்கது மார்க்சிஸ்ட் கட்சியின் பங்களிப்பு.

இத்தகைய பார்வையும்,தெளிவும்,செயலூக்கமும் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்களால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஒதுக்கீட்டில் கணிச மான தொகையை அருந்ததியர் மக்களின்  குடியிருப்பு பகுதியில் அரசு சமுதாய நலக்கூடங்களை உருவாக்குகிற அவரு டைய முயற்சியை எவ்வளவு பாராட்டினா லும் தரும். “பத்துக்கு பத்து, எட்டுக்கு பத்து” என்கிற  சதுர அளவுள்ள வீடுகளில் வாழக்கூடிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் இல்ல நிகழ்ச்சிகளையும், கிராம நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொள்வதற்கு இது போன்ற சமு தாயக் கூடங்கள் மற்ற எல்லாரையும் விட  ஒடுக்கப்பட்ட மக்களுக்கே மிகத் தேவையாக  இருக்கிறது. இதனை உணர்ந்து மிகச் சிறப்  பான முறையிலே இப் பணியைச் செய்திருக்  கிற பி.ஆர்.நடராஜன் எம்.பி., அவர்களு டைய பங்களிப்பை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில குழு நெஞ் சாரப் பாராட்டுகிறது” என்றார்.

தொகுப்பு: யு.கே.சிவஞானம், மாநில துணைத்தலைவர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் இரா.அதியமான்:

தோழர் பி.ஆர்.நடராஜனின் சிறப்பு மிக்க பணிகள் கோவை நாடாளு மன்ற தொகுதி முழுவதும் நடைபெற்றிருந்தாலும், 39க்கும் மேற்பட்ட சமுதாய கூடங்களில், 37 சமுதாயக்கூடங்கள் அருந்ததிய மக்கள்  வாழ்கிற பகுதிகளில் அமைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. ஆதித்தமி ழர் பேரவையின் நீண்ட நெடுங்கால கோரிக்கை இதுவாகும். மேலும், இந்த  சமூக நல கூடங்களில் மாலை நேர கல்வி மையங்களும் நடைபெறுகின்றன.  இது அப்பகுதிகளில் உள்ள குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணை யாக இருக்கிறது. எந்த மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்றடைய வில்லை என கண்டறிந்து அந்த மக்களுக்கு கொண்டு சேர்ப்பதே உண்மை யான சமூகப் பணியாகும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது போல் பணி செய்வது பாசிச சக்திகளுக்கு எதிரான நமது போராட்டத்திற்கு  வலுசேர்ப்பதாக இருக்கும். அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு கோரிக்கை, காளப்பட்டி ஆலய நுழைவு போராட்டம், சிங்காநல்லூர் பெரியார் நகர்  தீண்டாமைச் சுவர் இடிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பணி மகத்தானது;  பாராட்டத்தக்கது. அதேபோன்று, கோவை நாடாளுமன்ற தொகுதியில்  வாழ்கின்ற அருந்ததிய மக்களுக்கு கட்டித்தரப்பட்டுள்ள சமுதாயக் கூடங்களும் மகத்தானவை.

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன்:

தோழர் பி.ஆர்.நடராஜன், நாடாளுமன்ற உறுப்பினரான பின்  அவருக்கு ஒதுக்கிய தொகுதி நிதியை சமூக கண்ணோட்டத்  தோடு, பட்டியலின மக்களிலும் கடை கோடியில் இருக்கின்ற அருந்த திய மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று சிந்தித்து, ஊருக்கு வெளியே  சேரியில் வாழும் மக்களுக்கும் பயன்படுகின்ற வகையில் 39 சமு தாயக் கூட்டங்களை கட்டிருக்கின்றார். பொருளாதாரத்தாலும், சாதிய  ஒடுக்கு முறையாலும், மற்ற சமூகத்தினர் பயன்படுத்தும் திருமணக்கூடங்  களை அருந்ததிய மக்கள் நெருங்க முடியாத நிலை இருந்ததை மாற்றி,  அவர்களுக்கு என்று விடுதலை உணர்வோடு விழாக்களை கொண்டாட  அருந்ததிய மக்களிடத்தில் ஒரு சமூக மாற்றத்தை தோழர் பி.ஆர்.நடராஜனின் செயல் நிகழ்த்தியிருக்கிறது.  நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, வட மாநிலங்களிலிருந்து வரும் 13 ரயில்கள் கோவை ரயில் நிலையத்திற்கு வராமல் கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தன. தோழர் பி.ஆர்.நடராஜன்  தலைமையில் அனைத்துக் கட்சிகள் இணைந்து நடத்திய போராட்டத் தின் விளைவாக ஐந்து ஆண்டுகளாக எட்டு ரயில்கள் கோவை ரயில் நிலை யம் வந்து செல்கின்றன. இதுபோன்ற மக்கள் நலன், மாநில உரிமை சார்ந்த  பணிகள் ஏராளம் நடந்திருக்கின்றது.

