articles

img

மோடி அரசின் ஓர வஞ்சனையால் கேரளத்திற்கு அநீதி! - முகுந்த் பி உன்னி

மாநிலத்தின் பொதுக் கடனைப் பற்றிய சட்டங்களை இயற்றிடவும் நிர்வகிக்கவும் தீர்மானிக்கவும் அதிகாரம் மாநில சட்டமன்றத்திற்குத் தான் முழுமையாக உள்ளது. மாநிலத்தின் பொதுக்கடன் மீது சட்டம் இயற்றும் அதிகாரம், அரசியலமைப்பின் மாநில பட்டியலில் 43-ஆவது பதிவில் இடம்பெறுவதால், அதன் மீது நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.

கேரள அரசு நிதி திரட்டத் தடை விதித்த, ஒன்றிய அரசுக்கு எதிராக பிப்ரவரி 8  அன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் தில்லியில் போராட்டம் நடந்தது.

கடன் வாங்குவதற்கு வரம்பு விதித்ததன் மூலம் மாநிலத்தை கடும் நிதி நெருக்கடியில் ஒன்றிய அரசு  தள்ளியுள்ளதாக கேரள அரசு குற்றம் சாட்டியுள்ளது. அனைத்து ஆதாரங்களிடமிருந்தும் கடன் வாங்கு வதை கட்டுப்படுத்தும் வகையில், ஒன்றிய அரசு நிகரக் கடன் உச்சவரம்பை விதித்திருப்பது, அரசியல் அமைப்பின் 293-ஆவது பிரிவை மீறுவதாகும் என கேர ளம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்தச் சூழலில் தற்போது முன்னுக்கு வந்துள்ள பரந்த அளவிலான அரசியல் அமைப்புச் சிக்கல்கள் இந்திய நாட்டில் நிதி கூட்டாட்சி முறையில் கடும் அரிப்பை ஏற்படுத்தியுள்ளதைக் காட்டுகிறது.

நிகரக் கடன் உச்சவரம்பு  என்றால் என்ன?
திறந்த சந்தைக் கடன்கள் உட்பட அனைத்து ஆதாரங்களிடமிருந்தும் மாநிலங்கள் எவ்வளவு கடன் பெற முடியும் என்ற வரையறைதான் நிகரக் கடன் உச்சவரம்பு (Net Borrowing Ceiling - NBC) எனப்படுகிறது. மாநிலங்களின் பொதுக் கணக்குகளில் இருந்து கடன்களை கழித்தால் வருவது தான், அந்த உச்சவரம்புத் தொகை. மேலும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் கடன்கள், பட்ஜெட்டில் அசல் அல்லது செலுத்தப்படும் வட்டி, வரிகள், செஸ் வேறு ஏதாவது மாநில வருவாயின் மூலம் வரும் என்றால் அந்த வருவாயும் இந்த நிகரக் கடனில் இருந்து கழிக்கப்படும்.\

ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உள்ளதா?
அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் வாங்கிய கடனை. மாநில அரசின் கடனாக சேர்த்ததால் கேரளம் கொந்தளிக்கிறது. 

‘கிப்பி’ எனப்படும் கேரள உள்கட்ட அமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (KIIFB) என்ற அரசின் சட்டப்பூர்வ அமைப்பினால், மாநிலத்தில் அரசாங்கத்தால் தொட ங்கப்படும் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையும் இப்போது நிகர கடன் வரம்பிற்குள் சேர்க்கப்பட்டதால் ஓய்வூதியம் மற்றும் நலத்திட்டங்களுக்கான செலவு களை கூட தன்னால் சமாளிக்க முடியவில்லை என கேரள அரசு கூறுகிறது. மாநிலங்களின் நிதி திரட்டல் மீது இத்தகைய கடுமையான நிபந்தனைகளை விதிக்க ஒன்றிய அரசுக்கு அரசியல் அமைப்பின் வரம்பு களுக்குள் உரிமைஉள்ளதா?

