ஒன்றிய அரசில் 30 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பப் படாமல் உள்ளன. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையின்மை 8.30 விழுக்காடாக அதிகரித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் வேலையின்மைப் பிர தான பிரச்சனையாக பிரதிபலிக்கும். இளைஞர்களும், தொழிலா ளர்களும் நவீன கொத்தடிமைகளாக மாற்றப்பட்டுள்ளனர். ‘அக்னிபாத்’ என்ற ஒப்பந்தத் திட்டத்தை கொண்டு வந்து பாது காப்புத் துறையையே பாதுகாப் பில்லாத தாக மாற்றியுள்ளனர். தமிழக இளை ஞர்களுக்கு எதிரான அரசாணை 115, 152 ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். மாநில அரசில் பல லட்சம் காலிப் பணி யிடங்கள் உள்ளன. வேலைக்காக பதிவு செய்து 73 லட்சம் பேர் காத்தி ருக்கின்றனர். பதிவு செய்யாமல் பல லட்சம் பேர் உள்ளனர். வேலை நியமன தடைச் சட்டம் கொண்டு வந்த ஆட்சியை மாற்றி, இளைஞர்கள் திமுக ஆட்சியைக் கொண்டு வந்தனர். எனவே, சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர்
ஏ.வி.சிங்காரவேலன் பேசியதிலிருந்து...