சீன மக்கள் ஏழைகளாகவும் பலவீனமாகவும் மற்றவர்களின் தயவிலும் இருந்த பொழுது அனைத்துவிதமான சித்தாந்தங்களும் கோட்பாடுகளும் முயற்சி செய்யப்பட்டன. முதலாளித்துவ பாதையும் முயலப்பட்டது. ஆனால் தீர்வு தர இயலவில்லை. சீர்திருத்தவாதம்/ தாராளவாதம்/ சமூக டார்வினவாதம்/ அராஜக வாதம்/ எதார்த்தவாதம்/ எதேச்சதிகாரவாதம்/ சிண்டிகலிச வாதம் என அனைத்துக்கும் வாய்ப்புகளும் தருணங்களும் வழங்கப்பட்டன. ஆனால் சீனாவின் எதிர்கால பிரச்சனைகளை தீர்ப்பதில் அவை தோல்வியுற்றன.
மார்க்சியம்-லெனினியமும் மாவோ சிந்தனைகளும் மட்டும்தான் சீனாவின் மக்களை நீண்ட இருளிலிருந்து மீண்டு புதிய பிரகாசமான சீனத்தை உருவாக்கும் வெளிச்சத்தையும் வழிகாட்டுதல்களையும் தந்தன.
- ஜி ஜின்பிங் -