மாநில நிதியை தீர்மானித்தல்!
அரசியல் அமைப்பின் 293(3) பிரிவின்படி ஒன்றிய அரசு வழங்கிய முந்தைய கடனில் ஏதேனும் ஒரு பகுதி நிலுவையில் இருந்தால் எந்தக் கடனையும் பெறுவதற்கு முன்பு ஒன்றிய அரசின் ஒப்புதலை, மாநிலம் பெற வேண்டும். இந்த பிரிவின் கீழ் ஒன்றிய அரசின் அதிகாரங்களை செயல்படுத்துவதன் மூலம் நிகர கடன் உச்சவரம்பு என்பது மாநிலங்களின் மீது திணிக்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் முடிவு சந்தேகத்திற்குரியது!
மாநிலத்தின் மொத்தக் கடனில், அரசுக்கு சொந்த மான நிறுவனங்களால் கூடுதல் பட்ஜெட் கடனாக பெற அனுமதிக்கும் ஒன்றிய அரசின் முடிவு, ஆராய்ந்து பார்த்தால் அரசியல் அமைப்பு ரீதியாக சந்தேகத்திற்குரியது.

“அரசாங்கங்கள் அனைத்து நிலைகளிலும் கடுமை யான ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்கலாம். பட்ஜெட்டிற்குள் வராத பரிவர்த்தனைகளையும் செலவினங்களையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் நிதி வெளிப்படைத் தன்மை மற்றும் நிலைத் தன்மைக்கு அது தீங்கு விளைவிப்பவை. ஒன்றிய -  மாநில அரசுகளுக்கு அதிக கடன் வாங்குவதற்கு வரம்பு விதிக்கும் எங்கள் பரிந்துரைகளின் முக்கிய நோக்கமே வெளிப்படை தன்மையை வளர்ப்பதும் பிற பொறுப்பு களை உருவாக்குவதை தவிர்ப்பதுமே ஆகும்”

- இவ்வாறு கூறுவது, பதினைந்தாவது நிதிக் கமிஷன். இந்த கமிஷன் அளித்துள்ள இந்த  விளக்கத்தின் அடிப்படையில் தான், ஒன்றிய நிதி அமைச்சர் தன்னுடைய முடிவை நியாயப்படுத்து கிறார். ஆனால், அரசு நிறுவனங்களின் கடனை, மாநில அரசின் நிகரக் கடன் உச்சவரம்பில் சேர்க்க நிதிக் கமிஷன் கோரவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தின் பொதுக் கடனைப் பற்றிய சட்டங்களை  இயற்றிடவும் நிர்வகிக்கவும் தீர்மானிக்கவும் அதிகாரம் மாநில சட்டமன்றத்திற்குத் தான் முழுமையாக உள் ளது. மாநிலத்தின் பொதுக்கடன் மீது சட்டம் இயற்றும் அதிகாரம், அரசியலமைப்பின் மாநில பட்டியலில் 43-ஆவது பதிவில் இடம்பெறுவதால், அதன் மீது நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.

நிகர உச்சவரம்பில் சேர்க்கக் கூடாது!
மாநில அரசின் பொதுக் கணக்கில் உள்ள நிலுவை களை, நிகர உச்சவரம்பில் சேர்க்கக்கூடாது என்ற முக்கியமான வாதத்தை கேரள மாநில அரசு எழுப்பு கிறது. ஒன்றிய அல்லது மாநில அரசாங்கத்தால் சேகரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நிதிக்கு சம்பந்தம் இல்லாத நடவடிக்கைகளை பொதுக் கணக்குகளின் கீழ் கொண்டுவரலாம் எனக் கூறும் அரசமைப்புச் சட்டத் தின் 266(2) என்னும் பிரிவை அரசு நம்பியுள்ளதையே இதுகுறிக்கிறது.

சிறுசேமிப்பு, பாதுகாப்பு வைப்பு, வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற கருவூல வாய்ப்புகள் ஆகியவை பொதுக் கணக்குகள் ஆகும். இதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளுமே மாநில சட்ட மன்றத்தின் எல்லைக்குள் அடங்கும். ஆனால், இவற்றை பொதுக் கணக்குகளில் இருந்து திரும்பப் பெறும் மற்றும் நிகரக் கடன் உச்சவரம்புக்குள் சேர்க்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு இல்லை.