ஆதித்தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் கு.ஜக்கையன்:

தோழர் பி.ஆர்.நடராஜன் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய பத்து ஆண்டுகள்  ஒடுக்கப்பட்டோரின் உயர்வுக்கு வலுசேர்க்கும் காலமாக இருக்கி றது. குறிப்பாக, 39 சமுதாயக்கூடங்களை கட்டியிருப்பது (37 அருந்த திய மக்கள் வாழும் இடங்களில்) சாதாரண நிகழ்வாக கருதி விட முடியாது. ஒடுக்கப்பட்டவர்களிலும் கடைக்கோடியில் இருக்கும்  அருந்ததிய மக்கள் கோவை போன்ற செழிப்பு மிக்க மாநக ரங்களில் லட்சங்கள் பல செலவழித்து திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. அப்படியே செலவு செய்திட சிலர் முன் வந்தாலும் சனாதன சக்தி கள் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள்.  ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டபோது ஒரு பக்கம்  வறுமை, மறுபக்கம் சாதி. இவைகள் இரண்டையும் கட்டிக் காப்ப வையாக உள்ளன. திருமண மண்டபங்கள். ஆக இவை அனைத்திற்கும் முடிவு கட்டும் விதமாக தனது தொகுதி மேம்பாட்டு  நிதியிலிருந்து 39 சமுதாயக்கூடங்களை அமைந்திருப்பது மகிழ்ச்சி யை ஏற்படுத்தியிருக்கிறது. சமுதாயக்கூடங்கள் சாதி ஒழிப்பின் ஒரு அங்கமே.

நாகை திருவள்ளுவன், தலைவர், தமிழ்ப்புலிகள் கட்சி

தோழர் பி.ஆர்.நடராஜன், இரண்டு  முறை நாடாளுமன்ற உறுப்பி னராக இருந்த காலக்கட்டங்களில் கோவை  மாவட்டத்தில் 39 சமுதாயக்கூடங்களை, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டிக் கொடுத்திருக்கிறார். இதனை மேலோட்டமாக பார்த்தால் சமுதாய கூடங்கள் என்பது சாதாரண செய்தியாக தோன்றலாம். ஆனால், சாதி வெறி, தீண்டா மைக் கொடுமைகள் நிறைந்த கொங்கு மண்டலத்தில் பொது இடங்களான திரு மண மண்டபங்களில் இன்றளவும் தலித்து களுக்கு அனுமதி இல்லை. எனவே, அவர்  களின் குடியிருப்பு பகுதியிலேயே தலித்  மக்களின் பயன்பாட்டிற்காகவும், அவர் களின் சுயமரியாதை வாழ்விற்காகவும் கட்  டப்பட்டவை தான் இந்த சமுதாயக்கூடங் கள்.  மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அந்த மக்களின் வாழ்வியல் மேம்  பாடு அடையவும், அவர்களை சுயமரி யாதை உள்ள மக்களாக வாழ செய்வ தற்காகவும், பல்வேறு முயற்சிகளை மேற்  கொண்டுள்ளார். அதற்கான ஒரு சிறு  சான்றுதான் தலித் மக்களின் பகுதியில் கட்டி  எழுப்பப்பட்டுள்ள சமுதாயக்கூடங்கள்.  

ஒன்றிய அரசின் பணியாளர்கள், முன் னாள் ராணுவ வீரர்கள், ஓய்வுபெற்ற அரசு  பணியாளர்களுக்காக சிஜிஎஸ்எச் (Central  Government Health scheme) என்று  சொல்லக்கூடிய ஒன்றிய அரசு மருத்துவ மனை சென்னையில் மட்டுமே இயங்கி  வந்தது. அதேபோன்ற மருத்துவமனையை பெரும் போராட்டத்திற்கு பிறகு கோவைக் கும் கொண்டு வந்த பெருமை தோழர் பி.ஆர்.நடராஜனையே சாரும். ஒன்றிய அரசானது சேலம் ரயில்வே கோட்டத்தை புறக்கணித்தபோது, பல்வேறு மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி சேலம் ரயில்வே கோட்டத்தை உருவாக்கியவர். கோவையிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு  பகுதிகளுக்கு ரயில்களின் எண்ணிக்கை யை அதிகப்படுத்தியவரும் இவரே. தமிழ்  நாடு அரசு தற்போதைய சட்டமன்ற கூட்டத்  தொடரில் கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை அறிவித்திருப்பதற்கு மூல கார ணம் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பி.ஆர். நடராஜன் எம்.பி., அவர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சி ஆகும். தமிழ்நாட்டின் மேற்கு தளங்களில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை நிறுவு வதற்கு பல்வேறு அமைப்புகள், கட்சிகள் முயற்சியெடுக்கிறபோது தோழர் பி.ஆர்.நடராஜன், அனைவரையும் இணைத்து களம் காணுகிறார். இவ்வாறு அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை அறிந்து தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடி வரும் தோழர். பி.ஆர்.என். பொதுவுடமை யின் அடையாளமாகவே திகழ்கிறார்.

பி.ஆர்.நடராஜன் எம்.பி., நிதியில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடங்கள்

2009-2010 நல்ல காளிப்பாளையம், உகையனூர் பொங்கலூர் உப்பிலிபாளையம் ஏடி காலனி, காரைப்புதூர், பல்லடம் 2010-2011 நடுவேலம்பாளையம் பூமலூர் பஞ்சாயத்து, பல்லடம் தூத்தறிபாளையம், வி.கள்ளிப்பாளையம், பொங்கலூர் தொங்குட்டிபாளையம், அரிசன காலனி, பொங்கலூர் குப்பிச்சிபாளையம், உகையனூர், பொங்கலூர் 2011-2012 கொள்ளுப்பாளையம், கணியூர் பஞ்சாயத்து, சூலூர் பதுவம் பள்ளி, சூலூர் தாலுகா கோதபாளையம் செம்மாண்டபாளையம், சூலூர் வலசுபாளையம், ஜே.கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து கோடாங்கிபாளையம், பல்லடம் ஒன்றியம் அண்ணாநகர், 63 வேலம்பாளையம் பஞ்சாயத்து வடவள்ளி சுல்தான்பேட்டை 2012-2013 ஜல்லிபட்டி, மதுரை வீரன் கோவில் அருகில், சுல்தான்பேட்டை கிழக்கு வீதி, நீலம்பூர், கோவை வார்டு எண்13, இருகூர் பேரூராட்சி நீலிக்கோணம்பாளையம், கோவை பட்டாளம்மன்கோவில் வீதி, ஆவாரம்பாளையம் அஞ்சுகம் நகர், வார்டு எண் 27, சின்னவேடம்பட்டி அய்யம்பாளையம், சுல்தான்பேட்டை கரவழி வேலம்பட்டி, சூலூர் காளிவேலம்பட்டி, சுக்கம்பாளையம், பல்லடம் 2013-2014 கே.கே.நகர், 24, வீரபாண்டி பெரியநாயக்கன்பாளையம் தண்ணீர்பந்தல் ரோடு, வார்டு எண் 18, கருமத்தம்பட்டி பீடம்பள்ளி, சூலூர் தாலுகா காங்கேயம் பாளையம் ஏடி, சுக்கம்பாளையம், பல்லடம் பணிக்கம்பட்டி, பல்லடம் ஒன்றியம் புத்தரசல் கிராமம், வடமலை பஞ்சாயத்து, பொங்கலூர் பாரதிபுரம் இடுவாய் ஊராட்சி, திருப்பூர் செம்மாண்டம்பாளையம், முதலிபாளையம் ஊராட்சி வெங்கிட்டாபுரம், வடுகபாளையம் புதூர், திருப்பூர் 2019-2024 புதுக்காலனி காளப்பட்டி, கவுண்டம்பாளையம் புள்ளிபாளையம், பல்லடம் வாரப்பட்டி, சூலூர் ஏடி காலனி, குமாரபாளையம், சூலூர் மதியழகன் நகர், சூலூர் பச்சார்பாளையம் பூராண்டம்பாளையம், சூலூர் அப்பநாயக்கன்பட்டி புதூர், சூலூர்

