மதுரையில் 17 ஆவது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா நவம்பர் 14 முதல் 19 வரை பல்வேறு மையங்களில் நடந்தது. இந்த விழாவில் திரையிடப்பட்ட படங்களில், மிக முக்கியமானது இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம் நடந்து வரும் இந்தக் காலகட்டத்தில், யுத்தம் மற்றும் சண்டைகள் பற்றிய தெளிவை வழங்கும், 1952 இல் இரண்டாம் உலகயுத்தக் காலத்தைத் தொடர்ந்த காலத்தில உருவாக்கப்பட்ட படமான, கனடா நாட்டைச் சேர்ந்த இயக்குநர் நார்மன் மேக்லாரன் இயக்கிய அனிமேஷன் “நெய்பர்ஸ்“ (அண்டைவீட்டுக்காரர்) என்ற படம் ஒரு பூவின் நிமித்தம், அதை நுகர்கிற வெறியில், விட்டுக் கொடுத்தலின்றிச் சண்டையிட்டுக் கொள்ளும் இருவர். அந்தச் சண்டையில் இருவரது வீடு, மனைவி, குழந்தை மற்றும் இவர்கள் என அத்தனை பேரும் அழிவதே எஞ்சுகிறது. ஒவ்வொரு திரையிடலிலும் முதல்படமாக இந்தப் படமே திரையிடப்பட்டது. குழந்தைகள் இந்தப் படத்தைப் பற்றிய நிறைய விவாதக் கருத்துகளை முன்வைத்தனர்.
மற்றொரு மிக முக்கியப் படமாக அமைந்தது, டச்சு இயக்குநர் மிக்கேல் டியுடக் டி விட் எழுதி இயக்கிய அனி மேஷன் படமான 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த “ஃபாதர் அண்டு டாட்டர்“ (தந்தையும் மகளும்) திரைப்படம். தந்தைக்கும் மகளுக்குமான உயிர்ப்பான உறவு எத்தனை காலமானாலும் அழி வதில்லை என்பதை மிக அழகாகச் சொல்கிறது இந்தப்படம். அவள் சிறுமி யாக இருக்கும் போது, படகில் அவளை விட்டுப் பிரிந்து செல்கிறார் தந்தை, அவள் திருமணமாகி, இரண்டு குழந்தை களுக்குத் தாயாகி, வயதாகிவிட்ட பின்ன ரும் தந்தையைத் தேடி அந்த நதியின் கரைக்கு வந்து வந்து பார்க்கிறாள். இறுதி யில் நதியில் நீர் வற்றி விட்ட காலத்தில் நதிக்குள் இறங்கி நடந்து போகிறாள். அங்கே அவள் தந்தை சென்ற படகு மண் ணுக்குள் புதைந்து கிடக்கிறது. அவள். அந்தப் படகுக்குள் சென்று படுத்துக் கொள்கிறாள். அவள் நினைவுகள் இப்போது குழந்தையாகின்றன. அவள் தந்தை அங்கே நிற்பதைப் போல் உணர்கி றாள். தந்தையிடம் ஓடிச்சென்று கட்டிக் கொள்கிறாள். குழந்தைகள் அனைவரை யும் கவர்ந்த படம் இது.
அடுத்து மிக முக்கியமான படம், “மிஸ்டர் மோரிஸ் லெஸ்மோரின் பறக்கும் புத்தகங்கள்” படம். வில்லியம் ஜாய்ஸ், பிராண்டன் ஓல்டன்பர்க் இணைந்து இயக்கி 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த அமெரிக்க அனிமேஷன் படம், நூலகங்கள், நூல்கள் அவற்றுடனான மனிதர்கள் கொள்ளும் உறவுகள் பற்றி மிக அழகான கவிதை போலச் சொல்கின்ற படம். கடும் புயலில் சேதமுற்ற நூலகம் ஒன்றைச் செப்பம் செய்து, அதனை உயிர்ப்பானதாக்கும் அழ கிய நிகழ்வைப் படம் அபாராமான கற்பனை வளத்தோடு வெளிப்படுத்து கிறது. படம் பார்க்கும் குழந்தைகள் அத்தனை பேரையும் கட்டிப்போட்ட படம் இது. அதுபோலவே அனைவரும் ரசித்து மகிழ்ந்த இன்னொரு படம் “பூக்களும் மரங்களும்” என்ற வால்ட் டிஸ்னியின் தயா ரிப்பான அனிமேஷன் படம். 1932 ஆம் ஆண்டே வெளிவந்த இந்தப்படம் இன்றைக்கும் குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை இரசிக்கத்தக்க படமாக இருக்கிறது. காட்டின் பூக்களும் மரங்க ளும் உயிர் பெற்று மனிதக் குணங்களு டன் உலா வருகிறார்கள். ஒரு நாயக மரம், அது காதல் கொள்ளும் நாயகி மரம், அதனை ஆக்கிரமிக்க வரும் வில்லன் மரம், அது செய்கிற கொடுஞ்செயலால் காடு தீப்பற்றிக் கொள்ள, அதனை அணைக்க, பூக்கள், விலங்குகள், பறவை கள் என அத்தனையும் முயற்சித்து வெற்றி காண்பது, வில்லன் மரம் தான் வைத்த தீயில் தானே மடிவது, இறுதியில் காதல் கொண்ட மரங்களுக்கு மலர்கள் நடத்தி வைக்கும் திருமணம் என்று கதைப் போக்கு நகர்ந்தாலும், அழகிய மனிதக் குணங்களைப் படம் முழுக்க நிரப்பி பார்ப்பவரைச் சுவாரசியப் படுத்துகிறது இந்தப்படம். அதுபோலவே “தி லிட்டில் மேட்ச் கேர்ள்” என்கிற 2006ல் வெளிவந்த வால்ட் டிஸ்னி அனிமேஷன் படம். ருஷ்யக் கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்ட இந்தப்படம், அடர் பனியில் தீக்குச்சி விற்கிற ஏழைச் சிறுமியின் கனவுகளையும் யதார்த்தங்களையும் அழகுறச் சொல்கிற படம். இதே படம் 1928 மற்றும் 1937 ஆகிய வருடங்களில் அப்புறம் 2006 இல் எனப் பலமுறை மீண்டும் மீண்டும் பல ரால் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்தனை ஆழமான கதைத்தன்மை கொண்டது இந்தப்படம். குழந்தைகள் அனைவரின் மனசுக்கு நெருக்கமாக இருந்தது இந்தப்படம். அவர்களின் மனசைக் கனக்க வைத்த படமாகவும் இது இருந்த்து. இவை தவிர்த்து மாமேதை சத்ய ஜித்ரேயின் இரண்டு போன்ற படங்களும் திரையிடப்பட்டன. கிட்டத்தட்ட 350 குழந்தைகள் இத்திரைப்பட நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு திரை யிடலின் பின்பும் குழந்தைகளுடன் விவா தங்கள் நடத்தப்பட்டன.