திருப்பரங்குன்றம், பிப்.9- திருப்பரங்குன்றத்தில் கண்டறியப் பட்டுள்ள ஒரு தமிழி கல்வெட்டு கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். இதன் மூலம் இந்தியாவின் ஏதன்ஸ் “மதுரை” நாகரீகத்தின் தொட்டில் தமிழகம் தான் என்பதை மீண்டும் நிரூ பித்திருக்கின்றனர் கல்வெட்டு ஆய்வாளர்கள். மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள குகையில் 2,200 ஆண்டுகள் பழமையான ஒரு தமிழிக் கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் வெ.பாலமுரளி கண்டுபிடித்துள்ளார். இந்தக் குன்றில் முற்காலப் பாண்டியர் களின் பல குடைவரைக் கோவில்கள் உள்ளன. திருப்பரங்குன்றம் ரயில்நிலை யம் எதிரில் உள்ள திருப்பரங்குன்றின் மேற்குச் சரிவில் இயற்கையாக அமைந்துள்ள இரண்டு குகைகள் உள்ளன. அதில் மேலே உள்ள குகையில் ஏராளமான கற்படுக்கைகளும் கி.மு.1-ஆம் நூற்றாண்டு மற்றும் கி.பி.1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று தமிழிக் கல்வெட்டுகளும் உள்ளன. இவை ஒன்றியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மழைநீர் புகாமல் இருக்க வெட்டப்பட்டுள்ள “காடி”
உள்ள குகைக்குப் போகும் வழியில் அதன் இடதுபுறம் இயற்கையான ஒரு சிறிய குகை உள்ளது. இதன் உள்ளே ஐந்து கற்படுக்கைகள் உள்ளன. வட்ட வடிவமான இதன் முகப்புப் பகுதியில் மழை நீர் உள்ளே செல்லாதவாறு “காடி” வெட்டப்பட்டுள்ளது. இந்தக் குகையின் விதானத்தின் மேற்குப் பகுதியில் ஒரு தமிழி கல்வெட்டு இருப்பதைப் பாறை ஓவியம், கல்வெட்டு, குடைவரைகள் குறித்து ஆய்வு செய்து வரும் மதுரை தொல்லியல் ஆய்வாளர் வெ.பாலமுரளி கண்டுபிடித்துள்ளார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இராமநாதபுரம் தொல்லி யல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜ குரு, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் நேரில் சென்று இந்தக் கல்வெட்டை படி எடுத்து, மூத்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் உதவியுடன் மீண்டும் படித்தனர். இது குறித்து இராமநாதபுரம் தொல்லி யல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜ குரு, தொல்லியல் ஆய்வாளர் வெ.பால முரளி ஆகியோர் கூறியதாவது:- இந்தக் கல்வெட்டு இரண்டு வரிகளாக இருந்துள்ளது. முதல் வரியில் த, ர போன்ற சில எழுத்துகள் தவிர மற்றவை முழுவதும் சிதைந்துள்ளன. இரண்டாம் வரியிலும் சில எழுத்துகள் அழிந்துள் ளன. சில எழுத்துகள் கொஞ்சம் இடை வெளி விட்டு எழுதப்பட்டுள்ளன. முதல் வரியின் தொடர்ச்சியாக அமைந்த இரண்டாம் வரியில் உள்ள எழுத்துகளை ‘யாரஅதிறஈத்த/////வதர’ என படிக்கலாம். குகையில் வெட்டப்பட்டுள்ள ஐந்து கற்படுக்கைகளைக் குறிக்க 5 என்ற எண்ணாக 5 கோடுகள் கொஞ்சம் சாய்ந்த நிலையில் மிகவும் தெளிவாக வெட்டப் பட்டுள்ளன.
மதுரை அரிட்டாபட்டி-விழுப்புரம் தொண்டூர்
இந்தக் கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவர் பெயராக ‘யாரஅதிற’ என்பதாகக் கொள்ளலாம். இதன் இறுதியில் உள்ள எழுத்துகளை “அதிட்டானம்” என முயன்று படிக்க லாம். இதில் ‘அ’ சிதைந்துள்ளது. அதிட்டா னம் என்றால் இருக்கை எனவும் பொருளு ண்டு. இது குகையில் வெட்டப்பட்டுள்ள கற்படுக்கையிலான இருக்கையைக் குறிக்கிறது. மதுரை அரிட்டாபட்டி, விழுப்புரம் மாவட்டம் தொண்டூர் ஆகிய ஊர்களில் உள்ள தமிழிக் கல்வெட்டிலும் 3 கற்படுக்கைகளைக் குறிக்க 3 கோடு கள் செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடினமான பாறையிலும் கல்வெட்டு சிதைந்திருக்கும் நிலை, “அ” மற்றும் “ர” போன்ற எழுத்துகளின் வடிவமைப்பு, “ஐந்து” என்ற எண்ணைக் குறிக்க ஐந்து கோடுகளை செதுக்கி வைத்திருக்கும் முறை ஆகியவற்றைக் கொண்டு இதன் மேலே உள்ள 3 குகைக் கல்வெட்டுகளை விட புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு காலத்தால் முந்தியது என்பதை அறிய முடிகிறது. எனவே இந்தக் கல்வெட்டை கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம் என்றனர்.
மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம்
வியாழனன்று நமது செய்தியாளரிடம் பேசிய வரலாற்று ஆய்வாளர் வே.ராஜ குரு, கிடைக்கப்பெற்றுள்ள கல்வெட்டின் படிகளை ஒவ்வொரு ஆய்வாளரும் ஒவ்வொருவிதமாகப் படிப்பர். ஒன்றியத் தொல்லியல் துறையும், தமிழ்நாடு தொல்லியல் துறையும் தொடர் ஆய்வு மேற்கொண்டு இதன் முழு வாசகத்தை யும் வெளிக் கொண்டுவர வேண்டும் என்றார். மேலும் அவர் கூறுகையில், மதுரை யைச் சுற்றியுள்ள பகுதிகளில் பழைய கற்கால கருவிகள் கிடைக்கப்பெற வில்லை. நுண்காலக் கருவிகளும், பெருங்காலத்தில் மக்கள் வாழ்ந்த தட யங்களும் கிடைத்துள்ளன. இதன் மூலம் கீழடிக்கும் திருப்பரங்குன்றத்திற்கும் தொடர்புள்ளது எனக் கொள்ளலாம். கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலேயே திருப்பரங்குன்றத்தில் மக்கள் வாழ்ந்துள் ளனர் என்பதை இந்தக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. அன்றைய மதுரை மாவட்டம் இன்றைய விருதுநகர் மாவட்டம் ஆவியூரில் மக்கள் பயன் டுத்திய கல் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் ஏதென்ஸ், தென்னிந்தியாவின் ஏதென்ஸ், தமிழகத்தின் ஏதென்ஸ். நாகரீகத்தின் தொட்டில் என மதுரையை அழைக்கலாம் என்றார்.