மாநில இறையாண்மை!

மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட கேரள  மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட கேரள நிதிப் பொறுப்புச் சட்டம் 2003 மாநிலத்திற்கான நிதிப்  பற்றாக்குறை இலக்குகளை நிர்ணயிக்கிறது. 2025- 26க்குள் கேரளத்தின் நிதிப் பற்றாக்குறை மாநில உள்நாட்டு மொத்த உற்பத்தி (GSDP)-யில் 3 சதவிகித மாக குறைக்கப்படும் என்று கூறுகிறது. ஒரு மாநிலச் சட்டம், பட்ஜெட் மேலாண்மை மற்றும் நிதி நேர்மையை முறையாக கையாளும் பொழுது மாநில நிதியை ஒன்றிய அரசாங்கம் கண்காணிப்பது  என்பது விரும்பத்தக்கது அல்ல.

அரசியல் அமைப்பின் 202-ஆவது பிரிவின் கீழ் வருவாய், வரவுகள் மற்றும் அதற்குரிய செலவினங் களை நிர்ணயிப்பது மற்றும் மாநில பட்ஜெட்டை சட்ட மன்றத்தில் தாக்கல் செய்வது மாநில அரசாங்கத்தின் பணி ஆகும். மாநில பட்ஜெட் என்பது மாநில அரசின் விருப்பமாகும். மாநில நிர்வாகமும் சட்டமன்றமும் கட்டுப்படுத்தி வரும் செயல்பாடுகளை நிதி நிர்வாகம் என்ற பெயரில் ஒன்றிய நிர்வாகத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் விட்டுக்கொடுக்க முடியாது.

கேரளத்தின் நிதிப் பற்றாக்குறை 2.4 சதவிகிதமாக வும் வருவாய்ப் பற்றாக்குறை மாநில உள்நாட்டு  மொத்த உற்பத்தி(GSDP)-யில் 0.88 சதவிகிதமாக வும் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், ஒன்றிய அரசைப் பொறுத்த வரை நிதிப் பற்றாக்குறை 5.8 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு வாரியம் - KIIFB

கேரள உள்கட்ட அமைப்பு முதலீட்டு வாரிய மானது, கேரளத்தின் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கூடுதல் பட்ஜெட் செல வினங்கள் மூலம் நிதி அளிக்கும் ஒரு புதிய யோசனை யாகும். இதனுடைய கடன்களையும் மாநிலத்தின் நிகரக் கடன் உச்ச வரம்பிற்கு கொண்டுவருவதன் மூலம், வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி அளிப்பதற்கான கேரள அரசின் பொறுப்பு, ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பயனாளிகளுக்கு நீதி வழங்குவதற்கு ஒன்றிய அரசு தடையாக இருக்க முடியாது.

மாநிலத்தை கடன் வாங்க அனுமதிக்காதது, அரசின் நலத்திட்டங்களுக்குரிய செலவுகளுக்கு நிதியை திரட்ட முடியாதவாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேரள நிதியமைச்சரின் வாதம் உண்மையானது. வருவாய்ப் பற்றாக்குறை பாதிப்பு உள்ள மாநிலத்தில் இது பேரழிவு நிலைமையை ஏற்படுத்தும்.

இந்தியாவின் கூட்டாட்சியின் தன்மை, கூட்டுறவு அமைப்பின் உயர்ந்த மாண்புகளைக் கொண்டது. ஆனால் அந்த மாண்புகளை அரித்து, அழிவை ஏற்படுத்தக்கூடிய நிலைக்கு இன்று, அது நகர்த்திச் செல்லப்படுகிறது. கடன் வாங்குவதற்கான கட்டுப்பாடுகள் என்ற பெயரில் ஒன்றிய அரசு அபாயகர விளையாட்டை ஆடிக் கொண்டிருக்கிறது. அழியும் கூட்டாட்சிக்கு (annihilative federalism) எடுத்துக்காட்டாக இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது