articles

அயோத்தி ராமர் கோவிலுக்குச் செல்வது ராமனை ஏமாற்றும் செயல்! - சுந்தர் சருக்கை

கோவில்கள்- வட இந்தியா, தென்னிந்தியா
நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன் என்ப தால், எப்போதுமே வட இந்தியக் கோவில்க ளின் சிற்பங்கள் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்து பவை. அந்தச் சிற்பங்கள் தென்னிந்தியக் கோவில்க ளில் உள்ள சிற்பங்களைப் போல இல்லை.வட இந்தி யக் கோவில்களின் கட்டிடக்கலை, வளாகங்கள், வழிபாட்டு முறைகள், கோவிலைச் சுற்றிலும் உள்ள கலாச்சார உலகம் யாவுமே எனக்கு வித்தியாசமான அனுபவங்களை உண்டாக்குபவை.

தென்னிந்திய கருப்புச் சிற்பங்களுக்கு மாறாக, வெள்ளை நிறத்தில் கடவுள்களின் சிலைகள் உள்ளன. அந்தச் சிற்பங்களும் கூட சின்ன வடிவம் தான். முகத் தோற்றமும் வித்தியாசமாக இருக்கும். வடக்கிலும், தெற்கிலும் கடவுளர்களின் பெயர்களும் வித்தியாச மாக உள்ளன. தென்னிந்தியாவின் ராமன், கிருஷ்ணன் என்பதை, வட இந்தியாவில் ராம், கிருஷ்ணா என்கிறார் கள். வடக்கிலும், தெற்கிலும் கடவுளர்களின் பாலினம் கூட வேறுபடுகின்றன.

ராமன் எனும் மனிதன்
நான் எப்போதுமே கிருஷ்ணன், அனுமன், கணேசனைப் போல இல்லாமல் ராமனை ஒரு குடும்பஸ்தனாகவே பார்ப்பேன். ராமனது சிலை கூட திருமணமான மனிதனின் மனச்சுமையை உணர்த்துவதாக எனக்குத் தோன்றும்.

பக்தர்கள் ராமனை மனித வடிவத்தில் கடவுளாகப் பார்க்கின்றனர். மனித வடிவில் உள்ள கடவுள் மனிதனுக்கே உரித்தான பலவீனங்களைக் கொண்ட வராக இருக்கிறார். மனிதர்கள் அன்றாடம் சந்திக்கும் துன்பங்களை ராமனும் சந்திக்கிறான். மனிதனுக்குரிய பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது சிந்தனை யாற்றலை இழக்கிறான். மனிதனைப் போலவே தவறி ழைக்கிறான். அதனால் வருந்துகிறான். மனிதர்க ளைப் போலவே மகிழ்ச்சி, மன வேதனை போன்ற இயல்பான உணர்ச்சிகளுக்கு உள்ளாகிறான். கடவு ளின் வடிவில் உள்ள மனிதர்கள் தங்கள் தவறுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். அதற்குரிய தண்ட னையும் பெறுகின்றனர்.

ராமனை மன்னிக்காத பெண்கள்
நான் முதன் முதலில் ராமனை வித்தியா சமாக எதிர்கொண்டது பீகாரில் தான். பீகார் மதுபானி எனும் ஊரில் உள்ள நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். திருமணப் பாடல்களைப் பாடும் பெண் ஒருவரை நண்பர் எனக்கு அறிமுகம் செய்தார். அந்தப் பெண் ராமனைப் பாடும்போது ராம னைக் கடுமையாக விமர்சித்தார்.ஜானகியைக் கை விட்டதற்காக ராமனைக் கேலி செய்தார். நான் கூட வெறும் கேலிக்காகத் தான் இவ்வாறு பாடுகிறாரோ  என்று நினைத்தேன்.அவரின் கோபம் உண்மை யானது என்று பின்னர் தான் தெரிந்தது. இன் றைக்கும் கூட அந்த பகுதியில் உள்ள மக்கள் அயோத்தி யில் வாழும் குடும்பங்களிடம் திருமணம் செய்து கொள்ள மாட்டார்களாம்!

ராமனை முழுக்க முழுக்க மனிதனாகவே பார்த்தார்கள். ஒரு சலவையாளரின் சொல்லுக் காக, ராமன் சீதையை காட்டுக்கு அனுப்பியதால் இன்றைக்கும் பல பெண்கள் அவனை மன்னிக்கவே இல்லை.

ராமனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக தென் னிந்திய மக்களும் உணர்கின்றனர். யட்சகானத்தில் (இசை, நாட்டியம் ,உரையாடல் ஆடை அலங்காரம், வித்தியாசமான மேடை அமைப்புடன் கூடிய நாடகம். கர்நாடகம், கேரளத்தில் நடத்தப்படுகிறது) அந்த நாடகத்தில்  புகழ்மிக்க காட்சி ஒன்று!

ராமன் வாலியை ஒளிந்திருந்து கொல்கிறான். வாலி ராமனைக் கோழை என்று குற்றம் சாட்டுகி றான். ராமன் நிதானமாக பதிலளித்தாலும் சோகமா கவே தோன்றுகிறான்.

சுயநலமிகள் ராமனுக்கு  விடுக்கும் சவால்
இன்று அவன் மனிதர்களிடமிருந்து மிகப் பெரிய சவாலை எதிர்கொள்கிறான். அதுவும் தங்களைக் கடவுளாகவே நினைத்துக் கொண்டு, தாங்கள் யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்று எண்ணும் மனிதர்கள் விடுக்கும் சவாலை சந்திக்கிறான். இந்த மனிதர்கள் தான் இல்லாத ராமனை உரு வாக்கி உள்ளனர். ராமனின் பெயரை பயன்படுத்தி தங்களது அரசியல் சுயநலனுக்காக வெறுப்புணர்வு, வன்முறை என்ற அடித்தளத்தின் மீது ராமனுக்கு கோவில் கட்டியுள்ளனர்.

இந்த ராமன் நாம் அறிந்த ராமனே அல்ல. இந்த ராமனுக்கு நாம் அறிந்த ராம னுக்கே உரித்தான முக்கிய குணநலன்கள் எதுவும் கிடையாது. இந்த ராமன் மக்கள் செல்பி எடுத்துக் கொள்வதற்காக நிறுவப்பட்ட ராமன். வெறுமனே அடையாளப்பூர்வமாக ஒரு சிலையை நிறுவி கோவிலை சுற்றுலாத் தலம் ஆக்கியுள்ளனர். முழுக்க முழுக்க சுய நலனுக்காகவே இந்தக் கோவில் கட்டப் பட்டுள்ளது. ராமன் சந்தித்த சிக்கல்கள், பிரச்சனைகள் இந்த உலகின் ஒரு பகுதியாக அவன் செயல்களில் இருந்து ஏற்பட்டவையாகும்.

ஆனால், இப்போது ராமன் சந்திக் கும் பிரச்சனை, ராமனை தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்கள், ராமனின் மீது திணித்த தீய நோக்கங்களால் ஏற்பட்டுள்ளது. உண்மையான பக்தர்கள் கடவுளை தமது சொந்த நலனுக்கு பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். புனிதம் என்று சொல்லப்படுவது சுயநலத்தின் அடிப்ப டையில் ஆனதல்ல. கடவுளின் அவதாரத்துக்குரிய குணங்களை கொண்டிருந்தால் இந்த ராமனின் கோவில் புனிதமாக இருந்திருக்கும்!

ஆனால் அயோத்தியில் உள்ள இந்த புதிய கோவில் ராமனின் முக்கியமான குண நலன்களுக்கு அப்பட்டமாக நேர் எதிரான வெறுப்பும், வன்முறையையும் கொண்டதாக உள்ளது. எனவே பக்தர்கள் இந்த கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் சில மனிதர்கள் ராமன் மீது ஏற்றி வைத்த தீய குணங்களை ஆதரிப்பதாக ஆகிவிடும். தங்களைக் கடவுளாகவே நினைத்துக் கொள்ளும் சில மனிதர்களின் சுய நலனுக்காக மனித வடிவில் வந்த மென்மையான, பலவீனமான இராமனை இந்த பக்தர்கள் கைவிட்டவர்களாக, காட்டிக் கொடுப்ப வர்களாக ஆகிவிட வேண்டுமா என்ன?!