திராவிட தமிழர் கட்சி மாநிலத்தலைவர் வழக்கறிஞர் வெண்மணி

கோவை மாவட்டத்தில், உழைக்கும் மக்கள், குறிப்பாக  அருந்ததிய மக்கள், தோழர் பி.ஆர்.நடராஜனை சகோ தர உணர்வோடு தோழமை உணர்வோடு அணுகுவதைப் பார்த்து  வியந்து போய் உள்ளேன். அப்போது பி.ஆர்.நடராஜன். அவர்கள்,  அவர்களை பெயர் சொல்லி அழைத்து பேசும் அளவிற்கு அருந்த திய மக்களிடம் நேச உணர்வோடு வாழ்ந்து வருகிறார். கோவை நாடா ளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள அருந்ததியர் மக்களின்  பொருளாதார பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அனைத்து பகுதி களிலும் சமூகக்கூடங்களை அமைத்துக் கொடுத்ததில் தோழர் பி.ஆர். நடராஜனுக்கு நிகராக யாரும் இருக்க மாட்டார்கள். ஒன்றிய பாஜக  அரசு கொரோனா தொற்று காலங்களில் நாடாளுமன்ற உறுப்பின ருக்கான தொகுதி நிதியை ரத்து செய்த போது, ஏற்கனவே ஒதுக்கப்  பட்ட பணத்தில் கட்டி முடிக்கப்பட வேண்டிய பல்வேறு சமூகக் கூடங்களை பற்றி கவலைப்பட்டவர். அருந்ததியர் மக்கள் திரு மணம் உள்ளிட்ட குடும்ப காரியங்களை செய்வதற்கு பணம் கொடுத்து மண்டபங்களை வைத்துக் கொள்ள முடியாத நிலையை கருத்தில்  கொண்டு தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதி தொகையில் ரூ.8  கோடிக்கு மேலாக சமூக கூடங்களை கட்டிக் கொடுப்பதில் மிக ஆர்வ மாக இருந்தார். கட்டப்படுகிற சமூகக் கூடங்கள் தரமானவையாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, அப்படியே தொடர்ந்து கவ னித்துக் கொள்பவராக இருந்து வருகிறார்.  கோவை மாவட்ட மக்களின் சமூக ஒற்றுமைக்காக அதிகாரி களை சந்திப்பதும் பல்வேறு பதட்டமான சூழ்நிலையில் இயக்கங்  களை ஒருங்கிணைத்து பாதிக்கப்படுகிற மக்களுக்கு ஆதரவாக  செயல்படுவதும், சங்பரிவார் அமைப்புகள் மத அடிப்படையில்  கோவையை எப்போதெல்லாம் சீர்குலைக்க முயற்சிக்கிறதோ,  அப்போதெல்லாம் ஜனநாயக இயக்கங்களை முன் நிறுத்தி  கோவையின் அமைதிக்காக தொடர்ந்து பேசுகிறார், களத்தில்  நிற்கிறார். அருந்ததியர் மக்கள் சுயமரியாதையோடு குடும்ப நிகழ்வு களை நடத்துவதற்கு தோழர் பி.ஆர்நடராஜன் எம்.பி.யின்  பணி பாராட்டத்தக்கது.